Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uravu Pookkal
Uravu Pookkal
Uravu Pookkal
Ebook105 pages49 minutes

Uravu Pookkal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465896
Uravu Pookkal

Read more from Parimala Rajendran

Related to Uravu Pookkal

Related ebooks

Reviews for Uravu Pookkal

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uravu Pookkal - Parimala Rajendran

    26

    1

    ஒரு சின்ன வீடு தாங்காமல் உறவினர் கூட்டம் அதிகமாக இருந்தது.

    ஜானகி முகம் நிறைய புன்சிரிப்பாய் வளைய வந்தாள்.

    கல்யாண பொண்ணு சுறுசுறுப்பாக தான் வேலை செய்யறே. அழகு ஒரு படி கூடின மாதிரி இருக்கு

    தூரத்து உறவு பாட்டி கேலி செய்ய அவளை பார்த்து ரசித்தபடி வரிசை வைக்க தாம்பாளங்களை எடுத்து மண்டபத்துக்கு போகும் சாமான்களோடு வைத்தாள்.

    ஜானகி, உன்னுடைய துணிமணிகள் இருக்கிற பெட்டியை ஞாபகமாக எடுத்து வை. மறந்துட போற

    கூட்டத்தில் ஒருவர் சொல்ல,

    எல்லாம் எடுத்து வச்சாச்சு. ஆமாம் சுகந்தி எங்கே காணும்

    உள்ளே ரகுவுக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கா

    நீ நல்ல புடவையா கட்டிக்க, சாயிந்திரம் மண்டபம் போகும் போது பட்டுப் புடவை கட்டிக்கலாம்

    எதுக்கு, இதுவே நல்லாதான் இருக்கு.

    இருக்கட்டும் கல்யாண பெண் வித்தியாசம் தெரிய வேண்டாமா. போய் கழுத்திலே அட்டிகை எடுத்து போடு. புடவை கட்டிக்க, போ ஜானகி.

    உள்ளே சென்றவள், விரல் அகல ஜரிகை போட்ட, ஆழந்த மெரூன் நிற பட்டு சேலையை கட்டி, பூ வைத்து, பாட்டியம்மா சொன்னது போல் அட்டிகையையும் அணிந்து கண்ணாடியில் பார்த்தாள்.

    சிவந்த நிறமும், கூரான மூக்கும், நீல கண்களும், நெற்றியில் மங்களகரமாக வைத்திருந்த குங்குமமும், இப்போது அவள் செய்துக் கொண்ட ஒப்பனையும் சேர்ந்து, அவள் அழகை மேலும் மெருகூட்டியது.

    கையில் ரகுவை தூக்கிக் கொண்டு, கதவை திறந்துக் கொண்டு உள்ளே வந்து சுகந்தி,

    அழகோவியமாக நிற்கும் ஜானகியை பார்த்து, அம்மா இந்த அலங்காரத்தில் உன் வயசு பத்து குறைஞ்சு போச்சு. எனக்கு அக்கா மாதிரி தெரியறே.

    போடி, நீயும் கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டியா

    ரகு இட்லி... கேசரி சாப்பிட்டியா கண்ணா

    பேரனை தூக்கி முத்தமிட்டாள்.

    என்னம்மா, அண்ணன் நந்துவை இன்னும் காணும். அம்மாவுக்கு அறுபது கல்யாணம். இருந்து நடத்த வேண்டிய பிள்ளை இன்னும் வரலை.

    அலுத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்தாள். பாவம்டி அவன், லீவு கிடைக்கலை என்ன செய்வான். விடியற்காலை புறப்பட்டிருக்கான். பாதி வழி வந்திருப்பான்.

    வரட்டும், வரட்டும், உன் மருமகள் இஷ்டம் தானே எல்லாம். அவ தான் முதல் நாள் போகலாம்னு சொல்லியிருப்பா.

    மகள் மேல் ஜானகிக்கு கோபம் எட்டிப் பார்த்தது.

    எதுக்கு சுகந்தி, உங்க அண்ணியை குறை சொல்ற, அவ ஸ்கூலுக்கு லீவ் போட்டு தான் கிளம்ப ரெடியா இருந்திருக்கா. நந்துவுக்கு தான் லீவு போட முடியலை. கல்யாணம் முடிஞ்சு இரண்டு நாள் இருப்பாங்க. அப்புறம் என்ன வா... வா... வந்த சொந்தகாரங்க வெளியே இருக்காங்க. நாம உள்ளே உட்கார்ந்திருக்கோம். வா போகலாம்.

    சுகந்தி உங்கம்மாவை அப்பாகிட்டே கூட்டிட்டு போ, மாப்பிள்ளை, பெண்ணை பார்த்து என்ன சொல்றான்னு பார்ப்போம்.

    என்னடியம்மா இது, எல்லாரும் இப்படி கேலி, கிண்டலும் பண்றீங்க. கேட்க ஆலில்லைன்னு நினைச்சிங்களா. என் பிள்ளை வந்துக்கிட்டே இருக்கான். வரட்டும் சொல்றேன்.

    என்ன ஒரே கலாட்டா, பொம்பளைங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்துட்டிங்க, யாரை பத்தி பேச்சு.

    கேட்டபடி கல்யாணராமனின் நெருங்கிய நண்பர் சபேசன் அங்கு வர,

    என்னை தான் அண்ணே கேலி பண்றாங்க. உங்க நண்பர் எங்கே காணும்.

    வெளியே மகன் வரானான்னு பார்த்துட்டு, மாப்பிள்ளையோடு பேசிட்டு இருக்கான்.

    அக்கா பேத்தி, ஜானகியின் அருகில் வந்து,

    பாட்டி வாங்க தாத்தாகிட்டே போகலாம்.

    கையை பிடித்து இழுத்தபடி,

    கல்யாண ராமனுக்கும், கண்ணான ஜானகிக்கும் காதல் வந்த நேரம் என்னவோ

    ராகத்துடன் பாட, அங்கிருப்பவர்கள் கொல்லென்று சிரிக்க,

    இரண்டு பேருக்கும் பெயர் பொருத்தம் பிரமாதம். என்னைக்கும் இதே சந்தோஷத்துடன் நிறைவா இருக்கட்டும்.

    மூதாட்டி சொல்ல,

    கார் ஹார்ன் கேட்க,

    நந்து வந்தாச்சு ஜானகி பரபரப்பாக வாசலுக்கு செல்ல, உள்ளே இருந்த உறவு கூட்டம் அவளை பின் தொடர்கிறது.

    2

    டிரைவர் சீட்டிலிருந்து நந்து இறங்க, அருகில் உட்கார்ந்திருந்த ஸ்வேதா, குழந்தை பரணியை தூக்கியபடி புன்னகை பூக்க இறங்கி வருகிறாள்.

    வாங்க வாங்க, எல்லாரும் வந்தாச்சு, நீங்க தான் லேட்.

    லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டாங்க இல்லையன்னா பெரியம்மா பெண் கேட்க, ‘கல்யாணராமன் ஸ்வேதாவின் கைகளிலிருந்து பேரனை வாங்கிக் கொள்கிறார்.

    பரணி கண்ணா, தாத்தா, பாட்டி கல்யாணம் பார்க்க வந்தியா... என்னம்மா ஸ்வேதா பல்லெல்லாம் வரிசையா முளைச்சாச்சு போலிருக்கு.

    ஆமாம் மாமா. வரவர ரொம்ப வால்தனம் ஜாஸ்தியாயிடுச்சு.

    அப்புறம் என் பேரன் மக்குன்னு நினைச்சியா

    ஜானகி பரணியை தூக்க,

    என்னப்பா எப்ப மண்டபம் போகணும்.

    மதியம் மூணு மணிக்கு மேல்

    என்ன நந்து, வந்ததிலிருந்து என்னை கண்டுக்கவே இல்லை.

    கல்யாணராமனின் அருகில் நின்ற பாபு கேட்க,

    ஸாரி மாமா கூட்டத்தில் எல்லாரையும் பார்த்தேன். நீங்க... எப்படி இருக்கீங்க... சுகந்தி எங்கே... ரகு குட்டி எப்படியிருக்கான்.

    அப்போதுதான் கூட்டத்தில் சுகந்தி இல்லாததை கவனித்த ஸ்வேதா.

    சுகந்தி எங்கே அத்தை.

    இங்கே தானே இவ்வளவு நேரம் இருந்தா உள்ளே போயிருப்பா

    சரி, நான் போய் பார்க்கிறேன்.

    உள் அறையில் தூளியில் ரகுவை போட்டு ஆட்டிக் கொண்டிருந்த

    Enjoying the preview?
    Page 1 of 1