Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Night Flight To Newyork
Night Flight To Newyork
Night Flight To Newyork
Ebook111 pages55 minutes

Night Flight To Newyork

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Night Flight To Newyork

Read more from Rajeshkumar

Related to Night Flight To Newyork

Related ebooks

Related categories

Reviews for Night Flight To Newyork

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Night Flight To Newyork - Rajeshkumar

    20

    1

    ரிமோட்வ்யூ டிடெக்டிவ் ஏஜென்ஸியைத் தேவேந்திரன் ஆரம்பித்தபோது பிரமாதமான கனவுகள் அவன் மனசு பூராவும் வியாபித்திருந்தன. ஆரம்பித்த ஒரு வருஷத்திற்குள்ளாகவே மவுண்ட் ரோட்டில் ஒரு கட்டிடம் வாங்கிவிட முடியும் என்று நினைத்தான்.ஏ.ஸி.அறை, ஒரு மாருதி கார், அழகான காரியதரிசி, சுமாரான அழகில் ஒருஸ்டெனோ, பாங்க்கில் கணிசமானபாலன்ஸ், நட்சத்திர ஹோட்டலில் சாயந்தர டிபன்.

    இப்படி யெல்லாம் கலர் கலராகக் கனவு கண்டவன் ஏஜென்ஸி ஆரம்பித்த ஏழாவது மாசம் மைலாப்பூர் சாரதாபிராமணர்கள் கபேயில் - ஸ்பெஷல் தோசை சாப்பிட்டால் கட்டுப்படியாகாது என்று நினைத்து, சாதா தோசை சாப்பிட்டான். சாயம் போன ஸ்கூட்டரில் - தேவையான இடங்களுக்கு மட்டும் போய் வந்து பெட்ரோலைச் சேமித்தான். சினிமா தியேட்டரில் 20.00 டிக்கெட் கெளண்டரில் முண்டினான்.

    கேஸ்கள் வெகு சொற்பமாய் வந்தன. ரெண்டு நாளா பையனைக் காணோம்... கண்டுபிடிச்சுத் தர்றீங்களா? என்று சொல்லிவிட்டு வெளியே போனவர் - அடுத்த ஒரு மணிநேரத்திலேயே, "பையன் கிடைச்சுட்டான் ஸார்... நீங்க தேட வேண்டாம்!’’ என்று சொல்லிக் கொண்டு வந்தார். மனைவிகளின் கற்பைச் சந்தேகித்த கணவன்மார் சென்னையில் அதிகம் இருந்ததால் - தேவேந்திரன், வாடகை யையும் தன்னுடைய பி.ஏ. லேகாவின் சம்பளத்தையும் கொடுக்க முடிந்தது.

    இந்த நாவல் ஆரம்பமாகும் போது - தேவேந்திரன் க்ரைம் நாவல் ஒன்றில் மூழ்கியிருக்க - லேகா ஜன்னலை யொட்டிய மாதிரி நின்று கொண்டு வெளியே பெய்யும் மழையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். மின்சாரம் தவறியிருந்த ரோட்டில் வாகனங்கள் ஹெட்லைட் வெளிச்சக் கண்களோடு சாரி சாரியாய்ப் போய்க் கொண்டிருக்க - பிளாட்பாரத்தில் ஜனங்கள் குடைகளின் உபயத்தோடு நனையாமல்நடந்தார்கள். ரோட்டோர ராட்சஸ பேனரில் தம்மன்னா மார்க் கச்சையோட நின்று மழையில் குளித்துக் கொண்டிருந்தாள்.

    ‘‘பாஸ்!’’

    லேகா திரும்பினாள், தேவேந்திரனிடம்.

    என்ன...? நாவலின் கடைசிப் பக்கங்களில் இருந்த தேவேந்திரன் தலையை உயர்த்தாமலேயே கேட்டான்.

    இப்போ... மணி எவ்வளவு தெரியுமா?

    எவ்வளவு?

    "பத்து... இந்தமழைவிடாது போலிருக்கு.நான் கிளம்பறேன்...’’ சொல்லிக் கொண்டே ஜன்னலைச் சாத்தினாள்.

    ‘‘கொட்டற மழையில எப்படிப் போவே...? மழை நிக்கட்டும்.நானே கொண்டு போய் உன்னை ஹாஸ்டல்ல ட்ராப் பண்றேன்.’’

    ‘‘வேண்டாம் பாஸ்... உங்க ஸ்கூட்டரை நம்பறதைக்காட்டிலும் என்னோட கால்களை நம்பி நடந்துரலாம்.’’

    ‘‘ஒரு நல்ல கேஸ் மாட்டி, கணிசமா பணம் கிடைச்சா வண்டியை மாத்திடலாம்ன்னு பார்க்கிறேன். கேஸ் வர மாட்டேங்குதே..."

    மாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்டது.

    பாஸ்... யாரோ வர்றாங்க.

    "எட்டிப் பாரு.’’

    மெல்ல நடந்து போய் - மாடிப்படிகளை எட்டிப் பார்த்த லேகா கையை உதறிக் கொண்டு - அச்சச்சோ! என்றபடி வந்தாள்.

    யாரு... லேகா...?

    ‘‘கட்டிட ஓனர் வர்றார்..."

    "போச்சுடா!’’ கையிலிருந்த நாவலைக் கவிழ்த்து வைத்துவிட்டு - திடும்மென்று எழுந்து நின்றான் தேவேந்திரன்.கட்டிட ஓனர் மல்லையா தன் தொண்ணூறு கிலோ எடை உடம்போடும் - மடக்கின ஈரக் குடையோடும் உள்ளே வந்தார்.

    "வாங்க... ஸார்...’’

    "இது ஏழாவது தடவை...’’ மல்லையா குடையை ஓரமாய் வைத்தார்.

    "ஏழாவது தடவையா?’’

    "இந்த ரெண்டு நாள்ல... உன்கிட்டே வாடகை கேக்கிறதுக்காக வர்றது இது ஏழாவது தடவைன்னு சொன்னேன்.மூணு மாச வாடகையை எண்ணி வெய்யி.நான் வாங்கிகிட்டுப் போய்ட்டே இருக்கேன்...’’

    தேவேந்திரன் பின்னந் தலையைச் சொறிந்தான்.லேகா ஜன்னல் பக்கமாய்த் திரும்பி மழையை மறுபடியும் வேடிக்கை பார்த்தாள்."என்ன, பேச்சையே காணோம்.’’

    ஒரு ரெண்டு நாள் பொறுங்க ஸார்... தந்துடறேன்.

    "ரெண்டு நாள் கழிச்சு எப்படித் தருவே?அரசாங்கக்கஜானாவைக் கொள்ளையடிக்கப் போறியா?’’

    "ஸார்...’’

    இதோ பார்... இந்த ஸார் மோரெல்லாம் என்கிட்ட வேண்டாம்.எனக்கு ஒழுங்கா வாடகை வரணும்.உன்னால வாடகைக் கொடுக்க முடியலைன்னா, உடனடியா காலிபண்ணிடு.

    "கோபப்படாதீங்க ஸார்... போன ரெண்டு மாசமாகேஸேவரலை.அதான்வாடகையைக் கொடுக்க முடியலை.’’

    "உனக்கு கேஸ் வருமோ... முட்டை கோஸ் வருமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. மாசம் பொறந்தா முள்ளங்கிப் பத்தையாட்டம்... ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வாடகையை எண்ணிக் கையில் வெச்சுட ணும்...’

    இனிமே குடுத்துடறேன் ஸார்.

    கிழிச்சே!

    லேகா குறுக்கிட்டாள்.

    "ஸார்... இப்பத்தான் எங்க டிடெக்டிவ் ஏஜென்ஸி கம்பெனியோட பேரு நாலு பேர்க்குத் தெரிய ஆரம்பிச்சிருக்கு.இனிமே தான் கேஸ் வர ஆரம்பிக்கும்.எப்படியும் ரெண்டு நாள்ல அவர் பணம் குடுத்துடுவார்.’’

    "குடுக்கலைன்னா ?’’

    குடுத்துடுவார் ஸார்.

    "உனக்காக இப்ப போறேன்.ரெண்டு நாள் கழிச்சு வரும்போது - உன்னோட பாஸ் பின்னந் தலையைச் சொறிஞ்சான்னா... எனக்குச் சண்டாளமான கோபம் வந்துடும்.’’

    கண்டிப்பா குடுத்துவேன் - ஸார் தேவேந்திரன் சொல்ல, மல்லையா முனகிக் கொண்டே நடந்தார்.

    "டிடெக்டிவ் ஏஜென்ஸி நடத்தறானாம்.வேர்க்கடலை அவிச்சு வித்தாக் கூட நாலு காசு கண்ணுல பார்க்கலாம்... வெட்டிப் பய...’’

    அவர் படிகளில் இறங்கிப் போனதும் - இருவரும் ஒருத்தரை யொருத்தர் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள்.

    ‘‘பாஸ்!’’

    என்ன ?

    "கட்டிடஓனர்சொல்லிவிட்டுப்போனயோசனையைஅமுல்படுத்திப்பார்த்தாஎன்ன ?’’

    என்னசொல்லிட்டுப்போறார்?

    "வேர்க்கடலைஅவிச்சுவித்துப்பார்க்கலாமா?’’

    "ஏய்...ய்...’’ தேவேந்திரன்அவளைஅடிக்கப்பாய்ந்தஅதேவிநாடி - மரப்படிகளில்மறுபடியும்யாரோஏறிவரும்சத்தம்.

    இந்தத்தடவையாருன்னுதெரியலையே.

    "நிச்சயமாகேஸாஇருக்காது... நல்லவெய்யில்அடிக்கிறமுகூர்த்தநாளிலேயேயாரும்வரமாட்டாங்க... இவ்வளவுமழைபெய்யறராத்திரிநேரத்திலாவரப்போறாங்க...’’

    யாருன்னுதான்... போய்ப்பாரேன்.

    லேகாபோய்ப்பார்ப்பதற்குள் - அந்தஅரைடிராயர்அணிந்தபையன்எட்டிப்பார்த்தான்.கீழேஇருக்கும்செலக்ட்எம்போரியம்ஸ்டேஷனரிமார்ட்டில்வேலைசெய்யும்பையன்அவன்.

    என்னடா...? என்றான்தேவேந்திரன்.

    உங்களுக்குப்போன்வந்திருக்குஸார்.

    போனா?யார்கிட்டயிருந்து?

    "தெரியலைஸார்... மொதலாளிசொல்லிட்டுவரச்சொன்னார்.போன்யார்கிட்டயிருந்துன்னுஎனக்குத்தெரியாது.’’

    சரி... நீபோடா... வர்றேன்.

    பையன்நகர்ந்துபோனதும் - தேவேந்திரன்லேகாவைக்பார்த்தான்.போய்ப்போனைஅட்டெண்ட்பண்ணிட்டுவா.

    "நீங்க பாஸ்?’’

    "எனக்கு ராசியில்லை .நான் ரிஸீவரை

    Enjoying the preview?
    Page 1 of 1