Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Savithriyin Kathapaathiram
Savithriyin Kathapaathiram
Savithriyin Kathapaathiram
Ebook50 pages29 minutes

Savithriyin Kathapaathiram

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703628
Savithriyin Kathapaathiram

Read more from Vidya Subramaniam

Related to Savithriyin Kathapaathiram

Related ebooks

Reviews for Savithriyin Kathapaathiram

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Savithriyin Kathapaathiram - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    சாவித்திரியின் கதாபாத்திரம்

    Savithriyin Kathapaathiram

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    1

    சாவித்திரி எப்போது சென்னைக்கு வந்தாலும் புதுசு புதுசாய் ஏதாவது வீட்டு உபயோகச்சாமான்கள் வாங்கிச் செல்வாள். இதற்கென்றே அவள் புருஷனும் அவளும் சிறுகச் சிறுக பணம் சேர்த்துக் கொள்வார்கள்.

    மிக மிக நடுத்தர குடும்பத்திலிருந்து எட்டு பவுன் நகை மட்டுமே அணிந்து, சொற்ப பாத்திரங்களுடன், அவள் கல்யாணமாகி புருஷனோடு ஆந்திரா பக்கம் ஒரு குக்கிராமத்தில் வசிக்கப் போனாள்.

    அவள் கணவருக்கு ரெயில்வேயில் வேலை. எனவே அடிக்கடி சென்னை வருவது அவர்களுக்கு சிரமமான விஷயமில்லை. கல்யாணமான புதிதில் சாவித்திரி புது ஊரில் புது மனிதர்களுடன் பாஷை புரியாது பட்டபாடு கொஞ்சநஞ்சமல்ல.

    மூத்த மருமகள் என்பதால் வேலைகள் எல்லாம் அவள் தலையில். அனுசரணையற்ற மாமியார், சுயநலமான நாத்தனார், அம்மாவுக்கு அடங்கி நடக்கும் மைத்துனர்கள். யாரை பற்றியும் புகார் வாசிக்கக் கூடாது என்ற நிபந்தனையோடுதான் அவளோடு தாம்பத்யம் ஆரம்பித்தான் அவள் கணவன். எனவே அவனிடம் எதைப் பற்றியும் வாய் திறக்க முடியாது.

    அவள் கொண்டு வந்த சீர் சாமானைப் பற்றி மட்டம் தட்டுவதென்றால் மாமியாருக்கு அல்வா சாப்பிடுவது போல். ‘இவ்ளோ மெலிஸா உலகத்துல வேற யார் வீட்டுலயும் பாத்திரம் இருக்குமா? எக்ஸிபிஷன்ல கொண்டு போய் வெச்சா நல்ல கலெக்ஷன் கிடைக்கும். அந்த கலெக்ஷன்லயானம் காத்திரமா நாலு பாத்திரம் வாங்கித் தரணும்.’

    எதற்கெடுத்தாலும் குத்தல், கேலி, இளக்காரம், குறை கண்டுபிடித்தல் என்று ஒரே மாதத்தில் வாழ்க்கை வெறுத்துவிட்டது சாவித்திரிக்கு.

    பாஷை தெரியாததால் அக்கம்பக்கத்திலும் ஆறுதல் தேட முடியாது. மெளனமாய் இருப்பதும் தனிமையில் அழுவதுமாய் காலம் சென்றது.

    தாய் தந்தையுமில்லை. அக்காக்களும், தம்பியும் சேர்ந்து நடத்தி வைத்த கல்யாணம். தாயில்லா பெண் என்று யாரும் அவளிடம் இரக்கம் காட்டவில்லை.

    மாறாக அடுத்த இரண்டு மருமகள்களும் பணக்கார குடும்பத்திலிருந்து லாரி நிறைய சீர் சாமான்களோடு வந்திறங்க, இன்னும் இளக்காரம் அதிகமாயிற்று.

    கூட்டுக் குடித்தனம் செளகர்யப்படாததால் பணக்கார ஓரகத்திகள் மூன்றாம் மாதமே தனித்தனியாய் போக நாத்தனாருக்கும் திருமணமாகிச் சென்ற பின்தான் ஓரளவுக்கு சாவித்திரி சுதந்திரமடைந்தாள்.

    மாமியார் பாதி நாள் சின்ன பிள்ளைகளிடம் இருந்தாள். அந்த சமயங்களில்தான் சாவித்திரி தன் கணவர் குழந்தைகளோடு சந்தோஷமாயிருந்தாள்.

    கணவனிடம் நிறையப் பேசினாள். இதுநாள் வரை கூட்டுக்குடித்தனம் என்று பணம் விரயமாகிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கென்று தனிப்பட்ட வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவில்லை என்பதை அவனுக்குச் சுட்டிக்காட்டினாள். அவனும் தன் வீடும் அதன் வசதி பெருக வேண்டும் என்பதை

    Enjoying the preview?
    Page 1 of 1