Puthiya Poo
By Maharishi
()
About this ebook
கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.
இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.
தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.
தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.
Read more from Maharishi
Kanneer Thuliyil Kadalosai Rating: 0 out of 5 stars0 ratingsIppadiye Oru Vazhkkai Rating: 0 out of 5 stars0 ratingsSpatikam Rating: 0 out of 5 stars0 ratingsKaatril Mithantha Padagu Rating: 0 out of 5 stars0 ratingsMara Seeppu Rating: 0 out of 5 stars0 ratingsBhadrakali Rating: 0 out of 5 stars0 ratingsVensangu Rating: 0 out of 5 stars0 ratingsPanju Bommai Rating: 0 out of 5 stars0 ratingsPanisuvar Rating: 0 out of 5 stars0 ratingsManam Oru Bridhavanam Rating: 0 out of 5 stars0 ratingsVilayada Vanthaval Rating: 0 out of 5 stars0 ratingsAthuvaraiyil Kanchana Rating: 0 out of 5 stars0 ratingsOosi Munai Rating: 0 out of 5 stars0 ratingsMohanasthiram Rating: 0 out of 5 stars0 ratingsKaatrodu Odiyavan! Rating: 0 out of 5 stars0 ratingsBhuvana Oru Kelvikuri Rating: 0 out of 5 stars0 ratingsVittil Rating: 0 out of 5 stars0 ratingsMaanilam Enna Vilai? Rating: 0 out of 5 stars0 ratingsPattu Kudai Rating: 0 out of 5 stars0 ratingsAndha Poonai Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Rating: 0 out of 5 stars0 ratingsSakkaram Ini Suzhalum Rating: 0 out of 5 stars0 ratingsNinaivugal Unnoduthan... Rating: 0 out of 5 stars0 ratingsGarudanai Kaditha Paambu Rating: 0 out of 5 stars0 ratingsIraval Karu Rating: 0 out of 5 stars0 ratingsOru Devathaiyin Punnagai Rating: 0 out of 5 stars0 ratingsKanavodu Sila Naatkal Rating: 0 out of 5 stars0 ratingsEera Vizhigal Rating: 0 out of 5 stars0 ratingsEera Pudavai Rating: 3 out of 5 stars3/5
Related to Puthiya Poo
Related ebooks
Konjam Konja Vaa Rating: 5 out of 5 stars5/5Kaadhal Thoranangal Katti Rating: 0 out of 5 stars0 ratingsThaniyadha Thagangal Rating: 0 out of 5 stars0 ratingsNilavukku Yengiyavargal Rating: 0 out of 5 stars0 ratingsShanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsPadigal Rating: 0 out of 5 stars0 ratingsUyir Painkili Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalikku Kalyanam Rating: 5 out of 5 stars5/5Madhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Neruppodu Vilaiyadu! Rating: 5 out of 5 stars5/5ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்... Rating: 0 out of 5 stars0 ratingsChinna Vizhi Parvaiyiley Rating: 0 out of 5 stars0 ratingsPon Malar Rating: 0 out of 5 stars0 ratingsThodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Un Ullam Ennidam Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Unnaik Kan(Gun) Theduthey Rating: 5 out of 5 stars5/5Mega Chithirangal Rating: 0 out of 5 stars0 ratingsAnjana Archana Dhayalan Rating: 5 out of 5 stars5/5Marakkumo Nenjam Rating: 0 out of 5 stars0 ratingsThalaivan Sooda… Nee Malarnthai Rating: 0 out of 5 stars0 ratingsIppadikku Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsSwarangal Rating: 0 out of 5 stars0 ratingsKannethirey Oru Kanavulagam! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkaakave Rating: 0 out of 5 stars0 ratingsVizhikkul Vizhundha Macham Rating: 0 out of 5 stars0 ratingsNivetha Nee Engey Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vandhean… Rating: 0 out of 5 stars0 ratingsOru Tharkolai Nadakka Pogirathu Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Theevinile… Rating: 5 out of 5 stars5/5
Reviews for Puthiya Poo
0 ratings0 reviews
Book preview
Puthiya Poo - Maharishi
http://www.pustaka.co.in
புதிய பூ
Puthiya Poo
Author:
மகரிஷி
Maharishi
For more books
http://www.pustaka.co.in/home/author/maharishi
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
புதிய பூ
வாசல் தாழ்வாரம், வராந்தா இரண்டையும் சேர்த்து ஒரு சிறிய பலசரக்குக் கடையாக ‘வாசற்கடை’ வைத்து நடத்தி குடும்பத்தை பராமரிக்கும் அண்ணன் சோமுவுக்கு தான் ஒரு பெரிய பாரம் என்ற எண்ணம் தேவகியின் உள்ளத்தில் அடிக்கடி எழுந்தது. வயதான பெற்றோர், வாத நோயால் வீட்டில் முடங்கிவிட்ட தம்பி ஆகியோரின் பரா மரிப்புக்காக தாலுக்கர ஆபீஎயில் பியூன் வேலை செய்து, வரும் வருமானம் போருமல் சிறிது தொகையைக் கடன் வாங்கி வீட்டின் முன்னால் கடைவைத்தான் சோமு, சின்னக் கடை. கடைக்கும் அது உள்ளடக்கிக் கொண்டிருக்கும் பொருளுக்கேற்றபடி வியாபாரம், அதில் வரும் சிறு லாபம்,
யாரோ வந்து சொன்னார்கள்பையனுக்கு யாருமில்லை. சொற்பம்தான் என்றாலும் நிரந்தரமான மாத வருமானம்
என்று. அதைக் கேட்டபோது அண்ணன் சோமுகூடத் தயங்கினன், ஆனால் தேவகி எடுத்த எடுப்பில் தன் சம்மதத்தைத் தந்து விட்டாள். பிறந்தவீட்டு வறுமையிலிருந்து விடுபடவேண்டுமென்ற வேகத்தைவிட, அண்ணனின் சுமையைக் கொஞ்சம் குறைப்போமே என்ற ஆர்வம்தான் அதிகமாக இருந்தது. கல்யாணம் என்று செய்துகொடுத்தால் போதும் வேறு எதுவுமே அந்த மாப்பிள்ளை எதிர் பார்க்கவில்லை என்றபோது சோமுவை அந்தக் கடைசி வார்த்தை சற்று அதிகமாகவே தூண்டிவிட்டது. அதன்பின் அதிகமான ஆடம்பரமின்றி சிக்கனமாக விவாகம் நடந்தேறிவிட்டது, எதிர்பார்த்த அளவு பையன் இல்லை என்கிற மனச்குறை சோமுவிடம் இருந்ததோ என் கனவோ, தேவகியிடம் அம்மாதிரி மனக்குறைக்கு இடமே இல்ல, தன் வீட்டிலும், கெட்டிமேளனத்தின் சப்தம் கேட்குமா, தன் கழுத்திலும் முன்று முடிச்சுகள் விழுமா கான்று ஏங்கியவயாருக்கு இந்த அளவுக்குக் காரியங்கள் நடந்தேறி இருக்கிறதே!
விவாகமானபின் கும்பகோணத்தில் சில நாள் அவன் தேவகியின் வீட்டிலேயே இருந்தான். இரண்டுமாத லீவில் இருப்பதாகக் கூறினான்... யாரும் எவ்வித ஆட்சேபனையும் கூறவில்லை,
பிறகு சென்னே புறப்பட்டான், வீடு பார்த்துவிட்டு எழுது வதாகவும், உடனே அண்ணனை அழைத்துக்கொண்டு சென்னை வரும்படியும் படிறினன், லிவு இருந்தால்தானே நேரில் வந்து அழைத்துக்கொண்டு போவதாகவும் கூறிச் சென்றுன்,
அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்ல.
தேவகி பொறுமை இழந்தாள். அவன் கொடுத்துச் சென்ற விலாசத்திற்கு கடிதங்கள் போட்டு அவளும் ஓய்ந்து போய்விட்டாள்,
திருமலைபோட்ட மூன்று முடிச்சுகளின் பாரம் சுமையாகக் கணத்தது,
அண்ணனும், பெற்றோரும் அவன் நச்சரிக்கத் தொடர்கினர், ஏழ்மையில் செயலற்றவர்கள் அவன் தலைவிதியை அவளாகவே நிர்ணயித்துக் கொள்ளும்படி விட்டுவிட்டனர்,
யாரோ விலாசம் தெரியாதவனுக்கு வாழ்க்கைப் பட்டு விட்டு, இப்பொழுது விலாசம் விசாரித்துக் கொண்டிருக்கிறாள் என்று ஜாடைப் பேச்சுக்கள் மலிந்தன,
மூன்றாம் மனிதராக முன்நின்று விவாக ஏற்பாடுகளை முடித்து வைத்த காண்ணெய்க் கடை எத்திராஜ் திருமலை சென்னையில் இருக்குமிடத்தையும், அவன் வேலை செய்யும் இடத்தையும் தேவகியிடம் வந்து கூறி இனி எல்லாம் உன் முயற்சியிலும் உன் சாமர்த்தியத்திலும்தான் இருக்கிறது. எதற்கும் முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது ‘கோர்ட்’ ஜீவனாம்சம் கேட்கலாம்...என்று கூறிவிட்டுப் போய்விட்டார்,
பல நாள் சிந்தித்தாள். அவளால் எவ்வித முடிவுக்கும் வர முடியவில்லை, கும்பகோணம்-அதைவிட்டால் மாய வரம், வைத்தீஸ்வரன் கோயில் இதைத்தவிர வேறு எந்த இடமும் அவளுக்குத் தெரியாது. வெளியுலக அனுபவம் என்பது அவனைப் பொறுத்த வரையில் இல்லை. அவளுக்கு எதுவுமே தெரியாது.
மனத்தில் பெரும் சுமை, மண வாழ்க்கையில் பெருத்த ஏமாற்றம், குடும்பத்தில் நிலவும் ஏழ்மையால், தன்னை வஞ்சித்து விட்ட கணவனை சட்டரீதியாகவோ, ஆள் பலத்தைக் கொண்டோ எதிர்க்கமுடியாத அவலம், எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்தாள், மனதில் சாதாரண தெம்பு பிறந்துவிட்டது,
கையில் போட்டிருந்த ஒரேயொரு ஜோடி தங்க வளையலை விற்றுப் பணமாக்கிக் கொண்டு சென்னை புறப்பட்டு விட்டாள்.
கணவனைத் தேடிக்கொண்டு அவனது அலுவலகம் போனபோது அவன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்ட டுப்போய் பல மாதங்கள் ஆகிவிட்டனவென்ற செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது,
திருமலையைத் தேடிவந்தவளுக்கு திருமலை கிடைக்க வில்லை, தேவனாதன் கிடைத்தான்.
தேவனாதன் திருமலையின் நண்பன் என்றும், அவனும் தானும் ஒரே அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றியவர்கள் தான் என்றும் திருமலை தற்பொழுது குடியிருக்கும் அறை தனக்குத் தெரியும் என்றும் அவன் கூறினான்.
பெட்டியும் சைப்பையுமாக கையில் ரயில் செலவுக்குப் போக மீதியுள்ள சொற்பத் தொகையுடன், சென்னை கிளம்பியபோது மனதில் இருந்த அபரிமிதமான நம்பிக்கையில் பாதியை இழந்துவிட்டு அந்த அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு கொன்னே மரத்தடியில் நின்று கொண்டிருந்த போது மரத்தடி பெட்டிக் கடையில் நின்ற தேவனாதன் அவளுடைய இளமையான தோற்றத்தையும், மருண்ட விழிகளையும், சோர்வடைந்த முகத்தையும் பார்த்துக்கொண்டே பேசினன். அவன் பார்வையில் உண்மையான கனிவு தோன்றியது. தன் சாதியைச் சேர்ந்தவன் என்பதை அவள் எளிதில் கண்டுகொண்டாள்.
ஒரு கடிதம் போட்டு, முன் ஏற்பாடுகளுடன் வந்திருக்கலாமே,
அவனிடம் உண்மையை கூறலாமா வேண்டாமா என சில நிமிஷங்கள் தயங்கினாள். தன் கணவனின் நண்பன் என்கிறனே. அவருடன் சேர்ந்து வேலை செய்ததாகவும் கூறுகிறானே, அவர் இருக்கும் அறையைத் தெரியும் என்றான்.
என்னை அவரிடம் அழைத்துப் போக முடியுமா?
"தாராளமாக