Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Plum Marangal Poothuvittana
Plum Marangal Poothuvittana
Plum Marangal Poothuvittana
Ebook71 pages35 minutes

Plum Marangal Poothuvittana

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ப்ளம் மரங்கள் பூத்து விட்டன' நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம்மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன். நான் எந்த மாநிலப் பின்னணியில் கதைகள் எழுதினாலும், தமிழ் வாசகர்கள் கதை மாந்தருடன் நெருக்கம் காண தமிழ் பேசும் பாத்திரங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அநேகமாக அத்தகைய பாத்திரங்கள் அக்கதைகளில் இடம் பெறுவது வழக்கமாகிப் போயிற்று. இக்கதையிலும் அப்பாவாக வரும் பாத்திரம் ஒரு தமிழர்.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403569
Plum Marangal Poothuvittana

Read more from Vaasanthi

Related to Plum Marangal Poothuvittana

Related ebooks

Reviews for Plum Marangal Poothuvittana

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Plum Marangal Poothuvittana - Vaasanthi

    http://www.pustaka.co.in

    ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன

    Plum Marangal Poothuvittana

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    உங்களுடன் ஒரு வார்த்தை

    இந்தத் தொகுப்பில் இருக்கும் 'ப்ளம் மரங்கள் பூத்து விட்டன' நான் இந்திய வட கிழக்குப் பிரதேசங்களில் இருந்தபோது எனக்கு ஏற்பட்ட அனுபவங்களினால் பிறந்தவை.

    'ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன' மேகாலய மாநிலத்தின் தலைநகர் ஷில்லாங்கைப் பின்னணியாகக் கொண்டது. ஷில்லாங் வெகு அழகான மலைவாசஸ்தலம். நான் அதன் இயற்கை அழகை என்னை மறந்து ரசித்து அமர்ந்த நாட்கள் அநேகம். அங்கு ப்ளம்மரங்கள் பூக்கும்போது பார்க்கக் கிடைக்கும் காட்சி தெய்வ தரிசனம் போன்றது. அங்கு எங்களுக்குப் பரிச்சயமான ஒரு அஸ்ஸாமிய குடும்பத்தில் நான் மனோவியல் ரீதியாக அவர்களது பிரச்சினையை அணுக முயன்றதன் வெளிப்பாடே இந்த நெடுங்கதை. இது எங்கு வேண்டுமானாலும் நிகழக்கூடிய கதைதான். ஆனால் நான் ஷில்லாங்கில் இருந்தபோது சந்தித்த கதாபாத்திரங்கள் என்பதால் அதன் இயற்கைப் பின்னணியில் எழுதினேன். நான் எந்த மாநிலப் பின்னணியில் கதைகள் எழுதினாலும், தமிழ் வாசகர்கள் கதை மாந்தருடன் நெருக்கம் காண தமிழ் பேசும் பாத்திரங்களை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தோன்றியதால் அநேகமாக அத்தகைய பாத்திரங்கள் அக்கதைகளில் இடம் பெறுவது வழக்கமாகிப் போயிற்று. இக்கதையிலும் அப்பாவாக வரும் பாத்திரம் ஒரு தமிழர்.

    *****

    ப்ளம் மரங்கள் பூத்துவிட்டன

    1

    அந்தப் புல் தரையில் உட்கார்ந்துகொண்டு அந்த இதமான வெய்யிலில் ஆரஞ்சு பழத்தை ஒவ்வொரு சுளையாக உரித்துத் தின்பது சுகமாக இருந்தது. உரித்த தோலியையெல்லாம் அவன் வெகு ஜாக்கிரதையாகப் புல் தரையில் போடாமல் ஒரு காகிதத்தில் வைத்திருந்தான். எந்த இடத்திலும் குப்பை போடக்கூடாது என்கிற உணர்வே ஒரு நித்திய நியமமாகிப் போய்விட்ட மாதிரி தோன்றிற்று.

    இப்படியே அந்த இதமான வெய்யிலில் ஆரஞ்சுப் பழங்களைத் தின்றுகொண்டு, நகரும் மேகங்களைப் பார்த்துக்கொண்டு எந்தவித யோசனையும் இல்லாமல் ஜன்மம் முழுவதும் உட்காரலாம் போலிருந்தது. பள்ளிக்கூடம் என்றும் ஆபீஸ் என்றும் எதற்குத்தான் எல்லோரும் பறக்கவேண்டும் என்று தோன்றிற்று.

    இன்றைக்கு நல்லவேளை பள்ளிக்கூடம் இல்லை என்று மனத்தில் சமாதானமேற்பட்டது. யாரோ ஒரு பெரியவருடைய நினைவு நாள். யார் என்று நினைவில்லை. இதையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிரத்தையே அவனுக்கு இல்லை. சாதாரணமாக அவனுக்கு எதுவுமே மனசில் அதிகம் ஆழமாகப் பதிவதில்லை. பள்ளிக்கூடம் போகையிலும் வருகையிலும் அவன் எதைப்பற்றியும் அதிகம் சிந்தித்ததில்லை, மேலும் கீழுமாக ஓடும் அந்த மலைகளின் பாதைகளில் நடக்கும் போது மேட்டில் ஏறுகையில் மூச்சுத் திணற, மார்பு படபடக்க அவன் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில விநாடிகள் நிற்பான். அப்பொழுது மேலே மேகங்கள் நகர்ந்து கொண்டிருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறியிருக்கும் வீடுகளில் க்ளாடியோலி பூக்கள் அசைந்து அசைந்து சிரிக்கும். சின்னச் சின்ன பூத்துவிட்டன குழந்தைகள் கனமான ஸ்வெட்டர்களில் குல்லாய்களில் ஜப்பான் பொம்மைகள் மாதிரி தோட்டங்களில் விளையாடிக் கொண்டிருக்கும். அவன் எல்லாவற்றையும் ஒரே மூச்சாக தன்னுள் பதித்துக் கொள்கிற மாதிரி பார்ப்பான். மனத்துக்குள் ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்த சந்தோஷ உணர்வு பள்ளிக்கூடத்தின் இரும்புக்

    Enjoying the preview?
    Page 1 of 1