Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mara Seeppu
Mara Seeppu
Mara Seeppu
Ebook99 pages33 minutes

Mara Seeppu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை ‘ரன் மெஷின்’ என்றால், 83 வயதிலும் ஓயாமல் எழுதி வரும், மூத்த படைப்பாளர் மகரிஷியை, ‘எழுத்து இயந்திரம்’ என்றே சொல்லலாம். இதுவரை, 130 நாவல்கள், 5 சிறுகதை தொகுப்புகள், 60க்கும் மேற்பட்ட கட்டுரைகள் என 22 ஆயிரம் பக்கங்களுக்குமேல் எழுதிக் குவித்துள்ளார். இன்றும் அவரது பேனா மையின் ஈரம் காயவே இல்லை.

இவர் எழுதிய பல நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளன. ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய, ‘புவனா ஒரு கேள்விக்குறி’ (1977) படத்தின் கதை மகரிஷியுடையது.

தவிர, ‘பனிமலை’ என்ற நாவல், ‘என்னதான் முடிவு?’ (1965) படமாக ஆக்கம் பெற்றது. ‘பத்ரகாளி’ (1976), ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு‘ (1977), ‘வட்டத்துக்குள் சதுரம்‘ (1978), ‘நதியை தேடிவந்த கடல்’ (1980) ஆகிய திரைப்படங்களும் மகரிஷியின் நாவல்களை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டன.

தமிழில் கல்கி, ஜெயகாந்தன், தி.ஜானகிராமன், சுஜாதா போன்ற நாவலாசிரியர்களின் படைப்புகளில் ஒருசில, திரைப்படமாக உருவாக்கம் பெற்றுள்ளன. எனினும், தனிப்பட்ட ஒரு எழுத்தாளரின் நாவல்கள் அதிக எண்ணிக்கையில் திரைமொழியில் சொல்லப்பட்டது என்றால் அது மகரிஷி உடையது மட்டுமே. இதை பெருமைக்குரியதாக சொல்லும் அதேநேரம், அதிகளவில் கதை திருட்டுக்கு உள்ளானதும் மகரிஷியின் படைப்புகள்தான்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580123803534
Mara Seeppu

Read more from Maharishi

Related to Mara Seeppu

Related ebooks

Reviews for Mara Seeppu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mara Seeppu - Maharishi

    http://www.pustaka.co.in

    மரச் சீப்பு

    Mara Seeppu

    Author:

    மகரிஷி

    Maharishi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/maharishi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அம்மா

    ……….

    ஏ அம்மாவ்...

    என்னடி!

    அம்மா...

    மூன்று அம்மாவுக்குப் பிறகு நிலவிய மெளனம், என்னடி என்கிற பதிலில் தொனித்த சினம்.

    வாசல் தாழ்வாரம் ஓரமாக ஒதுங்கி நின்ற விசாலாட்சியிடம் காணப்பட்ட நிதானம்.

    உள்ளே தாயார் பொன்னம்மா அலுத்துக் கொண்டாள்.

    ரொம்ப சரி... நான் ஒரு காரியம் ஒழுங்கா செய்ய முடியாதே. ஏதாவது முன் கூட்டியே திட்டம் போட்டால் அதுக்குன்னு ஒரு ரெடிமேட் குந்தகம் காத்துண்டே இருக்கும். நான் எந்த நல்லதையும் மனசால்கூட நினைக்கக்கூடாது.

    தாயாரின் புலம்பல் தொடர்ந்தது. ஸ்டௌ அருகில் உட்கார்ந்திருந்த தாயார் கையில் ஒரு துடைப்பக் கட்டையுடன் வெளியே வந்தாள்.

    இப்பத்தானேடி ஒக்காந்தே! வள்ளிசா இருபது நாள் கூட ஆகலையே, இதென்னடி உடம்பு!

    அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நான் என்ன வேணும்னா உட்கார்ரேன்.

    வேணுங்கறதையெல்லாம் ஒரேயடியா கேட்டு வாங்கிண்டு போ. அறைக்குப் போனப்புறம் அத வாங்கிண்டு வா, இத வாங்கிண்டு வான்னு ஆள அனுப்பாதே.

    காபி தம்ளரைக் கீழே வைத்தாள்.

    குடிச்சுட்டு தம்ளரை வச்சுக்கோ.

    அந்த ரைட்டிங்பேடை அப்படியே கொடுத்துடு. பேனா மேஜை மேலே இருக்கு. சீப்பு, கண்ணாடி, பௌடர்... தேங்காய் எண்ணெய் கொஞ்சம் கையிலே விட்டுடு. தலையில் தடவிண்டு போயிடறேன். அப்புறமா தலைய பின்னிக்கறேன். புடவை இதே போறும்.

    அவள் கேட்டவையெல்லாம் ஒவ்வொன்றாக வாசல் தாழ்வாரத்திற்கு வந்து விட்டன.

    ஒரு கையில் துடைப்பத்தையும், மற்றொரு கையில் மற்ற எல்லாவற்றையும் எடுத்துக் கொண்ட விசாலும் அந்த காலனியின் கோடியில் உள்ள அறைக்கு வந்தபோது அங்கே ஏற்கெனவே ஒரு பெண் தேசத்தை முன்புறம் விட்டுப் பின்னிக் கொண்டிருந்தாள்.

    விசாலத்தின் கையில் உள்ள துடைப்பத்தை வாங்கிக் கொண்ட அந்தப் பெண் இருபதுக்கு பதினைந்து அளவுள்ள அந்த அறையைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்.

    நீயும் காலமே தானா?

    ஆமாம் -என்றாள் நாகி என்கிற நாகேஸ்வரி."

    சில நிமிஷங்களில் அந்த அறையை சுத்தம் செய்தார்கள். இன்னும் முழுசாக நான்கு நாட்கள் அங்கே இருந்தாக வேண்டும். பேச்சு, படிப்பு, தூக்கம், சாப்பாடு எல்லாம் அங்கேயேதான்.

    நான்கு நாட்கள் என்றால் நான்கு நாட்கள் சிறைதான்.

    தாயார் பொன்னம்மாவுக்கு அந்த நான்கு நாட்களில் விசாலம் யாரிடமும் பேசினால்கூட பிடிக்காது.

    சிவனேன்னு உள்ளே இரேன். போறவா, வரவா கிட்டேயெல்லாம் என்ன பேச்சு? பேசறதை நாலு நாளுக்கப்புறம் குளிச்சுட்டு வந்து வச்சுண்டா குடி முழகியாப் போயிடும் என்பாள். எனவே விசாலம் கதவை சாத்திக் கொண்டு உள்ளே போய் விட்டால் வெளியில் தலை காட்ட மாட்டாள்.

    அவள் வேலைக்காக நிறைய இடங்களுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கிறாள். ஏதாவது இன்டர்வ்யூ என்று வந்து விடக் கூடாதே என்று பயந்து கொண்டிருப்பாள். அதையும் மீறி வந்து விட்டால் அம்மாவுக்குத் தெரியாமல் ஏதேனும் சாக்கு போக்குக் கூறிவிட்டுப் போக வேண்டும். இது ஒரு பெரும்பாடுதான்.

    அறையைச் சுத்தம் செய்து முடித்தாயிற்று. உடனடியாக அவள் செய்யக் கூடிய வேலையொன்றுமில்லை.

    தென்னூர் நெடுஞ்சாலையின் பக்கம் உள்ள சின்னதான ஜன்னலைத் திறந்தாள். வெளிச்சம் பளிச்சென உள்ளே பாய்ந்தது. அதேபோல் தென்னூர் நெடுஞ்சாலையின் சத்தமும் உள்ளே வந்தது.

    எதிர் சாரியில் விநாயகபுரம் கோடி வரை தெரிந்தது.

    அவள் சுவரில் சாய்ந்து உட்கார்ந்து அந்த சிறு கதையை எழுதத் தொடங்கினாள்.

    கதையாக்கா எழுதறே?

    ஆமாம்.

    எந்தப் பத்திரிகைக்கு?

    புதுசா பத்திரிகை ஒண்ணு வரதாம். சிறுகதை வேணும்னு கேட்டிருக்கா.

    இவ்வளவு புதுப் பத்திரிகை வரதே எல்லாம் நெலச்சு நிக்குமாக்கா?

    எழுத முற்படும்போது நாகி இப்படிப் பேசியவுடன் அவளைப் பார்த்து சிரித்தாள்.

    ஒவ்வொரு புதுப்பத்திரிகை விளம்பரம் வரும்போதும் மக்கள் மனதில் தோன்றும் முதல் எண்ணம் இதுதான். நியாயமான கேள்விதான். இதற்கு பதில் சொல்ல வேண்டியது காலமும், பத்திரிகைத் தொடங்குகிறவர்களின் தரமும்தான்.

    எவ்வளவு பத்திரிகை வந்தா என்ன? தரமான பத்திரிகையும், மக்கள் ரசனையைப் புரிந்துகொண்டவர்கள் நடத்துகிற பத்திரிகையும் நிற்கும்.

    இதற்கு மேல் நாகி விசாலத்தைத் தொந்தரவு செய்யவில்லை.

    விசாலத்தின் சிறுகதைகள் இப்பொழுது பரவலாகப் பல பத்திரிகைகளில் வந்து கொண்டிருந்தன. பத்திரிகைகளில் வருகின்ற அதே அளவு திரும்பியும் வருகின்றன.

    எழுத்தை அவள் ஒரு நேரப் பணியாக நினைக்கவில்லை.

    ரஸனை, சுகானுபவம், ஒன்றைச் சொல்லும் தினுசில் ஒரு புதிய உத்தி, ஒன்றைப் படித்து முடித்தபோது உண்டாகும் அதிருப்தி. இது இப்படியிருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைக்கிற நினைப்பில் உண்டாகும் தன்னிச்சையான சிந்தனை ஆர்வம்!

    திருச்சி தென்னூர் சாலையில் உள்ள சம்மர் ஹவுஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1