Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naanaga Naanillai
Naanaga Naanillai
Naanaga Naanillai
Ebook80 pages39 minutes

Naanaga Naanillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Naanaga Naanillai

Read more from Rajeshkumar

Related to Naanaga Naanillai

Related ebooks

Related categories

Reviews for Naanaga Naanillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naanaga Naanillai - Rajeshkumar

    17

    1

    டெலிபோன் வீறிட்டது.

    கெளண்டரில் உட்கார்ந்து, நூறு ரூபாய் நோட்டுக்களை கைகொள்ளாமல் அடுக்கிக் கொண்டு, ஈரத்தை உறிஞ்சியிருந்த ஸ்பான்ஞ்சைத் தொட்டு மும்முரமாய் எண்ணிக்கொண்டிருந்த ரத்தின பாண்டியன், நோட்டுக்களை எண்ணுவதை தற்காலிகமாய் நிறுத்திவிட்டு எரிச்சலோடு ரிஸீவரை. எடுத்தார். ஹாலவ்... என்றார் அலட்சியமாய்.

    மறுமுனையில் ஒரு பெண்ணின் குரல் வெகு ரம்யமாய் இழைந்தது. ஹலோ... அது வர்ணாலயா ஜவுளிக்கடைங்களா?

    ஆமா...

    நாங்க பீளமேடு சுப்புக் கவுண்டன் வீட்டிலிருந்து பேசறமுங்க... அந்தப் பெண்ணின் குரலில் கிராமியம் ஒட்டியிருந்தது.

    என்ன வேணும்? ரத்தினபாண்டியன் எரிச்சலாய் கேட்டார்.

    பட்டுப்புடவை எடுக்கணுமுங்க... நாங்க புறப்பட்டு வர்றதுக்குள்ளாற கடையை மூடிடுவீங்களா...? இல்ல தொறந்து வெச்சிருப்பீங்களான்னு கேக்கத்தான் ‘டெலிபோன் செஞ்சோமுங்க...

    ரத்தினபாண்டியன் தன் மணிக்கெட்டில் மின்னிய கோல்ட்ரோலக்ஸ் வாட்ச்சை ஒரு அரை பார்வை பார்த்துக் கொண்டே சொன்னார்.

    மணி பத்தாகப் போகுதேம்மா... இன்னும் கொஞ்ச நேரத்துல கடையை மூடிடுவோம்... நாளைக்கு காத்தால ஒன்பது மணிக்கு வாங்கம்மா…

    இல்லீங்கய்யா... என்னோட தங்கச்சிக்கு விடிஞ்சா கல்யாணம். கல்யாணத்துக்கு வாங்கின கூறைப் புட்வையில் ஒரு தீ கங்கு பட்டு பொத்தலாயிடுச்சு... மாப்பிள்ளை வீட்டுக்கு தெரியாமே சேலையை மாத்தணும். கொஞ்ச நேரம் எங்களுக்கோசரம் கடையை சாத்தாமே இருங்கய்யா..., வாடகை கார் புடிச்சு அஞ்சு நிமிஷத்துல அங்க வர்றோம். கூறைப்புடவை மாத்திரமில்ல. இன்னும் நாலைஞ்ச, பட்டுச்சேலை எடுக்கணும்.

    ரத்தினபாண்டியனின் வியாபார மனசில் தேன் பாய்ந்தது.

    அஞ்சாறு சேலை எடுப்பீங்களா?

    ஆமாங்க...

    அப்படின்னா வாங்க.

    ரொம்ப சந்தோஷமுங்க…. இப்பவே புறப்பட்டு நானும் என்னோட வீட்டுக்காரரும் வர்றோமுங்க...

    ரீஸிவரை வைத்த பாண்டியன், ஷோ கேஸ் ஷட்டர்களை கம்பியால் இழுத்து மூடிக்கொண்டிருந்த ஒரு ஒல்லியான ஆசாமியைப் பார்த்து சத்தம் போட்டார்.

    "சுந்தரம்... எல்லா ஷட்டரையும் போட்டுடாதே… முன்னாடி ஷட்டர் கொஞ்ச நேரம் தொறந்திருக்கட்டும்... செமத்தியா ஒரு கிராக்கி வருது...

    மணி பத்தாகப் போவதுங்க...

    ஏதோ கிராமத்து ஜனம் போலிருக்கு... அஞ்சாறு பட்டு சேலை எடுக்கணுமாம்... கடையை மூடற நேரம் கல்லாவில் இருபத்தஞ்சாயிரம் விழுமே...

    ஆகாசம் கும்ன்னு இருக்குங்க… மழை வேற வரும் போலிருக்கு... அந்த ஒல்லியான ஆசாமி சொல்லிக் கொண்டே ஒவ்வொரு ஷட்டராய் மூடிக்கொண்டே போனான்.

    ரத்ன பாண்டியன் ரூபாய் நோட்டுக்களை எண்ணி" முடித்து, பில்களை சரிபார்த்து நிமிர்ந்தார். அஞ்சு நிமிஷம் காணாமல் போயிருந்தது.

    சூட்டிங் சர்ட்டிங் செக்ஷனில் நின்று கொண்டிருந்த சேல்ஸ்மேன்கள் வேலுவும், முருகேசுவும், அஜித்தின் வாலி படத்தைப் பத்தி பேசிக் கொண்டிருக்க பிளவுஸ் ஸாரி செக்ஷனில் உட்கார்ந்திருந்த சேல்ஸ்வுமன்கள் மல்லிகாவும், சீதாலட்சுமியும் ஸ்ரீதேவி படங்களில் நடிக்காததை பற்றி கவலைப்பட்டு கொண்டிருந்தார்கள்.

    ரத்னபாண்டியன் நாற்காலியைப் பின்னுக்கு நகர்த்திவிட்டு கெளண்டரை விட்டு வெளியே வந்தார். ரத்னபாண்டியனுக்கு ஆகஸ்ட் மாசம் ஆறாம் தேதி வந்தால் ஐம்பது வயது. தலை நரைக்காமல் இளமை காத்தது. பற்கள் முப்பத்திரெண்டையும் முழுசாய் வைத்திருந்தார். போன வாரம் வரைக்கும் கிருதா வளர்த்திருந்தார். ‘எவளை மயக்க இந்த மைனர் வேஷம் போடறீங்க?’ என்று மனைவி சுந்தராம்மாள் எக்குத் தப்பாய் கேள்வி கேட்க - அந்த நிமிஷமே அதை வழித்து எறிந்தார். ஸ்லாக் சர்ட் போட்டு டெரிகாட்டன் வேஷ்டியைக் கட்டி மூஞ்சியில் கொஞ்சம் பெரிய மனுஷத்தனம் வைத்திருந்தார். வீட்டிலிருந்தே பொமரேணயன் நாய்க் குட்டியையும், தன்னுடைய தொந்தியையும் செல்லமாய் வளர்த்துக் கொண்டிருந்தார்.

    என்னடா சினிமா பேச்சா? வேலுவையும், முருகேசுவையும் பார்த்து சத்தம் போட்டுக் கொண்டே வாசலுக்கு வீதியை எட்டிப் பார்த்தார்.

    கடை வீதி வெறிச்சோடி போயிருந்தது.

    அநேக கடைகளில் ஷட்டர்கள் ‘டபார் டபார்’ என்று இழுபட்டு பூட்டப்பட்டுக் கொண்டிருக்க - மழையை கீழே அனுப்புவதற்கான தயார் நிலையில்

    Enjoying the preview?
    Page 1 of 1