Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vetti Verkal
Vetti Verkal
Vetti Verkal
Ebook175 pages2 hours

Vetti Verkal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703777
Vetti Verkal

Read more from Vidya Subramaniam

Related authors

Related to Vetti Verkal

Related ebooks

Reviews for Vetti Verkal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vetti Verkal - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    வெட்டி வேர்கள்

    Vetti Verkal

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அச்சு முதலியாரின் மளிகைக் கடைக்கருகில் அவர்கள் வழக்கம் போலக் கூடினார்கள். பட்டதாரிகள், வேலை. வேட்டைக்காரர்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் வாலிபக் குறும்புகளுடே நீரோட்டமாய் ஓடிய கவலை ரேகைகள். அவர்கள் மொத்தம் எட்டுப்பேர்கள். நண்பர்கள். அச்சு முதலி கடைதான் அவர்கள் கூடுமிடம். கடையை ஒட்டி ஒரு நீள சுமைதாங்கிக் கல் உண்டு. அதில் பாதிப் பேர் அமர, மீதிப்பேர் கடையின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டில் அமர்ந்து கொள்வார்கள். அநேகமாக அவர்கள் பேச்சு தங்கள் எதிர்கால லட்சியங்கள், கனவுகள் பற்றியதாகத் தான் இருக்கும். சில நேரம் தமாஷான ஆராய்ச்சிகளிலும் இறங்குவார்கள். பாக்கெட்டிலிருக்கும் சில்லறைக்கு அச்சு முதலியாரின் கடையில் பொட்டுக் கடலை வாங்கிக் கொரித்துக் கொண்டே பேசுவார்கள். ஒவ்வொரு நாள் ஒவ்வொருவர் வாங்குவார்கள். இன்றைக்கு கோபியின் முறை.

    கோபி அச்சு முதலியிடம் சில்லறை நீட்டினான். அச்சு முதலி கொஞ்சம் தாராளமாகவே பொட்டலம் கட்டிக் கொடுத்தார்.

    ஏன் முதலியார் உங்க பேர் எப்படி அச்சு முதலின்னு ஆச்சு..?

    முதலியார் சிரித்தார். நீ தான் ஆராய்ச்சி பண்ணி கண்டு பிடியேன் என்றபடி வியாபாரத்தை கவனித்தார். கோபி நண்பர்களிடம் கேட்டான்.

    ஆளாளுக்கு ஒரு காரணம் இட்டுக்கட்டி சொல்ல, கடையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த ஒரு சின்னப் பையன் கிட்டே ஓடி வந்தான்.

    இதுக்கு காரணம் நா சொல்லட்டுமாண்ணா?

    என்னடா..?

    முதலியார்க்கு குழந்தைகள்னா கொள்ளைப்பிரியம். சின்னப்பசங்க வந்தா அச்சு வெல்லம் கொடுத்தனுப்புவார். அதுக்காகவே அச்சு வெல்லம் ஸ்டாக் வெச்சுப்பாராம். பசங்கள்ளாம் அவருக்கு வெச்ச பேர் அச்சு வெல்ல முதலி அது சுருங்கி அச்சு முதலியாய்டுச்சு

    ச்சே ரொம்ப சிம்ப்பிள் இல்ல? நண்பர்கள் அசடு வழிய சிரித்தார்கள்.

    ஏண்டா அச்சு முதலியப் பத்தின ஆராய்ச்சி இருக்கட்டும். நாளைக்கு நாம் பார்க்க வேண்டிய வேலைகளைப் பத்தி பேசுவோமே! ரமேஷ் பேச்சை மாற்றினான்.

    "அதைத்தாண்டா சொல்ல வந்தேன். நாம வெட்டியார்க்கோம்னு யாரும் சொல்லிடக்கூடாது. வேலை கிடைக்க எல்லா முயற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கோம் நாமளும். வேலை கிடைக்கற வரை அட்லீஸ்ட் சமூக சேவையாவது செய்வோமேங்கறது நம்ம பிளான். நாளைக்கு சிட்டில ரெண்டு மூணு இடத்துல இரத்த தான முகாம் நடத்தறாங்க. நாம ரெண்டு மூணு பேரா பிரிஞ்சு அந்த முகாம்ல ஏதாவது சர்வீஸ் பண்ணுவோம். நிறைய பேரை கூட்டிட்டு போய் ரத்தம் கொடுக்க வெப்போம். நாமளும் கொடுப்போம். அப்புறம் சாயங்காலம் முதியோர் இல்லத்துக்குப் போய் அங்க அவங்களோட பேசறது, சின்னச் சின்ன உதவிகள் பண்றது. சரியா எட்டு மணிக்கு அங்கேர்ந்து கிளம்பறோம்.

    அப்புறம்தாம் முக்கியமான வேலை."

    என்ன..?

    தண்ணிப் பிரச்சனை...! ஒரு சில இடத்துல பாவம் வயசானவங்கள்ளாம் தெரு பம்ப்புல அடிக்க முடியாம தண்ணியடிச்சு சுமக்க முடியாம சுமந்துக்கிட்டு போறாங்க. பகல்ல இவங்களால கூட்டத்துல வரிசைல நின்னு அடிக்க முடியாதுன்னு, ராத்திரிதான் கூட்டம் குறைஞ்சப்புறம் அடிச்சு எடுத்துக்கிட்டு போவாங்க. பாக்கவே கஷ்டமார்க்கும். அந்த மாதிரி வயதானவங்களுக்கு நாம உதவணும். அவங்களை உக்கார வெச்சுட்டு நாம ஒருத்தர் அடிக்க, ஒருத்தர் அவங்க வீட்டுக்கு தண்ணி கொண்டு போய் நிரப்பிட்டு வரணும். இது ஒரு பெரிய சர்வீஸ். அதுவும் இந்த மாதிரி தண்ணிக்கஷ்டத்துல இப்படி ஒரு உதவி செய்யறது நமக்கு ஆத்ம திருப்தி புண்ணியம், வாழ்த்து எல்லாம் கொடுக்கும் என்ன சொல்றீங்க..?"

    கரெக்ட்ரா கோபி. நல்ல யோசனை வெட்டிப்பசங்கன்னு யாரும் நம்பளை சொல்லக் கூடாது. அதுக்காக என்ன சோஷியல் சர்வீஸ் வேணாலும் பண்ணலாம்.

    குட் ஐடியா. ஆமா இதை ஏன் நாளைக்குத் தள்ளிப் போடணும். நன்றே செய், அதை இன்றே செய்யின்னு சொல்லி வெச்சிருக்கே. இன்னிலேர்ந்தே ஏன் ஆரம்பிக்கக் கூடாது?

    "அதுவும் சரிதான். மணி இப்பே ஏழு. ரெண்டு பேர்க்கு ஒரு ஏரியான்னு போவோம். முடியாதவங்களுக்கு தண்ணி அடிச்சுக் கொண்டு போய் கொடுத்து நம்ம சர்வீஸை ஆரம்பிப்போம்.''

    அவர்கள் உற்சாகமாகக் கிளம்பினார்கள். தண்ணீர் கஷ்டம் அதிகமிருக்கும் பகுதிகளுக்கு இரண்டிரண்டு பேராகப் பிரிந்து சென்றார்கள்.

    எல்லாத் தெரு பம்ப்புகளிலும், வாட்டர் டேங்க் வைத்திருந்த இடத்திலும் வரிசையாய் குடங்கள். கலர்கலராய் நிற வரிசை. இனிஷியல் எண்களும் எழுதப்பட்டு நீருக்காகக் காத்திருந்தார்கள். அடேயப்பா ஊரில் இவ்வளவு தண்ணீர் கஷ்டமா? அவர்கள் ஆச்சர்யப்பட்டனர். தண்ணீர் லாரி வந்ததும் அந்த இடமே களேபரமாயிற்று. வரிசைகள் கலைந்து ஜனங்கள் முட்டி மோதிக் கொண்டார்கள். கூச்சல் அதிகமாயிற்று. யாரோ, ஒரு ஆள் டேங்க் குழாயைப் பற்றிக் கொண்டு கத்தி அதட்டி ஒரு வரிசையை உருவாக்கினான். குடங்கள் நிறைய ஆரம்பித்தன. கர்ப்பிணிப் பெண் ஒருத்தி தண்ணீர் பிடித்த போது கோபி கிட்டே போனான். குடுங்க நா கொண்டு போய் உங்க வீட்ல இறக்கிடறேன்.

    அவள் சந்தேகத்தோடு அவனைப் பார்த்தாள். 'தண்ணீர் திருட வந்திருக்கிறானா? உதவுகிறேன் பேர் வழி என்று குடங்களோடு காணாமல் போய் விட்டால்...?'

    வேணாம்

    தப்பா நினைக்கறீங்களா சிஸ்டர்? நாங்க வாலன்ட்டியர்ஸ். எங்களால முடிஞ்ச உதவிகளை மக்களுக்கு செய்யறதுக்காக வந்திருக்கோம். நாங்க பட்டதாரிகள். நல்ல குடும்பத்துல பிறந்தவங்க. உங்க குடத்தை கொடுங்க. கூடவே வாங்க. நா சுமந்துக்கிட்டு வந்து வீட்டு வாசல்ல வெச்சுட்டு வரேன்.

    கோபி அவள் கையிலிருந்து அந்தப் பெரிய பிளாஸ்டிக் குடத்தை வாங்கித் தோளில் வைத்துக் கொண்டு நடந்தான். அவள், வியப்பும் கூடவே சந்தேகப் பார்வையுமாய் அவனோடு நடந்தாள்.

    ரமேஷ் அடுத்தாற்போல் குடம் தூக்கி வந்த ஒரு சிறுமியிடமிருந்து குடத்தை வாங்கிக் கொண்டு அந்தச் சிறுமியின் வீட்டுக்குச் சென்று குடத்தை இறக்கினான்.

    சிறுமியின் அப்பாவோ, மாமாவோ. அவனைப் புருவம் நெரித்துப் பார்த்தார்.

    யார்ரி இது..?

    தெரியலப்பா : ஹெல்ப் பண்ணட்டான்னு கேட்டார்.

    அவர் ஒரு நன்றி கூடக் கூறவில்லை ரமேஷ் மிச்ச மூன்று குடம் நீரையும் தூக்கிக் கொண்டு வந்து கொடுத்து விட்டு அடுத்த ஆளுக்கு உதவப் போக அந்த மனிதர் யாரிடமோ பேசிய வார்த்தைகள் அவன் செவியில் சுரீரென்று விழுந்தது. அவன் காதில் விழட்டும் என்றுதான் சொன்னாரா அல்லது அந்த அளவுக்கு இங்கிதம் இல்லாத மனிதரா தெரியவில்லை..

    வயசுப் பொண்ணுங்க இருக்கற வீடுன்னு தெரிஞ்சா போதுமே எங்கேர்ந்தோ ஈசல் மாதிரி வந்துடுவானுங்க, ஒத்தாசை பண்ற சாக்குல! இவங்க நோக்கம் என்னன்னு தெரியாது?

    ரமேஷ் தன் தார்மீக கோபத்தை சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். இது சராசரி மனிதபுத்தி! எல்லாவற்றையும் சந்தேகப் பார்வை பார்க்கும் குணம். முன்பின் தெரியாத இளைஞர்கள் எல்லாரும் இவர்கள் பார்வையில்.. பொறுக்கிகள், - பெண்ணுக்காக அலைபவர்கள். என்னடா சோர்ந்துட்ட..? முடியலயா? கோபி அவன் தோளைத் தட்ட ரமேஷ் அந்த மனிதர் அடித்த கமென்ட்டை அவனிடம் கூறினான்.

    படிச்சு முடிச்சுட்டு வேலை கிடைக்கறவரை, இடையில் இருக்கற காலம் இளைஞர்களுக்கு ரொம்ப சோதனையான காலக்கட்டம், தேவையில்லாத கெட்ட பெயர்கள் எல்லாம் இந்தக் காலக்கட்டத்துல ஏற்படும், ஊர் சுற்றி, வெட்டிப்பய, பொம்பளை பின்னால சுத்தறவன், சினிமாக் கதை பேசறவன், இப்படியெல்லாம் விதவிதமா நம்பளைப் பத்தியும் யாரும் தப்பா பேசிடக் கூடாதுன்னுதானேடா நாம நம்ம நேரத்தை உபயோகமா, நாலு பேருக்கு உதவி செய்யறதுல கழிக்கணும்னு திட்டம் போட்டோம் அப்டியும் தப்பாதான் பேசறாங்க பாரு.

    ரமேஷ் வருத்தப்பட கோபி அவன் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானப்படுத்தினான். –

    வலிந்து உதவி செய்யறவங்களை சந்தேகப்படத்தான் செய்வாங்க. எந்த பிரதிபலனும் நாம் எதிர்பார்க்கல, எந்த நோக்கமும் நமக்கு கிடையாதுன்னு போகப்போக புரிஞ்சுக்கிட்டா பேச மாட்டாங்க. இதுக்கெல்லாம் சோர்ந்து போய்ட்டா எந்த நல்ல காரியமும் பண்ண முடியாது. இப்பதான் இன்னும் உற்சாகமா இருக்கணும்.

    அவர்கள் அடுத்த தெருவுக்குப் போனார்கள். கோபி சொன்னாற்போல் வயதானவர்கள் சிலர், கூட்டம் குறைந்திருந்த அடி பம்ப்புகளில் தண்ணீர் அடித்துக் கொண்டிருந்தார்கள், கை நரம்புகள் புடைக்க கோபி

    அவர்கள் அருகில் சென்றான்.

    ''பாட்டி விடுங்க. நா அடிச்சுத்தரேன்."

    நீ எதுக்குப்பா எனக்கு அடிச்சுத்தரணும்? காசு கேப்பியா..?

    அதெல்லாம் இல்ல. வயசானவங்களுக்கு உதவணும்னு ஒரு கொள்கை. விடுங்க நா அடிக்கறேன். உங்க வீடு எதுன்னு சொல்லுங்க இவன் கொட்டிட்டு வருவான்.

    நிஜம்மா காசு கேக்க மாட்டீங்களே.

    மாட்டோம் பாட்டி. நம்புங்க.

    பாட்டி பம்ப்பை விட்டு நகர்ந்தாள்.

    ஏந்தம்பிங்களா. எங்களுக்கும் அடிச்சு தருவீங்களா?

    எல்லார்க்கும் அடிச்சுத் தருவோம் அவசரப்படாதீங்க.

    கிட்டத்தட்ட அறுபது குடம் தண்ணீர் இருவரும் மாற்றி மாற்றி அடித்தனர். மாற்றி மாற்றி ஒவ்வொரு வீட்டுக்காய் கொண்டு சேர்த்தனர்.

    நல்லார்க்கணும் தம்பீங்களா நீங்க. என் வீட்லயும் வயசுப் பசங்க இருக்கானுங்க ஆனா விரலை அசைக்க மாட்டானுங்க. நல்லா கொட்டிக்கிட்டு, ஷோக்கா டிரஸ் பண்ணிக்கிட்டு ஊரைச் சுத்திட்டு வருவானுங்க. வீட்டுக் கஷ்டம்னா வீசை என்ன விலைன்னு கேப்பானுங்க.ம்ஹ்ம் உங்களை எல்லாம் பார்த்தா படிச்ச பசங்களாட்டம் தெரியுது. நல்ல உபகார சிந்தையும் இருக்கு. எங்க வீட்டுப் பசங்களுக்கு எப்பதான் இப்டியெல்லாம் நல்ல புத்தி வரப்போகுதோ ஒரு வாய் காப்பித் தண்ணீ தரேன். சாப்ட்டு போங்களேன் தம்பி..?

    "அதெல்லாம் வேணாம் பாட்டி நாங்க வரோம்.

    ரமேஷ் கடைசிக் குடத்தை இறக்கி வைத்தான். வியர்வையைத் துடைத்துக் கொண்டு இருவரும் கிளம்பும்போது இரவு மணி பத்து.

    ரொம்ப சந்தோஷமா இருக்கு இல்லடா மனது...!

    ரொம்ப..! உபயோகமா கழிஞ்ச நாள்.

    எவ்ளோ பேர் வாழ்த்தினாங்க பாரு!

    நாளைக்கு இரத்த தான முகாம், முதியோர் இல்லம். ராத்திரி மறுபடியும் தண்ணீர் அடிச்சு குடுக்கற வேலை. மறந்துட வேணாம் காலேல ஏழு மணிக்கு கரெக்டா கிளம்பிடணும் சரியா?

    ஏழு மணிக்கு தானே. வந்துடறேன். சீக்கிரம் நடடா. பசிக்குது சாயங்காலம் அச்சு முதலி கடைல வாங்கி சாப்ட்ட பொட்டுக்கடலை தான். வீட்டுக்குப் போய் டிபனோ, சாப்பாடோ ஒரு பிடி பிடிச்சுட்டு படுத்தா தான். காலேல சீக்கிரமே எழுந்து வர முடியும்.

    வேலை கிடைச்சப்பறம் கூட நாம் இந்த சமூக சேவையை நிறுத்திடக் கூடாதுடா கோபி.

    "யார் சொன்னா நிறுத்திடணும்னு. இது பாட்டுக்கு இது. அது பாட்டுக்கு அது. இருபத்தி நாலு மணி நேரமுமா வேலை செய்யப்

    Enjoying the preview?
    Page 1 of 1