Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manam Iranthu Pesugiran
Manam Iranthu Pesugiran
Manam Iranthu Pesugiran
Ebook112 pages58 minutes

Manam Iranthu Pesugiran

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajesh Kumar is an extremely prolific Tamil novel writer, most famous for his crime, detective, and science fiction stories. Since publishing his first short story "Seventh Test Tube" in Kalkandu magazine in 1968, he has written over 1,500 short novels and over 2,000 short stories.

Many of his detective novels feature the recurring characters Vivek and Rubella. He continues to publish at least five novels every month, in the pocket magazines Best Novel, Everest Novel, Great Novel, Crime Novel, and Dhigil Novel, besides short stories published in weekly magazines like Kumudam and Ananda Vikatan. His writing is widely popular in the Indian state of Tamil Nadu and in Sri Lanka.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100403509
Manam Iranthu Pesugiran

Read more from Rajesh Kumar

Related to Manam Iranthu Pesugiran

Related ebooks

Related categories

Reviews for Manam Iranthu Pesugiran

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manam Iranthu Pesugiran - Rajesh Kumar

    http://www.pustaka.co.in

    மனம் இறந்து பேசுகிறேன்

    Manam Iranthu Pesugiran

    Author:

    ராஜேஷ் குமார்

    Rajesh Kumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/rajesh-kumar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    1

    பி-5 போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ் பெக்டர் அவர்களுக்கு,

    சங்கர் என்று மற்றவர்களால் அழைக்கப்பட்டு வந்த சங்கர சுப்பிரமணியன் எழுதிக் கொள்ளும் கடிதம். நீங்கள் இந்தக் கடிதத்தைப் படித்துக் கொண்டிருக்கும் நிமிஷம் நான் இந்தக் குடிசையின் உத்திரத்திலிருந்து - நாக்கு வெளித்தள்ளி - கண்கள் பிதுங்கி - மகா கோரமாய் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பேன். என் தற்கொலைக்கு யாரும் காரண மில்லை. என் மனம் ரொம்ப நாட்களுக்கு முன்பே இறந்து போன காரணத்தினால் இன்று உடலையும் தாஜ்மஹால் நிழல் மண்ணுக்குக் கொடுக்க விரும்புகிறேன். நான் இறந்த பிறகு என் உடலைப் போஸ்ட் மார்ட்டத்துக்குக் கொண்டு போவீர்கள் என்பது தெரியும். போஸ்ட் மார்ட்டம் முடிந்தபின் என் உடம்பை மூட்டையாய்க் கட்டி குதிரை வண்டியில் ஏற்றி நொய்யல் ஆற்று சுடுகாட்டுக்குக் கொண்டு போய் புதைத்து விடாதீர்கள். என் உடம்பின் ஒவ்வொரு உறுப்பும் - மருத்துவக் கல்லுாரி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களாக அமைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு வேலையில்லாப் பட்டதாரியின் உடல் மருத்துவப் பட்டதாரிகளுக்கு உதவட்டும்.

    இப்படிக்கு

    மனம் இறந்து போன,

    சங்கர சுப்பிரமணியன்.

    மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் கடிதத்தை எழுதி முடித்த - சங்கர சுப்பிரமணியன் அந்தக் கடிதத்தின் வாசகங்களை மறுபடியும் ஒரு தடவை படித்துப் பார்த்தான். பிறகு அதை நான்காய் மடித்து சட்டைப் பையில் சொருகிக் கொண்டு சற்று முன்னால் மொய்தீன் பாய் கடையில் வாங்கிய இரண்டு மீட்டர் தாம்புக் கயிற்றுச் சுருளை எடுத்துக் கொண்டான்.

    குடிசையை இரண்டாய்ப் பிரித்த - உத்திரத்துக்குக் கயிற்றை வீசி - ஸ்டூலின் மேல் - ஏறி நின்று இறுக்கமாய் முடிச்சுப் போட்டான்.

    இப்போது கயிறு 'O' என்று சொல்லியபடி ஊசலாடியது. சங்கர சுப்பிரமணியன் மெதுவாய் நடந்து போய் - குடிசையின் மூலையிலிருந்த பானையில் - தண்ணீரை மொண்டு ஒரு வாய் குடித்தான். பிறகு அன்றாடம் வணங்கும் புகை படிந்து போன முருகர் படத்துக்கு முன்னால் வந்து நின்றான்.

    முருகா! சில பேர் பேசும் போது இப்படிச் சொல்வாங்க அந்தக் கடவுளே வந்தாலும்கூட இதைச் செய்ய முடியாதுன்னு... அப்படி உன்னால் செய்ய முடியாத காரியங்களில் எனக்கு வேலை வாங்கித் தர முடியாத காரியமும் ஒண்ணுங்கிறதை நான் இப்போ புரிஞ்சுகிட்டேன். தினமும் உன்னோட படத்துக்கு முன்னாடி நின்னு உன்னை கெஞ்சிட்டிருக்க என்னால முடியாது. நான் போறேன். அடுத்த ஜென்மம்ன்னு ஒண்ணு இருந்தா என்னை - அந்த ஜென்மத்துல மனுஷனா பொறக்க வைக்காதே. சாக்கடையில் நெளியற புழுவா பொறக்கவை...

    கண்ணீரால் நிரம்பிவிட்ட கண்களைத் துடைத்துக் கொண்டே ஸ்டூலின் மேல் ஏறி நின்றான் சங்கர சுப்பிரமணியன்.

    கயிற்றின் 'O'வுக்குள் தலையை நுழைத்து - கயிறு கழுத்தை இறுக்கும்படியாய் சுருக்கிட்டுக் கொண்டான்.

    சாகும்போது யாரை நினைத்துக் கொள்ளலாம்?

    என்றைக்கோ செத்துப் போன அம்மா அப்பாவையா?

    யோசித்துக் கொண்டிருந்த அதே நிமிஷம் - குடிசைக்கு வெளியே - வாசலில் ஏதோ சத்தம்.

    தொடர்ந்து - டொக்... டொக்.

    கதவை யாரோ தட்டும் சப்தம்.

    சங்கர சுப்பிரமணியன் கழுத்தில் மாட்டின கயிறோடு அப்படியே நின்றான். மனசுக்குள் யோசனை பரபரவென்று ஓடியது. இந்நேரத்திற்கு யார் கதவைத் தட்டுகிறார்கள்?'

    டொக்…டொக்...

    இந்தத் தடவை கதவு கொஞ்சம் வேகமாய் தட்டப்பட்டது. தொடர்ந்து ஒரு கட்டையான குரல் கூப்பிட்டது. சங்கர சுப்பிரமணியன்!

    கழுத்திலிருந்து சுருக்கைத் தளர்த்தி - தலையை விடுவித்துக் கொண்டு வேகவேகமாய் நடந்து போய் கதவை நெருங்கி - தாழ்ப்பாளை விலக்கினான்.

    வெளியே இருட்டில் யாரோ நின்றிருந்தார்கள்.

    யாரது...?

    இருட்டில் நின்றிருந்த அந்த நடுத்தர வயது ஆசாமி வெளிச்சத்திற்கு வந்தான். கலைந்த தலை; முகத்தில் மினுமினுப்பாய் வியர்வை. உலர்ந்து போன உதடுகளை அசைத்து அவன் கேட்டான்.

    நீங்கதானே சங்கர சுப்பிரமணியன்?

    ஆமா...

    உங்களை டாக்டர் சீதாராமன் கூட்டிகிட்டு வரச் சொன்னார்.

    எதுக்கு?

    தெரியலை.

    நீங்க யாரு?

    "நான் அவரோட கார் டிரைவர். கொஞ்சம் சீக்கிரமா வந்தீங்கன்னா பரவாயில்லை. பாக்டர்

    Enjoying the preview?
    Page 1 of 1