Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanathu Nilavu
Vaanathu Nilavu
Vaanathu Nilavu
Ebook100 pages36 minutes

Vaanathu Nilavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“வானத்து நிலவு” மனித வாழ்வில் அபூர்வமாக ஏற்படும் ஒரு சிக்கலான சூழ்நிலையை நிலைக்களனாகக் கொண்டு எழுதப் பெற்றவை. சிக்கலான சூழ்நிலைகளிலும் பண்பு குறையாமல் மன அவசங்களை அற்புதமாக எடுத்துக் காட்டி, அழகாகக் கதையை நடத்திச் சென்றிருக்கிறார் ஆசிரியர் “மகரிஷி”. உணர்ச்சிகளின் கொந்தளிப்பை வெளியிடும் பொழுதும் ஒரு நிதானம் - அடக்கம்; இது அவருடைய கலைத்திறமை. சிறிய அளவில் அமைந்த குறுநாவலில் கூட ஒரு நிறைவும், கவர்ச்சிகரமான திருப்பமும், சிந்தனையைத் தூண்டும் உணர்ச்சி மோதல்களும் அமைத்து நாவலை முழுமையடையச் செய்திருக்கிறார்.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803576
Vaanathu Nilavu

Read more from Maharishi

Related to Vaanathu Nilavu

Related ebooks

Reviews for Vaanathu Nilavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanathu Nilavu - Maharishi

    http://www.pustaka.co.in

    வானத்து நிலவு

    Vaanathu Nilavu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    அவள் சொன்ன இந்த வார்த்தையை எதோடு சேர்ப்பது?

    காதலில் கட்டுண்டு அக்காதல் நிறைவேறாமல் போன வேதனையில் ஜனிக்கிறதே ஒருவித விரக்தி, அதோடு சேர்க்கலாமா? அந்த வார்த்தை அதற்குள்ளும் கட்டுப் படவில்லை. ஏமாற்றத்தில் அடிபட்ட மனம் அந்த வேதனையின் முணுமுணுப்புடன் வார்த்தைகளைக் கொட்டுகிறது என்றும் சேர்த்துக் கொள்ள முடியவில்லை; ஏனென்றால் அவளுடைய குற்றச்சாட்டு இவைகளில் எதிலுமே அடங்காத வகையாக இருந்ததுதான். ஆழமில்லாமல் அன்பையொரு வீம்புக்காக வளர்த்துக்கொண்டு தடுமாறுகிற பேதலிப்பும், ஆழமான அன்பை உணரக்கூடிய அளவுக்கு மனவிரிவு பெறாதவளின் வெறும் புலம்பலாகவுமே இருந்தது, அவள் சொன்ன அந்த வார்த்தை.

    மீண்டும் அதே வார்த்தை : நீங்கள் வித்தியாசமாகப் பழகவில்லை என்று சொல்லுங்கள், பார்க்கலாம்? என்னையே சுற்றிச் சுற்றி வரும் கேள்விக் கணை இது. நான்கு பேருக்கு நடுவில் நான் தலை குனிந்து நின்றபோது, அவள் தான் அதிகமாகப் பேசினாள். பேசுகின்ற சந்தர்ப்பத்தையெல்லாம் அவளே எடுத்துக்கொண்டு விட்டாள். என்னை அவள் பேச விடவில்லை.

    உங்களை நான் ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன், ஸார். நீங்கள் கள்ளமில்லாதவர் என்று எண்ணி விட்டேன். நல்லவேளை, உங்களுடைய நட்பை! இத்துடன் துண்டித்துக் கொண்டேனோ நான் பிழைத்தேன்...

    என்னுள் எழுந்த ஆத்திரமெல்லாம், கண்களைக் கலக்கி விட்டன. இந்த இருபது வயதில் இவள் இவ்வளவு சாகசங்களை எப்படிக் கற்றாள்? வாய் ஓயாமல் பேசுகின்ற அவளுடைய பேச்சுக்களுக்கெல்லாம் அர்த்தமே கிடையாது என்று எண்ணி விட்டதில் தான் எத்தனை தவறு! மனதில் உள்ள விகாரமான உணர்வுகளையெல்லாம் வார்த்தையில் கலந்து பேசித் தீர்த்துக் கொள்ளுகிற ஒரு வர்க்கம் என்று இன்று அல்லவா தெரிகிறது? –

    அஞ்சலி! என்ன பேச்சு இது? நான் உன்னிடம் எப்பொழுதும் அப்படி நடந்து கொண்டதில்லை. என் நினைவு தெரிந்து நீ சொல்லுகிறமாதிரி ஒரு தடவைகூட... நான்... வேகத்தில் வார்த்தைகள் வர மறுத்தபோதிலும் என் நிலையை நான் விளக்கிவிட வேண்டுமென்பதில் கொஞ்சம் துடிப்புடன் இருந்தேன்:

    "அஞ்சலி! சத்தியமாகச் சொல்லுகிறேன்: உன்னோடு நெருங்கிப் பழக எனக்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் கிடைத்தது. அந்தச் சந்தர்ப்பங்களை நீயாகவே ஏற்படுத்திக் கொண்டதாகக்கூட நீ என்னிடம் சொல்லியிருக்கிறாய். 'இதோ பார்த்தீர்களா இந்தப் புதுப் புடவையை; உங்களுக்காகவே இன்று கட்டிக் கொண்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறதா சொல்லுங்கள்?' என்று ஒருமுறை பச்சைப் புடவையொன்றைக் கட்டிக்கொண்டு என் முன் வந்து நின்றாயே, நினைவிருக்கிறதா? அன்று நான் மட்டும்தான் வீட்டில் இருந்தேன். இந்த அஞ்சலிக்கு எது கட்டினாலும் நன்றாகத்தானிருக்கும் என்று நான் உன் கைகளைத் தொட்டதுண்டு. அன்று நீ அதற்கு எந்தவிதத் தடையோ, எதிர்ப்போ சொன்னதில்லை. மண்டியிட்டுக் கீழே உட்கார்ந் திருந்தபோது என் கையின் மேல் உன்னுடைய கரம் வந்து மெதுவாகப் படிய, அதை நான் அந்த இடத்தில் நாசுக்காகத் தவிர்த்துக் கொள்ள முயன்றபோது, அதை உன்னுடைய ஆவல் ததும்பும் விழிகளால் தடை செய்ததும் உண்டு. 'உங்களை இன்று காணவில்லை என்றால் எனக்கு உறக்கமே வராது போல இருந்தது, ஸார். ஆமாம், காலையில் அலுவலகம் போகும்போது ஏன் என்னைத் திரும்பிப் பார்த்துக் கையை ஆட்டாமல் போனீர்கள்? நான் எவ்வளவு நேரமாக வெளியிலேயே நின்று கொண்டிருந்தேன் தெரியுமா?' என்று ஒருதடவை சொன்னதை இவ்வளவு சீக்கிரம் மறந்து போயிருப்பாயென்று நான் நினைக்கவில்லை. ஆனால் ஒன்று: அந்த நேரங்களில் எல்லாம் கூட உன்னைப் பற்றி நான் பரிவை விட அதிகம் பச்சாத்தாபப்பட்டிருக்கிறேன். நான் பெரிய விஞ்ஞானியல்ல; ஆனால் மனிதர்களைப் பார்த்த மாத்திரத்தில் ஆராய்ந்து எடை போட்டுவிடும் தகுதியைச் சுலபமாகப் பெற்றிருக்கிறேன். அந்த ஒரு தகுதிதான் உன்னைப் பற்றியும் என்னுள் ஆராயத் தூண்டியது. 'எவ்வளவு சின்னவள்!’ இவ்வளவு அழகும், அறிவும் பெற்று இத்தனைத் துடிப்புடன் இருக்கிறாளே! இந்த இளம் உள்ளத்தின் துடிப்பு இப்படி யொரு வேடிக்கையான நிலையில் வளர்கிறதே! என்னை அலுவலகம் போகும்போது ஏன் திரும்பிப் பார்த்துக் கையை ஆட்டவில்லை என்கிறாளே! என்னைக் காணவில்லையென்றால் இன்று உறக்கம் நிச்சயம் வராது ஸார் என்கிறாளே! இந்த மாதிரியான தீவிர அன்புக்கும் தவிப்புக்கும் என்ன பொருள்? இந்த

    Enjoying the preview?
    Page 1 of 1