Ithayathil Nee
5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Vaazhkkai Azhaganathu Rating: 0 out of 5 stars0 ratingsKaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Oru Iniya Uthayam Rating: 5 out of 5 stars5/5Un Arukil Naan Rating: 4 out of 5 stars4/5Thendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5Anbin Sangamam Rating: 4 out of 5 stars4/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Paadu Nilaave Rating: 5 out of 5 stars5/5
Related to Ithayathil Nee
Related ebooks
Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Un Uyirai Naanirukka... Rating: 0 out of 5 stars0 ratingsPoove VenPoove Rating: 0 out of 5 stars0 ratingsVenpuraa Nesam Rating: 5 out of 5 stars5/5Nindru Kollum Rating: 4 out of 5 stars4/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Kana Kanden Thozhi Rating: 0 out of 5 stars0 ratingsManamagale Marumagale Vaaa Rating: 0 out of 5 stars0 ratingsEnnuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Maname Azhagu Rating: 0 out of 5 stars0 ratingsKann Pesum Vaarthaigal! Rating: 0 out of 5 stars0 ratingsNeeyindri Naanillai Rating: 5 out of 5 stars5/5Thalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsYenazhuthaai Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsMayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Vandhuvidu Vasavi.. Rating: 0 out of 5 stars0 ratingsPoojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Enna Vilai Azhage…? Rating: 5 out of 5 stars5/5Mupathu Naalum Nilavu Rating: 4 out of 5 stars4/5Anbulla Maanvizhiye Rating: 0 out of 5 stars0 ratingsKannalaney Rating: 0 out of 5 stars0 ratingsKannil Theriyum Vannapparavai Rating: 0 out of 5 stars0 ratingsPoo Maalaiyil Oru Poo Rating: 5 out of 5 stars5/5Oru Thirumanam Nichayikkapadugirathu Rating: 0 out of 5 stars0 ratingsNenjil Nindrai Kaaviyamai! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Idhayamellam Un Ninaivu Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Ithayathil Nee
3 ratings0 reviews
Book preview
Ithayathil Nee - Parimala Rajendran
21
1
கோடை வெய்யிலின் தாக்கம் அதிகமாகவே தெரிந்தது. ஃபேன் ஓடிக் கொண்டிருந்தாலும் பிரபு வியர்வையில் குளித்திருந்தான்,
தூக்கம் கலைந்து விட்டது. கட்டிலில் எழுந்து உட்கார்ந்தான். சுவற்றில் தொங்கும் கடிகாரத்தை பார்த்தான். மணி ஐந்து என்றது. எழுந்தான். கண்ணாடியில் முகம் பார்த்தான்.
அழகும், இளமையும் நிறைந்து நின்ற பிரபு அவனை பார்த்தான். வெளியே பேச்சுக் குரல் கேட்டது.
அம்மா, அப்பா எழுந்துவிட்டார்கள் போலிருக்கிறது. ரூம் கதவை திறந்து வெளியில் வந்தான்.
வாசற்படியில் கதவை திறந்து வைத்து உட்கார்ந்திருந்தார்கள்.
தூக்கம் வரலை பிரபு. புழுக்கம் அதிகமாக இருக்கு. அடுக்கடுக்காக வீடுகள், காற்றுப்புக இடமில்லை, கிராமத்தில் கயிற்று கட்டில் போட்டு, நிலவொளியில் தூங்கின எனக்கு... வெளிக்காற்று இல்லாம தூக்கம் வரலைப்பா.
கணபதி சொல்கிறார்.
ஆமாம் பிரபு. நாங்க நாலு மணிக்கே எழுந்தாச்சு. உனக்கும் சீக்கிரமே முழிப்பு வந்துடுச்சு போலிருக்கு.
சரிப்பா, நீ போய் முகம் அலம்பிட்டு வா. எல்லாருக்கும் காபி போட்டு எடுத்துட்டு வரேன்.
பார்வதி கையை ஊன்றி எழ...
நீ உட்காரும்மா... நானே காபி கலந்து எடுத்துட்டு வரேன்.
என்னப்பா இது... நான் இருக்கும்போது நீ ஏன் சிரமப்படணும்.
நீங்க இப்ப என் கெஸ்ட். இரண்டு நாள் என்னோடு இருக்கப் போறீங்க. கிராமத்தில்தான் ஏதாவது ஒரு வேலை இருந்துட்டே இருக்கும். இங்கே ரெஸ்ட் எடுங்க. சமையலும் நான்தான் செய்யப் போறேன்.
ஹாஸ்பிடல் போகலையா பிரபு.
இரண்டு நாள் லீவு போட்டிருக்கேன்பா. வேலு மாமா பேசினாரா?
"ம்... நாளைக்கு பத்து மணிக்கு நாம் வர்றதாக பெண் வீட்டிற்கு தகவல் சொல்லிட்டாராம். நீங்க போய் பார்த்துட்டு வாங்க. மத்த விஷயங்கள் அப்புறமாக பேசிக்கலாம்னு சொன்னாரு.
சரிப்பா...
திரும்பியவனை கூப்பிட்டார்.
பிரபு...
என்னப்பா?
இந்த இடம் நமக்கு சரியா வருமா? எனக்கு யோசனையாகவே இருக்குப்பா.
நீங்க பையனை வச்சிருக்கீங்க. பெண்ணை பெற்றவர், நம்மைதேடி வர்றாரு. இதில் நீங்க யோசனை பண்ண என்னப்பா இருக்கு?
"நம்ப தகுதிக்கு மீறிய இடம்பா. கோடீஸ்வரர். ரம்யா ஜூவல்லரின்னு கடல் மாதிரி அவ்வளவு பெரிய நகைக்கடை, அதுக்கு ஒரே வாரிசு அந்த பெண் ரம்யா. நம்பகிட்டே என்ன இருக்கு சொல்லு. கிராமத்தில் கொஞ்சம் விவசாய நிலம். சின்னதா ஓட்டு வீடு, அவ்வளவு தான். ஆனா நீ டாக்டருக்கு படிச்சிருக்கே. பார்க்க லட்சணமாக இருக்கே... இதுதாம்பா நம்ப தகுதி.
ஒரு ஆண் மகனுக்கு இந்த தகுதி போதும்பா. உங்க மகன் டாக்டர். புகழ்பெற்ற ஹாஸ்பிடலில் பெரிய ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்கிட்டே அஸிஸ்டெண்டா இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி பார்க்கவும் அழகாக இருக்கேன். அப்புறம் என்னப்பா?
இருந்தாலும் அளவுக்கு மீறி ஆசைப்பட்டு, நம்ப நிம்மதியை தொலைச்சுடக் கூடாது இல்லையா?
வேலு சொன்னபோதே எனக்கு அவ்வளவாக இஷ்டமில்லை. உனக்காகத்தான் புறப்பட்டு வந்தேன். அவங்களோடு ஒப்பிடும் போது நாம் ரொம்ப சாதாரணமானவங்க. பணக்கார வீட்டுப் பெண் எந்த அளவுக்கு நம் குடும்பத்தோடு ஒத்து வருவர் தெரியாது. கல்யாணங்கிறது ஆயிரம் காலத்துப் பயிர். நாளைக்கு பணத்துக்கு ஆசைப்பட்டு, உன் நிம்மதி பறி போயிடக்கூடாது பிரபு.
இப்ப என்னதான்பா சொல்றீங்க?
ஒத்து வராத இடத்தில் எதுக்கு சம்பந்தம் பேசணும்னு நினைக்கிறேன். திண்டுக்கல்லில் நம்ப சொக்குவின் உறவு பெண் படிச்சவ, அழகானவ, நம்ப தகுதிக்கு ஏற்ற வரன். அவளைதான் உனக்கு பேசி முடிக்கணும்னு நானும், அம்மாவும் நினைச்சோம். உன் விருப்பத்தை தட்ட முடியாமல்தான் புறப்பட்டு வந்தோம்.
இருங்கப்பா வரேன்.
உள்ளே போகிறான். ப்ரிஜ்ஜிலிருந்த பாலை எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்சியவன், பில்டரிலிருந்து டிகாஷனை அளவாக ஊற்றி, சீனி போட்டு நுரைப் பொங்க ஆற்றி, மூன்று டம்ளர்களில் ஊற்று கிறான். எடுத்துக்குங்க...
அவர்கள் முன் நீட்டுகிறான்...
காபி, நல்லாவே இருக்கு பிரபு...
புன்னகையுடன் மகனை பார்க்கிறாள் பார்வதி.
"இன்னைக்கு சிக்கன் பிரியாணி செய்யறேன் அதையும் சாப்பிட்டு பாருங்க...
காபியை குடித்தபடி, அப்பாவின் அருகில் வந்தவன்...
நீங்க சொன்ன ரீதியில் நானும் யோசனை பண்ணிட்டேன்பா. நீங்க பயப்படற மாதிரி எதுவுமில்லை. சொத்தோடு கோடீஸ்வர சம்பந்தம் வர்ணுதுண்ணா நாம் ஏன்ப்பா வேண்டாம்னு சொல்லணும். போவோம், பார்ப்போம், நம்ப மனசுக்கு பிடிச்சிருந்தா சம்மதம் சொல்வோம். பணக்கார திமிரை காட்டினா... நமக்கு ஒத்து வராதுன்னு வந்துடுவோம். என்னப்பா சொல்றீங்க...
ஆமாங்க, பிரபு சொல்றதும் சரிதான். ஏன் பார்க்காமலேயே அவங்களை பத்தி எதுவும் தெரிஞ்சுக்காமலேயே வேண்டாம்னு தட்டிக் கழிக்கணும். வலிய வர்ற சீதேவியை வேண்டாம்னு சொல்ல வேண்டாம். நாளைக்கு நம்ப மகன் சீரும், சிறப்புமாக வாழ்ந்தா நமக்கு சந்தோஷம்தானே.
போய் பார்த்து மனசுக்கு பிடிச்சிருந்தா பேசி முடிப்போம். இல்லாட்டி வந்துடுவோம்.
பார்வதி தீர்மானமாக சொல்கிறாள்.
2
சினிமாவிலும், போட்டோவிலும் பார்வதி பிரமித்த வீட்டின் அலங்கார அமைப்பு, அவன் கண் முன்னே பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
ஆள் உயர சோபாக்கள், அவர்களை உள்வாங்குகிறது. எதிரில் தங்க பிரேம் போட்ட கண்ணாடி அணிந்து உட்கார்ந்திருப்பவரை பார்க்கிறான் பிரபு.
நாங்க ரெண்டு பேரும் திண்டுக்கல் கிட்டே ஒரு கிராமத்தில் இருக்கோம். மலை சார்ந்த பகுதி. பசுமைக்கு குறைவில்லை. விவசாயத்தை பார்த்துட்டு இருக்கேன். மகனை