Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Iruttil Oru Vaanampaadi
Iruttil Oru Vaanampaadi
Iruttil Oru Vaanampaadi
Ebook123 pages45 minutes

Iruttil Oru Vaanampaadi

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403570
Iruttil Oru Vaanampaadi

Read more from Rajesh Kumar

Related to Iruttil Oru Vaanampaadi

Related ebooks

Reviews for Iruttil Oru Vaanampaadi

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Iruttil Oru Vaanampaadi - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    இருட்டில் ஒரு வானம்பாடி

    Iruttil Oru Vaanampaadi

    Author:

    ராஜேஷ்குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    என்னோட ரேட் இப்போ பத்து லட்சம்... அஞ்சு லட்சத்தை வாங்கிகிட்டு ஒப்பந்தத்துல கையெழுத்து போட்ட காலமெல்லாம் இமயமலை ஏறிடுச்சு... நடிகர் பிரசன்னகுமார். ஏ.சி. அறையிலும்- கண்களில் அணிந்திருந்த குளிர் கண்ணாடியோடும்- விரலிடுக்கில் புகையும் உயர்தர சிகரெட்டோடும் பேசினான்.

    அந்த படத்தயாரிப்பாளர் இடுப்பில் துண்டு கட்டிக் கொள்ளாத குறையோடு கெஞ்சினார். தம்பி... இப்படி ஒரேடியா ரேட்டை ஏத்தக்கூடாது... பழசையெல்லாம் கொஞ்சம் நினைச்சு பார்க்கணும்...

    பிரசன்னகுமார் சீறினான். பழசை நானென்னய்யா நினைச்சுப் பார்க்கிறது...? நீ நினைச்சுப்பாரு. ஆந்திராவிலிருந்து கிழிஞ்ச சர்ட்டோட... அழுக்கு வேட்டியோட- செல்லாத ரெண்டு ரூபாய் நோட்டோட சென்னை சென்ட்ரல்ல வந்து இறங்கினே... இன்றைக்கு பெரிய நடிகர்-நடிகைகளை வெச்சு... சினிமாஸ்கோப்ல படம் பண்ற அளவுக்கு வளர்ந்துட்டே...

    அதுவும் உண்மைதான் தம்பி... இன்றைக்கு நான் சாப்பிடற சாப்பாடு- தம்பி போடற சாப்பாடு...

    அந்த நினைப்பு உனக்கு இருக்குல்ல... நான் கேட்ட பத்து லட்சத்தைக் கொடுத்துட்டு போயிட்டிரு...

    தம்பி...

    ம்... என்ன...?

    ஒரு ஏழு வாங்கிக்கோங்களேன்...

    யோவ்... இதென்ன கத்திரிக்காய் வியாபாரமா...? பேரம் பேசிட்டு உட்கார்ந்திட்டிருக்கே? என்றவன் பக்கவாட்டில் திரும்பி- சோபாவுக்குப் பின்னால் பவ்வியமாய் கைகட்டி நின்றிருந்த தன் உதவியாளரைக் கூப்பிட்டான்.

    செல்வம்...

    சார்...

    இப்போ நம்ம பங்களா வரவேற்பு அறையில் எத்தனை தயாரிப்பாளர்கள் வந்து காத்திட்டிருக்காங்கன்னு ரெட்டியார்க்கு கொஞ்சம் சொல்லுங்க...

    மொத்தம் ஏழு பேர் சார்...

    யார் யார்ன்னு சொல்லுங்க...

    ஏ.ஆர்.ஜி. பிக்சர்ஸ், பத்ரி மூவிஸ், குபேரா புரொடக்க்ஷன்ஸ்... திவ்யா கிரியேஷன்ஸ்... அப்புறம்...?

    செயலாளர் யோசிக்க-

    போதும்... போதும் என்றான் பிரசன்னகுமார். எதிரே உட்கார்ந்திருந்த ரெட்டியாரை ஏறிட்டான். இப்போ... அவர் சொன்ன கம்பெனிகளெல்லாம் உப்புமா கம்பெனியில்லை... ரெட்டியார்... அம்சமான கம்பெனிகள். நான் பதினஞ்சு லட்சம் கேட்டாலும் தருவாங்க... இருந்தாலும் நான் உங்க படத்துல நடிக்கிறதுக்காக- ஏன் கால்ஷீட் தர்றேன்னு சொல்றேன்... நீங்க என்கூட ரொம்பவும் பழகிட்டீங்க... அதான்...

    ஒரு எட்டு வாங்கிக்கோங்களேன்...

    சரியான அல்பமய்யா... நீ... சரி... சரி... பணத்தை எடு... இரண்டு வெள்ளையிலேயும் ஆறு கறுப்பிலேயும் வெச்சுக்க...

    படத் தயாரிப்பாளர் சூட்கேசைத் திறந்தார். நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகளை எடுத்து- டீபாயின் மேல் வைத்தார்.

    பணத்தை சரியா எண்ணித்தானே கொண்டு வந்திருக்கே...

    பேங்கிலிருந்து நேரா எடுத்துக்கொண்டு வர்றேன்... இருந்தாலும் நீங்களும் ஒரு தடவை எண்ணிக்குங்க... தம்பி...

    பிரசன்னகுமார் கட்டுகளை. எண்ண ஆரம்பித்தான். ஒண்ணு... இரண்டு... மூணு... நாலு...

    முகத்தில் 'ஜில்'லென்று ஒரு கொத்து தண்ணீர் வந்து விழ- திடும்மென்று எழுந்து உட்கார்ந்தான், பிரசன்னா. கண்களை கசக்கிக்கொண்டு பார்த்தான்.

    எதிரே-

    அவனுடைய அறை நண்பன் ஜெகதீசன்- மடித்துக் கட்டிய லுங்கியோடும்- கையில் நீர் நிரம்பிய தகர போணியோடும் நின்றிருந்தான். சிரித்தான்.

    என்னடா... கனவுல ஒண்ணு இரண்டு மூணு எண்ணிப் பழகறியா...?

    அ... அது வந்து... வந்து...

    வர... வர... தூக்கத்துல ரொம்பவும் உளர்றே... பிரசன்னா...

    சாரிடா ஜெகா... ஒரு அருமையான கனவு...

    என்ன கனவு...?

    கனவைச் சொன்னான்.

    அடிச்சக்கை... பத்து லட்சம் கேட்டியா...?

    ஆமா...

    நடிக்க சான்ஸ் கேட்டு ஆறு மாசமா... நாயா அலையறே...! சினிமா ஸ்கீரின்ல இன்னும் ஒருவாட்டி கூட எட்டிப் பார்க்கலை... பத்து லட்சம் வாங்கற மாதிரி சூப்பர்ஸ்டார் ஆனியே... ரொம்ப சந்தோசம்...

    நிச்சயமா இந்த கனவு பலிக்கத்தாண்டா போகுது ஜெகா... நீ வேணுமின்னா பார்த்துகிட்டே இரு...

    ஆமா... உனக்கு ஏதோ ஒரு படக் கம்பெனியிலிருந்து இண்டர்வியூ வந்ததே... அது என்றைக்கு...?

    இன்றைக்கு காலையில பத்து மணிக்குதான்...

    இண்டர்வியூ எங்கே...?

    ஐஸ்வரியா நகர்ல...

    படக்கம்பெனி நல்ல கம்பெனியா...? இல்லே உப்புமா கம்பெனியா?

    நல்ல கம்பெனிதாண்டா... இதுக்கு முன்னாடி மூணு படம் எடுத்து விட்டிருக்காங்க...

    அப்படியா... என்னென்ன படம்...?

    நிலத்தில் நீந்தும் மீன், கருவேலங்காட்டு காத்தமுத்து, கரைசேராத அலைகள்...

    இந்தப் படங்களெல்லாம் வெளியான மாதிரியே தெரியலையே...? ஜெகதீசன் தலையைச் சொறிந்து, தாடையைத் தடவி- யோசித்துக்கொண்டிருக்கும் போதே- மாடிப்படிகளில் யாரோ ஏறிவரும் சத்தம் கேட்டது.

    யார்றா வர்றது...?

    சத்தத்தைக் கேட்டாலே தெரியலையா... வீட்டுக்காரர் ஆனுச்சாமிதான் வர்றார்...

    அய்யய்யோ... வந்தா வாடகை கேட்பாரே...?

    பிரசன்னா சொல்லி வாயை மூடும் முன்பே- வீட்டுக்காரர் ஆனுச்சாமியின் அசுரக் குரல் கேட்டது... ஏண்டா களவாணி பசங்களா...? உங்ககிட்டே மாசமானால்... வாடகை கேட்க வராமே... பொண்ணா கேட்க வருவாங்க... என் கண்ணுல நீங்க ரெண்டுபேரும் வாடகை காட்டி மூணு மாசம் ஆச்சேடா...

    மன்னிச்சுக்குங்க நாயுடு... இன்றைக்கு சாயந்தரம் எப்படியும் உங்க வாடகையை கொடுத்துடறோம்...

    "எப்படிடா

    Enjoying the preview?
    Page 1 of 1