Naadagangal
()
About this ebook
அரு. அருள்செல்வன் 1961இல் பிறந்தவர். இவருடைய பூர்வீகம் நெல்லை மாவட்டத்தில் உள்ள இராயகிரி கிராமம். சிவகங்கை மாவட்டம்இ காரைக்குடியில் படித்து வளர்ந்தவர். கடந்த 40 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் தெய்வத்திரு.அன்பு-அருணாசலம்இ வேலுமயில் அம்மாள். தந்தையார் தமிழாசிரியராக இருந்து தமிழ்ப்பணி ஆற்றியவர். செட்டிநாடு பகுதி ஊர்களில்; பாவேந்தர் பாரதிதாசன்இ கவிஞர் கண்ணதாசன் முதலியவர்களை அழைத்து வந்து இலக்கியக் கூட்டங்களை சிறப்பாக நடத்தியவர். தந்தையார் மூலம் தமிழார்வம் பெற்ற அருள்செல்வன் 30 ஆண்டுகளுக்கு மேலாக எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கி பின் கட்டுரைஇ சிறுகதைஇ நாடகம் எனப் பல வகையிலும் தன் எழுத்துப் பணியை தொடர்ந்து வருகிறார். இவருடைய படைப்புகள் இதழ்கள்இ வானொலிஇ தொலைக்காட்சி வாயிலாக வெளிவந்துள்ளன. இதுவரை இவர் எழுதிய பத்து நூல்கள் வெளிவந்துள்ளன.
Related to Naadagangal
Related ebooks
December Punnagai Rating: 5 out of 5 stars5/5Koondu Kuyil Rating: 0 out of 5 stars0 ratingsIni Ithu Vithi Rating: 0 out of 5 stars0 ratingsIndha Mannil Anandham Rating: 0 out of 5 stars0 ratingsCylinder Niraya Anbu Rating: 0 out of 5 stars0 ratingsAmaithi Pura Rating: 0 out of 5 stars0 ratingsValarpirai Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAah Aah! Rating: 0 out of 5 stars0 ratingsEnnai Kaapatrungal! Rating: 0 out of 5 stars0 ratingsEttu Thisai Naangu Vasal Rating: 5 out of 5 stars5/5Ellam Poi Rating: 0 out of 5 stars0 ratingsAthu Mattum Ragasiyam Rating: 5 out of 5 stars5/5Netru Varai Kaadhali! Rating: 0 out of 5 stars0 ratingsMarma Maaligai Rating: 0 out of 5 stars0 ratingsSaathal Saamraajjiyam Rating: 0 out of 5 stars0 ratingsKaakkai Siraginile... Rating: 0 out of 5 stars0 ratingsAahaya Gangai Rating: 5 out of 5 stars5/5Thaandathe Thandikkapaduvai Rating: 5 out of 5 stars5/5Kalavadinean Kanapozhuthil! Rating: 0 out of 5 stars0 ratingsAriyum Paruvam Rating: 0 out of 5 stars0 ratingsThanneerile Thaamaraipoo Rating: 0 out of 5 stars0 ratingsEllarum Vaanga Rating: 0 out of 5 stars0 ratingsVanavillai Valaitheduthu Rating: 0 out of 5 stars0 ratingsNilavey Mugam Kattu Rating: 5 out of 5 stars5/5Manas Rating: 5 out of 5 stars5/5Anjali Ennai Kaadhali Rating: 0 out of 5 stars0 ratingsRaathirigal Jakkirathai! Rating: 0 out of 5 stars0 ratingsMannil Uthitha Vennila Rating: 0 out of 5 stars0 ratingsKraim Dot Kaam Rating: 0 out of 5 stars0 ratingsThithikkum Thee Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Naadagangal
0 ratings0 reviews
Book preview
Naadagangal - AR. Arul Selvan
http://www.pustaka.co.in
நாடகங்கள்
Naadagangal
Author:
அரு. அருள் செல்வன்
AR. Arul Selvan
For more books
http://www.pustaka.co.in/home/author/arul-selvan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
1. சிற்பங்கள்
2. வழியா இல்லை பூமியில்
3. மண்ணில் இந்தக் காதல்
4. திறமைகள் தோற்குமா?
1. சிற்பங்கள்
காட்சி – 1
இடம்: பொது இடம்.
பங்கேற்போர்: முரசறைவோன், பொதுமக்களில்இருவர்.
முரசு ஒலி: டும்... டும்... டும்...
முரசறைவோன்: நாட்டு மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. நம் நாட்டின் கடலோரமலையில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற சிற்பவேலைகள் முடிந்துவிட்டன. வரும் புதன் கிழமை சிற்பங்களின் திறப்புவிழா நடக்கிறது. மன்னர் வானவரம்பரும் இளவரசி இன்ப வல்லியும் விழாவில் கலந்து கொள்கிறார்கள். அனைவரும் வருக! வருக! வருக!
(முரசு ஒலி)
பொதுமக்கள்-1: அண்ணே... இந்தச் சிற்பத்தையெல்லாம் செதுக்குனது யாருண்ணே...?
பொதுமக்கள்–2: நல்லா கேட்டியே ஒருகேள்வி... இதெல்லாம்செதுக்குனது நம்ம சிற்பி குணசீலன்தாம்பா. இது கூட தெரியாம இருக்கியே. அவரோட திறமைக்கு புகழ் அவரைத் தேடிவந்துகிட்டே இருக்குப்பா. சரி சரி விழாவுக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு. நம்ம தெரு முழுதும் அருமையா அலங்காரம் பண்ணணும். வாசல்ல கோலம், வழியெல்லாம் வாழைமரம், மாந்தோரணம்னு கட்டி சிறப்பா செய்யணும்பா.
பொதுமக்கள்-1: சரிண்ணே, இன்னைக்கே வேலையை ஆரம்பிச்சுடலாம்.
***
காட்சி – 2
இடம்: வானவரம்பரின் அறை.
பங்கேற்போர்: வானவரம்பர், அமைச்சர், அரண்மனைக் காவலன்
அரண்மனைக் காவலன்: மக்கள் போற்றும் மாமன்னர் வாழ்க! அரசே... தங்களைக் காண அமைச்சர் வந்திருக்கிறார்.
வானவரம்பர்: அப்படியா... அவரை உடனே வரச்சொல்.
(அரண்மனைக் காவலன் செல்ல சிறிது நேரத்தில் அமைச்சர் வருகிறார்)
அமைச்சர்: அரசே... வணக்கம்!
வானவரம்பர்: வாருங்கள் அமைச்சரே, அமருங்கள்!
(அமைச்சர் இருக்கையில் அமர்கிறார்)
அமைச்சர்: அரசே... வரலாறு காணாத அளவுக்குத் தலைநகர் விழாக்கோலம் பூண்டிருக்கிறது. எங்கும் மக்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். நகரெங்கும் அலங்காரங்களும் ஆர்வமான பேச்சுக்களும் நிறைந்துள்ளன. சிற்பவிழாவை ஒவ்வொருவரும் தங்கள் குடும்பவிழாவாகவே நினைத்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
வானவரம்பர்: நன்று அமைச்சரே நன்று! விழா ஏற்பாடுகள் எவ்வாறு உள்ளன?
அமைச்சர்: விழாவிற்கான வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. விழாவில் தாங்கள் சிற்பி குணசீலனுக்கு வழங்க இருக்கும் பரிசான தங்கத்தால் ஆன தேரும் தயாராகிவிட்டது.
வானவரம்பர்: அமைச்சரே... நிகழ்ச்சியில் ஒரு சிறிய மாற்றம். என்மகள் இன்பவல்லி நாட்டியக் கலையில் வல்லவள் அல்லவா. அவளுடைய நாட்டிய அரங்கேற்றத்தை விழாவோடு சேர்த்து நடத்திவிடலாம் என்று நினைக்கிறேன். அது மட்டுமன்றி நாட்டியக் கலையில் சிறந்த என் மகள் மூலம் சிற்பக்கலையில் சிறந்த குணசீலனுக்குப் பரிசு வழங்குவதே பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். உங்கள் கருத்து என்ன?
அமைச்சர்: அரசே... கலையுள்ளம் படைத்த தங்களின் முடிவு எப்போதும் சரியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன்.
வானவரம்பர்: அமைச்சரே... சிற்பி குணசீலனைப் பற்றி மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள்?
அமைச்சர்: அவன் திறமையை எண்ணி ஆச்சரியப்படாதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றுவிட்டான் குணசீலன்.
வானவரம்பர்: ஆம் அமைச்சரே, அவனால் நம் நாட்டுக்கே பெருமையல்லவா?
***
காட்சி – 3
இடம்: இன்பல்லியின் அறை.
பங்கேற்போர்: இன்பவல்லி, பூங்கோதை.
பூங்கோதை: இளவரசி... இளவரசி...
இன்பவல்லி: என்ன பூங்கோதை... வேகமாக வருகிறாய்?
பூங்கோதை: ஒண்ணுமில்லீங்க! சிற்பவிழாவில் உங்க நாட்டிய நிகழ்ச்சி இருக்கில்லையா, அதுக்கு உடைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு உங்களை அழைச்சுட்டு வரச்சொன்னாங்க.
இன்பவல்லி: அட மறந்தேவிட்டேன். ம்... இன்னொரு விஷயம். உடைகள் மட்டும் நன்றாகத் தேர்ந்தெடுத்தால் போதாது. ஒத்திகையும் சரியாகச் செய்து பார்க்கவேண்டும். முதல்முறையாக இருப்பதால் எனக்கு அச்சமாக உள்ளது பூங்கோதை!
பூங்கோதை: இதுக்கா பயப்படுறீங்க. இருபத்தஞ்சு வயதே ஆன குணசீலர் நாடே பாராட்டுகிற மாதிரி சிற்பத்தை செதுக்கியிருக்காரு. அவரு பயந்துட்டு இருந்திருந்தா... அதெல்லாம் நடந்திருக்குமா?
இன்பவல்லி: அவரை உனக்குத் தெரியுமா, பார்த்திருக்கிறாயா?
பூங்கோதை: நான் பார்த்தது இல்ல. ஆனா எங்க மாமனுக்கு அவர் நெருங்கின சிநேகிதர். மாமன் சொல்லித்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும். சரி... புறப்படுங்க நேரமாச்சு.
***
காட்சி – 4
இடம்: விழாநடக்கும் இடம்.
பங்கேற்போர்: வானவரம்பர், இன்பவல்லி, அமைச்சர், பூங்கோதை, காவலன், குணசீலன், ரத்தினம் மற்றும் பொதுமக்கள்.
பொதுமக்கள்: மன்னர் வாழ்க! மன்னர் வாழ்க! கலைக்காவலர் வாழ்க! கலைக் காவலர் வாழ்க!
வானவரம்பர்: அமைச்சரே... என் வாழ்வில் மறக்க முடியாத நாள் இன்று. என் கற்பனையெல்லாம் சிற்பமாக வடிவெடுத்ததிருநாள். ஆஹா... எத்தனை மக்கள் வெள்ளம். அவர்களிடம் தான் எத்தனை மகிழ்ச்சி!
(மேளதாளங்களின் ஒலி)
காவலன்: மன்னர் இப்போது சிற்பங்களைத் திறந்து வைப்பார்!
(வானவரம்பர் ஒரு கயிற்றை இழுத்து சிற்பங்களைத் திறந்து வைக்கிறார்)
பொதுமக்கள்: மன்னர் வாழ்க! மன்னர் வாழ்க!
(கரவொலி)
காவலன்: சிற்பங்களை வடித்த குணசீலனுக்கு இளவரசி பரிசு வழங்குவார்கள்.
பொதுமக்கள்: இளவரசி வாழ்க! இளவரசி வாழ்க!
(குணசீலனுக்கு இன்பவல்லி பரிசு வழங்குகிறாள்)
(கரவொலி)
காவலன்: இன்னும் சிறிது நேரத்தில் இளவரசியின் நடன அரங்கேற்றம் நடைபெறும்.
(இளவரசி நடனமாடுகிறாள்)
(கரவொலி)
***
காட்சி – 5
இடம்: குணசீல3னின் இருப்பிடம்.
பங்கேற்போர்: குணசீலன், ரத்தினம்.
ரத்தினம்: குணசீலா... குணசீலா...
குணசீலன்: வாப்பா ரத்தினம் வா! உட்கார். ஏதாவது சாப்பிடுகிறாயா?
ரத்தினம்: வயிறு நிறையச் சாப்பிட்டுத்தான் வர்றேம்பா. அத்தோட எங்க அக்கா மக பூங்கோதை கிட்ட பேச்சையும் வாங்கிக்கட்டிகிட்டுத்தான் வர்றேன்.
குணசீலன்: என்ன ஆயிற்று. அவளோடு சண்டை போட்டாயா?
ரத்தினம்: அதை விடுப்பா. மக்களெல்லாம் உன்னை மனசாரப் பாராட்டுறதைப் பார்த்து எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா. ஆமா, நேத்து விழாவில நீ என்ன இளவரசி நாட்டியத்தை தெறந்த வாய் மூடாம பார்த்துக்கிட்டு இருந்த! ஈ, கொசு ஏதாவது வாயில நுழைஞ்சிறப்போகுதேன்னு எனக்குப் பயமா இருந்துச்சு.
குணசீலன்: (சிரித்துவிட்டு) என்ன ரத்தினம், கேலி பேசுகிறாய். நான் ஒரு கலைஞன். நாட்டியத்தை ரசித்துப் பார்த்ததில் என்ன தவறு?
ரத்தினம்: நாட்டியத்தை ரசிச்சிருந்தா தவறில்ல. நீ ராஜகுமாரியையே ரசிச்ச மாதிரில்ல தெரிஞ்சது.
குணசீலன்: