Athikaalaip Paravaikal
By Rajeshkumar
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsIruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsIrapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Thirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsNanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Piriyamaana Kolaikaran Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Rojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Uyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsNeelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsNaan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsMaranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Saagaavaram Rating: 4 out of 5 stars4/5Uyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Thanga Macham Rating: 5 out of 5 stars5/5Un Naanum En Neeyum Rating: 5 out of 5 stars5/5Sivappu Vatathukkul Sinthuja Rating: 0 out of 5 stars0 ratings
Related to Athikaalaip Paravaikal
Related ebooks
Kaagitha Iruthayangal Rating: 5 out of 5 stars5/5Kadalorak Kolaikal Rating: 0 out of 5 stars0 ratingsHongkong Athirchi Rating: 0 out of 5 stars0 ratingsUrainthu Pona Unmai! Rating: 4 out of 5 stars4/5December Nila and Irandil Ondru Paarthu Vidu Rating: 0 out of 5 stars0 ratingsOru Thoomaiyaana Kuttram Rating: 0 out of 5 stars0 ratingsAvenue Marangal Rating: 5 out of 5 stars5/5Olinthaalum Vidamaatten Rating: 5 out of 5 stars5/5Andha Naal Andha Nimidam Andha Nodi Rating: 0 out of 5 stars0 ratingsMul Munaiyil Mukilaa Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Naane Pagaiyaanen and Maranam Sulabam Rating: 0 out of 5 stars0 ratingsRaththa Gnayiru Rating: 5 out of 5 stars5/5Mudinthal Uyirodu Rating: 0 out of 5 stars0 ratingsKaraikku Varatha Alaigal Rating: 0 out of 5 stars0 ratingsAkalyavin Aagayam Rating: 0 out of 5 stars0 ratingsUyir Urugum Sattham Rating: 0 out of 5 stars0 ratingsAvan Aval Avargal Rating: 0 out of 5 stars0 ratingsYours Murderly Rating: 5 out of 5 stars5/5Mathangalil Aval Margazhi Rating: 0 out of 5 stars0 ratingsIrappatharkku Neramillai Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Pattaampoochikal Rating: 0 out of 5 stars0 ratingsEthuvum Oru Ellai Varai Rating: 0 out of 5 stars0 ratingsUdhaa Nizhal Rating: 0 out of 5 stars0 ratingsOne Man Army Rating: 0 out of 5 stars0 ratingsPesum Rojakkal! Rating: 0 out of 5 stars0 ratingsNovember Nalliravu Narmatha Rating: 0 out of 5 stars0 ratingsChicago Secret Rating: 0 out of 5 stars0 ratingsPaatharasa Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Sanikkilamai Iravu Rating: 0 out of 5 stars0 ratingsOlivillai Maraivillai Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Athikaalaip Paravaikal
0 ratings0 reviews
Book preview
Athikaalaip Paravaikal - Rajeshkumar
22
1
காலைநேரம். கேரட் நிறத்தில் விடிந்து கொண்டிருந்தது. பக்கத்துத் தெரு கலியபெருமாள் கோயில் கோபுரத்தில் இருந்து ஒலி பெருக்கியின் வழியே வழிந்த சுப்ரபாதம் கேட்டு கண் விழித்தான் ஜீவா.
ஜீவாவுக்கு இந்தக் குளிர்கால வேளைகள் ரொம்பவும் பிடிக்கும். ஜன்னல் வழியாக வீசுகிற குளிர்காற்றுக்கு அடக்கமாய் - கழுத்துவரைக்கும் போர்வையை போர்த்திக்கொண்டு காதில் விழுகிற சுப்ரபாதத்தைக் கேட்டுக்கொண்டே பாதி முழிப்பும் தூக்கமுமாய் காலைநேர நிமிஷங்களை கரைப்பதில் ஒரு ஈடுபாடு. அதில் ஒரு தனி சுகம்.
அன்றைக்கும் ஜீவா அந்த சுகத்தில் திளைக்க ஆயத்தப்பட்ட விநாடி -
டொக்... டொக்...
அறைக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. தொடர்ந்து அம்மா புவனேஸ்வரியின் குரல்.
ஜீவா... ஜீவா...
ம்...ம்
எந்திரிச்சிட்டியா... இல்லையா?
மணி என்னம்மா...
அஞ்சே முக்கால்.
இவ்வளவுதானே... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேனே?
உதைவிழும்...! சரியா ஆறேமுக்கால் மணிக்கு உனக்கு ஒரு முக்கியமான என்கேஜ்மெண்ட் இருக்கிறதை மறந்துட்டியா...?
அட... ஆமாம்
ஜீவா போர்வையை விலக்கிக் கொண்டு பளிச்சென்று எழுந்துபோய் கதவைத் திறந்தான்.
புவனேஸ்வரி இடுப்பில் கைவைத்து நின்றிருந்தாள். அந்நேரத்துக்கே குளித்திருந்தாள். பத்து வருடங்களாய் குங்குமத்தை மறந்துபோன நெற்றி விபூதி தீற்றலோடு தெரிந்தது.
ஸாரிம்மா... ஆறே முக்கால்மணி என்கேஜ்மெண்டை மறந்துட்டேன்.
புவனேஸ்வரி பளிச்சென்று சிரித்தாள்.
ஒரு வயசு பையன் அதை மறக்கலாமா...? இந்த லட்சணத்துல நீ ஒரு டாக்டர்... ஒரு விஷயம் முக்கியம்னா அதை மனசுக்குள்ளே செதுக்கி வெச்சுக்க வேண்டாமோ...?
சரி கீழே வா... காபி கலந்து தர்றேன். குடிச்சிட்டு அரைமணி நேரத்துக்குள்ளே... குளிச்சு ரெடியாகி புறப்படனும்...
சொன்ன புவனேஸ்வரி மாடிப்படிகளில் இறங்க ஜீவா பின் தொடர்ந்தான். வேலைக்காரி ஜோதி வாசலில் நீர்தெளிக்கும் சத்தமும் பக்கத்துவீட்டு மாமரத்தில் ஒண்டியிருந்த பறவைகளின் இரைச்சலும் கதம்பமாய் கலந்து கேட்டது. கண்ணாடி ஜன்னல்களில் சூரியனின் ஆரஞ்சுநிற வெளிச்சம்.
வேலைக்காரி ஜோதி நேரத்துக்கு வந்துட்டா போலிருக்கே.
தீபாவளி பக்கத்துல வருதுல்ல...! புடவை வாங்க வேண்டாம்...?
புவனேஸ்வரி சொல்லிக்கொண்டே சமையலறைக்குப் போக முயன்ற விநாடி -
டீபாயின் மேல் வைத்திருந்த டெலிபோன் அவளை கூப்பிட்டது. ஜிவா எடுக்க முயல - புவனேஸ்வரி அவளை கையமர்த்திவிட்டு ரீஸிவரை எடுத்து காதுக்குக் கொடுத்தாள்.
ஹலோ...
மறுமுனையில் கல்யாணத்தரகர் கிருஷ்ணமணி இரைந்து பேசினார்.
யாரு புவனேசுவரி அம்மாங்களா? அம்மா! நான் கிருஷ்ணமணி பேசறேன்.
சொல்லுங்க.
தம்பி ஜீவா எந்திரிச்சி ரெடியாகி, ஆறே முக்கால் மணிக்கெல்லாம் வாசலுக்குப் போயிடுவார் இல்லே...?
கண்டிப்பா.
பொண்ணும் சரியா ஆறே முக்கால்மணிக்கு ஸ்டேடியம் வாசலுக்குப் போயிடும்... தம்பி லேட் பண்ணிடப் போறார்.
அதெல்லாம் லேட்டாகாது. ஜீவா குளிச்சு கிளம்பியாச்சு... ஆறரை மணிக்கெல்லாம் ரெடியாகி கார்ல ஏறிடுவான்.
நான் எதுக்காக சொல்றேன்னா தம்பி ஒரு டாக்டர். வெளியே புறப்பட்டு போகிற நேரத்துல... பேஷண்ட் யாராவது வந்துடுவாங்க...
அதெல்லாம் வராம நான் பார்த்துக்கிறேன்... பொண்ணு வீட்டுக்காரங்களுக்கு இந்த ஏற்பாட்டால் எதாவது வருத்தமா?
கொஞ்சம் வருத்தம்தான்...! வீட்டுக்கு நேரடியா வந்து சாவகாசமா உட்கார்ந்து ஸ்வீட், காரம் காப்பி சாப்பிட்டுகிட்டே பெண் பார்த்துட்டு போகலாமே... தெருவுல ஏன் பார்க்கணும்னு அபிப்ராயப் பட்டாங்க. கும்பலா போய் பொண்ணு பார்க்கற சடங்கெல்லாம் தம்பிக்கு பிடிக்காதுன்னு சொன்னேன்... பெத்தவங்களுக்கு எப்படி இருந்தாலும் பொண்ணுக்கு இந்த ஏற்பாடு பிடிச்சுருக்கு. அந்தப் பொண்ணும் கொஞ்சம் சோஷியல் டைப்...
எப்படியோ... நல்லபடியா எல்லாம் முடிஞ்சா சரி. நீங்க காலையில் பத்துமணி சுமார்க்கு. ஒரு நடை வந்துட்டுப் போங்க. ஜீவாவுக்கு பொண்ணு புடிச்சுட்டா... மேற்கொண்டு ஆகவேண்டியதை பார்க்கலாம் இல்லையா?
நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பொண்ணு வீட்ல அபிப்ராயத்தைக் கேட்டுட்டு உங்க வீட்டுக்கு பத்துமணி சுமார்க்கு வரத்தான் போறேன்...
தரகர் கிருஷ்ணமணி மறுமுனையில் வினோதமாய் சிரித்துக் கொண்டிருக்கும்போதே புவனேஸ்வரி ரிஸிவரை வைத்தாள். சோபாவில் உட்காந்திருந்த ஜீவாவிடம் திரும்பினாள்,
பொண்ணு ஆறே முக்காலுக்கெல்லாம் ஸ்டேடியம் வாசல்ல இருப்பளாம்...
பொண்ணோட பேர் என்னம்மா...?
என்ன புள்ளடா நீ...? ராத்திரியே ரெண்டு தடவை பெண்ணோட பேர் என்னன்னு கேட்டே... நான் ‘பூமா’ன்னு அழுத்தம் திருத்தமா சொன்னேன். இப்ப மறுபடியும் கேட்கறே...! டாக்டர் தொழில் தவிர வேற எதுவுமே முக்கியமா படாதா...?
ஸாரிம்மா... மறந்துட்டேன்...
பொண்ணு பூமா ஸ்டேடியம் வாசலுக்கு ப்ளுகலர் கைனடிக் ஹோண்டாவில் வருவா... அதாவது ஞாபகம் இருக்கா...?
ம்...ம்...
பூமாகிட்ட ஏதாவது பேசறதாயிருந்தா... அழுத்தமா பேசிட்டு அந்த நிமிஷத்துல கிளம்பிடணும். வளவளன்னு பேசிட்டு இருக்காதே!
சரி...
புவனேஸ்வரி சமையலறைக்குள் நுழைந்துவிட ஜீவா பல்லைத் தேய்ப்பதற்காக குளியலறைக்குள் நுழைந்து - வாஷ்பேசின் கண்ணாடி முன்பாய் நின்றான்.
கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தங்கச் செயினும் செயினில் கோர்க்கப்பட்டிருந்த டாலரும் மார்பு ரோமங்களுக்கு மத்தியில் புதைந்திருந்தது, முகம் ஒரு நிறத்திற்குப்போக லாக்கெட் பட்டனை பெருவிரல் தன்னிச்சையாய் அழுத்தியது.
‘ப்ளக்; என்ற சின்ன சத்தத்தோடு இதயத்தின் வடிவத்தோடு இருந்த அந்த லாக்கெட் திறந்துகொள்ள -
உள்ளே இருந்த சின்னஞ்சிறிய போட்டோவில் ஒரு பெண் சிரித்தாள். அழகாக மின்னும் கண்கள், ஈர உதடுகளுக்கு நடுவில் கவர்ச்சியான பல்வரிசை, வலது கன்னக்கதுப்பில் ஒரு சிவப்பு மச்சம் கடுகு சைசில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்து இருந்தது.
ஸாரி... வினயா இனிமேலும் உனக்காக என்னால் காத்துகிட்டு இருக்க முடியாது. இத்தனை நாளும் ஏதேதோ காரணம் சொல்லிக் கல்யாணத்தை தள்ளிப் போட்டுக்கிட்டே வந்தேன். இனிமே எந்தக் காரணத்தையும் சொல்ல முடியாது. உடம்புக்கு முடியாத அம்மாவோட வற்புறுத்தலுக்காக நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய கட்டாயம்... பொண்ணு பேரு பூமா. பொண்ணை போட்டோவில் பார்த்தேன். உன்னோட அளவுக்கு இல்லேன்னாலும் அழகாகவே இருக்கா... அம்மாவுக்கும் பொண்ணைப் புடிச்சுடிச்சு, மரியாதைப்பட்ட குடும்பம். பொண்ணோட தாத்தா ஹைகோர்ட் சீஃப் ஜட்ஜா இருந்தவர். அப்பா ஜட்ஜ் ஆகக்கூடிய பக்குவத்துல இருக்கார் எந்தக் காரணத்தைக் காட்டியும் பூமாவை வேண்டாம்ன்னு சொல்ல முடியாது. இனிமேலும் உனக்காகக் காத்து நிமிஷங்களை கரைச்சிக்கிட்டிருந்தா... என்னை பெத்தவளை நான் சந்தோஷமா வெச்சுக்கிட்டிருக்க முடியாது. நான் கல்யாணம் பண்ணிக்கறதா முடிவு பண்ணிட்டேன்...
ஜீவா பல்லைத் தேய்ச்சுட்டியா. காப்பி சுடச்சுட ரெடி...
அம்மாவின் குரல் கேட்டதும் லாக்கெட்டை ‘பட்’டென்று மூடி கண்ணோரம் துளிர்ந்து விட்டிருந்த நீரை இமைகளை படபடத்து உதிர்த்தான் ஜீவா.
இதயம் முழுவதும் வினயா வியாபித்து இருந்தாள்.
ஜீவா ஸ்டேடியம் வாசலைத் தொட்டபோது காலை மணி 6.39, காரை ஒரு மரத்துக்கு கீழே பார்க் செய்துவிட்டு இறங்கினான்.
தொப்பைகளைக் குறைக்கும் முயற்சியில் சில பணக்கார உடம்புகள் ஸ்டேடியத்தைச் சுற்றிலும் போடப்பட்டிருந்த பேஸ்மென்டில் நடைபோட்டுக் கொண்டு இருந்தன. சில அத்லெட்டிக் இளைஞர்கள் பனியனும் ஷார்ட்ஸுமாய் - வியர்வை பளபளக்க ஓடிக் கொண்டிருந்தார்கள். ஒரு அமெச்சூர் கிரிக்கெட் அணி ஸ்டேடிய மைதானத்தின் மையத்தில் இருந்தது.
ஜீவா சுற்றும் முற்றும் பார்த்தான். நீலநிற கைனடிக் ஹோண்டா எந்த திசையிலும் காணப்படவில்லை.
சரியாய் ஆறே முக்காலுக்குத்தான் வருவாளோ?
யோசித்த விநாடி -
முதுகுக்குப் பின்புறம் அந்த ‘குட்மார்னிங்’ கேட்டது. குரலில் புரூட் சாலட் இனித்தது.
திரும்பினான் ஜீவா.
பூமா நின்றிருந்தாள்.
போட்டாவில் பார்த்ததைக் காட்டிலும் அழகாக இருந்தாள். தலைமுடி கருமையான நிறத்தில் இருக்க முகத்திற்கு பிரத்யோகமாய் எந்த மேக்கப்பும் இல்லை, மாநிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம். பூசிய மாதிரியான உடம்புக்கு இளம் பச்சை வண்ண சல்வார் கம்மீஸ் கொடுத்து, மார்புகளின் கனபரிமானங்களை மறைப்பதற்காக துப்பட்டா போட்டிருந்தாள். மூக்கிலும் காதுகளிலும் தங்கத் துணுக்குகள் மின்னின.
ஜீவா புன்னகைத்தான்.
குட்மார்னிங்.
இருவரும் மெல்ல நடந்தனர்.
கைனடிக் ஹோண்டா எங்கே...?
"புறப்படும்போது மக்கர் ஆட்டோவில்