Irukodiyil Oru Malar
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Vaazhkkai Azhaganathu Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Oru Iniya Uthayam Rating: 5 out of 5 stars5/5Un Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Thendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5Anbin Sangamam Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Paadu Nilaave Rating: 5 out of 5 stars5/5
Related to Irukodiyil Oru Malar
Related ebooks
Ponmagal Vanthaal Rating: 0 out of 5 stars0 ratingsKalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratingsKankalukku Sonthamillai Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Deivam Thantha Poove Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Poove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsJanani Jagam Nee Rating: 0 out of 5 stars0 ratingsAayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsThenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Minmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsNijamai Sila Nimidangal! Rating: 0 out of 5 stars0 ratingsEn Mazhaye... En Mayilirage!... Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Puthu Vasantham Thedi Varum Rating: 0 out of 5 stars0 ratingsThulasi Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Ullam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Irandu Manam Vendum Rating: 4 out of 5 stars4/5Iru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsNilavai Thedum Vaanam Rating: 0 out of 5 stars0 ratingsThendralaga Nee Varuvaya Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Irukodiyil Oru Malar
1 rating0 reviews
Book preview
Irukodiyil Oru Malar - Parimala Rajendran
23
1
ஜன்னலின் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வர, கண் திறந்தாள் மதுரா.
ஏஸியின் குளிர் சில்லிட வைக்க ஏஸி ஸ்விட்சை ஆப் செய்தவள்,
கட்டிலில் எழுந்து உட்கார்ந்து சோம்பல் முறித்தாள். கடிகார முள் மணி ஏழு என்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை. கம்பெனி கிடையாது. அவசரமாக கிளம்பும் வேலை இல்லை.
கதவு லேசாக தட்டப்பட,
எழுந்திட்டேன்மா
வா... மதுரா... இன்னைக்கு கோவிலுக்கு போகணும்னு சொன்னேன். அப்படியே குளிச்சுட்டு வந்துடு.
மதும்மா மேல்மருவத்தூர் அம்பாள் கோவிலுக்கு ஒரு நாள் போகணும்மா.
உனக்கு அம்மை வார்த்து... நான்கு வயசில் ரொம்ப முடியாம் இருந்தே. அப்ப வேண்டிக்கிட்டேன்.
இப்ப வயசு இருபத்தியொண்ணு ஆகுது. இன்னும் போகலை."
அப்பா சொன்னது ஞாபகம்வர...
வழக்கம் போல... மனசை அறுக்கும் வலி. அவளை சிறிதுநேரம் இயங்கவிடாமல் செய்தது.
***
குளித்தவள், அழகாக கற்கள் பதிக்கப்பட்ட கிளிப்பால் தலையை கிளிப் செய்து, ரோஸ் நிற ஷிபான் சேலையில் அம்மாவின் முன் நின்றாள்.
மதுரா உனக்கு இந்த புடவை... ரொம்ப. பாந்தமா இருக்கு. அப்பா உன் பார்த்டேக்கு பிரெசண்ட் பண்ணினதுதானே.
ஒரு கணம் அம்மாவை உறுத்து பார்த்தவள்,
சேகர் டாடி கொடுத்தது.
சரி சரி வா சாப்பிடலாம். டாடி உனக்காக சாப்பிடாமல் வெயிட் பண்றாரு.
பேச்சை மாத்தியவளாக வித்யா நகர,
எதுவுமே சொல்லாமல் அவளை பின் தொடர்ந்தாள் மதுரா,
மது ஒரு நிமிஷம் நில்லு. அந்த கடையில் பூ, பழம் வாங்கணும்.
சேகர் மகளை அழைக்க...
நோ டாடி என்னை மதுரான்னு கூப்பிடுங்க.
எரிச்சலுடன் மகளை பார்த்தாள் வித்யா.
சின்ன வயசிலிருந்தே உனக்கு பிடிவாதம் மதுரா. ஏன் உன்னை மதுன்னு கூப்பிட கூடாதா. டாடி எவ்வளவு பிரியமா கூப்பிடறாரு. அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது.
விடு வித்யா. நான்தான் மறந்துட்டு கூப்பிட்டேன். கோவிலுக்கு வந்த இடத்தில், அவ மனசு கஷ்டப்படும்படி பேச வேண்டாம்.
புன்னகைத்தவர், மகளின் தோள் மேல் கை போட்டு... "ஸாரி மதுரா...’
இட்ஸ் ஓகே டாடி... வாங்க போலாம்
அவருடன் கடைக்கு போய், அர்ச்சனை சாமான்கள் வாங்கிக்கொண்டு, கோவிலுக்குள் மூவருமாக நுழைந்தார்கள்.
***
பேக்கை எடுத்து சுடிதார், புடவை என அயர்ன் செய்தவைகளை அடுக்கினாள்.
ஒரு நிமிஷம் ரகு. இரு அக்கா கிட்டே கொடுக்கிறேன்
காதில் செல்போனை வைத்தபடி வந்தாள் வித்யா.
சொல்லு ரகு. எப்படி இருக்கே. ஒழுங்கா படிக்கிறியா
"படிக்கிறேன்கா. ஹாஸ்டலில் பசங்க ஸ்டிரைக். அதனால் நாலு நாள் திடீர்னு லிவு விட்டுட்டாங்க... இன்னைக்கு நைட் புறப்பட்டு வரேன்கா.
வா ரகு. செமஸ்டர் வரப்போகுது. புக்ஸ் எடுத்துட்டு வா. டயம் வேஸ்ட் பண்ணாமல் படிக்கலாம்
"படிக்கிறது இருக்கட்டும். வீட்டிற்கு வர்றது சந்தோஷமா இருக்கு.
அம்மா கையால சாப்பிட்டு உன்னோடு ஜாலியா அரட்டையடிச்சு அப்பாவோடு கதை பேசி எவ்வளவு நாளாச்சு."
சரி சரி அடுக்காதே. புறப்பட்டுவா
அக்கா நீ அந்த வீட்டுக்கு இந்த வாரம் போயிடுவேன்னு அம்மா சொன்னாங்க. ப்ளீஸ்கா அடுத்தவாரம் போகலாம். இங்கேயே இருக்கா.
சிறிது நேரம் மெளனமாக இருந்தவள்.
"அதெப்படி ரகு. எனக்காக அவங்களும் ஆவலோடு வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க.
நாளைக்கு ஆபீஸ் போயிட்டு வீட்டுக்கு வந்து உன்னோடு கொஞ்ச நேரம் இருந்துட்டு போறேன்."
"என்னக்கா இது... நாலு நாளும் நீயும் வீட்டிலிருந்தா நல்லாயிருக்கும்தானே. சரி சரி நீ சொன்னா கேட்கமாட்டே. அம்மா அப்பாவே சொன்னாங்க. நீ என்னதான் கெஞ்சினாலும் உன் அக்கா கேட்கமாட்டான்னாங்க. சரியாத்தான் இருக்கு.’
புரிஞ்சுக்க ரகு. மத்தவங்களோட உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுக்கணும்.
ஓகேகா நாளைக்கு பார்ப்போம். பை.
போனை அம்மாவிடம் தருகிறாள்.
மதுராவையும் கட்டிலில் இருக்கும் பேக்கையும் பார்த்தபடி வெளியேறுகிறாள் வித்யா.
***
டாடி... மணி மூணு கூட ஆகலை. அதற்குள் செடிக்கு தண்ணீர் ஊற்ற கிளம்பிட்டிங்க.
வாசலில் இருக்கும் பூச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றியபடி சேகர்.
பொழுது போகலைமா. உங்கம்மாவும் படுத்துக்கிட்டே இருக்கா. சரி இந்த வேலையாவது சீக்கிரம் முடிச்சிட்டு. மூட் அவுட் ஆகியிருக்கும் உன் அம்மாவை அப்புறமாக வாக்கிங் கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்.
ஏன் டாடி. காலையில் கோவிலுக்கு போய்ட்டு வந்தோம். நல்லதானே இருந்தாங்க. மத்தியானம் ரகு கூட ஊருக்கு வர்றதாக போன் பண்ணினான். என்னாச்சு. நீங்க ஏதாவது சொன்னீங்களா.
என்ன மதுரா... புரியாதமாதிரி கேட்கிற. அதுக்கு காரணம் நீதான்.
நானா?
"ஆமாம். இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவே. வர்றதுக்கு ஒரு வாரம் ஆகும். ரகு வர்ற நேரத்தில் நீயும் இருந்தால் நல்லா இருக்கும்னு நினைக்கிறா...
அது நடக்காதுன்னு தெரியும். அதான் கொஞ்சம் அப்செட் ஆகியிருக்கா. நாளைக்கு ரகு வந்தா சரியாயிடுவா."
***
உள்ளே வருகிறாள்.
வித்யா சுவரின் பக்கம் திரும்பியவாறு கட்டிலில் ஒருக்களித்து படுத்திருக்கிறாள்.
கிச்சனில் மதியம் சாப்பிட்ட பாத்திரங்கள் ஒழித்து போடாமல் அப்படி அப்படியே இருக்கிறது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் வேலைக்காரி வந்துவிடுவாள். கிச்சன் மேடையில் இருந்த பாத்திரங்களை தேய்க்க எடுத்து போட்டு, மேடையை ஈரத்துணிக் கொண்டு சுத்தமாக துடைத்து, மிச்சமிருந்த குழம்பு, காய்கறிகளை ப்ரிஜ்ஜில் வைக்கிறாள். ராத்திரிக்கு மாவு இருக்கிறது.
டாடியும் அம்மாவும் தோசை ஊற்றி சாப்பிட்டு கொள்வார்கள். இனி காபி போடும் வேலை மட்டும்தான். காபியை குடித்துவிட்டு கிளம்ப வேண்டும். இந்த ட்ராபிக்கில் பெசன்ட் நகர் போக ஒரு மணி நேரத்திற்கு மேலாகிவிடும்.
அம்மாவின் அருகில் வருகிறாள். அவளிடம் எந்த அசைவுமில்லை . ஆனால் அவள் தூங்கவில்லை என்பது மதுவுக்கு புரிகிறது.
அம்மா
அம்மா
அடுத்த அழைப்புக்கு.
ம்
முனகல் மட்டும் பதிலாக.
கோபமா
நான் ஏன் கோபப்படணும். மனசு சரியில்லை
திரும்புமா
ஒரு கையை அம்மாவின் தோளில் வைத்து திருப்ப, வித்யா எழுந்து கட்டிலில் உட்காருகிறாள். வருஷக்கணக்காக இப்படி தானேம்மா நடக்குது. இதுக்கு போய் ஏன் மூட் அவுட் ஆகிறே. அடுத்த வாரம் இங்கேதானே வரப்போறேன்."
இருந்தாலும் இது தொடர்கதையா போய்ட்டே இருக்கு. இதுக்கு இன்னும் முடிவு வரலையேன்னு தான் வருத்தமா இருக்கு. நீ வயசுக்கு வந்த பெண். கல்யாண வயசும் வந்தாச்சு. இனி நீ அம்மாவின் பொறுப்பில் இருப்பதுதான் நல்லது. இது ஏன் இன்னும் உனக்கு புரியலை. போதும் மதுரா. நீ அப்பா. அப்பான்னு உருகின வரை போதும்.
நீ இப்படி பேசறது தப்பும்மா. உனக்கு இருக்கிற அன்பும். பாசமும் அவர்கிட்டேயும் இருக்கும்மா. எனக்கு இது புரியறதினால் தான், எந்த முடிவுக்கும் வராமல் இருக்கேன்.
"கோர்ட் உத்தரவு. உன் பதினெட்டு வயசோடு முடிஞ்சுடுச்சு மதுரா. இனி நீதான் முடிவெடுக்கணும்.
இனியும் உன்னை அனுப்பி வைக்க இஷ்டமில்லைம்மா.
அம்மா மனசை புரிஞ்சு நடந்துக்க."
"சரிம்மா யோசிக்கிறேன். நீ எழுந்து முகம் அலம்பிட்டு உன் கையால் காபி கலந்து கொடு.
குடிச்சுட்டு கிளம்பறேன்."
***
வாசல் கதவை விரிய திறக்கிறான் சந்திரன்.
மதும்மா வா.வா நீ வருவேன்னு பார்த்த கண் பூத்து போச்சு. உன் அப்பா ஒரு இடத்தில் நிற்காம் வாசலுக்கும் கொல்லைக்குமாக நடந்தபடி இருந்தாரு.
வரவேற்கிறாள் அமுதா.
டிராபிக்கில் ஸ்கூட்டியில் வருகிறயேன்னு பார்த்துட்டு இருந்தேன். ஆட்டோவில் வந்திருக்கலாமே மதும்மா.
"எப்படிப்பா அப்புறம் வாரம் முழுக்க ஆபீஸ் போகணுமே.’’ ஸ்கூட்டியை ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்துகிறாள்.
வர்ஷினி எங்கே அத்தை. டியூஷன் போயிருக்கா.