Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nalliravu Natpudan...
Nalliravu Natpudan...
Nalliravu Natpudan...
Ebook96 pages52 minutes

Nalliravu Natpudan...

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903552
Nalliravu Natpudan...

Read more from Pattukottai Prabakar

Related to Nalliravu Natpudan...

Related ebooks

Related categories

Reviews for Nalliravu Natpudan...

Rating: 4 out of 5 stars
4/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nalliravu Natpudan... - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    நள்ளிரவு நட்புடன்...

    Nalliravu Natpudan…

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பாக்யராஜ் தனது கண்ணாடியை ஏற்றி விட்டுக் கொண்டு, மடித்த கைக்குட்டையால் தாடையை ஒரு முறை ஒற்றிக் கொண்டு மைக் முன்னால் வந்து நின்றார். பிரின்சிபால் சந்தன மாலையுடன் குறுக்கிட்டார்.

    நமது பிலிம் இன்ஸ்ட்டிட்டியூட்டிற்கு திரைக்கதையமைப்பைப் பற்றி சிறப்புச் சொற்பொழிவாற்ற வந்திருக்கும் இயக்குனர் திலகம் திரு. கே.பாக்யராஜ் அவர்களை நிர்வாகத்தின் சார்பிலும், மாணவ, மாணவிகளின் சார்பிலும் வாழ்த்தி வரவேற்கிறேன்.

    மாலை போடும் போது கை தட்டினார்கள், போட்டோ எடுத்தார்கள்.

    ராதிகா தனது நோட்டுப் புத்தகத்தைத் திறந்து வைத்து குறிப்பெடுத்துக் கொள்ளத் தயாராய் இருந்தாள்.

    என்னைப் பேசணும்னு சொல்லி கூப்புட்டாங்க. இரும்பு அடிக்கிற இடத்தில ஈக்கு என்ன வேலைன்னு நினைச்சேன். இங்கே திரைக்கதைன்னா என்ன, அதை எப்படி அமைக்கிறதுன்னு ரொம்ப விரிவா பாடம் சொல்லித் தர்றாங்க. அந்த பாட புஸ்தகத்தை வாங்கிப் படிச்சுப் பார்த்தேன். பெரிய பெரிய சாதனைகள் செஞ்ச சினிமா கலைஞர்கள், இயக்குனர்கள் திரைக்கதையைப் பத்தி விவரமா சொல்லியிருக்காங்க. இதுக்கப்புறம் நான் என்ன சொல்றதுக்கு இருக்குன்னு யோசிச்சேன். தேர்தல்ல ஓட்டுப்போடற சமயத்தில் சில பேரு 'என் ஒரு ஓட்டு தான் தேர்தல் முடிவை மாத்திடப் போகுதா'ன்னு சலிப்பா சொல்றதைக் கேட்டுருக்கேன். ஒவ்வொரு ஓட்டா சேர்ந்தா தான் ஆதரவோ, எதிர்ப்போ தெரிய வைக்க முடியும். இல்லிங்களா? அந்த மாதிரி எனக்குத் தெரிஞ்சதை ஒண்ணு ரெண்டு சொல்லி வைக்கலாம்னு முடிவு பண்ணிதான் இங்க வர்றதுக்கு சம்மதிச்சேன்.

    ராதிகாவின் கைக்கு தத்தித் தத்தி பல கைகள் மாறி ஒரு மடக்கப்பட்ட காகிதம் வந்து சேர்ந்தது. பிரித்துப் பார்த்தாள்.

    'டியர் ராது, ஆறு மணிக்கு சினிமா, உடனே நைஸாகப் புறப்பட்டு விடு - G'

    திரும்பி தனக்கு முன்பு நான்காவது வரிசையில் அமர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டிருந்த குலோத்துங்கனைப் பார்த்தாள் ராதிகா.

    லூசான மஞ்சள் காட்டன் சட்டை போட்டு, ஜீன்ஸ் பேண்ட்டில் இன் செய்திருந்தான். பூமா ஷூஸ். லேசாக தாடி. கலைந்த தலை. கைகளில் மொசு மொசுவென்று முடிகள். தடித்த, கறுத்த உதடுகள்.

    அங்கிருந்தே தனது வாட்சைத் தொட்டுக் காட்டினான்.

    'இரு' என்பது போல கையமர்த்திய ராதிகா முன்புறம் விழுந்த கூந்தலைப் பின்னால் விசிறிக் கொண்டு அதே சீட்டில் கீழே எழுதினாள்.

    'சினிமா பார்க்காவிட்டால் பரவாயில்லை. இந்த நிகழ்ச்சியை இழக்க நான் தயாராய் இல்லை. முடிந்ததும் நேரமிருந்தால் போகலாம்.'

    மடக்கி அவனிடம் கொடுக்கச் சொல்லி கை மாற்றினாள்

    இன்னிக்கு தமிழ்ல வர்ற படங்களை எல்லாம் பார்த்திக்கன்னா டெக்னிகல் விஷயங்கள்ல நிறைய முன்னேறியிருக்கிறது தெரியும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் கேமிரா அழகழக லைட்டிங் பண்ணி எடுத்திருக்கும். ஆனா படம் பார்க்கிறப்ப ஒரு திருப்தி இல்லாமப் போகும். அதுக்கு செண்டர் த்ரட்ன்னு சொல்ற திரைக்கதை சரியா அமையாதது தான் காரணமா இருக்கும். நிறைய பேர்கிட்ட கதை அறிவு இருக்கும். ஒரு கதை சொல்லுங்கன்னு சொன்னா உடனே கடகடன்னு சொல்லிடுவாங்க. அதை சினிமாவுக்கேத்த மாதிரி சீன் அமைச்சி திரைக்கதையா சொல்லச் சொன்னா சொல்ல வராது. அது ஒரு தனி சமாச்சாரங்க. உதாரணமா...

    துண்டு சீட்டைப் படித்துப் பார்த்த குலோத்து அவளைக் கோபமாகப் பார்த்தான். விருட்டென்று எழுந்து அந்த ஹாலை விட்டு வெளியேறினான்.

    உன் ஆள் கோவிச்சிக்கிட்டுப் போகுது ராதிகா என்றாள் சிக்லெட் மென்று கொண்டிருந்த பக்கத்து நாற்காலி ஆனந்தி.

    எல்லாத்துக்கும் அர்ஜண்ட்டா கோபம் வந்துடுது.

    முணுமுணுத்து நகம் கடித்தாள் ராதிகா.

    போய் சமாதானம் செய்யி.

    வேண்டியதில்லை.

    குலோத்து வேண்டாமா?

    வில் யூ ப்ளீஸ் ஷட் அப்?

    ஆனந்தி தன் சேலையைக் குனிந்து பார்த்து விட்டு, மூடி தான் இருக்கேன் என்றாள்.

    ***

    குலோத்துங்கன் தனது கவசாகியில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த சிகரெட் பில்டர் முனை வரை தீர்ந்திருக்க, மற்றொரு சிகரெட் எடுத்து உதட்டில் வைத்து நெருப்பை மாற்ற முயற்சித்த போது, அதைத் தட்டி விட்டாள் ராதிகா.

    என்ன? என்ன இப்போ? டென்ஷனா? ராதிகா தனது சுரிதாரின் துப்பட்டாவை சரி செய்தபடி குனிந்து அவன் காலடியில் கிடந்த நசுக்கப்பட்ட சிகரெட் துண்டுகளைப் பார்த்து, கின்னஸ் விரதமா? என் மேல கோபம்ன்னா எதுக்காக உன் உடம்பை கெடுத்துக்கறே? என்றாள்.

    உன் அட்வைஸ் எனக்குத் தேவையில்லை.

    போதும்ப்பா... ரொம்பத்தான் முறைச்சுக்காதே. பைக்கை எடு.

    எதுக்கு?

    Enjoying the preview?
    Page 1 of 1