Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirin Uyire
Uyirin Uyire
Uyirin Uyire
Ebook90 pages41 minutes

Uyirin Uyire

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Uyirin Uyire

Read more from Parimala Rajendran

Related to Uyirin Uyire

Related ebooks

Reviews for Uyirin Uyire

Rating: 4.166666666666667 out of 5 stars
4/5

6 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirin Uyire - Parimala Rajendran

    18

    1

    புரோகிதர்கள் நான்கு பேர், உட்கார்ந்து மந்திரம் ஓத, அவர்கள் முன் தலைவாழை இலை விரிக்கப்பட்டு, அதில் அரிசி பரப்பி கலசம் இருக்க, ராஜதுரை... அமர்ந்திருந்தார்.

    மனைவிக்கு முதலாம் வருட திவசம், மகன்கள் சூரியகுமார், சந்திரகுமார் அவர் அருகில் அமர்ந்திருக்க.

    மருமகள்கள். பூர்விகா, உதயா பின்னால் நின்றிருந்தார்கள். ராஜதுரையின் கண்கள் எதிரில் மாட்டப்பட்டிருந்த. சரோஜாவின் படத்தை பார்த்தது.

    சரோ... நீ என்னை விட்டு போய் ஒரு வருஷம் ஓடிவிட்டது. நீ இல்லாமல் உன் ராஜா இந்த உலகத்தில் வாழ்ந்துட்டு இருக்கேன்.’’ வயது அறுபதை நெருங்கினாலும், மனைவியின் பிரிவு... அவர் உடலையும், உள்ளத்தையும் தளர்வடைய செய்தது.

    கம்பீரமாக காட்சியளித்தவர், ஒரே வருடத்தில் முற்றிலும் மாறி போய், மிகவும் வயதானவராக தோற்றம் அளித்தார்.

    எள்ளும் தண்ணீ ரும் இரைக்கப்பட்டு.... திதி முடிய... காய்கறி, வேஷ்டி, துண்டு, தட்சணை என பெற்றுக்கொண்ட புரோகிதர்கள் விடைபெற...

    அப்பா... காலையிலிருந்து பச்சை தண்ணி கூட குடிக்காம இருக்கீங்க... காபி கொண்டு வர சொல்லவா

    சூர்யா கேட்க,

    வேண்டாம்பா... சமையல் நடந்துட்டு இருக்கு. அம்மாவுக்கு இலை போட்டு சாமி கும்பிட்டு சாப்பிடலாம்.

    பூர்விகாவும், உதயாவும் அடுப்படி நோக்கி நகர்ந்தார்கள். மகள் சுமதியின் துணையோடு, மீனாட்சி சமையலில் ஈடுபட்டிருக்க,

    என்ன மீனாட்சியம்மா... சமையல் முடிஞ்சாச்சா. இலை போட்டு படைக்கலாமா

    பூர்வீகா கேட்க,

    இதோ பத்து நிமிஷம்... அம்மாவுக்கு வாழைப்பூ வடை ரொம்ப பிடிக்கும். இப்பதான் வடைக்கு அரைச்சேன். எண்ணெயில் போட்டு எடுத்தா... சாமி கும்பிடலாம்.

    அத்தைக்கு என்னென்ன பிடிக்கும்னு அவங்களுக்கு தானே தெரியும். அதான் மாமா சமையல் பொறுப்பை மீனாட்சி பார்த்துப்பான்னு ஒரு வரியில் சொல்லிட்டாரு.

    பூர்வீகா... உதயாவிடம் சொல்ல,

    உதயா... மீனாட்சியின் காதில் விழாதவாறு கிசுகிசுத்த குரலில்,

    என்ன இருந்தாலும் சமையல்காரியா, என்ன சமையல்னு தீர்மானிக்கணும். அத்தைக்கு வருஷ திதின்னு நாம் புறப்பட்டு வந்து இரண்டு நாளாச்சு. மாமா எதையாவது நம்ம கிட்டே சொன்னாரா? எல்லாம் மீனாட்சிதான்.

    "அட விடு உதயா... நாளைக்கு காலையில் நாம் ஓட போறோம். யார் எப்படி போனா... நமக்கென்ன?

    அப்பாவை கூட்டிட்டு போவோம்னு... பிள்ளைகள் அடம்பிடிக்காமல் இருந்தா சரி..."

    சரோஜாவின் படத்திற்கு முன் படையல் போடப்பட்டு, சாம்பிராணி காட்டிய பிறகு,

    எல்லாரையும் உட்கார வைத்து மகள் சுமதியுடன் பந்தி பரிமாறினாள் மீனாட்சி.

    "மீனாட்சியம்மா. இன்னைக்கு சமையல் எல்லாமே அம்மாவுக்கு பிடித்ததாய் இருக்கு.

    அவரைக்காய் சாம்பார், கத்திரிக்காய் வறுவல், வாழைப்பூ வடை, மாங்காய் பச்சடி, பைனாப்பிள் ரசம் எல்லாமே நல்லா இருக்கு."

    சூரியகுமார் சொல்ல,

    "எத்தனை வருஷம் இந்த வீட்டில் இருக்கேன். அம்மாவுக்கு என்னென்ன பிடிக்கும்... பிடிக்காதுன்னு எல்லாமே தெரியும் தம்பி.

    வயித்திலே இதோ நிற்கிறாளே இவளை சுமந்துகிட்டு புருஷன். இறந்து, நிராதரவாக இந்த வீட்டு வாசல்படியில் ஒரு வாய் சோறு கேட்டு வந்து நின்னவளை,

    இரக்கப்பட்டு வீட்டுக்குள் அனுமதிச்சவங்க அந்த மகராசி.

    அப்ப உங்களுக்கு எட்டு வயசு, சின்ன தம்பிக்கு ஆறு வயசு, அன்னையிலிருந்து, இப்ப வரை இந்த வீடுதான் கதின்னு கிடக்கிறேன்.

    ஒரு சகோதரியாய், எனக்கு டெலிவரி பார்த்து, என் மகளையும் சொந்தமகளாக நேசிச்சு இந்த பெருந்தன்மை யாருக்கு வரும். கடவுள் நல்லவங்களை சீக்கிரமே தன் கிட்டே அழைச்சுக்கிறாரு.

    லட்சுமிகரமாக வளைய வந்த அம்மா இல்லாத வீடு களையிழந்து கிடக்கு.

    மனசெல்லாம் பாரமாக இருக்கு தம்பி" கண்களில் கண்ணீர் ததும்ப மீனாட்சி சொல்ல,

    தலைகுனிந்து சாப்பிட்ட ராஜதுரையின் கண்களிலிருந்து விழுந்த கண்ணீர், இலையில் பட்டு தெறிக்கிறது.

    * * * * *

    நான்கு வயது மகன் வருணை தூங்க வைத்தவள் கட்டிலில் சாய்ந்து படுத்திருக்கும் கணவனிடம் வருகிறாள்.

    நாளை காலையில் ஊருக்கு கிளம்பணும் அப்பா கிட்டே சொல்லிட்டிங்களா?.

    இன்னும் இல்லை பூர்வீகா. சொல்லணும் அப்பா தனியா இருக்கிறதை பார்க்க மனசுக்கு சங்கடமா இருக்கு. அம்மா இறந்து இந்த ஒரு வருஷத்தில் ரொம்பவும் தளர்ந்து போயிட்டாரு

    அவன் குரலில் வருத்தம் தெரிகிறது.

    போனவங்களை நினைச்சுட்டே இருந்தா இப்படித்தான். என்ன செய்யறது. நம்ப கையில் எதுவும் இல்லையே. இந்தம்மா... மீனாட்சி இன்னும் வீட்டோடு இருந்துக்கிட்டு, போனவங்களை ஞாபகப்படுத்தி, மாமாவை சங்கடப்படுத்திட்டே இருக்காங்க. அவங்களை வீட்டை விட்டு அனுப்பினால் என்ன?

    "நீ புரிஞ்சுதான் பேசறியா பூர்விகா. வீட்டிலே ஒருத்தங்க மாதிரி பதினெட்டு

    Enjoying the preview?
    Page 1 of 1