Piriyamaana Kolaikaran
By Rajeshkumar
4.5/5
()
About this ebook
Read more from Rajeshkumar
Raja Ragasiyam Rating: 0 out of 5 stars0 ratingsThirumarana Azhaippithazh Rating: 5 out of 5 stars5/5Konjum vanjanai! Rating: 5 out of 5 stars5/5Kondraal Kondraan Kondren Rating: 5 out of 5 stars5/5Dial For Kill Rating: 4 out of 5 stars4/5Vidathey Vivek! Vidathey Rating: 4 out of 5 stars4/5Nanthini Nalai Irakkiral! Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Panchavarna Kili Rating: 0 out of 5 stars0 ratingsVetri Endraal Vivek Rating: 5 out of 5 stars5/5Iruttil Parakkum Paravaigal Rating: 0 out of 5 stars0 ratingsSivappu November Rating: 0 out of 5 stars0 ratingsUyir Eduppaan Thozhan Rating: 5 out of 5 stars5/5100-Vathu Pournami Rating: 4 out of 5 stars4/5Neelam Enbathu Niramalla Rating: 0 out of 5 stars0 ratingsUyir Veelchi Rating: 0 out of 5 stars0 ratingsRojakkalum Thottakalum Rating: 0 out of 5 stars0 ratingsJune, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Irandhu Kidandha Thendral Rating: 0 out of 5 stars0 ratingsKavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Vivek Athu Visham Rating: 5 out of 5 stars5/5Moondru Vinaadi Mugam Rating: 5 out of 5 stars5/5Engum Vivek! Ethilum Vivek! Rating: 5 out of 5 stars5/5Karuppu Rattham Rating: 5 out of 5 stars5/5Mella Mella Ennai Kollathey Rating: 0 out of 5 stars0 ratingsOre Oru Naal Rating: 5 out of 5 stars5/5Naan Nalina Nalliravu Rating: 0 out of 5 stars0 ratingsThanga Macham Rating: 5 out of 5 stars5/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratings
Related to Piriyamaana Kolaikaran
Related ebooks
June, July, Aaa...! Rating: 4 out of 5 stars4/5Kovaiyil Oru Kutram Rating: 5 out of 5 stars5/5Samaathi Aagivida Sammathama Rating: 5 out of 5 stars5/5Vivek Jakkirathai Rating: 5 out of 5 stars5/5Jeippathu Nijam Rating: 5 out of 5 stars5/5Paathi Rajyam Rating: 0 out of 5 stars0 ratingsUnakke Uyiraanen Rating: 0 out of 5 stars0 ratingsKuttrangal Kuraivathillai Rating: 4 out of 5 stars4/5Maranathin Thethi March 7 Rating: 0 out of 5 stars0 ratingsKolai Vallal Rating: 0 out of 5 stars0 ratingsMeendum Vivekin Visparoopam Rating: 3 out of 5 stars3/5Pesum Rojakkal Rating: 0 out of 5 stars0 ratingsUlagai Vilai Kel Rating: 5 out of 5 stars5/5Thappithe Aaga Vendum Rating: 5 out of 5 stars5/5356 Rating: 5 out of 5 stars5/5Lekha! En Lekha! Rating: 3 out of 5 stars3/5Manjal Diary Rating: 0 out of 5 stars0 ratingsUlaraatha Raththam Rating: 0 out of 5 stars0 ratingsSorkkathin Savee Rating: 0 out of 5 stars0 ratingsEndravadhu Oru Naal Rating: 0 out of 5 stars0 ratingsAvenue Marangal Rating: 5 out of 5 stars5/5Maaya Hospital, Marupadiyum Iranthavan and Oru latsam Vinaadikal Rating: 2 out of 5 stars2/5Kavanam Vivek Rating: 5 out of 5 stars5/5Iravu Thamarai Rating: 3 out of 5 stars3/5Irapathu Nee Irupathu Naan Rating: 5 out of 5 stars5/5Mudhal Nimisham Rating: 2 out of 5 stars2/5Oru Januaryin Gnayitrukilamai Rating: 0 out of 5 stars0 ratingsVidindhal Iravu Rating: 5 out of 5 stars5/5Poruthathu Pothum Vivek! Rating: 5 out of 5 stars5/5‘Sorry... Konnuttean..!’ Rating: 0 out of 5 stars0 ratings
Related categories
Reviews for Piriyamaana Kolaikaran
2 ratings0 reviews
Book preview
Piriyamaana Kolaikaran - Rajeshkumar
16
1
இடிந்து சிதிலமாகிப் போன அந்தப் பாழடைந்த கட்டிடத்தின் முன் கார் நின்றது...
காரின் நான்குபுறக் கதவுகளையும் படாரென்று பிளந்து கொண்டு நான்கைந்து தடியன்கள் கீழே இறங்கி, காரின் உள்ளே இருந்த செங்கமலத்தை இழுத்தனர். வாடி வெளியே!
– ஒருவன் உறுமினான்.
"அய்யா, உங்களுக்கு புண்ணியமாப் போகும், என்னை உட்டுடுங்கய்யா. எனக்கு ஏதாச்சும் தீம்பு
பண்ணினீங்கன்னா எம் மச்சான் உங்களையெல்லாம் சும்மா உடாது. கருக்கரி வாளை எடுத்து எளநி சீவற மாதிரி உங்க தலையைச் சீவிடும். மருவாதையா உட்டுடுங்க...’
அவள் கதறினாள்."
உம்மச்சான் என்ன? அந்த ஆண்டவனே வந்தாக்கூட உன்னை உட்டுடமாட்டோம். உம்மேல எத்தினி நாளா எங்களுக்குக் கண்ணு தெரியுமா? மரியாதையா சத்தம்போடாமே எங்ககூட வா. சந்தோஷமா இருந்துட்டுப் போயிடு. ஏதாச்சும் சத்தம்போட்டு ரகளைபண்ணினியோ உன்னோட அடிவயித்தில ஒரே சொருகு. பாத்தியா பிச்சுவா! என்னமா வயசுக்கு வந்த பொண்ணாட்டம் மின்னுது பாரு...
–
ஒருவன் அவளுடைய கையைப் பற்றினான். இன்னொருவன் அவளுடைய முந்தானையைப் பிடித்தான். "
‘மச்சான்... ஆ! மச்சான்... ஆ!" –அவள் கதறித் துடிக்க...
அடுத்த விநாடி...
தியேட்டரில் விசில் பறந்தது. கைத்தட்டல் கடலாய் ஆரவாரித்தது. – எதிர்பார்த்தபடியே செங்கமலத்தின் மச்சான் மருதமுத்து மாட்டுவண்டியில் அந்தக்காரைப் பின்தொடர்ந்து வந்திருந்தான்.
தியேட்டரில் சட்டென்று விளக்குகள் எரிய- திரை இடைவேளை என்றது. இனிமேல் செங்கமலத்துக்கு ஆபத்தில்லை என்ற நிம்மதியான மனசோடு எல்லோரும் காப்பியை தேடிப் போக...
ரூ.4.55 பால்கனி கீழ் சர்க்கிளில் 15, 16 எண்ணுள்ள இருக்கைகளில் சாய்ந்திருந்த பதியும், காவ்யாவும் ஒருவரையொருவர் – பார்த்து புன்னகைத்துக் கொண்டார்கள். பதி சொன்னான்: "இன்னும் எத்தனை நூற்றாண்டுதான் ஆகட்டுமே! நம்ம தமிழ்ப்படத்தோட ஃபார்முலா மட்டும் என்னிக்குமே மாறப் போறதில்லை.
மாட்டு வண்டி கட்டிக்கிட்டு காரைத் துரத்திப் பிடிக்கிற ரியலிசத்தை இன்னமும் எத்தனை படங்களில் பார்த்துத் தொலைக்கணுமோ தெரியலை..." – சலிப்பான நீ...ண்...ட... பெருமூச்சொன்றை விட்டான்.
காவ்யா - சிரித்தாள். கன்னத்தில் ஓர் அழகான குழி சட்டென்று பிரசவமாகி அற்ப ஆயுளில் போனது.
அவங்க படத்தை.சரியாத்தான் எடுத்திருக்காங்க. இது கிராமத்துக் கதை. கதாநாயகன் ஒரு விவசாயி. அவனோட் காதலியை கார்ல கடத்திக்கிட்டுப் போனா அவனால் என்னதான் செய்ய முடியும்? அவன் கார் ஓட்டற மாதிரி காமிச்சா நல்லாவா இருக்கும்? அதனாலதான் மாட்டுவண்டி...
– சொல்லிவிட்டு காவ்யா தன் ரோஜாநிற ஈறுகள் தெரியச் சிரித்தாள்.
‘அந்தச் சிரிப்பில் ஒரு விநாடி கரைந்தான் பதி.
பதி? முழுப்பெயர் சீதாபதி. இந்தியாவில் பிறந்து இருபத்தெட்டு வருடமாகிறது. அப்பா இல்லை; அம்மா இல்லை. மாநிறம். – சத்ருகன் சின்ஹாவை நினைவு படுத்தும் முகம். அவன் சிரிக்கையில் பளிச்சிடும் அந்தப் பல் வரிசை எந்தப் பெண்ணின் மனத்தையும் ஒரு தடவை நிச்சயம் சுண்டும். சொந்தஊர் மெட்ராஸ் பக்கம் ஏதோ ஒரு பாக்கம். காவ்யா என்ற அழகான பெண்ணின் மனசைத் திருடி இன்றைக்கு சரியாய் முப்பத்து நான்கு நாட்கள் ஆகிறது – இப்போதைக்கு பதியைப் பற்றி இவ்வளவு விவரங்கள் போதும், பின்னால் வர இருக்கும் நூற்றுச் சொச்சம் பக்கங்களில் அவன் முழுசுமாய் உங்களுக்குத் தெரிவான்.
காவ்யா? டீன் ஏஜ் முடிய இன்னமும் ஒரு வருஷம். பாக்கி வைத்திருக்கும் காவ்யா நிஜமாகவே அழகானவள். பளபளப்பான ஆர்ட்பேப்பர் காலண்டரில் வீணையோடு பாடும் ‘மீரா’வை பார்த்திருக்கிறீர்களா? அது போதும்! வேறு வர்ணனைகளே வேண்டாம். முப்பதுக்கு மேற்பட்ட தேயிலை எஸ்டேட்டுகளுக்கும், ஏழுமில்களுக்கும் உரிமையாளரான மில்லினர் ‘சத்திய தீப்’ பின் ஒரே மகள். கோவையில் உள்ள பெண்கள் கல்லூரி யொன்றில் இரண்டாவது வருடம் பெளதிகப் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருப்பவள். தேயிலை எஸ்டேட்டுகளை மேற்பார்வையிட்டுக் கவனித்துக் கொள்வதற்காக தன் அப்பா சத்தியதீப்பினால் வேலைக்கு அமர்த்தப்பட்ட பதியை ஆழமாய் நேசிக்கிறவள். அப்பாவுக்கு இந்த காதல் விவகாரம் தெரிய நேர்ந்தால் – ஏற்படக் கூடிய உஷ்ணமான விளைவுகளை... எதிர்பார்த்து நடுங்கிக் கொண்டிருப்பவள். தன்னுடைய ஒரே அண்ணன் வசீகரனுக்குத் தன் காதல் விவகாரம் தெரிந்திருக்குமோ என்று எண்ணிப்பதை பதைத்துக் கொண்டிருப்பவள். பதியைச் சந்தித்துப் பேசுகிற விநாடிகளில் அந்தப் பயத்தையும், பதைபதைப்பையும் சுத்தமாய் மறந்து – உலகத்திலேயே தான் ஒருத்தி மட்டும் சந்தோஷமாய் இருப்பதாய் எண்ணி மகிழ்பவள்
இந்த அற்புதமான திரைக் காவியத்தை இனியும் பார்த்தா என்னோட பொது அறிவு எக்கச்சக்கமா அபிவிருத்தி அடைஞ்சிடும். புறப்படலாமா காவ்யா?
–பதி எழுந்தபடியே கேட்டான். காவ்யாவும் எழுந்தாள்
‘ஓ.கே... போகலாம்..." -
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்ன்னு சிலப்பதிகாரத்தில் இளங்கோஅடிகள் சொன்னது இன்னிக்கு நூத்துக்குநூறு உண்மையாயிடுச்சு காவ்யா!
‘‘என்ன சொல்றீங்க பதி?"
பின்னே பாரேன். பூமி மட்டத்திலிருந்து ஏறக்குறைய ஏழாயிரம் அடி உயரத்தில இருக்கிற இந்த ஊட்டிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன ஊர்ல ஜாலியா சுத்திட்டிருந்த நம்மளை.இந்த தமிழ்ப்படம் பார்க்கும்படி பண்ணிடுச்சே. அதைச் சொன்னேன்...
காவ்யா சிரித்தாள் – கண்களில் நீர் தளும்புகிற வரைக்கும்.
தமிழ் அன்னையை சும்மா பழிக்காதீங்க!
இடைவேளை முடிந்ததற்கு அறிகுறியாக தியேட்டர் மணி ஒலித்தது. முறுக்கைமென்று கொண்டிருந்தவர்கள், கோலாபாட்டில்களில் இருந்த ஆரஞ்சு வண்ண நீரை வயிற்றுக்கு தாரை வார்த்துக்கொண்டிருந்தவர்கள், டீயை உறிஞ்சிக்கொண்டிருந்தவர்கள், பாப்கார்னை அரைத்துக்கொண்டிருந்தவர்கள் எல்லோருமே...
உள்ளே போக அவசரப்பட்டார்கள். ‘.
"படத்தின் ரெண்டாவது சோதனைக் கட்டம் ஆரம்பமாயிடுச்சு காவ்யா. வா, நாம சீக்கிரமாப் போயிடலாம்...’’
மாடிப்படிகளில் இறங்கி, தியேட்டர் வராந்தாவைக் கடந்து, போர்டிகோவின் முன் வந்து நின்றார்கள். ஏகப்பட்டகார்கள் , தியேட்டரையொட்டி அமைக்கப்பட்டிருந்த சிவப்புநிற பேவ்மெண்டில் அணிவகுத்து நிற்க – அதில் ஒரு சக்கரவர்த்திக்குரிய கம்பீரத்தோடு நின்றிருந்த தன் செவர்லே காரை நோக்கிப்போனாள் காவ்யா
"பதி, நீங்க இங்கேயே நில்லுங்க. காரை எடுத்துட்டு வந்துடறேன்.’
‘‘உம்" தலையாட்டினான் பதி. –
கார் வருகிற வரைக்கும் தியேட்டரின் சுவர்களில் நின்றிருந்த பட பேனர்களை மேய்ந்தான் பதி. கட் அவுட்டில் முப்பது அடி உயரத்துக்கு நின்றிருந்த கதாநாயகன் முந்தினநாள் பெய்த மழையில் ரொம்பவும் பாதிக்கப்பட்டிருந்தான். காற்று இடுப்பு பாகத்தை பிய்த்துக் கொண்டு போயிருந்தது. வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்த கை பக்கவாதம் வந்துவிட்ட ஒரு நோயாளியின் கையாய் மாறியிருந்தது. கதாநாயகனின் கோலத்தைக் கண்டு சிரிப்பவள் போல கதாநாயகி எதிர்ப்புறச் சுவரில் பற்களைப் பூராவும் காட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்கு கீழே ஒரு மொட்டைத்தலை வில்லனும், கடாமீசை வில்லனும் சதியாலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
கெட் இன்பதி...!
சாக்லெட் வண்ண அந்த செவர்லே கார், பனிக்கட்டிப் பரப்பில் வழுக்கும் ஸ்கேட்டிங் பெண்ணாய் நீந்திக், கொண்டு வந்தது
பதி அமர்த்தலாய் ஏறி- அவளுக்கருகே அமர்ந்தான்
எங்கே போகலாம்?
–காவ்யா கேட்டாள்
"ஏதாவது ஒரு ஓட்டலுக்குப் போகலாம் காவ்யா. பசி குடலைக் குதறுது... 1.
ஓட்டல் மெஹதூத் போலாமா?
உம்...
– மருதமுத்து உள்ளே ஒற்றை ஆளாய் நின்று – செங்கமலத்தின் கற்பைச் சூறையாட வந்த தடியன்களை டிஷ்யூம்... டிஷ்யூம்... என்று மொத்திக் கொண்டிருக்க...
செவர்லே ஊர்ந்தது
தியேட்டரின் காம்பௌண்ட் கேட்டிலிருந்து விடுபட்டு இருட்டில் புதைந்திருந்த ஆர்க்காட் சாலை வழியாய் சீறிக் கொண்டு போனது
அதே விநாடி
தியேட்டரின் எதிர்ச்சாரியில் மோட்டார் பைக்கோடு நின்றிருந்த அந்த பழுப்புநிற ஜெர்கின் அணிந்த பேர்வழி சட்டென்று தான் புகைத்துக் கொண்டிருந்த சிகரெட்டை வீசிவிட்டு பைக்கை உயிர்ப்பித்து செவர்லேகாரைப் பின்தொடர்ந்தான்.
ஒட்டல் மெஹதூத்.
ஹீட்டர் இதமாய் உஷ்ண அலைகளைப் பரப்பி நீலகிரிச் சாரலின் குளிரை வெளியிலேயே நிறுத்திவைக்க அந்தச் சுகமான கணப்பில் – ஹால் முழுக்க சிதறியிருந்த நாற்காலிகளில் ஏகப்பட்ட ஜோடிகள் பரவியிருந்தார்கள். (இதில் பாதி சட்டப்படி செல்லாத ஜோடிகள்) ஜ்யூக் பாக்ஸிலிருந்து - ABBA பீறிட, அதைப் பொருட்படுத்தாமல் பலர் தாழ்ந்த ஸ்தாயியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பேரர்கள், கிடைக்கப் போகும்
கணிசமான டிப்ஸிற்காக போலித்தனமான மரியாதையோடு பவ்யத்தைக காட்டிக் கொண்டிருந்தார்கள். சிகரெட் புகை திட்டுத்திட்டாய், தேங்கி தயக்கம் காட்டிக் கொண்டிருக்க- விஸ்கியை கோலாவில் கலந்து பெண்கள் கண்ணாடி டம்ளர்களில் சப்பிக் கொண்டிருந்தார்கள்.
என்ன சாப்பிடறே காவ்யா?
நீங்க என்ன ஆர்டர் பண்றீங்களோ, அதை.
பேரர் அருகே வந்து நிற்க, பதி சொன்னான். ‘வெஜிடபுள் கட்லெட், பப்பாளிஜாம்..."
பேரர் நகர்ந்தான். குட் சாய்ஸ்!
என்றாள் காவ்யா. நோ என்னோட குட் சாய்ஸ் எது தெரியுமா காவ்யா?
– பதி கேட்டான்.
எது?
அது!
அவன் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்து முகம் சிவந்த காவ்யா சட்டென்று விலகிக் கிடந்த சேலைத் தலைப்பை திருத்திக் கொண்டாள். பொய்க் கோபம் முகத்தில் குடியேற பொரிந்தாள்...
தமிழ்ப்படம் பார்த்ததோட விளைவு... பேச்சு தாறுமாறா வருது!
பதி சிரித்தான்
எனக்கு – காதலைக் கத்துக் கொடுக்கறதே தமிழ்ப்படங்கள்தான்
வெளியே
ஜெர்கின் பேர்வழி. பைக்கை அணைத்து. – செவர்லேக்குப் பின்புறமாய் நிறுத்திவிட்டு ஒரு வினாடி ஹாலை உற்றுப்பார்த்தான். எதிரும் புதிருமாய் உட்கார்ந்தபடி – சிரித்துக் கொண்டிருந்த பதியும் காவ்யாவும் அவனுடைய கண்களில் பட்-அவர்களைக் குறிவைத்து உள்ளே போனான்.
காலி நாற்காலியைத் தேடச் சில நிமிடங்களைச் செலவழித்து –
பிறகு கிடைத்த நாற்காலியொன்றில் தன் எண்பது.கிலோ எடையை அமர்த்தினான். பதியின் முதுகும் காவ்யாவின் முதுகும் தெரிய அவர்களையே பார்த்தான்.
"ஸார்!
பேரர் பவ்யம் காட்டிக் குனிய- "‘ஹாப்