Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sandhitha Neram!
Sandhitha Neram!
Sandhitha Neram!
Ebook110 pages44 minutes

Sandhitha Neram!

Rating: 3 out of 5 stars

3/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603580
Sandhitha Neram!

Read more from Devibala

Related to Sandhitha Neram!

Related ebooks

Reviews for Sandhitha Neram!

Rating: 3 out of 5 stars
3/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sandhitha Neram! - Devibala

    http://www.pustaka.co.in

    சந்தித்த நேரம்!

    Sandhitha Neram!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    சம்பள நாள்! நடுத்தர வர்க்கத்துக்கு சந்தோஷம் தரும் ஒரு நாள்!

    ஆனால் சந்திரனுக்கு மட்டும் அதிகபட்ச கவலையைக் கொண்டு வரும் நாள்!

    மத்திய அரசாங்கத்தில் கிளார்க் வேலை சந்திரனுக்கு!

    படிப்பு, பட்டதாரி- ஓரளவுக்கு நல்ல வேலைதான்! அதில் எந்த சந்தேகமும் இல்லை.

    சந்திரனுக்கு நாற்பத்தி மூன்று வயது! தாமதமாக கல்யாணம்! முப்பத்தி ஐந்து வயதில் கல்யாணம் நடந்தது! அதுவே சந்திரன் மறுத்து, அவனைக் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செய்து வைத்தார்கள்.

    மூன்று தங்கைகள் ஒரு தம்பி! விதவைத் தாயார். இதுதான் சந்திரனின் குடும்ப பின்னணி!

    மூன்று தங்கைகளுக்கும் கல்யாணம் முடித்து, மூத்தவளுக்கும் அடுத்தவளுக்கும் தலா இரண்டு பிரசவங்கள் பார்த்து, வேலையில்லாத தம்பிக்கு வேலைக்காக படாத பாடுபட்டு செலவழித்து கடன் வாங்கி செக்யூரிட்டி டெபாஸிட்கட்டி, எந்த நேரமும் வியாதி கொண்டாடும் விதவைத் தாயாரைக் கட்டிக் கொண்டு நடத்தும் போராட்டம்!

    இதில் சந்திரனுக்கு சுலபமாக முப்பத்தி மூன்று வயது கடந்து விட்டது! அம்மாவுக்கு எந்த நேரமும் பெண்கள் புராணம்தான்!

    சந்திரன் படும் சங்கடம் எதுவும் புரியாது!

    மூன்று பேரும் கல்யாணமாகி பிள்ளைகளைப் பெற்றாலும் பெரும்பாலான நாட்கள் ஒருத்தி மாற்றி ஒருத்தி பிறந்த வீட்டில் இருந்து கொண்டே இருப்பார்கள்!

    குழந்தைகளின் கொட்டம்.

    வீடு கோகுலம் தான்! எந்த நேரமும் தங்கைகளின் கணவன்மார்கள் உள்பட, குறைந்த பட்சம் ஏழு பேராவது இருப்பார்கள் வாங்கும் சம்பளம் போதாது!

    வட்டிக்கு கடன்! பி.எப். லோன், சொசைட்டி லோன், ஆயிரத்தெட்டு அட்வான்சுகள் என எதுவும் பாக்கியில்லை! சம்பளதினத்தன்று கடன்காரர்களுக்கு பயந்து சந்திரன் ஓடும் நிலை பத்து வருடங்களாக தொடர்கிறது!

    ஆனாலும் சந்திரன் ஆத்திரப்படமாட்டான். குடும்பத்தாரை நறுக்கென்று ஒரு வார்த்தை சொல்ல மாட்டான்!

    இந்த மென்மையான குணத்தை சரியாகப் புரிந்து கொள்ளாமல் சந்திரனை நன்றாக குடும்பம் உபயோகப்படுத்திக் கொண்டதுதான் மிச்சம்!

    சந்திரனுக்கு கல்யாண ஆசையே போய்விட்டது! அதை நடத்தும் ஆசை குடும்பத்தாருக்கும் இல்லை!

    அம்மாவுக்கு முடியாமல் போய், சகோதரிகள் சீராட்டம் உச்சத்துக்கு போனபோது, அந்தக் குடும்பத்துக்கு சம்பளமில்லாத ஒரு வேலைக்காரி தேவைப்பட்டது!

    உடனே சந்திரனின் கல்யாணப் பேச்சை எடுத்து துளைக்க ஆரம்பித்தார்கள்.

    அம்மாவால் முடியல! வயசு அறுபது! எத்தனை காலம் உழைக்க முடியும் அண்ணே? நீ கல்யாணம் செஞ்சுக்கோ

    இதை சகோதரிகள் சொல்லும் போது சந்திரனுக்கு வயது முப்பத்தி நான்கு!

    சந்திரன் எதுவும் பேசவில்லை!

    அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அம்மாவும், சகோதரிகளும் பெண் பார்க்கத் தொடங்கி விட்டார்கள்!

    அம்மா! வேலைக்குப் போற பொண்ணா இருக்கட்டும்!

    வேண்டாம்டி!

    இல்லைம்மா! ஏற்கனவே குடும்பத்துக்கு நிறையப் பணம் தேவைப்படுது! அண்ணியும் சம்பாதிச்சா நல்லதுதானே?

    "இல்லைடி! சம்பாதிக்கறவ வந்தா, எனக்கு அடங்க மாட்டா! அவ கை ஓங்கிடும்! இவனும் அவ பக்கம் சேர்ந்துட்டா, கடைசி காலத்துல என் கதி என்ன? என்னையும் பார்த்து இந்த வீட்டையும் பராமரிச்சு, உங்களையெல்லாம் கவனிக்க அவ வீட்டோடதான் இருக்கணும்!

    சந்திரனின் அனுமதி, விருப்பம் எதையும் கேட்காமல் இவர்கள் பெண் தேடத் தொடங்கி விட்டார்கள்.

    அம்மா! பெரியபடிப்பு, அழகு, குடும்ப பின்னணி இதெல்லாம் இருந்தா, நம்ம பாடு திண்டாட்டம்தான்! அதனால் வசதி குறைஞ்ச பெண்ணா இருந்தா, பிரச்சனை இருக்காது! எல்லா விதத்திலும் நமக்கு அடங்கியிருக்கணும்! புரியுதா!

    அப்படியே பாருங்கடி!

    மூன்று பேரும் சேர்ந்து தீவிரமாக தேடத் தொடங்கினார்கள்.

    தம்பி எதையும் கண்டு கொள்ளவில்லை!

    அவன் சந்திரனை விட பத்து வயது இளையவன்! சம்பாதிக்கும் பணத்தில் எதையும் தர மாட்டான்!

    அம்மா எச்சரித்தால், ஏதாவது தருவான்! அதையும் கோபத்தோடு தருவான்! ஆனால் அம்மா அவனைத்தான் தாங்குவாள்.

    அவனுக்கு சூடாக சாப்பாடு எடுத்து வைத்து, அவனுக்காக கண் விழித்து, அவனை போற்றுவாள்.

    உழைக்கும் மூத்தவனுக்கு எந்த ஒரு சலுகையும், பாசமும் இல்லை!

    ஓரவஞ்சனை படைத்த தாய்!

    இந்த நிலையில் எல்லா நிபந்தனைகளையும் தரகரிடம் தந்து பெண் தேடத் தொடங்க, அவர் வீட்டுக்கு வந்தார்!

    பாக்யலஷ்மினு ஒரு பொண்ணு இருக்கா! முப்பத்தி ரெண்டு வயசு! படிப்பு வெறும் எஸ்எஸ்எல்சி தான்! உத்யோகமெல்லாம் கிடையாது! அழகும் பெரிசா இல்லை! அம்மாவை சின்ன வயசுல இழந்தவ! சித்திக் காரியோட பராமரிப்புல இருக்கறவ! அப்பாவும் இப்பத்தான் இறந்தார்! ஒரு வேலைக்காரி மாதிரி சித்தி வீட்ல இருக்கா! அவளுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்க யாரும் தயாரா இல்லை! ஜாதகமும் தோஷ ஜாதகம்! பாக்கலாமா?

    நாளைக்கே பதில் சொல்றோம்?

    அம்மாவும் பெண்களும் கலந்து பேசினார்கள்!

    நமக்கு இப்படி ஒரு அடிமைதான் வேணும்! வாயைத் திறக்க யோக்யதை இல்லாத ஒருத்திதான் இந்த வீட்டுக்குத் தோதுவரும்! பேசலாம்டி!

    அண்ணன்கிட்ட எப்படி பேசுவே?

    நான் பாத்துக்கறேன்!

    அன்று மாலை ஆபீஸ் முடிந்து சந்திரன் வந்ததும், அம்மாவும் இரண்டு தங்கைகளும் இருந்தார்கள்.

    ஜாதகம் ஓரளவுக்கு பொருந்தியிருந்தது!

    பாக்யலஷ்மியின் புகைப்படமும் இருந்தது!

    "இதோப்பாருடா! ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1