Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

December Punnagai
December Punnagai
December Punnagai
Ebook109 pages1 hour

December Punnagai

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903765
December Punnagai

Read more from Pattukottai Prabakar

Related to December Punnagai

Related ebooks

Related categories

Reviews for December Punnagai

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    December Punnagai - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    டிசம்பர் புன்னகை

    December Punnagai

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. A கவிஞர் வசந்தன் Aறிமுகம்,

    2. B.நிருபமாவிற்குக் கொடுக்க நினைத்த Bஸ்க்கெட்

    3. C இன்ஸ்பெக்டர் சிரித்த Cரிப்பு

    4. D கடற்கரையில் ஒதுங்கிய பாD

    5. E விசாரிக்கப்பட்ட Eரண்டு பேர்

    6. F இங்கே Fபடி வந்தது பொம்மை!

    7. G அமைதியாய் கவனிக்கும் பாலாG

    8. H ராஜவேல் சொன்ன Hஸ்யம்

    9. I Iயோ என்னை நம்புங்கள்

    10. J வேகமாய் வந்தார் வக்கீல் Jம்ஸ்

    11. K கவிதைதான் இந்தக் Kசின் திறவுகோல்

    12. L இது Lலாமே யூகம்தான்

    13. M Mபிக் குதித்தார் தயாளன்

    14. N அவன் சட்டை Nன கலர்?

    15. O காரை அவனே Oட்டி வந்தானா?

    16. P கணவன் - மனைவிக்குள் ஏதோ Pரச்சனை

    17. Q இளைஞர்கள் Qவில் நிற்பார்கள்

    18. R தயாளனின் புதிய Rவம்

    19. S இவன்தான், s, இவனேதான்

    20. T சொர்க்கத்திற்கு ஒரு Tக்கெட்

    21. U இந்தக் கலிUகத்தில் சகஜம்

    22. V காலையில் Vபரமாய் பேசலாம்

    1. A - கவிஞர் வசந்தன் Aறிமுகம்,

    இந்தக் கதையை எங்கே துவக்கலாம்?

    ராத்திரி வந்து கொண்டிருக்கும் சென்னையின் கலங்கிய வானத்தில்? அல்லது அது முகம் பார்த்துக் கொள்கிற கட்டுமரங்கள் கரை திரும்பிக் கொண்டிருக்கும் கடலில்? அல்லது சலிப்பே இல்லாமல் மணல்வெளிக்கு வந்து மாய்த்துக் கொள்ளும் கதறுகிற அலைகளில்? பெஸண்ட் நகர் கடற்கரையின் விளக்கு வெளிச்சத்திற்கு அவசியமேற்பட்டுவிட்ட, சாலையில்? சாலையின் ஒரு விளிம்பு கடற்கரையின் மணல்வெளியெனில் மறு விளிம்பில் உப்புக் காற்றில் வர்ணம் குலைந்த, கலைந்த வீடுகளில்? அப்படி ஒரு வீட்டின் மாடியில் சிட் அவுட்டில் மூங்கில் நாற்காலி போட்டுக் கொண்டு அமர்ந்திருந்த வசந்தனில்?

    யெஸ். வசந்தனில் ஆரம்பிக்கலாம்.

    வசந்தன் லுங்கி கட்டியிருந்தான். மேலே மெல்லிய துணியில் ஜிப்பா. கழுத்தை ஓட்டி செயின். கண்ணை ஒட்டி மெட்டல் பிரேமில் கண்ணாடி. உதடுகளை ஒட்டி சிகரெட்.

    வசந்தனுக்கு ஆவணி வந்தால் முப்பது. ஆவணி வராவிட்டால் இருபத்தி ஒன்பது. வசந்தனை யாரும் முன்னால் அடைமொழி சேர்க்காமல் அழைப்பதில்லை.

    கவிஞர் வசந்தன்!

    வசந்தன் நாகப்பட்டினத்தில் ஒரு பெட்ரோல் பங்கில் கேஷியராக வேலை பார்த்துக் கொண்டிருந்ததில் காரோ, ஸ்கூட்டரோ வராத சோம்பல் நேரம் நிறைய கிடைத்ததில் தனக்கு இல்லவே இல்லாத காதலியை கற்பனையாகக் கொண்டு 'ஓ காதலியே, உனக்காக எதையும் தியாகம் செய்யத் தயார் என்றதற்காக என் காதலையே தியாகம் செய்யச் சொல்வது நியாயமா?' என்று விளையாட்டாக எழுதிப் போட்டக் கவிதையை ஒரு பத்திரிகையும் விளையாட்டாகப் பிரசுரித்துவிட்டது.

    வசந்தனுக்கு குஷி பிறந்து ஓ மயிலே! ஓ உயிரே, ஓ ராணியே என்று சகலத்திற்கும் ஓ இனிஷியல் போட்டு விளித்து நிமிடத்திற்கொரு கவிதை எழுதி அனுப்ப ஆரம்பித்துவிட்டான்.

    கவிதை உலகத்திற்கு இருந்த போதாத காலத்தினால் அல்லது பத்திரிகை உலகத்தில் மற்ற சமாச்சாரங்களுக்கு நடுவில் நிரப்புவதற்கு விஷயங்கள் பஞ்சமாய் இருந்ததனால்...

    மளமளவென்று வசந்தன் வளர்ந்தான். எல்லா பத்திரிகைகளிலும் வசந்தனின் கவிதைகள். நாகப்பட்டினத்தில் நடந்த கவியரங்கத்தில் கவிஞர் வசந்தனை தலைமை தாங்க அழைத்த போதுதான் புதிதாக ஜிப்பா தைத்துப் போட்டுக் கொண்டு அத்தர் வாசனையோடு போய் பிளந்து கட்டினான். திருச்சி ரேடியோவில் கவிதை படிக்க அழைத்தார்கள். ஆத்மாவிடம் கவிஞர் வசந்தனின் கவிதைகள் பற்றி?' என்று கேள்வி கேட்டார்கள். இவன் அணுகின பதிப்பகத்தார் உடனே தொகுப்பு போட்டு விழா எடுத்து தினசரியில் ஆஃப்டோன் படத்துடன் செய்தி வந்தது.

    எல்லா பிரபலத்தை விரும்பும் கவிஞர்களுக்கும் போல இவனுக்கும் சினிமா என்கிற காய்ச்சல் வந்தது. ஜிகுஜிகு ரயிலேறி சென்னைப் பட்டணம் வந்து மாதவமிருந்து முன்னணிஇசையமைப்பாளரைச் சந்தித்து தனது இருபது லேமினேட்டட் கவிதை தொகுப்புகளை நீட்டினான் ரிப்பனில் கட்டி. சைடில் திரும்பி புகைப்படக்காரரைப் பார்த்துக் கொண்டான்.

    இதை எல்லாம் எடுத்து ஓரமா வைங்க. நீங்க திறமையானவர். ஆனா சினிமா வேற மொழி. இப்போ இங்கே ம்யூசிக்தான் புருஷன். புருஷன் சொல்றபடி கேக்கற பொண்டாட்டிதான் இங்கேத் தேவை

    வாஸ்த்தவம்தானே. அப்பத்தானே தாம்பத்யம் நடக்கும். ரெண்டு பேரும் புருஷனா இருக்க முடியாதே என்று பின்குறிப்பாக ஹிஹி என்று சிரித்து கன்னித் தமிழன்னையிடம் கற்ற வித்தை அனைத்தும் இசையின் காலடியில் சமர்ப்பிக்க..

    "எங்கே, நான் ஒரு சந்தம் சொல்றேன். அதுக்கு பாட்டு சொல்லுங்க பார்க்கலாம். திருவிழா சீன். கூட்டமா ஆம்பளைங்களும், பொம்பளைங்களும் சேர்ந்து பாடி, ஆடற சிச்சுவேஷன், ரெடியா?' என்றார் இசை.

    டபுள் ரெடி என்றான் கவிஞன்.

    தானன்ன தன்னன்ன தரனன்ன தன்னன்ன தந்தானாய்... என்றார் ராகமாய். விரலிடுக்கில் சிகரெட்டுடன் வசந்தன் யோசித்து, வசந்தங்கள் வாழ்த்தட்டும், வர்ணங்கள் தூவட்டும். நீ ஆடு என்றான்.

    இவ்வளவு இலக்கியமா வேணாங்க.

    இதுவே இலக்கியமா?

    பின்னே, எங்க ஊரு முத்தாக்குறிச்சில இதை விசிலடிக்கணும் கவிஞரே.

    இருங்க. இப்பப் பாருங்க. ஜிஞ்சனக்கு ஜிஞ்சனக்கு நீ எனக்கு! நீ எனக்கு! ஜிஞ்சனக்கு! ஜிஞ்சனக்கு! நான் உனக்கு நான் உனக்கு!

    தூள் பிச்சிட்டிங்க வசந்தன். கை கொடுங்க

    வசந்தன் எண்சீர் விருத்தம், கலிப்பா, ஹைகூ, லொட்டு, லொசுக்கு எல்லாம் மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டு ஜிஞ்சனக்கு, ஜிஞ்சனக்கு என்று முன்னேற்றப் பாதையிலே

    Enjoying the preview?
    Page 1 of 1