Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anantham Vilaiyadum Veedu
Anantham Vilaiyadum Veedu
Anantham Vilaiyadum Veedu
Ebook112 pages50 minutes

Anantham Vilaiyadum Veedu

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603612
Anantham Vilaiyadum Veedu

Read more from Devibala

Related to Anantham Vilaiyadum Veedu

Related ebooks

Reviews for Anantham Vilaiyadum Veedu

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anantham Vilaiyadum Veedu - Devibala

    http://www.pustaka.co.in

    ஆனந்தம் விளையாடும் வீடு

    Aanantham Vilaiyadum Veedu

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    இதோ பாரு! எனக்கு வயசு அறுபதாகப் போகுது. தற்புல சுத்தமா தெம்பு இல்ல, முழங்கால் வீங்கிக் கிடக்கு, க்க முடியல... டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போ!

    மீனாட்சி புலம்பத் தொடங்கிவிட்டாள்.

    ராசப்பா பதற்றமாக அம்மாவைப் பார்த்தான்.

    மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அவனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. அதற்கு ஆறு மாதம் ஆகிவிட்டது.

    கண்மணி 'உண்டான' நாளில் இருந்து முழுக்க முழுக்க புகுந்த வீட்டில்தான் இருக்கிறாள்.

    ராசப்பாவுக்கு தனியார் நிறுவனத்தில் 'கிளார்க்' வேலை. குடும்பபாரம் அதிகம். அப்பா இல்லை. அம்மா, இரு சகோதரிகள். அவர்களை கல்யாணம் செய்து கொடுத்த கடன், குடும்ப பராமரிப்பு எனப் போனதால்... கண்டிப்பாக 'வேலை பார்க்கும் பெண் வேண்டும்!' என்பதில் உறுதியாக இருந்தான்.

    கண்மணிக்கு அரசாங்க உத்தியோகம். அவளும் மத்திய தரக் குடும்பம்தான்!

    அப்பா 'மெக்கானிக்'. அம்மா குடும்பத் தலைவி அக்கா 'டீச்சர்', தம்பி சின்ராசுக்கு கூலி வேலை.

    கண்மணி தலையெடுத்த பிறகுதான் குடும்ப கஷ்டம் தீர்ந்தது. அதன்பிறகு கடனை வாங்கி, அக்காவை கட்டிக் கொடுத்தார்கள். குடும்ப பாரம் கண்மணி தலையில் விழுந்தது.

    அதனால், கல்யாண வயது கடந்துவிட்டது.

    ஆரம்பத்தில் சந்தோஷமாக சகலமும் ஏற்றுக்கொண்ட கண்மணி, ஒரு கட்டத்தில் சலிப்பாகி வெறுப்பை கக்கத் தொடங்கினாள்,

    'கல்யாண வாழ்க்கை தனக்கு அமையாதோ?' என்று அவள் புலம்பும் நிலை வந்துவிட்டது.

    இந்த நேரம் ராசப்பாவின் வரன் வர,

    கோயிலில் வைத்து எளிமையாகக் கல்யாணம் என்று கண்மணி குடும்பம் சொல்லிவிட,

    ராசப்பாவின் அம்மா மீனாட்சிக்கு உடன்பாடு இல்லை, தன் ஒரே பிள்ளைக்கு சீரும், சிறப்புமாக கல்யாணம் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.

    ராசப்பா கடுப்பாகிவிட்டான்.

    அம்மா, நிறையக் கடன் இருக்கு! அதையெல்லாம் அடைச்சு நிம்மதியா வாழணும்ன்னா… சம்பாதிக்கிற பெண் வேணும். புரிஞ்சுக்கோ!

    உனக்கென்னடா குறைச்சல்?

    போதும்... நிறுத்து! வெட்டிப் பெருமை வேணாம்."

    அம்மாவை அடக்கிவிட்டான்,

    ஜாதகம் பொருந்திவிட்டது. கண்மணி கழுத்தில் ஒரு செயினும், கையில் ரெண்டு வளையல்களும் கிடந்தன, அதுத்தான் நகை, எந்த சீதனமும் இல்லை

    ராசப்பா சம்மதிக்க... இருவரும் தனியாக சந்தித்தார்கள்.

    எனக்குக் கடன் இருக்கு. வாடகை வீடுதான். அம்மா என்கூடதான் இருப்பாங்க. சகோதரிகள் வந்து போவாங்க, எல்லாத்துக்கும் உனக்கு சம்மதம்ன்னா... கல்யாணம் செஞ்சுக்கலாம்.

    நானும் உங்களை மாதிரிதான். அக்காவோட கல்யாணக் கடன் இப்பத்தான் அடைஞ்சது. வாடகை வீடுதான்.

    வீட்டுக்கு நீ பண உதவி செய்யணுமா?

    வேண்டாம்!

    இத்தனை நாள் உன் சம்பளம் வந்திருக்கும். இப்ப தடைபட்டா எப்படி சமாளிப்பாங்க?

    சமாளிக்கட்டும்! அடுத்தவர் முதுகுல எத்தனை காலம் சவாரி செய்ய முடியும்? தம்பிக்கும் பொறுப்பு வரட்டும். உழைக்கட்டும், அதுல தப்பில்லை.

    அச்சரியமாகப் பார்த்தான்!

    இதோ பாருங்க... நான் ரொம்ப 'பிராக்டிகல்', ஓரளவுக்குத்தான் தாங்கிப் பிடிப்பேன். உதவி செஞ்சுகிட்டே இருந்தா, அதுல குளிர் காஞ்சுகிட்டே இருப்பாங்க. தாங்கிப் பிடிக்க பிடிக்க மத்தவங்களுக்கும் ஒரு சோம்பேறித்தனம் வந்துடும், உழைக்கவே தோணாது. அப்படியொரு சுகத்தை அப்பா- அம்மாவுக்குக்கூட தர வேண்டிய அவசியம் இல்லை. இங்கே எல்லாருக்கும் பொறுப்பு இருக்கு. உழைச்சுதான் ஆகணும்.

    சரி கண்மணி.

    இது உங்க குடும்பத்துக்கும் பொருந்தும்! என்ன தேவையோ... அதைத்தான் நான் செய்வேன். நியாயத்துக்கு கை குடுக்கணும். ஏமாளியா இருக்கக்கூடாது.

    உறுதியாகச் சொல்லிவிட்டாள்.

    முதலில் ராசப்பா யோசித்தான். 'இந்த அளவுக்கு கெடுபிடியாக இருக்கும் இவளை மணந்தால், பிரச்சினை வருமா? குடும்பத்தில் நிம்மதி குலையுமா?'

    ஆழமாக யோசித்தபோது, அதுதான் நியாயம் என்று மனதில்பட்டது.

    அவனும் கல்யாண வயது கடந்து... பிறந்த வீட்டுக்காக உழைத்து வந்தான்.

    'மற்றவர்கள் குதிரை சவாரி செய்யக்கூடாது' என்கிறாள். சரிதானே?

    "யாராவது ஒருவர் கண்டிப்புடன் இருந்தால்தான் உருப்பட முடியும்!

    அன்று இரவே கண்மணி தன் வீட்டிலும் பேசிவிட்டாள்.

    அம்மா... கல்யாணம் முடிஞ்சிட்டா எங்கிட்டே இருந்து சல்லிக்காசு எதிர்பார்க்காதே!

    என்னடீ சொல்ற? உன் சம்பளம் இல்லேன்னா, இந்தக் குடும்பம் என்னாகும்?

    நிறுத்துறியா…! அப்படீன்னா காலம் முழுக்க கொத்தடிமையா என்ன வெச்சிருக்க திட்டமா?

    பெத்தவகிட்ட பேசற பேச்சாடீ இது? நீயும் வாழணும்ன்னு நினைக்கிறவங்க நாங்க.

    அப்படித் தெரியலையே! இதோ பாரு... அக்கா கல்யாணக் கடனை நான் அடைச்சாச்சு. உங்களை நட்டாத்துல விட்டுட்டுப் போகலை.

    சரிடி! அப்பாவும், தம்பி சின்ராசும் கொண்டு வர்றதை வெச்சு எப்படி நான் குடித்தனம் நடத்துவேன். அவங்களுக்கு உன்னை மாதிரி நிரந்தர வேலையோ... மாசச் சம்பளமோ இல்லையே?

    அப்பாவை விடு! உன் பிள்ளையை நல்ல வேலை தேடிக்கச் சொல்லு.

    அவன் பெரிசா படிக்கலியே...

    ஏன் படிக்கல?

    அவனுக்கு புத்தியில ஏறலைடி.

    இந்த மாதிரி சாக்குப்போக்கு சொல்லாதேம்மா! அக்காவும், நானும் பொறுப்பா படிக்கலை? உத்தியோகத்துக்குப் போகலை? நீ செல்வம் குடுத்து அவனை உருப்படாம பண்ணிட்டே! நாங்க தட்டிக் கேட்டா, உனக்குக் கோபம் வரும். சகோதரன்னா தாங்கிப் பிடிக்கணும். எங்களுக்கு அந்தக் குடுப்பினை இல்ல.

    இந்த மாதிரி பேசாதேடி!

    "அக்கா கல்யாணத்தை நியாயமா செலவழிச்சு

    Enjoying the preview?
    Page 1 of 1