Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mella Mella Oru Thigil
Mella Mella Oru Thigil
Mella Mella Oru Thigil
Ebook97 pages47 minutes

Mella Mella Oru Thigil

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403595
Mella Mella Oru Thigil

Read more from Rajesh Kumar

Related to Mella Mella Oru Thigil

Related ebooks

Related categories

Reviews for Mella Mella Oru Thigil

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mella Mella Oru Thigil - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மெல்ல மெல்ல ஒரு திகில்

    Mella Mella Oru Thigil

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    இந்த நாவலின் முதல் அத்தியாயம் வாசகர்களுக்குச் சமர்ப்பணம்.

    'இல்லை' - என்று பலரால் நம்பப்பட்டு வருகின்ற ஒன்றைப் பற்றி 'நம்புங்கள்' என்று சொல்ல வருகின்ற நாவல். தலையைச் சுற்றி மூக்கைத் தொடாமல் நேரிடையாகவே மூக்கைத் தொட்டு விடுகிறேன்.

    நான் அன்று மதுரை போகும் அவசரத்தில் இருந்தேன். கோவை ஜங்ஷனிலிருந்து இரவு பத்தே கால் மணிக்குப் புறப்படும் ராமேஸ்வரம் எக்ஸ் பிரஸில் பெர்த் ரிசர்வ் செய்திருந்தாலும், பயணத்துக்கே உரிய பதட்டத்தோடு ஒரு மணி நேரம் முன்னதாக ஸ்டேஷன் போய்ச் சேர்ந்தேன். ஆட்டோவில் ஸ்டேஷனுக்குப் போகும் வழி பூராவும் என் பின் மண்டையில் ஒரே நம நமா. அடுத்து என்ன நாவல் எழுதலாம்? வழக்கம் போல் 'சந்திரா நீ சாக வருகிறாயா?' 'இனிக்க... இனிக்க... ஒரு கொலை!' கண்ணில் ஒரு முள்... 'முள்ளில் மோதிய வாழை' போன்ற தலைப்புகளில் சமூகக் கதையை சாய்த்து விடலாமா...? - யோசனை முடிவதற்குள் ஸ்டேஷன் வந்துவிட - ப்ரீப்கேஸோடு மூன்றாவது பிளாட்பாரம் போனேன்.

    ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் தலையில்லாமல் வெறும் போகிகளோடு நின்றது. என்னுடைய 'சி' கோச்சை கண்டுபிடித்து என் இருக்கையில் போய் உட்கார்ந்தேன். கம்பார்ட்மெண்டில் கூட்டம் இல்லை.

    எனக்கு நேர் எதிர் ஸீட்டில் வெள்ளை ஜிப்பா, வெள்ளை வேட்டி, பட்டையான பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியோடு நாற்பத்தைந்து வயதுள்ள வழுக்கையோடு ஒருவர் என்னையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தார். நான் அவரைப் பார்க்கிறபோது அவர் பார்வையைத் திருப்பிக்கொள்வதும், நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினால் அவர் என்னையே பார்ப்பதுமாய் சில நிமிஷங்கள் ஓடின. கடைசியில் தொண்டையைக் கனைத்தார்.

    எக்ஸ்க்யூஸ்மீ!

    நான் தலையை உயர்த்தினேன். எஸ்! என்றேன். அவர் தயக்கமான குரலில் கேட்டார் நீங்க ரைட்டர் ராஜேஷ்குமார்தானே?

    ஆமா என்றேன் புன்னகையோடு. எப்படிக் கண்டுபிடிச்சீங்க?

    உங்க போட்டோவை பத்திரிகையில நிறைய தடவை பாத்திருக்கேன்... போட்டோவுல பார்க்கிறப்போ நீங்க சிவப்பா இருப்பீங்கன்னு நினைச்சேன். நேர்ல பார்த்தா கறுப்பா இருக்கீங்க... அதான் கொஞ்ச நேரம் திணறிப் போயிட்டேன்...

    நான் பதிலொன்றும் சொல்லாமல் சிரித்தேன்.

    எம்பேரு சுகவனேஸ்வரன்... கார்டிகா அண் கம்பெனியில அக்கௌண்டண்ட்டா இருக்கேன்... உங்க கதைகள்னா என்னோட ஃபேமிலியில எல்லோருக்கும் பிடிக்கும்...

    தாங்க்ஸ்!

    ஆனா எனக்குப் பிடிக்காது!

    என் முகம் மாறியது. ஏன் அப்படிச் சொல்றீங்க...? என்னோட கதைகள் உங்களுக்குப் பிடிக்காம போகக் காரணம்?

    நீங்க திரும்பத் திரும்ப க்ரைம் கதைகளையே எழுதிட்டு வர்றது தான் எனக்குப் பிடிக்கலை. கொஞ்சம் வித்தியாசமா வேறுவிதமான தீம்ஸை எடுத்துக்கிட்டு எழுதக்கூடாதா?

    வித்தியாசமா என்ன எழுதலாம்? நீங்களே சொல்லுங்க!

    இந்த 'ஸ்பிரிட்' பத்தி எழுதக்கூடாதா...?

    ஸ்பிரிட்டா...? விளக்கெரிக்க உபயோகப் படுத்தினாங்களே அந்த ஸ்பிரிட்டா...? அதைப்பற்றி என்ன எழுத முடியும் ஸார்!

    ஜோக்கடிக்காதீங்க ராஜேஷ்குமார்... நான் சொல்றது அந்த ஸ்பிரிட்டை அல்ல. ஸ்பிரிட்... அதாவது, ஆவி... செத்த பிறகு மனுஷ ரூபத்துல வருதே அந்த ஸ்பிரிட்டைப் பத்தி எழுதச் சொல்றேன்...!

    ஓ...! ஆவியைப் பத்தி எழுதச் சொல்றாரா இந்த மனுஷன்? எவன் நம்புவான்?

    என்ன மெளனமாயிட்டீங்க ராஜேஷ்?

    ஒண்ணுமில்லை. ஆவியப் பத்தி யாருக்கும் நம்பிக்கை இல்லாதப்போ நான் அதை வெச்சு கதை எழுதினா யார் ஸார் படிப்பாங்க?

    நிச்சயமா எல்லாரும் படிப்பாங்க...! ஆவி இந்த உலகத்தில இருக்கு. நான் நம்பறேன். நீங்க நம்பறீங்களா...?

    எனக்கு அவ்வளவா நம்பிக்கையில்லை!

    அப்படிச் சொல்லாதீங்க ராஜேஷ்! ஆவி இருக்கு. நம்புங்க. சிலபேருடைய வாழ்க்கையில ஆவிகள் பங்கெடுத்துகிட்டு சில விபரீதமான செயல்களையெல்லாம் செஞ்சிருக்கு. நான் ஒரு சம்பவத்தை சொன்னா நீங்க கேக்கத் தயாராயிருக்கீங்களா ராஜேஷ்...?

    ம்... சொல்லுங்க கேக்கறேன்...! வாட்ச்சைப் பார்த்துக் கொண்டே சொன்னேன், ரயில் புறப்பட இன்னம் முழுசாய் ஒரு மணிநேரம் இருந்தது.

    சுகவனேஸ்வரன் சொல்ல ஆரம்பித்தார். அவர் விவரித்த சில சம்பவங்கள் என் அடிமனசைக் கீறி திகிலை பெருமளவில் உற்பத்தி செய்தது. ரத்தம் ஆங்காங்கே உடம்பில் தயக்கம் காட்டிக் காட்டிப் பாய்ந்தது.

    பெர்த்தில் தூங்க முடியாமல், தூக்கம் பிடிக்காமல் மதுரை வந்து சேர்ந்தேன். லாட்ஜில் ரூம் எடுத்து அலுப்பு தீர குளித்துவிட்டுப் பேப்பரையும், பேனாவையும் எடுதழூது வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.

    மெல்ல மெல்ல ஒரு திகில் என்கிற இந்த நாவல் - வித்தியாசமாக உருவாக ஆரம்பித்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1