Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Induja 2000
Induja 2000
Induja 2000
Ebook105 pages49 minutes

Induja 2000

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Induja 2000

Read more from Rajeshkumar

Related to Induja 2000

Related ebooks

Related categories

Reviews for Induja 2000

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Induja 2000 - Rajeshkumar

    20

    1

    பிளாட்டினம் என்பது உலோகங்களில் உயர்ந்த ஜாதி. தங்கத்தைக் காட்டிலும் உசத்தியான வஸ்து. வெள்ளியைக் காட்டிலும் ஸ்ட்ராங்கானது. காற்றில் மங்காது. எந்த ஒரு தனி அமிலத்திலும் உடம்பைக் கரைத்துக் கொள்ளாது. இதன் அம்மா வீடு தென் அமெரிக்கா. முதன் முதலாய் இது மனிதர்களின் கண்ணுக்கு சிக்கிய வருஷம் 1735.

    காலம் மாலை நேரம் 5.45. நாம் ஒரு பழங்கால கட்டிடத்திற்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறோம். கட்டிடத்தின் உச்சியில் – ஒரு அலுமினியக்கம் பத்தில் நம் நாட்டின் தேசீயக்கொடி – உற்சாகமில்லாமல் பறந்து கொண்டிருக்கிறது. கட்டிடத்தின் நெற்றியில் சதுரமாய் ஒரு போர்டு பெயிண்ட் உதிர்ந்த போய் - இந்தி, ஆங்கில எழுத்துக்கள் சுத்தமாய்

    காலாவதியாகியிருக்க – தமிழ் எழுத்துக்கள் மட்டும் ‘பளிச்’ சென்று ‘கனிம வளத்துறை, இந்திய அரசு நிறுவனம்’ - என்று கண்ணில் அடித்தது. போர்ஷன் இடைவெளியில் ஒரு குருவி குடும்பம் நடத்திக் கொண்டிருப்பது – தொங்கிக் கொண்டிருந்த வைக்கோல்புரிகளின் மூலம் தெரிந்தது.

    கொஞ்சம் தொலைவில் – பூதாகரமான இரும்பு காம்பௌண்ட் கேட்டுக்குப் பக்கத்தில் – அதீத சிவப்பில் சில வரிகள் நம்மை எச்சரிக்கின்றன.

    அந்நியர்கள் யாரும் அத்துமீறி உள்ளே பிரவேசிக்கக் கூடாது.

    உத்தரவின்றி உள்ளே வருவது ஒரு கிரிமினல் குற்றத்துக்கு சமமாய் கருதப்படும்.

    "அனுமதி பெற்று உள்ளே வருபவர்கள் வாகனங்களை 20 கி.மீட்டர் வேகத்திற்கு மேல் ஓட்டக்கூடாது.

    புகைப்படம் வீடியோ எடுக்கக் கூடாது.

    வளாகத்துக்குள் செல்பவர்கள் தங்கள் பணி முடிந்ததும் – சந்தித்த அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வர வேண்டியது அவசியம்.

    கட்டிட வளாகத்தில் இருக்கும் வரையாரும் புகைபிடித்தல் கூடாது. மேற்கண்ட விதிகளை மீறுபவர்கள் மீது – அரசு விதிகள் ஷரத்து எண். 412-ன் படி தண்டிக்கப்படுவார்கள்.

    நாம் மேற்கொண்டு அந்த அறிவிப்புகளை படிப்பதற்கு முன் – நான்கைந்து அரசாங்ககார்கள் லேசாய் புழுதி பறக்க - வருகிறது. தள்ளி நிற்போம்.

    வந்தகார்கள் – கண்ணாடிக் கதவுகள் இறுக்கமாய் – மேலேற்றப்பட்டு உள்ளே இருப்பவர்களை காட்ட மறுத்தது.எல்லா

    கார்களுமே பனி நிறம். பானெட் பிரதேசத்தில் படபடக்கும் மூவர்ணக் கொடிகளைப் பார்த்ததுமே – காம்பௌண்ட் கேட்டில் நின்றிருந்த – ரைஃபிள் தரித்த செண்ட்ரி – கேட்டின் லாக்கரை விடுவித்து - அகலத்திறந்தான்.

    கார்கள் வேகம் பிடித்து – உள்ளே ஊர்வலம் போய் – கட்டிடத்தின் முன் பக்கவளாகத்தில் – மெளனமாய் நின்றது.

    காரின் கதவுகள் ‘பளிச்பளிச்’ சென்று திறக்கப்பட , சூட் - தரித்த - - ஆசாமிகள் வெளிப்பட்டார்கள். மொத்தம் பதினோரு பேர். பதினோரு பேர்க்கும் விதவிதமான வழுக்கைகள். நீள அகலங்களில் வித்தியாசப்பட்ட நாசிகள். எல்லோரும் சேர்ந்து இரண்டு வரிசைகளாக நடந்து – கட்டிடத்தின் வராந்தா பரப்பை நோக்கிப் போனார்கள். வராந்தாவின் கோடியில் இருக்கும் – கான்ஃபிடென்ஷியல் கான்ஃப்ரென்ஸ்ஹாலை அவர்கள் தொடுவதற்கு முன்

    அந்த பதினோரு பேர்களைப் பற்றி உங்களுக்கு சொல்ல வேண்டும்.

    எல்லோருக்கும் முன்னதாக – அபார உயரத்தில் நடந்து போகிறவர் கிறிஸ்டோபர். தமிழ்நாட்டு கனிவளத்துறை - டைரக்டர். நாற்பத்தைந்து வயது. போன ஆறு மாதம் வரை டெப்டி டைரக்டராக இருந்து –பதவி உயர்வுக்கு வந்தவர்.

    அவர்க்கு அடுத்த படியாய் நடந்து போகிறவர் சாம்ராஜ்.கர்நாடக கனிவளத்துறை டைரக்டர். ரிடையராக இன்னும் மூன்று வருஷங்களே பாக்கி வைத்திருந்தார். பெல்லாரிக்கு பக்கத்தில் ‘கதக்’ என்னுமிடத்தில் இவர் கண்டுபிடித்த பாக்சைட் சுரங்கம் வெகு பிரசித்தி. – மூன்றாவது நபர் கேரள கனிவளத்துறை டைரக்டர் சங்கரமேனன். நாற்பது வயது. அடர்த்தியான புருவங்களும், கனமான மீசையும் மம்முட்டியை நினைவுக்கு கொண்டு வந்தது.நான்காவது நபர் ஆந்திரா கனிவளத்துறை

    டைரக்டர் ராஜண்ண. பதினோரு பேர்களில் குள்ளமானவர் .மோசமான ஆங்கிலம். ராஜ முந்திரிக்கு பக்கத்தில் – மாக்னீசியம் தாது கிடைக்குமா என்று டிக்கிங் டெஸ்ட் செய்து பார்த்தபோது – பெட்ரோலியம் கிடைக்கவே – ஆந்திர அரசால் மதிக்கப்பட்டவர். ஐந்தாவது நபர் மத்திய அரசு மைன்ஸ் ஃபோர்ட்டி பொலியோ டெப்டி டைரக்டர் பிரகாஷ் திவாரி. முப்பத்தெட்டு வயது. சஃபாரி ட்ரஸ். கண்களுக்கு குளிர் கண்ணாடி. இனி ஆறாவது நபரிலிருந்து பதினோராவது நபர் வரைக்கும் முறையே - ஜோதிலிங்கம், சந்திரமோகன், மோகனரங்கா, கிருஷ்ண பணிக்கர், கெம் பண்ணவார், அகஸ்டியன் – இவர்கள் எல்லோரும் கனிவளத்துறையில் இணை இயக்குநர்கள். இயக்குநர்களின் குறிப்பறிந்து – பைல்களைப் பிரித்து – அவர்கள் விரும்பிய கடிதங்களை - குறிப்புகளை - காட்டுவார்கள். காதருகே குனிந்து பவ்யமாய் யோசனை சொல்பவர்கள்.

    எல்லோரும் வராந்தாவில் நடந்து – தாளலயமான சத்தத்தோடு – கான்ஃபிடென்ஷியல் கான்பரன்ஸ் ஹாலை நெருங்கினார்கள். ஃபோம் பொருத்தப்பட்ட கதவு ஒன்றின் லாக்கரை விடுவித்து - ஏ.ஸி. கசியும் அந்த ஹாலுக்குள் நுழைந்தார்கள்.

    சிறிய ஹால். ஹாலின் எல்லா பக்கங்களிலும் – வெல்வெட் பச்சையில் கம்பளம் ஓடியிருந்தது. சதுரம் சதுரமாய் ஸ்பீக்கர் கண்கள். ஹாலுக்கு நடுவே ஓவல் வடிவ லாமினேஷன் மேஜை. அதன் ஓரமாய் முளைத்திருந்த மைக்குகள். மேஜையைச் சுற்றிலும் குஷன் வைத்த புஷ்பேக்

    Enjoying the preview?
    Page 1 of 1