Ithayam Oru Kovil
4.5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Kalaindhu Pogum Kolangal Rating: 0 out of 5 stars0 ratingsIthu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Nesam Niram Maarumo Rating: 0 out of 5 stars0 ratingsKaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Poojaikku Vantha Malare Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Theivam Thantha Poove Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Kangalin Jalangal Rating: 5 out of 5 stars5/5
Related to Ithayam Oru Kovil
Related ebooks
Thisaimaari Paayum Nathi Rating: 0 out of 5 stars0 ratingsYaar Antha Nilavu Rating: 0 out of 5 stars0 ratingsUravugal Thodarkathai Rating: 5 out of 5 stars5/5Vizhigal Ezhuthiya Kavithai Rating: 0 out of 5 stars0 ratingsIthazhoram Varalama Rating: 0 out of 5 stars0 ratingsIndru Muthal Aanantham... Rating: 0 out of 5 stars0 ratingsIthayathil Nee Rating: 5 out of 5 stars5/5Kaadhal Solla Vaaraayo Rating: 0 out of 5 stars0 ratingsVaasal Illatha Veedu Rating: 0 out of 5 stars0 ratingsPon Nilaavil En Kanaave Rating: 0 out of 5 stars0 ratingsMegamaai Vanthu Pogiren Rating: 5 out of 5 stars5/5Malarukku Thendral Pagaiyaanaal Rating: 0 out of 5 stars0 ratingsKalyana Sathurangam Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Nathiyilla Odam Rating: 0 out of 5 stars0 ratingsUravu Pookkal Rating: 5 out of 5 stars5/5En Vasam Naanillai Rating: 0 out of 5 stars0 ratingsEnnennavo En Nenjile... Rating: 0 out of 5 stars0 ratingsOruvar Manathil Oruvaradi Rating: 0 out of 5 stars0 ratingsOndru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsThoorathu Nilavu Rating: 4 out of 5 stars4/5Gnanam Piranthathu Rating: 0 out of 5 stars0 ratingsAnbu Malarkal Rating: 5 out of 5 stars5/5Paarvai Ondre Pothume... Rating: 3 out of 5 stars3/5Uravu Sonnavan Rating: 0 out of 5 stars0 ratingsPasumai Niraintha Ninaivugal Rating: 5 out of 5 stars5/5Aahaya Malargal Rating: 0 out of 5 stars0 ratingsNaan Unnodu Than Rating: 0 out of 5 stars0 ratingsUn Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsMalarntha Vizhigal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ithayam Oru Kovil
3 ratings0 reviews
Book preview
Ithayam Oru Kovil - Parimala Rajendran
19
1
திருமலைராயன் பட்டினம். பாரதியார் தெருவில், மூன்றாம் நம்பர் ஓட்டுவீடு.
திருமணமான நாள் முதல் அந்த வீட்டில்தான் வாழ்ந்து வருகிறார் பாலசுப்ரமணியம். தமிழ் வாத்தியாராக இருந்து ரிடையர்ட் ஆன பின்பும், அவர் வாழ்க்கை அங்கேயே தொடருகிறது.
தமிழ் ஐயா வீடு என்றால் அந்த ஊரில் எல்லோருக்கும் தெரியும்.
பசுமை எழில் கொஞ்சும் ஊர். சங்ககாலத்திலிருந்தே இந்த ஊர் செழுமையில் மேம்பட்டு உள்ளது.
வயலெல்லாம் நெற்கதிர்கள். குளங்களில் தாமரைகள். கோயில்களில் அருள்வெள்ளம். தெருவெல்லாம் சோற்று மணம் என்று தன் ஊரின் சிறப்பை நினைத்து மகிழ்ந்தவர் பாலன்.
இன்று அதில் பாதி அளவு இல்லாவிட்டாலும், அருள்தரும் ஆயிரம் காளியம்மன் வீற்றிருக்கும் ஊர் என்ற பெருமையுடன் தலை நிமிர்ந்து நிற்கிறது திருமலைராயன்பட்டினம்.
மகன் ராஜாராமனும் காரைக்காலில், ஒரு அப்பள கம்பெனியில் சூப்பர்வைசராக இருப்பதால் ஊர் மாற்றம் என்பது இல்லாமல் போய்விட்டது.
மனைவி அமிர்தம். அவர் மனதை புரிந்து வாழ்ந்தவர். மகன் ராஜாராமன். மகள் விமலா. அளவான குடும்பம். ஆசைகள், எதிர்பார்ப்புகள் இல்லாமல் கணவன், மனைவி இருவருமே இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழப் பழகியவர்கள். மகன், மகளுக்கு திருமணம் முடித்து, பேரன், பேத்தியை பார்த்ததுடன், தன் கடமை முடிந்தது போல் அமிர்தம் மேலுலகம் போய்விட,
அறுபதை தொடும் வயதில் மகனின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார் பாலசுப்ரமணியம்.
மனைவியின் பிரிவு, மனதில் தாங்க முடியாத துயரத்தை ஏற்படுத்தினாலும், இதுதான் வாழ்க்கை என்ற நியதியைஏற்றுக்கொண்டு வாழ்ந்தார்.
பாலன் ஐயா, அம்மாவுக்கு இளைப்பு நோய் ஜாஸ்தியா இருக்கு. நுரையீரல் வீக்கம் இருக்கு. மருந்து, மாத்திரை கொடுங்க. இருக்கும் வரை நல்லபடியா பார்த்துக்குங்க.
டாக்டரின் வார்த்தைகள்.
படுக்கையிலிருக்கும் மனைவியை பிரிய மனம் இல்லாமல் இருபத்திநாலு மணி நேரமும் அவள் அருகிலேயே இருந்தார்.
கணவரின் கை பிடித்தவள், திக்கி, திணறி வார்த்தைகள் தடுமாற பேசுகிறாள்.
கஷ்டமா இருக்குங்க. உங்களை தனியா விட்டுட்டு போகபோறேன். ஒரு குழந்தையாக உங்களை பார்த்துக்கிட்டேன்
.
அன்போடு பேசும் அமிர்தத்தை விழிநீர் நிறைய பார்க்கிறார்.
உடலில் சுருக்கங்கள் வரலாம். பார்வையில் தடுமாற்றம் வரலாம்.
தோற்றத்தில் மாற்றங்கள் வரலாம். வயதின் எண்ணிக்கை கூடிக்கொண்டு போகலாம்
உன்மேல் நான் கொண்ட அன்பு மட்டும் என்றும் இளமையாக... பசுமை மாறாமல்...
என்னம்மா இது... ஏன் இப்படி பரிதவிக்கிறே... என்னைப்பற்றி கவலைபடாதே அமிர்தம்
எப்படிங்க... முடியும்
"நீயில்லாத வாழ்க்கையை நான் வாழணும்னு அந்த கடவுள் எழுதி வச்சிருந்தா... அதை யாரால் மாற்றமுடியும்
உன் கைபிடிச்சு சொல்றேன். இந்த குடும்பத்தில் எல்லாத்தையும் அனுசரித்து வாழ்ந்து... என் காலம் முடியும்போது... நல்லபடியா வந்து சேர்வேன். நீ நிம்மதியா இரு அமிர்தம்."
வாழ்க்கையை நதியோட்டம் போல, அதன் போக்கில் வாழ பழகி கொண்டார்.
எட்டாவது படிக்கும் பேரன் ஆதித்தியா தான், சோர்ந்த மனதுக்கு புத்துயிர் கொடுத்து கொண்டிருந்தான்.
அமிர்தம் அவரை பிரிந்து ஒரு வருஷம் ஆகிவிட்டது.
பனி விலகாத விடியற்காலை பொழுது.
தெருவில் நடமாட்டம் இல்லை.
மகன் ராஜாராமனுக்கு எழுந்தவுடன் காபி குடிக்க வேண்டும். தெருவில் இறங்கி பால் வாங்க கூடையுடன் நடந்தார் பாலன். அவர் போவதற்குள் மருமகள் மஞ்சு எழுந்து விடுவாள்.
பேரனை அவர் போய்தான் எழுப்ப வேண்டும்.
தெரு முனையில் இருந்த பிள்ளையார் கோவிலில் குருக்கள் முதல் நாள் அலங்காரத்தை களைந்து, பிள்ளையாரை குளிப்பாட்ட தயாராகிக் கொண்டிருந்தார்.
செருப்பை அவிழ்த்தவர், கைகூப்பி நின்ற இடத்தில் வினாயகரை கும்பிட்டார்.
முன்னவனே! யானை முகத்தவனே! முத்தி நலம் சொன்னவனே! தூய்மை சுகத்தவனே! மன்னவனே! சிற்பரனே! ஐங்கரனே! செஞ்சடையஞ் சேகரனே! தற்பரனே! நின்றாள் சரண்! வள்ளலாரின் பாடலை வாய் முணுமுணுத்தது.
மூடியிருந்த கதவை திறந்து வாசலுக்கு வந்தான் ராஜாராமன்.
என்னங்க மாமா வந்தாச்சா
அடுப்படியிலிருந்து குரல் தந்தாள் மஞ்சு.
ஒரு கையில் வேட்டியின் நுனியை தூக்கி பிடித்தபடி, கூடையுடன் வருபவரை பார்த்தான்.
வந்துட்டே இருக்காரு
கையிலிருந்த செய்திதாளை மகனிடம் கொடுத்தவர், கூடையுடன் உள்ளே வந்தார்.
"இந்தாம்மா... இன்னைக்கு பால்வேன் கொஞ்சம் லேட்டா வந்துச்சு. தாமதத்திற்கான காரணத்தை சொன்னவராக கூடையை மருகளிடம் கொடுத்து, பின்புறம் சென்று கால் அலம்பினார்.
குளிருக்கு இதமாக தலைவரை போர்வையால் மூடி படுத்திருக்கும் பேரனை பார்க்குபோது, மனதில் பரிவு ஏற்பட,
ஆதி... ஆதிகண்ணா எழுந்திருப்பா. மேக்ஸ்ஹோம்ஒர்க் இருக்கு. செய்யணும்னு சொன்னியே
மெல்ல தட்டி எழுப்பினார்.
போர்வையை உதறி, கண் திறந்தவன்.
அருகில் இருக்கும் தாத்தாவை பார்த்து,
குட்மார்னிங் தாத்தா
இனிய காலை வணக்கம் கண்ணா.
புன்முறுவல் செய்ய,
ம்... தமிழ் வாத்தியார்னு அடிக்கடி ஞாபகப்படுத்தறீங்க.
எழுந்து செல்ல,
புன்னகை மாறாமல்,
பேரன் படுத்த பாயை சுருட்டி, போர்வையை மடித்து அதனிடத்தில் வைத்தார்.
காபி கலந்தாச்சு
மஞ்சுவின் குரல் அவருக்காகத்தான்.
அடுப்படிக்கு சென்றவர், மேடை மீதிருந்த காபி டம்ளரை எடுத்துக்கொண்டு கூடத்தில் கையில் காபியும், பேப்பருமாக உட்கார்ந்திருக்கும் மகனை கடந்து, வாசல்படியில் வந்து உட்கார்ந்தார்.
குளிர்ந்த காற்று, தளர்ந்த உடலை நடுங்க வைத்தாலும், அந்த சூழலை உள்வாங்கியபடி, காப்பியை அருந்த ஆரம்பித்தார்.
உள்ளே ராஜாராம் யாருடனோ செல்போனில் பேசுவது கேட்க,
அவன் பேச்சிலிருந்தே பேசுவது விமலாதான் என்பது அவருக்கு புரிந்தது.
சரி விமலா... எட்டு மணிக்கு பஸ்ஸிளை... வரட்டும். சரி வச்சுடறேன்
உள்ளே வருகிறார். அதற்குள் மஞ்சுவும் வர,
யாரு போனில். உங்க தங்கையா
ஆமாம், மஞ்சு. மாப்பிள்ளை எட்டுமணி பஸ்ஸில் வர்றாராம். பர்சேஸ் விஷயமா காரைக்காலில் யாரையோ பார்க்கணுமாம். நைட் பஸ்ஸுக்கு போயிடுவாராம்.
சேலத்தில் சின்னதாக டிபார்ட்மெண்ட் ஸ்டோர் வைத்து நடத்தி வரும் சுகுமாரன், இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வியாபார விஷயமாக காரைக்கால் வருவது வழக்கம்தான்.
"ஏன் இதை ராத்திரியே போன் பண்ணி சொல்லக் கூடாதா. நான் நமக்கு தானே இட்லி மாவு தீர்ந்துடுச்சு. இருக்கிற மாவில் கோதுமை மாவை கலந்து... கோதுமை தோசை செய்வோம்னு இருந்தேன்.
இப்ப இவருக்காக டிவன் தயார் பண்ணனும். ஆதிக்கும் உங்களுக்கும் சாப்பாடு கட்டணும். புரியாதவளாக இருக்காளே"
இப்ப என்ன... அவர் நம் வீட்டுக்கு வர்றது புதுசா. டிபன் சாப்பிட்டு போனாருன்னா... ராத்திரிதான் வருவாரு. ஏன் இப்படி அலுத்துக்கிறே. ஏதாவது செய் போ
"எல்லா வேலையும்