Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paarkathey! Patharathey!
Paarkathey! Patharathey!
Paarkathey! Patharathey!
Ebook104 pages57 minutes

Paarkathey! Patharathey!

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903711
Paarkathey! Patharathey!

Read more from Pattukottai Prabakar

Related to Paarkathey! Patharathey!

Related ebooks

Related categories

Reviews for Paarkathey! Patharathey!

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paarkathey! Patharathey! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    பார்க்காதே! பதறாதே!

    Paarkathey! Patharathey!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    முன்கதைச் சுருக்கம்:

    (முன்கதை என்றால் முன்னர் நடந்த கதை)

    சாரதா அந்த பெரிய வீட்டின் வாசலில் கூர்க்காவைப் பார்த்ததுமே முடிவுக்கு வந்து விட்டாள். உள்ளே விட மாட்டான். கெஞ்சினாலும் இரக்கம் காட்ட மாட்டான். இந்தியில் திட்டுவான்.

    வீட்டுக்கார அம்மாவைப் பார்த்துட்டுப் போயிடறேன்ய்யா. வேணும், வேணாம்னு அவங்க சொல்லட்டும்.

    மகூம். காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டான். திருடனைப் பார்ப்பது போலத்தான் பார்ப்பான். விடாமல் கெஞ்சினால் பெண் என்றும் பார்க்காமல் புஜத்தில் கை வைத்து இழுத்துத் தள்ளி விடுவான்.

    ஆனால் இந்த சோப்பு, சலவைத்தூள், க்ளீனிங் ஆயில் இதெல்லாம் விற்க இந்த மாதிரி பெரிய வீட்டு கிராக்கிகளாக பத்து, இருபது பிடித்து விட்டால்தான் லாபம். பேரம் பேசமாட்டார்கள். ஒன்றிரண்டு வாங்காமல் ஒரு டஜன் கொடு என்றுதான் வாங்குவார்கள். கடன் இல்லை. உடனே பணம். தவிர சில இடங்களில் வெயிலுக்கு ஐஸ் வாட்டர் வாங்கிக் குடிக்கலாம்.

    சாரதாவுக்கு இந்த லாபகரமான அம்சங்களை விட இன்னொரு சுவாரசியத்தை பணக்கார வீடுகளில் ரசிப்பாள்.

    விதவிதமான சோபாக்கள், விளக்குகள், உயர்ந்த ஆடைகள், அவர்கள் அணியும் நகைகள், அப்புறம் வாசனையான சென்ட்டுகள்.

    தன் வாழ்நாளில் அனுபவிக்கவேப் போவதில்லை என்று நிச்சயமான விஷயங்களை அருகாமையில் பார்த்து ரசிப்பதில் ஒரு தனி சுவாரசியம் அவளுக்குக் கிடைக்கும்.

    இரண்டு தோள்களிலும் மாட்டியிருந்த கனமான துணியாலான பைகளை நன்றாக ஏற்றி மாட்டிக் கொண்டு சற்றே நம்பிக்கையுடன் அந்த வீட்டின் வாசலை அடைந்தாள் சாரதா.

    என்ன? என்றான் அந்த தமிழ் கற்ற நேபாளத்தான்.

    அம்மாதான் வரச்சொன்னாங்க. சோப்பு, பாத்திரம் கழுவுற பவுடர் இதெல்லாம் கொண்டு வரச் சொன்னாங்க. - மகத்தான வியாபாரப் பொய்!

    பொய் சொல்லாதே, போய்டு.

    சாமி சத்தியமா அன்னிக்கு கோயில்ல பார்த்து சொன்னாங்க சாமி.

    அம்மா ஊர்ல இல்லையேம்மா. நீ நாலு நாள் கழிச்சி வா.

    இந்த ஏரியாவுக்கு இன்னிக்கு விட்டா அடுத்த மாசம் தான் வருவேன்.

    பரவால்லை. அதுவரைக்கும் யாரும் சோப்பில்லையேன்னு குளிக்காம இருக்க மாட்டாங்க.

    அட! அம்மா சொன்னாங்கன்னு சொல்றேன். நான் ஊர்ல இருக்க மாட்டேன், நான் இல்லைன்னாலும் வீட்ல கொடுத்துட்டுப் போன்னு சொன்னாங்க.

    என்னாம்மா இது ரோதனையா போச்சு.

    ஒத்து சொல்றேன். உள்ளாறப் போய் ரெண்டே நிமிஷத்தில வியாபாரம் பண்ணிட்டு வந்துடறேன்.

    அத்தனை பொய்களுக்கப்புறம் அவன் லேசாக அசைந்து கொடுத்தான்.

    இரு. நான் உள்ளேப் போய் அய்யாவைக் கேட்டுட்டு வர்றேன்.

    அவன் உள்ளே செல்ல, அருகில் கட்டிப் போடப்பட்டிருந்த நாயைப் பார்த்தாள். காலடிக்கு நாக்கை வெளியே தொங்கவிட்டுக் கொண்டு இவளையே முறைத்தது. சீறலாமா என்று யோசித்தது.

    குழந்தைக்கு ஜுரம் சரியாய் போயிருக்குமா என்று கவலையுடன் அவளுக்குள் நினைப்பு எட்டிப் பார்த்தது.

    பக்கத்து வீட்டு செல்லம்மாளுக்கு கல்யாணமாகி ஐந்து வருடமாகியும் குழந்தை இல்லாமல் இருப்பது ஒருவகையில் இவளுக்கு செளகரியம். அதனால்தான் நீ வேலைக்குப் போறப்ப குழந்தையை என் வீட்ல விட்டுட்டுப் போ - நான் பார்த்துக்கறேன். என்று அவள் உரிமையோடு குழந்தையை வாங்கிக் கொள்கிறாள். கவலை இல்லாமல் வெளியே வர முடிகிறது.

    ஆனால் நேற்று மாலையிலிருந்து ராசுவுக்கு ஜூரம். தர்மாஸ்பத்திரி அழைத்துச் சென்று ஊசி போட்டுக் கொண்டு வந்தாள். காலையில் சரியாய் சாப்பிடவில்லை. சுணங்கியிருந்தது. லேசாக ஜூரம் இருந்தது. மாலையில் இன்னொரு ஊசி போட வேண்டும் என்று டாக்டர் சொல்லியிருந்தார்.

    சாரதாவிற்கு இன்றைக்கு வேலைக்கு வரச் சம்மதமே இல்லை. ஆனால் போன வாரத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் மழை பெய்ததால் வேலைக்குச் செல்ல முடியாமல் போனதில் கையில் இருந்த சேமிப்புப் பணம் எல்லாம் கரைந்து விட்டது. வேலைக்கு வரவில்லை என்றால் வைத்திய செலவுக்கு சிரமப்படும். செல்லம்மாளிடம் தான் கடன் வாங்க வேண்டும்.

    அவளிடம் ஏற்கனவே பல தடவை வாங்கியது நூறு ரூபாய்க்கு மேலேதாண்டிவிட்டது. 'பழைய பாக்கி இருக்குன்னு நினைக்காதே, காசு தேவைப்பட்டா கூச்சப்படாம கேளு' என்று தான் அவள் சொல்லியிருக்கிறாள். அதற்காக எத்தனை முறை தான் வாங்குவது? தன்மானம்!

    போம்மா. சுருக்க வந்துடு.

    கூர்க்கா வந்து சொன்னதும், சாரதா அந்த வீட்டுக்கு உள்ளே நுழைந்தாள். அந்த வீட்டு முதலாளி சோபாவில் வேட்டியும், முண்டா பனியனுமாக அணிந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தர்.

    என்ன வேணும்னு சொன்னா என் பொண்டாட்டி? என்று கேட்டுக் கொண்டே நிமிர்ந்த அவரின் பார்வை இவள் முகத்தில் இருந்து உடனே இறங்கியபோது... சாரதாவிற்குக் கூசியது.

    இந்த சோப்பு ஒரு டஜன் கொண்டு வரச்சொன்னாங்க.

    இவள் எடுத்து வைத்த போது ஓரக்கண்களால்

    Enjoying the preview?
    Page 1 of 1