Idhayathil Pootha Nila
By Devibala
()
About this ebook
Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Read more from Devibala
Thurathi Varum Dhurogam Rating: 4 out of 5 stars4/5Bathil Mariyathai Rating: 5 out of 5 stars5/5Mundhanai Pandhal Rating: 0 out of 5 stars0 ratingsTheeyodu Vilaiyadum Thendral! Rating: 0 out of 5 stars0 ratingsKanney Varuvaya? Rating: 5 out of 5 stars5/5Koottai Kalaikkatheenga Rating: 0 out of 5 stars0 ratingsEnakku Mattumthaan! Rating: 0 out of 5 stars0 ratingsVizhikul Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsKaanikkai Rating: 5 out of 5 stars5/5Amma Gondu…! Rating: 5 out of 5 stars5/5Panam, Penn, Pathavi! Rating: 0 out of 5 stars0 ratingsNaan Uppa? Sarkkaraiya? Rating: 0 out of 5 stars0 ratingsKaaladiyil Poomalai Rating: 0 out of 5 stars0 ratingsNenje Unnidam Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsInikkum Ilamai Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAthuvarai Poruthiru! Rating: 0 out of 5 stars0 ratingsUdaney Vaazha Vaa! Rating: 0 out of 5 stars0 ratingsIrumbu Changili Rating: 0 out of 5 stars0 ratingsMounamthan Pesiyatho Rating: 0 out of 5 stars0 ratingsKana Kanum Kangal Rating: 3 out of 5 stars3/5Unakku, Neethan Neethipathi! Rating: 0 out of 5 stars0 ratingsUnakkum Vazhvu Varum Rating: 0 out of 5 stars0 ratingsManithan Paathi! Mirugam Paathi! Rating: 0 out of 5 stars0 ratingsChakkalathi Rating: 0 out of 5 stars0 ratings
Related to Idhayathil Pootha Nila
Related ebooks
Kowsalya! Rating: 0 out of 5 stars0 ratingsOru Vidhaiyin kathai! Rating: 0 out of 5 stars0 ratingsPoonthenraley! Rating: 0 out of 5 stars0 ratingsAmma! Rating: 0 out of 5 stars0 ratingsVaa Vennila... Rating: 5 out of 5 stars5/5Undhan Manam Nandhavanam Rating: 5 out of 5 stars5/5Oru Vazhi Paathai Rating: 0 out of 5 stars0 ratingsMaanbumigu Maapillai Rating: 0 out of 5 stars0 ratingsKanmaniye Kaadhalenbathu… Rating: 0 out of 5 stars0 ratingsMadiyil Saayum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKaaladi Mann Rating: 0 out of 5 stars0 ratingsKai Serum Neram Rating: 0 out of 5 stars0 ratingsKarpoora Kanavukal Rating: 4 out of 5 stars4/5Poorva Jenma Bantham! Rating: 4 out of 5 stars4/5Kettathu Kidaikkum! Rating: 0 out of 5 stars0 ratingsVaram Rating: 5 out of 5 stars5/5Padma Viyugam Rating: 0 out of 5 stars0 ratingsPazhagi Pakkanum! Rating: 0 out of 5 stars0 ratingsKodi Kodi Aasai Rating: 0 out of 5 stars0 ratingsAvathum Pennaley...! Rating: 0 out of 5 stars0 ratingsThalattuthe Vaanam! Rating: 0 out of 5 stars0 ratingsVeettukku Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsNathikkaraiyoram Rating: 0 out of 5 stars0 ratingsPaatha Poojai Rating: 0 out of 5 stars0 ratingsKonchi Pesak Koodaathaa Rating: 0 out of 5 stars0 ratingsIni Sogamillai! Rating: 0 out of 5 stars0 ratingsDeepangal Aarathanai Rating: 0 out of 5 stars0 ratingsKathiruppai Kaadhalane Rating: 0 out of 5 stars0 ratingsMaavilath Thoranam Rating: 5 out of 5 stars5/5Thendrale Vaa! Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Idhayathil Pootha Nila
0 ratings0 reviews
Book preview
Idhayathil Pootha Nila - Devibala
http://www.pustaka.co.in
இதயத்தில் பூத்த நிலா
Idhayathil Pootha Nila
Author:
தேவிபாலா
Devibala
For more books
http://www.pustaka.co.in/home/author/devibala-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
1
இந்த வரன் ரொம்ப நல்லா பொருந்தியிருக்கு. பார்க்கலாமா?
ஜாதகத்தை நீட்டி தரகர் கேட்க, வேணுகோபால் அதை கையில் வாங்கிப் பார்த்தார். பையன் பெரிய படிப்பு படிச்சிருக்கான். அடிக்கடி வெளிநாட்டுக்குப் போய் லட்ச, லட்சமாய் சம்பாதிச்சிட்டு வர்றான்! அழகா இருப்பான். நல்ல குணம். கெட்டப் பழக்கங்கள் எதுவுமில்லை
தரகர் அடுக்கிக்கொண்டே போனார்.
அவனோட குடும்பப் பின்னணி?
குடும்பம் மொத்தமும் திருவாரூர்ல இருக்காங்க! இவன் மட்டும் இங்கே ஒரு அடுக்குமாடி வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கான். நீங்க அடுத்த கட்டத்துக்கு வந்தா, அவங்க ஊருக்குத் தகவல் கொடுத்து பெண் பார்க்க வரச்சொல்லலாம்!
வேணுகோபால் திரும்பி, மனைவி லெட்சுமியைப் பார்த்தார்.
நம்ம பொண்ணை ஒரு வார்த்தை கேட்டுட்டு பார்க்க வரச்சொல்லலாமா?
ஆமாங்க தரகரே! உங்களுக்கு நாளைக்கு நான் தொலைபேசியில் தகவல் சொல்றேனே!
தரகர் புறப்பட்டுப் போய்விட்டார்.
நல்ல வரனா வந்தா கொடுத்துட வேண்டியதுதானே லெட்சுமி?
அதுல தப்பில்லை! உங்க பொண்ணுகிட்ட ஒரு வார்த்தை கேட்டுருங்களேன். சுதந்திரமா வளர்த்து வச்சிருக்கீங்களே! ‘என் கல்யாணம் என்னைக் கேக்காம ஏன் முடிவெடுத்தீங்க'ன்னு கேக்கப்போறா!
மாலை அலுவலகம் முடிந்து சரண்யா வந்துவிட்டாள். அவளும் முதுகலைப் பட்டம் முடித்து, தனியார் நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலைபார்க்கிறாள். தைரியசாலி. பளிச்சென பேசிவிடுவாள். யாருக்கும் பயப்படமாட்டாள்.
வேணுகோபால் விவரத்தைச் சொன்னார்.
வரச்சொல்லுங்க! பார்க்கட்டும். ஆனா, என் மனசுக்குப் பிடிக்கலைன்னா படக்குன்னு சொல்லிடுவேன்!
சரிம்மா!
அந்தப் பையனின் தகவல்களை தரகர் தந்திருந்த காரணத்தால் சரண்யா மேலோட்டமாக ஒருமுறை பார்த்தாள். மறுப்பு எதுவும் சொல்லவில்லை.
வேணு, தரகருக்குத் தகவல் தந்துவிட்டார்.
அடுத்த நாள் மாலை தரகர் வந்தார்.
அதுல ஒரு சின்னச் சிக்கல் இருக்கு!
என்ன?
அந்தப் பையனோட தாத்தாவுக்கு எண்பது வயது. எங்கேயும் வரமுடியாதாம். அவரைக் கேட்டுத்தான் அவங்க வீட்டுல முடிவெடுப்பாங்களாம்!
அதனால?
பெண்ணை திருவாரூக்குக் கூட்டிட்டு வரமுடியுமான்னு கேக்கிறாங்க!
வேணுகோபால் கடுப்பாகிவிட்டார். வாய்ப்பே இல்லை! பெண்ணைக் கூட்டிட்டுப் போய்க் காட்டணுமா? அவ என்ன காட்சிப் பொருளா? அவசியமில்லை! இந்த வரனை விட்டுருங்க!
இல்லீங்க! இது நல்ல இடம். ஜாதகம் வேறு அம்சமா பொருந்தியிருக்கு!
ஏன்? வேறு ஜாதகமே பொருந்தாதா? வேண்டாங்க! வரமாட்டாங்கன்னு சொல்லிடுங்க!
தரகர் பேசவில்லை. போய்விட்டார்.
இதெல்லாம் அதிகம். இப்பவே இப்படீன்னா, போகப் போக எப்படி இருக்கும்?
மறுநாள் காலை வேணுகோபாலுக்கு படுக்கையைவிட்டு எழமுடியவில்லை! சரண்யாவை அழைத்து, தொலைபேசியில் விடுப்பு சொல்லச் சொன்னார்.
அப்பா! சர்க்கரை அளவு கூடியிருக்கும்! உங்ககிட்ட உணவுக் கட்டுப்பாடு இல்லை!
முடியலைம்மா! நாக்கை அடக்க முடியலை!
அது முக்கியம்ப்பா! சாப்பிடும்போதும், மத்தவங்ககிட்டப் பேசும்போதும் நாக்கை அடக்கறது நல்லது. இல்லைன்னா விபரீத விளைவுகள்தான்.
அழைப்புமணி ஒலிக்க, சரண்யா கதவைத் திறந்தாள்.
வேணுவின் நண்பர் கங்காதரன்!
வாங்க மாமா! அப்பா இன்னிக்கு விடுப்பு! வரமாட்டார்!
கங்காதரன், வேணுவுடன் வேலை பார்க்கும் குடும்ப நண்பர். லெட்சுமி காப்பி கொண்டு வந்தாள்.
இதோ பாரு வேணு! என்கூட ஒருதடவை வந்து நாடி ஜோதிடம் பாரு. அப்புறம் உனக்கே பலாபலன்கள் புரியும்!
மாமா! நாடி ஜோதிடத்துல மருந்துகூட உண்டா?
எல்லாமே உண்டும்மா! என்ன சாப்பிடணும்? எப்ப குணமாகும்னுகூடச் சொல்லுவாங்க! உங்கப்பா நம்பவே மாட்டேங்கிறான்! உடல் நோய், மன உளைச்சல், எல்லாத்துக்குமே காரணம் முன்பிறவி வினைகள்ம்மா! அந்தப் பாவங்களைப் போக்கி பரிகாரம் செஞ்சிட்டா, நமக்குக் கிடைக்க வேண்டியது தானா கைக்கு வந்து சேர்ந்துடும்!
இப்படி ஒரு வியாபாரம்!
அப்படி சொல்லாதே வேணு! நானும் உன்னை மாதிரி கடுமையா விமர்சனம் பண்ணிட்டுத்தான். இருந்தேன். இப்ப எத்தனை ஆழமான நம்பிக்கை தெரியுமா எனக்கு? எத்தனையோ ஆயிரங்கள் செலவழிக்கிறே! ஒருமுறை பாரேன்!
நான் சொல்றேங்க! அவர் கேக்கிறதில்லை!
ஏம்மா சரண்யா! நீயாவது சொல்லேன்!
மாமா! நம்பிக்கை இருக்கோ, இல்லையோ - தகவல்களை தெரிஞ்சுக்கலாம். தப்பில்லை! அதுவும் ஒரு புது அனுபவம் தானே?
சரண்யா! பார்க்கலாம்னு சொல்றியா?
தப்பில்லை! உங்க விருப்பம்!
சரி! வர்றேன்டா!
இப்பவே புறப்படு! நான் அங்கேதான் போயிட்டு இருக்கேன். அதைப் பார்க்கணும்னு நமக்குத் தோணணும். அந்த நேரம் உனக்கு இப்பத்தான் வந்திருக்கு!
வேணுகோபால் புறப்பட்டார்.
'பிருகு நாடி ஜோதிட நிலையம்' என்ற பெயர்ப்பலகை ஒரு ஓரமாகத் தொங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் உள்ளே நுழைந்தார்கள்.
கங்காதரனுக்கு பழக்கம் என்பதால் அவர் வந்ததும் அவர்கள் நலம் விசாரித்தார்கள்.
பிறகு, இவருக்கும் பார்க்கணும்
என்றார், கங்காதரன்.
வலதுக்கை பெருவிரலில் மை தடவி, ஒரு தாளில் இருமுறை அந்த ரேகையைப் பதிவு செய்துகொண்டார்கள்.
பத்து நிமிடம் கழித்து உள்ளே அழைத்தார்கள்.
ஓலைச்சுவடிகள் வந்தன!
வேணுகோபாலின் ஜாதகம் கையில் இருந்தது!
எங்ககிட்டத் தரவேண்டாம். நீங்க சரிபார்த்துக்குங்க! நாங்க கேக்கிற கேள்விகளுக்கு உண்டு, இல்லைங்கிற பதில் மட்டும் போதும்!
கேள்விகளைக் கேட்டுக் கேட்டு பதில் வாங்கி, சரியாகப் பிடித்துவிட்டார்கள்! சிம்ம ராசி, கும்ப லக்னம், பிறந்த மாதம் மாசி - உங்க அப்பா பேரு ஆளவந்தார் - அம்மா பார்வதி... ரெண்டு சகோதரிகள் - மனைவி பேரு லெட்சுமி - ஒரு மகள் படிச்சிட்டு வேலை பார்த்துக்கிட்டு இருக்கு
என படபடவென அடுக்க, வேணுகோபால் அசந்துபோனார்.
உங்க ஜாதகத்தை சரிபார்த்துக்குங்க!
எனக் கூறி கட்டங்களைச் சொல்ல, அத்தனையும் சரியாக இருந்தது!
உங்க ஓலைச்சுவடி கிடைச்சாச்சு! பொது காண்டத்தைப் பார்த்துடலாமா?
எனக் கேட்க, வேணுகோபால் தலையாட்டினார்.
அவர் படிக்கத் தொடங்கினார்.
ஆனைமுகன் ஆறுமுகனை ஈன்ற அன்னை அடிபணிந்து, பிருகுயான் வணங்கிப் போற்றி, என்றுபட ஓர் மகனின் முதலினுண்மை நாயகனின் வலக்கரத்தில் ரேகைத் தோற்றம்
என ஆரம்பித்தார்.
பிறகு படித்துப் படித்து விளக்கம் சொல்லிக்கொண்டே வர, எல்லாமே சரியாக இருந்தது! வேணுகோபாலுக்கு அதில் ஒரு ஈர்ப்பு வந்துவிட்டது!
சாந்திகாண்டம் பார்த்துட்டா, நீங்க செய்யவேண்டிய ஆலய வழிபாடுகள், பரிகாரம் எல்லாம் வந்துடும்! முன்ஜென்ம வினைகள் நிறைய இருக்கு! அதைப் போக்கிட்டா, தடைகள் விலகிடும்! வாழ்க்கை நிம்மதியா இருக்கும்!
இதெல்லாம் நிஜம்தானா?
நாங்க எதையும் சொல்லலை. சுவடியில் இருக்கிறதைப் படிக்கிறோம். இதோ பாருங்க! நீங்க நாளைக்கே கோடீசுவரன் ஆகப்போறீங்கன்னு யாரும் சொல்லப்போறதில்லை. உங்க ஜாதகப்படி உங்களுக்கு என்ன கிடைக்கணுமோ, அதுதான் கிடைக்கும். தடைகளை நீக்கிட்டா, சேரவேண்டியது தானா வந்து சேர்ந்துடும்.
அப்படியா?
இதோபாருங்க! மனித வாழ்க்கையில் நம்பிக்கைதான் முக்கியம்! ஏதாவது ஒண்ணுல மனிதன் நம்பிக்கை வச்சுத்தானே ஆகணும்!
சரி! சாந்தி காண்டம் பார்த்துடலாம்!
உட்கார வைத்து அரை மணி நேரத்தில் ஓலைச்சுவடிகளை தேடி எடுத்துவிட்டார்.
ஏறத்தாழ ஒரு மணி நேரம் உட்கார்ந்து அதைப் படித்தார். "மூன்று சிவாலயங்களுக்கு நீங்க போகணும். அங்கே வழிபாடு செஞ்சு, அன்னதானமும் செய்யணும். அப்புறமா, தில்லைக் காளி கோவிலுக்குப்