Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Santhanakaadugal
Santhanakaadugal
Santhanakaadugal
Ebook117 pages32 minutes

Santhanakaadugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சிறந்த குடும்பம் மற்றும் பெண் சார்ந்த பிரச்சனைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வரும் வாஸந்தியின் மற்றுமொரு நாவல் சந்தனக்காடுகள். இதில் வரும் கதாநாயகி பூமா, தனது மொத்தக் குடும்பத்திற்காக தன்னையே அர்ப்பனித்துக் கொண்டு சந்தனமாக மணம் வீசுவது தான் கதைக்கரு.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403516
Santhanakaadugal

Read more from Vaasanthi

Related to Santhanakaadugal

Related ebooks

Reviews for Santhanakaadugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Santhanakaadugal - Vaasanthi

    http://www.pustaka.co.in

    சந்தனக்காடுகள்

    Santhanakaadugal

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    1

    பூமா புடவைக் கரையைச் சற்று அழுத்தி நீவி விட்டாள், நைந்து போன கரையில் சட்டென்று ஒரு இழை அறுந்து சரசர வென்று இரண்டு அங்குலங்களுக்கு விரிந்து கொண்டது. அவள் திடுக்கிட்டு ஒரு கையாலாகாத்தன சோகத்தோடு அதைப் பார்த்தாள். கண்ணில் மிக லேசாக நீர் தளும்பிற்று.

    அம்மா நா வரல்லே. நீ போயிட்டு வா கல்யாணத்துக்கு

    விசாலத்தின் முகத்தில் ஒரு அலுப்பு தெரிந்தது.

    சும்மா பிகு பண்ணிக்காதே பூமா நாம ரொம்ப கெளரவம் பாத்தம்னா எந்த உறவும் நமக்கு நிலைக்காது. நாலு பெண்களைப் பெத்துட்டு ரொம்ப ரோசக்காரியா இருக்கிறதுக்கு எனக்குக் கட்டுப்படி ஆகாது.

    பூமா தலையைக் குனிந்தபடி புதிதாக ஏற்பட்டுப் போன அந்தக் கிழிசலைப் பார்த்தாள்.

    நாம் வந்தமா போனமாங்கிறதைக்கூட யாரும் கவனிக்கப் போறதில்லே, என்று முணு முணுத்தாள்.

    அம்மாவுக்கு காதில் விழவில்லை.

    நீ கிளம்பினாத் தான் மத்ததுகளும் கிளம்பும் பூமா

    கிளம்பறேம்மா என்றாள். ஆனா அங்க போனதும் எனக்கு யாரைப் பார்த்தும் சகஜமா சிரிக்க வராது. நமக்கும் அவங்களுக்கும் இடையிலே ஒரு பெரிய திரை தொங்கறது தெரியுமோ? திரை"

    அம்மா ஒரு மலர்ச்சியில்லாத புன்னகை பூத்தாள்.

    எனக்கொண்ணும் கண்ணுக்குத் தெரியல்லே. கோபாலி என் கூடப் பிறந்தவன் என்கிற ஞாபகத்தைத் தவிர வேறெதுவும் என் நினைவிலே இல்லே.

    ஏன்னா உனக்கு இந்த ஞாபகங்கள்ளாம் அவசியம்! அவாளுக்கு அவசியமில்லே, உன்னாலே அவாளுக்கு என்ன ஆகணும் சொல்லு?

    பூமா!

    பூமா உதட்டைப் பிதுக்கியபடி உள்ளே சென்று ஊசி நூலைத் தேடி எடுத்தாள். நைந்து போன கரையில் பாசியும் நூலும் நிற்காமல் கையோடு வந்தது. அதை ஒரு வழியாய் இழுத்துப் பிடித்து தைத்தபோது, கரையில் கால் அங்குலம் குறைந்து -போயிற்று. மற்றவர்கள் பார்வைக்குத் தெரியாமல் சாமர்த்தியமாகக் கட்டிக் கொள்ளணும் என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

    குளியலறையின் தகரத் தடுப்பு ஓசையுடன் திறந்து கொண்டது.

    ராஜி சீக்கிரம் தயாராகுடீ கிளம்பணும் நாழியாச்சு

    எங்கேம்மா?

    மாமா வீட்டுக் கல்யாணத்துக்கு?

    நா வரல்லே, அந்த மாலதி மகா ராங்கிக்காரி

    ஆரம்பிச்சுடுங்கோ ஒவ்வொருத்தரும் அவர் ராங்கிக்காரின்னு நீங்களா நினைச்சுக்கறேன். அது ஒரு தாழ்வு மனப்பான்மை. உலகத்திலே, அவாளுக்கு சமதையா நிக்க முடியல்லேங்கற ஆங்காரத்தால் ஏற்படற மனப்பான்மை, உலகத்திலே நம்மை மாதிரி இருக்கிறவா தான் ஜாஸ்தி. அதை எப்பவும் ஞாபகம் வெச்சுக்கோ!

    பூமா நூல் கண்டில் ஊசியை செலுத்தி உள்ளே வத்தாள்.

    தாழ்வு மனப்பான்மை உங்களுக்கு.

    வாஸ்தவமாக இருக்குமோ? அதனால் தான் தங்களை விட வசதியாக இருப்பவர்கள் எதிரில் கூச்சம் ஏற்படுகிறதோ? அந்தச் சுவரை நாம் தாண்ட முடியாது என்கிற ஆங்காரம் தான் நம்மை பலவீனப் படுத்துகிறதோ?

    அக்கா வராளா?

    வரா!

    அப்ப நா வரேன். ஆனா சாப்பாடானதும் கிளம்பி வந்துடணும். நாளைக்கு எனக்கு டெஸ்ட் இருக்கு.

    வந்துடலாம்.

    பூமா மணியைப் பார்த்தாள். ஏழு, எட்டே காலிலிருந்து, எட்டே முக்கால் வரை முகூர்த்தம், ஏழரை மணிக்கு 12 C யைப் பிடித்தால் தான் முகூர்த்தத்திற்குப் போய் சேர முடியும். அவள் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தாள். அம்மா தலையை இழைய வாரி ஒரு சின்ன பிச்சாடா போட்டுக் கொண்டிருந்தாள். நெற்றியில் சற்று பெரிதான குங்குமப் பொட்டு. இதுதான் என் சொத்து என்கிற மாதிரி தினமும் துவைத்துக் கட்டுகிற, ஆனால் கிழிசல் இல்லாத சின்னாளப் பட்டுப் புடவை.

    இந்தப் புடவையில் நிற்கும் தங்கையை மாமா எப்படி வரவேற்பார்?

    உமாவையும் பாபுவையும் அழைச்சுண்டு போகலாம் பூமா!

    எதுக்குமா எல்லாரும்? பஸ்ஸிலே ஃப்ரியா விடறானா?

    அம்மாசற்று நேரம் ஏதும் பேசவில்லை, காரியம் செய்கிற போக்கில் பேசுகிற மாதிரி மெல்லச் சொன்னாள்.

    நல்ல சாப்பாட்டை அவா ஒரு நாளாவது சாப்பிடட்டும் பூமா!

    பூமா கீழ் உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவளுடைய பார்வையில் சமையல் மேடையில் முன்னேற்பாடாக அப்பாவுக்கும், மூர்த்திக்கும் மட்டுமே அம்மா சமைத்து மூடி வைத்திருந்த சாதமும், கீரைக் குழம்பும் பட்டன, உமாவும், பாபுவும் நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் என்கிற நினைப்பைவிட ஒரு வேளைச் சாப்பாடு மிச்சம் என்கிற நினைப்புத்தான் அம்மாவிற்கு இருக்க வேண்டும் என்று தோன்றுகையில் ஒரு லேசான நமைச்சல் ஏற்பட்டது.

    கல்யாணத்திற்கு போக வேண்டும் என்றதும் பாபு, உமாவின் கண்கள் ஒரு சின்ன சந்தோஷத்தில் விரிந்து, யார் கல்யாணம், எங்கே கல்யாணம் நம்மை மாதிரி வீடா? அதை விட வசதியான இடமா? நிறைய கூட்டம் இருக்குமா? போன்ற கேள்விகள் அம்மா சலித்து எரிந்து விழுகிறவரை தொடர்ந்தன. தைத்த கிழிசல் வெளியில் தெரியாதபடி, பூமா புடவையை வெகு சாமர்த்தியமாக கட்டிக் கொண்டாள். கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்ட போது

    மங்கிப் போன பழைய புகைப்படத்தைப் பார்க்கிற மாதிரி பிரமை ஏற்பட்டது. அம்மாவின் இரண்டு கல்யாணப் புடவைகளில் இது ஒன்று, மற்றொன்று அதில் போடப்பட்ட தையல்களுக்கும், ஒட்டுக்களுக்கும் தாக்குப் பிடிக்க முடியாமல் சென்ற மாதம்தான் எவர்சில்வர் பாத்திரக்காரனிடம் வாயைப் பிளந்தது...

    லேசாக விசில் சத்தம் கேட்டது. பூமா திரும்பிப் பார்த்தாள். ராஜி ஒரு புன்னகையுடன் நின்றிருந்தாள்.

    இந்தப் புடவையில் கூட நீ நன்னாயிருக்கே அக்கா

    நன்னாயிருந்து யாருக்கு என்ன பண்ண முடியும்?

    ராஜி பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டாள்.

    ஒண்ணும் பண்ண வேண்டியதில்லை. ஒரு அல்ப திருப்திப்பட்டுக்கலாம்.

    பூமா லேசாகப் புன்னகைத்தபடி அவசரமாகத் தலை

    Enjoying the preview?
    Page 1 of 1