Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Amma Pillai
Amma Pillai
Amma Pillai
Ebook173 pages1 hour

Amma Pillai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703519
Amma Pillai

Read more from Vidya Subramaniam

Related to Amma Pillai

Related ebooks

Reviews for Amma Pillai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Amma Pillai - Vidya Subramaniam

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    அம்மா பிள்ளை

    Amma Pillai

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    புறப்படுவதற்கு முன்னால் அப்பா படத்தைத் தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டான் ராமகிருஷ்ணன். இந்தப் பழக்கம் எப்போதிலிருந்து ஆரம்பித்தது என்று சரியாய் நினைவில்லை. அப்பா படத்தை கண்ல ஒத்திண்டு போடா என்று அம்மா ஏற்படுத்தி வைத்த பழக்கம். அதே அம்மா தான் பகவத்கீதை படிப்பதையும் பழக்கப்படுத்தி வைத்தாள். ஒருமுறை ராமகிருஷ்ணன் அம்மாவிடம் சத்தேகம் கேட்டான்.

    இது தப்பில்லையா அம்மா?

    எது?

    பித்ருக்களை வழிபடறது.

    அப்டின்னு யார் சொன்னது?

    கீதை சொல்றது. தேவாளை வழிபடறவா தேவாகிட்டயே போவா. பித்ருக்களை வழிபடறவா பித்ருக்களையே அடைவா. பகவானை நினைக்கறவா மட்டும் தான் பகவானை அடைவான்னு சொல்றது. நீ அப்பா படத்தை தொட்டு கண்ல ஒத்திக்க சொல்ற! அப்பா பித்ரு இல்லையோ? பித்ருவை விட தெய்வம் தானே உசத்தி?

    அம்மா அவனை ஊடுருவிப் பார்த்தாள். பத்து வயசுப் பிள்ளை பகவத் கீதையிலிருந்து சந்தேகம் கேட்டதைக் கண்டு ஒரு பக்கம் பெருமையும், அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறோம் என்ற பயமும் அவள் முகத்தில் தெரிந்தது.

    தப்பில்லடா ராம்கி. அப்பா பித்ரு ரூபத்துல இருக்கமாட்டார். ஆசையுள்ளவா தான் அலைஞ்சிண்டிருப்பா. உங்கப்பா ஆசையை வென்றவர். பகவானோட ஐக்கியமாகியிருப்பார். அந்த நம்பிக்கைல தான் தொட்டு கண்ல ஒத்திக்கச் சொல்றேன்.

    அதுக்கு பகவான் படத்தையே கண்ல ஒத்திண்டா?

    ராமகிருஷ்ணன் மடக்கிக் கேட்டான். அம்மாவின் முகம் ஒரு கணம் விசனப்பட்டது.

    நீ பெரியவனா ஆய்ட்டா உன் இஷ்டம்போல செஞ்சுக்கோடா ராம்கி. அதுவரை எனக்காக நான் சொல்றபடி செய்யக் கூடாதா? அம்மா கெஞ்சினாள். ராம்கி அதை எதிர்க்கவில்லை. அம்மாவுக்காக ஆரம்பித்த பழக்கம் தொடர்ந்தது.

    ராமகிருஷ்ணன் கதவைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கினான். அம்மா ராமேஸ்வரம் போயிருக்கிறாள். தனியாக அல்ல பெண்ணும், மாப்பிள்ளையும் அழைத்துப் போயிருக்கிறார்கள். அம்மா வரமாட்டேன் என்று தான் முதலில் சொன்னாள். ராமகிருஷ்ணன் சாப்பாட்டுக்குத் திண்டாடுவானே என்ற கவலை அவளுக்கு. ராமகிருஷ்ணன் தான் வற்புறுத்தி அனுப்பி வைத்தான். அம்மா புறப்படும் வரை புத்தி சொன்னாள்.

    காலாகாலத்துக்கு வீட்டுக்கு வந்து படுத்துக்கோடா கண்ட ஓட்டல்லயும் சாப்டாதே. வீட்டை ஜாக்ரதையா பார்த்துக்கோ. ராத்திரி மறக்காம பால் சாப்டு. வேலைக்காரி மேல ஒரு கண் வெச்சுக்கோ.

    அக்காவும், அத்திம்பேரும் சிரித்தார்கள்.அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணிடு சீக்கிரம் என்றாள் அக்கா.

    பண்ணணும் பண்ணணும். வயசாறதே. ஜாதகம் குடுக்க ஆரம்பிக்கணும். ராமேஸ்வரம் போய்ட்டு வந்ததும் அதான் முதல் வேலை.

    ஏண்டா ராம்கி. நாங்க பாத்து வெச்சா பண்ணிப்பயோனோ இல்ல ஏதாவது பார்த்து கீர்த்து… அத்திம்பேர் அவனருகில் வந்து ரகஸ்யமாய்க் கேட்டு கண்ணடித்து சிரித்தார்.

    அதனாலென்ன அத்திம்பேர்? அது பாட்டுக்கு அது! இது பாட்டுக்கு இது! ராமகிருஷ்ணனும் சளைக்காமல் பதில் சொன்னான்.

    படவா! என்று முதுகில் அடித்து பெரிதாய் சிரித்தார் அத்திம்பேர்.

    ராமகிருஷ்ணன் கிருஷ்ண விலாஸில் நுழைந்து டிபனும், காப்பியும் சாப்பிட்டுவிட்டு அப்படியே கடற்கரைக்கு போகும் சாலையில் நடக்க ஆரம்பித்தான். வெய்யில் இன்னும் உறைக்கத் தொடங்கவில்லை. கடற்கரையில் தொப்பை மனிதர்களும் குண்டு பெண்மணிகளும், உடம்பு குறைய நடைபழகிக் கொண்டிருந்தார்கள். நாள் முழுக்க ஐஸ்கிரீமும், கேக்கும் விதவிதமான உணவுகளும் சாப்பிட்டுவிட்டு விடிகாலை கடற்கரைக்கு, தின்றதை ஜீரணிக்க வரும் பணக்காரக் கூட்டங்கள். ராம்கி அவர்களை வேடிக்கை பார்த்தபடி நடந்தான். ஒரு பக்கம் உயர்ந்து நின்ற அரசாங்க கட்டிடங்கள், மறுபக்கம் அலை துள்ளும் சமுத்திரம் நடுவில் வாகனங்கள் பறக்கும் நெடுஞ்சாலை. உலகத்தின் இரண்டாவது அழகிய கடற்கரை சாலையில்தான் நடந்து கொண்டிருக்கிறோம் என்ற பெருமை ஏற்பட்டது. காந்தி சிலைக்கருகில் திரும்பி ஐ.ஜி. ஆபீஸ் வழியாக வீட்டுக்கு வந்தபோது டிபனும், காப்பியும் செரித்திருந்தது. மணி எட்டு முப்பது ராமகிருஷ்ணன் குளித்து உடை மாற்றிக்கொண்டு அலுவலகம் புறப்பட்டான். புறப்படும் முன்பு வழக்கம்போல் அப்பா படத்தை கண்ணில் ஒற்றிக்கொண்டான். புகைப்படத்தில் இருந்த அப்பா அவனைப் போலவே இருந்தார். மோவாய்க் கட்டையும், காது வளைவும் நெற்றி அமைப்பும் அப்படியே தனக்கும் இருப்பதைக் கண்டு வியந்து கொள்வான் ராம்கி.

    ஆசைகளைத் துறந்தவன் தெய்வத்துக்கு சமானமானவனா அப்பா எந்த ஆசையை வென்றார்? அப்பாவைப் பற்றி அம்மா அதிகம் சொன்னதில்லை. ராமகிருஷ்ணனும் கேட்டதில்லை. அப்பா நல்லவராக வாழ்ந்திருக்க வேண்டும். நல்லவராக வாழ்வது எப்படி என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறான்.யாரையும் காயப்படுத்தாம இருக்கணும் ராம்கி. அம்மா சொன்னாள்.

    காயப்படுத்தாம இருக்கறதுதான் நல்லவனா வாழறதா? காயப்படுத்தாம அப்பொ தப்பு பண்ணலாமா?

    காயப்படுத்தாம எப்டி தப்பு பண்ண முடியும்?

    தப்புன்னு தெரிய வந்தா தானே காயம்? தெரியாமயே இருந்துட்டா…?

    அது துரோகம்டா ராம்கி. அதுவும் செய்யப்படாது.

    அப்டின்னா எப்டி நல்லவனா வாழ முடியும்?

    எதிரிகளே இல்லாம இருக்கறதுதான் நல்லவனா இருக்கறதுக்கு அடையாளம். உங்கப்பா புழு, பூச்சிகளையும் அன்பா நடத்தினார். அதுவும் உயிர்னு நினைச்சார். அவர் செத்துப் போனப்பொ தெரிஞ்சவா அறிஞ்சவா எல்லாருமே அடிவயத்துலேர்ந்து அழுதா. அதுதான் உங்கப்பா நல்லவர்னு நிரூபிக்கற அடையாளம். நம்ம சாவு நிம்மதியைத் தரப்படாது ஒரு இழப்பை ஏற்படுத்தணும். நாம நல்ல மனுஷாளா வாழ்ந்தா தான் அந்த இழப்பு பிறத்தியாருக்கு ஏற்படும். அம்மா பெருமூச்சோடு நிறுத்தினாள். அதற்குப் பிறகு ராமகிருஷ்ணன் அப்பா பற்றி கேட்பதில்லை. கேட்டால் அம்மா மிகவும் துக்கப்பட ஆரம்பித்து விடுகிறாள், எனவே கேட்பதில்லை. ஆனால், அப்பா படத்தைப் பார்க்கும் போதெல்லாம் அவனையும் மீறித் தோன்றும். அப்படி ஒன்றும் ஆசையை வென்றவராக அவரைப் பார்த்தால் தெரியவில்லை அவனுக்கு. அப்பா உயிரோடு இருந்த காலங்கள் சரியாய் நினைவில்லை அவனுக்கு. அவனைத் தூக்கி அவர் கொஞ்சியதாகக்கூட நினைவில்லை. வெள்ளை வேட்டி, வெள்ளை ஜிப்பா சுருண்ட முடி… இதுதான் மங்கலாக நினைவிருந்தது. வருவார் போவார் அவ்வளவே. பற்றற்றவர் அப்படித்தான் இருப்பாரா? தெரியவில்லை. அப்பாவின் கண்களில் அம்மா சொல்வதுபோல் அன்பும், காருண்யமும் அதிகமாகவே இருந்தன. ஆனாலும் ராமகிருஷ்ணனின் அடி மனசில் அந்த கண்கள் திருப்தியைத் தரவில்லை. ஏன் என்று அவனுக்குத் தெரியவில்லை. இதற்கு காரணமும் ஏதுமில்லை. ரொம்ப வருடமாகவே இந்த அதிருப்தி இருக்கிறது. இதைப் பற்றி அம்மாவிடம் சொன்னதில்லை. சொன்னால் அம்மா வருத்தப்படுவாள். எதற்கு அவளைக் காயப்படுத்த வேண்டும் என்று நினைத்தான்.

    அம்மா எப்போ வரா ராம்கி?

    கேள்வியில் கலைந்து திரும்பினான்.

    தோளில் தொங்கும் கைப்பையோடு ஆபிசுக்கு புறப்பட்டுவிட்ட தோற்றத்தோடு நின்றிருந்தாள் மாயா. மாடியில் இருப்பவள்.

    ஞாயிற்றுக்கிழமை வந்துடுவா

    சாப்ட்டீங்களா நீங்க?

    அம்மா ராமேஸ்வரம் போனால் பட்டினி கிடக்கணும்னு நியதியா?

    அதெல்லாம் இல்ல. கார்த்தால உங்களுக்காக சுடச்சுட பொங்கலும், கத்திரிக்காய் கொத்ஸும் கொண்டு வந்தேன். வீடு பூட்டியிருந்தது.

    பொங்கலும் கொத்ஸும் வரும்னு தெரிஞ்சிருந்தா வீடு திறந்திருக்கும்.

    நாளைக்கு தோசையும், சட்னியும் வந்துடும்னு வாசக்கதவு கிட்ட சொல்லிட்டேன்.

    மாயா நடக்க ஆரம்பித்தாள். ராமகிருஷ்ணன் அவள் போவதையே சற்றுநேரம் ரசித்துப் பார்த்தான். மெரூன் நிற மெட்டல் ஷிஃபான் புடவை உடம்பில் அனாயாசமாய் பொருந்தி உடலழகுகளை வளைவுகளாய் காட்ட, செழுமையான முதுகில் ‘வி’ நெக் ஜாக்கெட் பக்கப்பதிய இருந்தது. இடுப்பைத் தொட்ட பின்னல் நடக்கும்போது பிருஷ்டங்களை மாற்றி மாற்றித் தொட மாயா அழகிதான் சந்தேகமில்லாமல். ராமகிருஷ்ணன் தன் ஸ்கூட்டரை உதைத்து கிளம்பினான். அவன் பஸ் ஸ்டாண்டு வந்தபோது மாயா பஸ்ஸில் ஏறியிருந்தாள். முதன்முதலாக அவளுக்கு லிஃப்ட் கொடுத்தால் என்ன என்று அவனுக்குத் தோன்றிய எண்ணத்தில் மண்! கொடுக்கலாம் என்று இவன்தான் நினைத்தானே தவிர கூப்பிட்டால் மாயா சட்டென்று ஏறி அமர்ந்திருப்பாளா அல்லது ரொம்ப தேங்க்ஸ் நா பஸ்லயே போறேன் என்று மறுத்திருப்பாளோ… தெரியவில்லை.

    நாலைந்து சிக்னல்களில் பொறுமையாய் காத்திருந்து நடுவில் திடீரென்று நகர்வலம் வந்துவிட்ட முதல்வருக்கு வழிவிட்டு ஆபிஸ் வந்து சேர்ந்தபோது வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. எங்கோ புறப்பட்ட முதல்வருக்காக எங்கேயோ ஓடும் வண்டிகளை அநாவசியமாக நிறுத்தி, அவர்களது அவசரங்களையும் அத்தியாவசியமான நேரங்களையும் அலட்சியப்படுத்தி எரிச்சலாக வந்தது ராமகிருஷ்ணனுக்கு. ஆபிசுக்குள் நுழைந்ததும் குப்பென்று வியர்த்தது. அவசரமாக மின்விசிறியை ஓடவிட்டு அப்பாடா என்று அடியில் அமர்ந்து காற்று வாங்கினான். பிறகு டைரி பிரித்து எழுத ஆரம்பித்தான்.

    நாற்பத்தியாறு வரை அடிமைகள்

    நாற்பத்தியேழின் ஒரு நடுநசியில்

    விலங்குகள் உடைந்தன.

    ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

    முன்னாள் அடிமைகள் பாடி மகிழ்ந்தார்கள்.

    விடுதலைக்குப் பின்னால் வளர்ந்தது தேசமல்ல

    லஞ்சம், ஊழல், சுரண்டல்!

    ஒன்றுக்கு நூறாய்ப் பெருகியது பொருளாதாரமல்ல,

    பல வர்ணங்களில் கட்சிக் கொடிகள்!

    தடியெடுத்தவன் தண்டல்காரனானான்

    துதி பாடியவன் மந்திரியானான்

    தூற்றியவன் குற்றுயிரானான்

    கல்வியறிவு வளர்ந்திருக்கிறதோ இல்லையோ

    கட் அவுட் கலாசாரம் நன்கு வளர்ந்திருக்கிறது.

    வானுயறத் தலைவர்களின் காலடியில்

    இன்னும் தன் நிலை புரியாது ஊறும் மனித எறும்புகள்

    ச்சே! சுதந்திர நாட்டின் அடிமைகள்!

    வெள்ளையனை விரட்டியடித்து வாங்கிய

    சுதந்திரத்தை சுதேசியிடம் படுகொடுத்து

    விட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1