Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kalaintha Suruthi
Kalaintha Suruthi
Kalaintha Suruthi
Ebook83 pages31 minutes

Kalaintha Suruthi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803610
Kalaintha Suruthi

Read more from Maharishi

Related to Kalaintha Suruthi

Related ebooks

Reviews for Kalaintha Suruthi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kalaintha Suruthi - Maharishi

    http://www.pustaka.co.in

    கலைந்த சுருதி

    Kalaintha Suruthi

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    1

    என்னுடைய இதயம், என்னுடைய உணர்வு, என்னுடைய எண்ணம் எல்லாமே எனக்கு எதிராக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளை நேர்படுத்தவேண்டுமென்ற என் முயற்சியிலே நான் கண்டது, காண்பது எல்லாம் தோல்வியே.

    முகிலின் தேக்கம் வானவெளியை இருட்டாக்கிவிடுகிறது; காற்றின் தேக்கம் உயிரின் அசைவை நிறுத்தி விடுகிறது. அதேபோலத்தான்....

    நினைவின் தேக்கம்!

    என் மனதை ஸ்தம்பிக்க வைத்து வேடிக்கை பார்க்கிறது. உயிர்த்துடிப்பினுள்ளே ஊறிக் கிடக்கும் ஆசையும், தாபமும் மேகத்துள் மறையும் மேகம் போல, காற்றுடன் கலக்கும் காற்று போல ஒன்றையொன்று இழுத்து மறைத்துக் கொள்ளுகின்றன.

    என்னைச் சுற்றி என்னென்னவோ நடக்கின்றன. அவைகளை நான் உணர்கிறேன். அந்த உணர்வின் நிம்மதியுடன் காலம் விரைகிறது.

    காலம் தான் விரைகிறதே யன்றி எண்ணங்கள் தேங்கும் நீர்போலத் தேங்கிவிட்டதே! தின்றதையே அசைபோடும் மாடுபோல எதையோ மனம் அசைபோடுகிறது.

    மணி இன்னும் எத்தனை ஆகணும்? படுக்கையை விட்டு எழுந்திருக்க மனம் வரலையா? - சமையல் அறையிலிருந்து விமலாவின் குரல் கொஞ்சம் அதட்டலாகவே கேட்கிறது. காலை நேரம் வீடு பூராவும் காப்பியின் மணம் சுற்றிக்கொண்டிருக்கிறது. - இன்னும் த்ரீ -அவர்ஸ் தூங்கப்போகிறேன். அது வரையில் யாரும் என்னை 'டச்' பண்ண முடியாது, ஆமாம். --- விமலாவைப் போலவே நானும் என் குரலில் ஒரு அதிகாரத்தை வரவழைத்துக்கொண்டு கூறிவிட்டு முகத்தைக் தலையணைக்குள் புதைத்துக் கொள்கிறேன். விமலா காலையிலேயே என்னுடன் வம்புக்கு வரவேண்டுமென்ற ஆசையுடன் மனம் துடிக்கிறது.

    இன்னும் செவன் மினிட்ஸ் அவகாசம் கொடுக்கிறேன்! அதற்குள் எழுந்திருந்து பல் தேய்த்துவிட்டு உள்ளே வர வேண்டும். ஆமாம், சொல்லிவிட்டேன். -விமலா மீண்டும் அதட்டுகிறாள்.

    உன் மிரட்டுக்கெல்லாம் இங்கே யாரும் பயப்படத் தயாராக இல்லை என்று சொல்லிவிட்டு நான் சிரிக்கிறேன்.

    தயாரிருக்கோ! தயாரில்லையோ! ஒரு அவுன்ஸ் காப்பிகூட மீதி இருக்காது. எல்லாவற்றையும் நானே குடித்துவிடுவேன், ஜாக்கிரதை! --குழந்தையைப் பயங் காட்டுவது போலப் பேசுகிறாள். எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை; சிரிக்கிறேன். –

    என்ன சிரிப்பு! நீங்கள் எழுந்திருக்கப்போகிறீர்களா இல்லையா? -என்னுடைய கட்டில் முன் இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக்கொண்டு நிற்கிறாள். பொய்த் கோபத்தினால் உண்டான ஒரு போலிச் சிடு சிடுப்பு அவளுடைய முகத்தை வேடிக்கையாகக் காட்டுகிறது.

    நான் தலையணையைத் தூர எறிந்துவிட்டு எழுந்திருக்கிறேன்; அவளைப் பார்க்கிறேன்.

    செம்மண் பட்டை தீட்டிய படிக்கோலம்போல அவள் ஜ்வலிக்கிறாள். அந்த செளந்தர்யம், அந்த எடுப்பு, அந்த நிமிர்வு, பூரணமான பொலிவின் விகசிப்பு ஏறிய வசீகரம் எதையாவது உவமை கூற முடியுமா என யோசிக்கிறேன். வெளிர் சிகப்பில் புடவை, உடம்பு பூராவும் வெள்ளை மலர்களை வாரி இறைத்திருக்கிறது. அதேபோல் கொஞ்சம் அழுத்தமான சிகப்பில் ஜரிகை இழை பாய ரவிக்கை, நீல நிறப் புருவங்கள், குறுகுறுத்த கண்கள், சிவந்து சற்றே பிளவுபட்ட அந்த உதட்டைப் பார்க்கிறபோது, பழுத்துத் தொங்கும் கனியைக் கண்டவுடன் பறித்துத் தின்னவேண்டு மென்ற ஒரு 'திருட்டு' நைப்பாசை பிறக்குமே அதுபோலத் தான் பிறக்கிறது.

    இந்தப் பூரண அழகும் இனி எனக்கே சொந்தமாகப் போகிறது. அழகு பழுத்துத் தொங்கும் இந்த இன்கனித் தோட்டம் பூராவும் இனி என்னுடைய ஆளுகைக்கு வந்து விடும்....

    எனக்குப் பெருமையும் பூரிப்பும் தாங்கவில்லை, என்னை அதட்டிக்கொண்டு என் கட்டிலருகில் நிற்கும் விமலாவின் கரத்தைத் தாவிப் பிடித்தபடி எழுந்தேன். நாணமுடன் பிடியை உருவிக்கொண்டவள் என்னை அப்படியே தன் பூங்கரங்களால் மீண்டும் கட்டிலில் பிடித்துத் தள்ளிவிட்டு ஓடிவிடுகிறாள்...

    யாரோ இடித்துத் தள்ளின மாதிரிதான் இன்று இதோ என் அறையில் கிடக்கிறேன். விதியின் கையோ, அல்லது அழகின்

    Enjoying the preview?
    Page 1 of 1