Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Intha Aagayam Puthithu
Intha Aagayam Puthithu
Intha Aagayam Puthithu
Ebook92 pages37 minutes

Intha Aagayam Puthithu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Intha Aagayam Puthithu

Read more from Rajeshkumar

Related to Intha Aagayam Puthithu

Related ebooks

Related categories

Reviews for Intha Aagayam Puthithu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Intha Aagayam Puthithu - Rajeshkumar

    21

    1

    ஹரிப்ரியா மாடி ஜன்னலுக்குப் பக்கத்தில் நாற்காலியை போட்டுக் கொண்டு வெளியே பெய்கிற மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இருபத்தியொரு வயதான அந்த அழகான ஹரிப்ரியாவுக்கு பிடித்த சில விஷயங்களில் பெய்கிற மழையும் ஒன்று. இயற்கையை சற்று ஆழமாகவே காதலிக்கிற ரகம் அவள். பனியில் நனைந்த புல்வெளி, நிர்மலமான ராத்திரி வானத்தில் கோஷ்டியாய் மின்னும் நட்சத்திரங்கள், பெளர்ணமி வெளிச்சத்தில் கடற்கரை. எப்போதாவது கிராமத்துக்கு போனால் காற்றில் கலந்து வருகிற நெல்லின் மணம், ரயில் கம்பார்ட்மெண்டில் ஜன்னலோர சீட், பாரதியாரின் கண்ணம்மா பாட்டு, கஜல் இசை, எம்.எஸ்.ஸின் சுப்ரபாதம்.

    என்னம்மா ப்ரியா... காலங்கார்த்தால மழையை பார்த்துட்டு உட்கார்ந்துருக்கே.

    அப்பாவின் குரல் கேட்டு திரும்பினாள் ஹரிப்ரியா.

    அவளுடைய அப்பா ரவிவர்மா நைட் கவுனில் நின்றிருந்தார். வாயில் சிகரெட் பைப்பை கடித்திருந்தார். முன் மண்டையில் லேசாய் நரை க்ராப். ஐம்பத்தைந்து வயதுக்குரிய தளர்ந்த உடம்பு கட்டு.

    இன்னைக்கு என்ன க்ளைமேட் பார்த்தீங்களாப்பா? நாம இருக்கிறது சென்னையா... ஊட்டியான்னு எனக்கு சந்தேகமாயிருக்கு...

    ராத்திரி பூராவும் மழை பெய்துக்கிட்டே இருந்தது. அதான் இவ்வளவு குளிர்.

    ஃபெண்டாஸ்டிக்...

    ஹரிப்ரியா தன் இரண்டு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று வைத்து அதில் சூடு பரவியதும் கன்னங்களில் பதித்துக் கொண்டாள்.

    உனக்கு இன்னைக்கு காலேஜ் இல்லையாம்மா...?

    இருக்கே...

    எத்தனை மணிக்கு போகணும்?

    ஒன்பது மணிக்கு...

    நீ கிளம்பும்போது சொல்லம்மா... இன்னிக்கு நான் ஆபீஸுக்கு போறது உன்னோட கார்லதான். என்னை ஆபீஸ்ல ட்ராப் பண்ணிட்டு நீ அப்படியே காலேஜுக்கு போயிடு...

    ஏன்... உங்க ராசியான அம்பாஸிடர் கார்க்கு என்ன ஆச்சு...?

    வண்டி சர்வீஸுக்கு போயிருக்கும்மா... சாயந்திரம் அஞ்சு மணிக்குத்தான் கிடைக்கும்...

    அப்பா நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. ரெண்டு பெரிய கம்பெனிகளுக்கு நீங்க மானேஜிங் டைரக்டர். அழகான காண்டஸா வாங்கி அதுல போகக் கூடாது...? எப்பவோ வாங்கின ஒரு அம்பாஸிடர் காரை பெயிண்ட்டைக் கூட மாத்தாமே - அதுலேயே போறதும் வர்றதும் எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கல்லேப்பா... என்னோட ஃப்ரெண்ட்ஸெல்லாம் எவ்வளவு கேலி பண்றாங்க தெரியுமா...? எனக்கு ஒரே ஷேமா இருக்கு...

    ரவிவர்மா பைப்பை கடித்தபடியே சிரித்தார். யாரோ என்னவோ பேசிட்டு போறாங்கம்மா... எனக்கு அது ராசியான வண்டி. அந்த வண்டியை வாங்கின பின்னாடிதான் அதிர்ஷ்ட தேவதை என் பக்கத்துல வந்து உட்கார்ந்தாள். பணத்தை அள்ளிக் கொட்டினா... எந்தக் காரியமா அந்த வண்டியில் புறப்பட்டாலும் அது எனக்கு ஜெயம்தான்...

    "அய்யோ அப்பா... நீங்க திருந்தவே மாட்டீங்க...? உங்க முன்னேற்றத்துக்கு காரணம் அந்த பழைய அம்பாஸிடர் கார் இல்லை. உங்க சின்ஸியரான உழைப்பு. நேர்மையான வாழ்க்கை.

    நீயும் எத்தனையோ தடவை அதே வார்த்தைகளை சொல்லிக் காட்டிட்டே... ஆனா என்னாலதான் அதை ஏத்துக்க முடியலை..... வாங்கற எந்த ஒரு பொருளுக்குமே ராசின்னு ஒண்ணு உண்டம்மா...

    சரி... சாலமன் பாப்பையாவுக்கு போன் பண்ணுங்க.

    எதுக்கும்மா...?

    வாங்கற பொருளுக்கு ராசி உண்டா இல்லையான்னு ஒரு பட்டி மண்டபம் ஏற்பாடு பண்ணி அதுக்கு சாலமன் பாப்பையாவை நடுவரா போட்டு முடிவை தெரிஞ்சுக்கத்தான்.

    ரவி வர்மா சிரித்தார்.

    நல்ல பொண்ணம்மா நீ...

    கீழே கார் ஹார்ன் சத்தம் கேட்டது.

    யாரோ வர்றாங்க போலிருக்கே... ஹரிப்ரியா எட்டிப் பார்த்துவிட்டு தலையில் தன் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டாள்.

    போச்!

    என்னம்மா... யார் வர்றாங்க...?

    என்னோட அருமையான அத்தையும், உங்க பாசத்துக்குரிய தங்கச்சியுமான மங்கையர்க்கரசி அம்மையார்...

    மழை பெய்யற இந்த காலங்கார்த்தாலே எதுக்காக வந்திருக்கா... ரவி வர்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே கீழே வேலைக்காரனிடம் மங்கையர்க்கரசி ‘அண்ணன் எங்கே இருக்கார்?’ என்று கேட்கிற குரலும் அதற்கு அவன் ‘மேலே இருக்காங்க’ என்று சொல்வதும் கேட்டது.

    அதைத் தொடர்ந்து மாடிப்படிகளில் தொம் தொம் என்ற சத்தம். ரவிவர்மா எட்டிப் பார்த்து குரல் கொடுத்தார்.

    வா... மங்கை...

    "தஸ்... புஸ்’ சென்று மூச்சு வாங்கிக் கொண்டு தன் இரட்டை நாடி உடம்போடு - மங்கையர்க்கரசி’ மாடிப்படிகளின் உச்சிக்கு வருவதற்குள் சதை பிடிப்பான முகம் பூராவும் வியர்வை வாங்கியிருந்தாள்.

    "வாங்க

    Enjoying the preview?
    Page 1 of 1