Thapicha Pothum!
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsThurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Irumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsBathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Kodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsAmma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Kaanikkai Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Iruttin Nizhalgal…! Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsUnakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5
Related to Thapicha Pothum!
Related ebooks
Nee Eppa Varuvey? Rating: 0 out of 5 stars0 ratingsPore Megangal! Rating: 0 out of 5 stars0 ratingsParamapatha Paampugal! Rating: 0 out of 5 stars0 ratingsNyabagam Irukkiratha Kanne? Rating: 0 out of 5 stars0 ratingsKalyanam! Kacheri! Rating: 0 out of 5 stars0 ratingsநதிமூலம் Rating: 0 out of 5 stars0 ratingsAvasara Vaarisu Rating: 0 out of 5 stars0 ratingsNetruvarai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsKannale Pesi Pesi..! Rating: 0 out of 5 stars0 ratingsPuli Vaal Rating: 0 out of 5 stars0 ratingsநதிக்கரையோரம்! Rating: 0 out of 5 stars0 ratingsGayathri Manthiram Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Kiliye Kobama? Rating: 0 out of 5 stars0 ratingsபின்னர் அறிவிக்கப்படும்! Rating: 0 out of 5 stars0 ratingsIchai Kiligal Rating: 0 out of 5 stars0 ratingsNaathanar 2 Rating: 0 out of 5 stars0 ratingsIndru Paathi Naalai Meethi Rating: 0 out of 5 stars0 ratingsAthikaalai Aanantham Rating: 0 out of 5 stars0 ratingsKurai Ondrumillai Rating: 0 out of 5 stars0 ratingsJannalora Nila Rating: 0 out of 5 stars0 ratingsUyir Ilavasam Rating: 0 out of 5 stars0 ratingsMudichugal Rating: 0 out of 5 stars0 ratingsMela Satham! Rating: 0 out of 5 stars0 ratingsVaadagai Kanavu Rating: 4 out of 5 stars4/5தான் - தன் சுகம் Rating: 0 out of 5 stars0 ratingsDhrogam Puthithu! Rating: 0 out of 5 stars0 ratingsIthu Konjam Puthusu Rating: 1 out of 5 stars1/5Deivathin Theerpu Rating: 0 out of 5 stars0 ratingsAzhage vaa... Aruke vaa... Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Thapicha Pothum!
0 ratings0 reviews
Book preview
Thapicha Pothum! - Devibala
http://www.pustaka.co.in
தப்பிச்சா போதும்!
Thapicha Pothum!
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
காலை ஒன்பது மணிக்கே தரகர் வந்து விட்டார்! ஜானகி பள்ளிக் கூடத்துக்கு புறப்பட்டுக் கொண்டிருந்த நேரம்!
நீங்க ஸ்கூல்போற நேரத்துல நான் தொந்தரவு பண்ணிட்டேனா?
அதெல்லாம் இல்லை! ஒக்காருங்க!
உங்க பொண்ணுக்கு ஒரு நல்ல வரன் வந்திருக்கு! ஜாதகமும் பிரமாதமா பொருந்தியிருக்கு! அதை தரத்தான் வந்தேன்!
வெளியில் ஒரு கவரை எடுத்தார்!
"பையன் வெளிநாட்ல வேலை பெரிய உத்யோகம்! லட்சங்கள்ள சம்பளம்! அவனோட அப்பா, அம்மா எல்லாரும் இங்கே - வீடு சொந்த வீடு! ஒரு தம்பி! இவனும் வெளிநாட்ல! பணத்துக்கு பஞ்சமில்லை. பையன் இந்த மாசக் கடைசில லீவுல வர்றான்! ஒரு மாசம் இருப்பான்! கல்யாணத்தை முடிச்சு பொண்ணையும் கூட்டிட்டு போக ஆசைப்படறான்! இந்தாங்க அவனோட ஜாதகமும், போட்டோவும்!
ஜானகி வாங்கிப் பார்த்தாள்.
போட்டோவில் பையன் அழகாக இருந்தான்.
பேரு விக்ரம்! படிப்பு மற்ற விவரங்கள் ஜாதகத்துல இருக்கு! அவனோட மெயில் வெப்சைட் எல்லாமே இதுல இருக்கு! உங்க பொண்ணு சாட் பண்ணி பேசிக்கலாம்! அவங்க அப்பா, அம்மா லோக்கல் விலாசம் நம்பர் எல்லாம் இருக்கு! நீங்க உங்க வீட்டுக்காரர்கிட்ட கலந்து பேசிட்டு என்னைக் கூப்பிடுங்க!
சரிங்க!
தரகர் புறப்பட்டு விட்டார்!
அந்த விக்ரம் படத்தை மறுபடியும் பார்த்தாள் ஜானகி!
மதுவுக்கு பொருத்தமாகத்தான் இருந்தது!
சரி! சாயங்கலாம் வந்து பேசிக்கலாம்!
ஜானகி கதவைப் பூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்!
ஜானகி ஒரு அரசாங்க பள்ளிக் கூடத்தில் டீச்சர்! 12 ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியை! தவிர இருபது பேருக்கு மேல் தனியாக ட்யுஷனும் படிக்கிறார்கள்! எல்லாம் சேர்த்து ஜானகி மாதம் முப்பதாயிரம் வரை சம்பாதிப்பாள்! இன்னும் நாலு வருடங்கள் சர்வீஸ் உண்டு!
கணவர் சம்பத், தனியாரில் வேலை பார்த்து போன வருடம்தான் ரிடையர் ஆனார்!
மாதம் ஆறாயிரம் ரூபாய் பென்ஷன்.
மொத்தப் பணமாக வந்த ஒன்பது லட்சம் பேங்கில் இருக்கு!
மூத்த மகன் அருண் வங்கியில் உத்யோகம் - அவன் மனைவி சரண்யாவும் வங்கியில்தான்!
அவர்கள் உள்ளூரில் தனிக்குடித்தனம்!
கல்யாணம் முடிந்து 2 வருடங்கள்! காதல் கல்யாணம் தான்!
தனிக்குடித்தனம் அழைத்துச் சென்று விட்டாள்!
கூடவே மாமியார்!
பிள்ளையால் ஜானகிக்கு எந்த ஒரு லாபமும் இல்லை!
புருஷனும் தற்சமயம் அப்படித்தான்! சம்பாத்யம் இருந்த வரை சம்பத் சரியாகத்தான் இருந்தார்!
ரிடையர் ஆனதும், யார் அவர் மனசைக் கலைத்தார்களோ, என்ன செய்தார்களோ,
வரும் பென்ஷன் பணம் ஆறாயிரத்தில் சல்லிக்காசு தடுவதில்லை! ஜானகி டென்ஷனாகி விட்டாள்!
என்னங்க! நீங்க வேலைல இருக்கும் போது மாசம் இருபதாயிரம் கொண்டு வருவீங்க! குடும்பத்துல எந்த ஒரு பிரச்சனையும் இல்லை! இப்ப அந்தப் பணம் குறையுதில்லை?
ஜானகி! எனக்கு சம்பளம்தான் இருபதாயிரம்! பென்ஷன் வெறும் ஆயிறாயிரம்தான்!
இருக்கட்டும்! திடீர்னு நீங்க எதுவுமே தராம நிறுத்தினா, நான் ஒருத்தி சமாளிக்க வேண்டியிருக்கே!
ஒரு வருஷமா மது, மாசம் இருபத்தஞ்சாயிரம் கொண்டு வர்றா இல்லையா?
என்ன பேசறீங்க! அது இன்னொரு வீட்டுப் பொண்ணு! அதை நாம எதிர்பாக்கலாமா? அவ சம்பளப் பணத்தை நான் வீட்டுச் செலவுக்கு எடுக்கலை! அவளுக்கு நகை, மற்ற பொருட்கள்னு வாங்கி சேர்க்கறேன்! அருண் கல்யாணமாகி தனிக்குடித்தனம் போயாச்சு! அவனால பைசா, லாபமில்லை நீங்களும் இப்படி காலை வாரிவிட்டா, என் ஒருத்தி வருமானத்துல எப்படி சமாளிக்கறது?
புலம்பி விட்டாள்!
அவர் கவலையே படவில்லை!
மதுவுக்கு இப்பத்தானே 22. இன்னும் மூணு வருஷங்கள் கழிச்சு கல்யாணம் செய்! கொஞ்சம் பணம் சேர்த்துக்கலாமில்லையா?
வயசு கூடிப்போகாதா?
படிப்பும், நல்ல உத்யோகமும் இருக்கும் போது வயசு கூடினாத் தான் என்ன?
ஜானகி இதை ஒப்புக் கொள்ளவில்லை!
ஆரம்ப காலம் தொட்டே சம்பத்துக்கும் குடும்பப் பொறுப்பு இல்லை! அருணுக்கும் பற்றுதல் இல்லை!
குடும்பத்தில் எந்த ஒரு நெருக்கடி நிலை வந்தாலும் அவசரச் செலவு வந்தாலும் ஜானகிதான் பாடுபட்டாக வேண்டும்!
இது பழகிவிட்டது!
சகலத்திலும் கஞ்சத்தனம்!
தேவைக்குக் கூட எதையும் செய்யாத குணம்.
எதிலும் கலந்து கொள்ளாத முரட்டுத்தனம்!
தன் சுய பாதுகாப்பு ஒன்றுதான் முக்கியம்! மனிதர்கள் வேண்டும் என்ற எண்ணம் அறவே இல்லை!
அன்று மாலை ஏழு மணிக்கு அனைவரும் வீட்டில் கூடி விட்டார்கள்.
மது! இந்த போட்டோ உனக்குப் புடிச்சிருக்கா?
மது பார்த்தாள்!
விக்ரம் ஆண்மையுடன் கம்பீரமாக வசிகரமாக இருந்தான்!
ஜாதகம் நல்லா பொருந்தியிருக்காம்! லட்சங்கள்ள சம்பாத்தியம்! பெரிய படிப்பு. எல்லா தகுதிகளும் இருக்கு! பெத்தவங்க உள்ளூர்ல வசதியா வாழறாங்க! பேசலாமா?
சம்பத் பதிலே சொல்லவில்லை!
உங்களைத்தான்! எதுவும் பேசாம இருந்தா எப்படி?
உள்ளூர்ல எல்லா தகுதிகளும் உள்ள பசங்க இருக்கும் போது, எதுக்காக வெளிநாட்டு வரன்? இவலும் போகணுமில்லையா? மதுவை நெனச்சபடி பார்க்கக் கூட முடியாது!
சரிங்க! பொண்ணைப் பெத்துட்டா அப்படியெல்லாம் பாக்க முடியுமா? நல்ல வாழ்க்கைதானே முக்கியம்?
அது இங்கே கிடைக்காதா! இந்த வரன் வேண்டாம்!
ஜாதகம்னு கைக்கு வந்து அடுத்த கட்டத்துக்கு போகாம நீ தட்டிக் கழிக்கறது இது மூணாவது வரன்!
எனக்குப் பிடிக்கலை!
மது உனக்கு புடிச்சிருக்கா!
நீ என்ன சொன்னாலும், எனக்கு சம்மதம்மா!
அப்படீன்னா உள்ளூர்ல இருக்கற அவங்கப்பா, அம்மாகிட்ட பேசிடலாம்!
சம்பத் முகம் மாறிவிட்டது!
எழுந்து உள்ளே நடக்க,
ஏன் பேசாம போறீங்க?
நான் ரிடையர் ஆனவன்! செல்லாக் காசு! என் பேச்சுக்கு இந்த வீட்ல மதிப்பில்லை! அப்புறம் எதுக்கு நான் பேசணும்?
ஏன்பா அப்படி சொல்ற?
பின்ன என்னம்மா! நான் வேண்டாம்னு சொல்லியும் கேக்கலைனா, எதுக்கு நான் தலையிடணும்?
இதை மட்டும் வேண்டாம்னு நீங்க சொல்லலை! எந்த வரன் வந்தாலும் தட்டிக் கழிக்கறீங்க! அது நியாயமில்லை! வயசு கூடிப் போனா நாமதான் கஷ்டப் படணும்! பணத்துக்காக பெண்ணை வீட்ல வச்சுக்கறது தர்மமில்லை! இந்த வரனை நான் பேசத்தான் போறேன்!
பேசு! நீயே கல்யாணத்தை நடத்திக்கோ!
அப்பா பொறுப்பில்லாம இருந்தா, அம்மா நடத்தித் தானே ஆகணும்?
அப்படியா? நான் கல்யாணத்துக்கே வர வேண்டாமா!
அது உங்க இஷ்டம்! உங்க மகள் கல்யாணத்துக்கு நீங்களே வரலைனா, உங்களைத் தான் ஊர்ல காறித் துப்புவாங்க!
நான் வரலைனா, உனக்குத் தான் அசிங்கம்! கட்டின புருஷனை நாய் மாதிரி வச்சிருக்கானு பேசுவாங்க!
அய்யோ! நிறுத்தறீங்களா?
மது கூச்சலிட்டாள்! இருவரும் திரும்ப,
அசிங்கமில்லை? இப்படி நீங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டு எனக்கொரு கல்யாணத்தை நடத்த வேண்டாம்! விட்டுங்க!
ஆமாம் மது! கல்யாணம்னா என்ன? சந்தோஷமா நடத்தணும்! இதுல பிரச்சனை வருது! இந்த வரன் வேண்டாம்!
பாத்தியா மது? இதை தடுத்து நிறுத்தணும்! அதுக்கான வழியைத் தேடறார்!
அம்மா! நீதான் பேசாம இறேன்!
இல்லைடி! இனி அது முடியாது! இந்த 28 வருஷத்துல எல்லாத்துக்கும் அனுசரிச்சுப் போய், நான் பட்ட பாடு கொஞ்ச நஞ்சமில்லை இனியும் நான் தலையாட்டினா, உன் கழுத்துல தாலி ஏறாது! இனி நான் அடங்கறதா இல்லை!
"யாரும் இங்கே யாரையும் அடக்கி வைக்கலை! வாங்கற