Oppanai Pookkal
()
About this ebook
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் நடத்திய குயில் ஏட்டை அவருக்குப்பின் திண்டிவனத்திலிருந்து கவிஞர். கே.எம்.ஏ.வகாப் அவர்கள் நடத்தினார். அந்த ஏட்டில் கொடுக்கப்பட்ட வெண்பா ஈற்றடி "இயற்கை தமிழர்க் கிறை" அந்த ஈற்றடிக்கு எழுதிய வெண்பாதான் (1969) அச்சில் வந்த என் முதல் கவிதையாகும். அந்தந்தக் காலக்கட்டங்களில் நிலவிய சூழ்நிலைகளுக்கேற்பப் பல்வேறு ஏடுகள் கொடுத்த ஈற்றடிகளுக்கு எழுதப்பட்டு வெளி வந்த வெண்பாக்களின் தொகுப்பே இந்தநூல். 1969 முதல் 1998 வரையிலான காலங்களில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் பதிவுகளாக இந்த வெண்பாக்கள் திகழ்கின்றன.
இந்த நூலுக்கு வாழ்த்துரை நல்கிய பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. அரங்க. தெய்வமணி அவர்களுக்கும்,அணிந்துரை வழங்கிய தமிழ்ச்சான்றோர் பேரவைத்தலைவர் சிலம்பொலி செல்லப்பனார் அவர்களுக்கும், கவிக் கொண்டல் ஏட்டின் ஆசிரியர் கவிஞர் மா. செங்குட்டுவன் அவர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன், கருமலைத்தமிழாழன்
Read more from Karumalai Thamizhazhan
Kalam Vellum Kalaignar Rating: 0 out of 5 stars0 ratingsAgamugam Rating: 0 out of 5 stars0 ratingsVerin Vizhuthugal Rating: 0 out of 5 stars0 ratingsNenjin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsMannum Marabum Rating: 0 out of 5 stars0 ratings
Related to Oppanai Pookkal
Related ebooks
Virpanai Pookal Part - 1 Rating: 0 out of 5 stars0 ratingsManam Maratha Kathamba Malargal Rating: 0 out of 5 stars0 ratingsValaiyil Vandhe Alaiyil Midhakkum Kavithaigal Rating: 0 out of 5 stars0 ratingsTamil Ennum Vinthaiyil (Vi)chithira Kavi Vilakkam Part - 2 Rating: 0 out of 5 stars0 ratingsKuzhalaagi Naan… Rating: 0 out of 5 stars0 ratingsMalarum Ullam - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsYaathumaagiye… Rating: 0 out of 5 stars0 ratingsKallil Kasintha Thulikal! Rating: 0 out of 5 stars0 ratingsPenn Kavikkuralgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhal Muthaleedu Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiyam Mattrum Cinema Prabalangal - Part 1 Rating: 0 out of 5 stars0 ratingsKaiyoppam Rating: 4 out of 5 stars4/5Thiraippada Paadalgalodu Oru Payanam Rating: 0 out of 5 stars0 ratingsSemmozhi Valartha Semmalgal Rating: 0 out of 5 stars0 ratingsKaadhalum Veeramum Rating: 0 out of 5 stars0 ratingsEllu Vayal Pookkaley Rating: 0 out of 5 stars0 ratingsPennukku Urimai Thareer! Rating: 0 out of 5 stars0 ratingsKilai Nila Rating: 0 out of 5 stars0 ratingsManam Enum Vanam Rating: 0 out of 5 stars0 ratingsKaaviya Kavingnar Vaali Rating: 0 out of 5 stars0 ratingsSenthamizh Sevvisai Valarththa Semmalgal Rating: 0 out of 5 stars0 ratingsIravin Katharal Rating: 0 out of 5 stars0 ratingsIdhaya Nathi Rating: 0 out of 5 stars0 ratingsKanaiyazhi - October 2021 Rating: 0 out of 5 stars0 ratingsTheethum Nandrum Rating: 0 out of 5 stars0 ratingsIlakkiya Ulagil Kambarin Kaatchi, Viliyin Maatchi, Sanga Pulavargalin Aatchi! Rating: 0 out of 5 stars0 ratingsUdaintha Nilakkal - Part 1 Rating: 4 out of 5 stars4/5Paravasamottum Kandhapurana Kathaigal Rating: 0 out of 5 stars0 ratingsAmuthey, Vazhikaattu! Rating: 0 out of 5 stars0 ratingsVazhvenum Nathi Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Oppanai Pookkal
0 ratings0 reviews
Book preview
Oppanai Pookkal - Karumalai Thamizhazhan
http://www.pustaka.co.in
ஒப்பனை பூக்கள்
Oppanai pookkal
Author:
கருமலைத் தமிழாழன்
Karumalai Thamizhazhan
For more books
http://www.pustaka.co.in/home/author/karumalai-thamizhazhan
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன்
அணிந்துரை
தமிழ்க் கவிதையில் வெண்பா ஒரு யாப்பு வகை. நேரிசை, இன்னிசை என்பன இதன் இரு பிரிவுகள். வெண்பாவை வெள்ளை என்றும் கூறுவதுண்டு. வெண்பா இலக்கணச் செழுமை நிறைந்தது.
தமிழிலுள்ள நால்வகைப்பாக்களுள் அகவற்பா சங்க இலக்கியங்களில் முதன்மைபெற்றிருந்தது. பின்னர்ச் சிலப்பதிகாரக் கதைகளின் இறுதியில் வெண்பாக்கள் காணப்படுகின்றன. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய சங்கம் மருவிய காலத்தில் வெண்பா பேரிடம் வகிக்கிறது. நாலடியார், பழமொழி போன்ற பல நீதிநூல்கள் முழுவதும் வெண்பாவிலேயே அமைந்துள்ளன. புகழேந்திப்புலவர் நளவெண்பா காவியத்தைத் சிந்தையள்ளும் வெண்பாக்களில் எழுதியுள்ளமையால், 'வெண்பாவிற் புகழேந்தி' என்றொரு மொழியும் எழுந்தது.
ஊரைச் சிறப்பித்துப் பத்துவெண்பாக்களில் பாடும் ஊர் வெண்பா; தேவர், அரசர் செயல்கள் கடிகை அளவில் தோன்றி நிகழ்வதாகப்பாடும் கடிகை வெண்பா; அவற்றையே நாழிகை அளவில் நடைபெறுவதாகப் பாடுகின்ற நாழிகைவெண்பா; வண்ணமும் வெண்பாவுமாக 80 பாடல் பாடும் இல்லற வெள்ளை; சிறப்புமிக்க பெண்ணை ஒன்பது வெண்பாவாலும் ஒன்பது வகுப்பாலும் பாடுகின்ற மங்கல வெள்ளை; பாட்டுடைத்தலைவன் ஊரினை 50, 70, 90 நேரிசை வெண்பாக்களால் பாடும் ஊர் நேரிசை வெண்பா; அவற்றையே இன்னிசையில் பாடியுள்ள ஊர் இன்னிசை வெண்பா; இதே போல் அரசன் பெயரை நேரிசையிற் பாடும் பெயர் நேரிசை, இன்னிசையில் பாடும் பெயர் இன்னிசை முதலானவை வெண்பாயாப்பால் அமைந்த சிற்றிலக்கியங்கள்.
இந்நூற்றாண்டில் வெண்பாயாப்பில் அமைந்த நூல்கள் பல எழுந்துள்ளன. பெரும்புலவர் ஜெகவீரபாண்டியனார் ஒவ்வொரு வெண்பாவிலும் பின்னிரண்டு அடிகள் ஒரு குறளாக அமைய திருக்குறள் முழுமையும் அடங்கிய 'குமரேச வெண்பா' பாடியுள்ளார். ஒவ்வொரு வெண்பாவிலும் 'குமரேசா’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. இதை போலவே, 'சிதம்பர வெண்பா' என்றொரு நூலும் உண்டு. இதில் தெரிவு செய்யப் பெற்ற 112 திருக்குறள் பாடல்கள் பின்னிரண்டு அடிகளாக அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வெண்பாவிலும் 'சிதம்பரனே' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
முத்துரெங்கராசன் என்பார், 'வெண்பா விருந்து’ என்னும் நூலில் காதல், பெண்கள், தேன், தமிழ் எனப்பல பிரிவுகளில் 103 வெண்பாக்கள் பாடியுள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் பரவும் வகையில் வெ.வரதராசன் என்பார், 'கலைஞர் வெண்பா நூல்’ இயற்றியுள்ளார். கிருமமரியந்தோணி நாடார், 1001 பாடல்கள் கொண்ட 'கிறிஸ்து வெண்பா’ எழுதியுள்ளார். கவிஞர் திரு பி.கே. முத்துசாமி என்பார் 3005 வெண்பாக்களில் 'பெரியார் புரட்சிக்காப்பியம்' எனும் நூலைப் படைத்துள்ளார். இதனுள் பருவத்துக்கு 20 ஆக பத்துப்பருவங்களுக்கும் 200 வெண்பாக்கள் கொண்ட பெரியார் பிள்ளைத்தமிழும் உள்ளன. புலவர் திரு. நா. அறிவுஒளி இயற்கையை 1475 வெண்பாக்களில் பாடி, 'தென்றல்' எனும் தலைப்பில் அரியநூலாக வெளியிட்டுள்ளார்.
வெள்ளைக்கால் சுப்பிரமணிய முதலியார் அவர்களின் 'அகலிகை வெண்பாவும்’, பாவேந்தர் பாரதிதாசனாரின், 'மணிமேகலை வெண்பாவும்’ இந்நூற்றாண்டில் சிறந்த நூல்களாகும்.
இதழ்கள் பல, வெண்பாவில் ஈற்றடியைத் தந்து, ‘வெண்பாப்' போட்டிகள் நடத்தியுள்ளன. இவ்வகையில் வெளிவந்த வெண்பாக்கள் மிகப்பெரும் அளவின. கண்ணதாசனின் 'தென்றல்' இதழ் நடத்திய வெண்பாப் போட்டிக்கு வந்தவற்றில் 1000 தொகுக்கப்பட்டு, 'தென்றல் வெண்பா' எனும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூற்றாண்டில் வெண்பா வளர்ச்சிக்கு இதழ்கள் ஆற்றியுள்ள தொண்டு போற்றுதற்குரியது.
பாவலர் கருமலைத்தமிழாழன் இன்றைய கவிஞர்களுள் முன் வரிசையில் இடம்பெற்றுள்ள சிறந்த மரபுக்கவிஞர். இவர் புலமை நலம்மிக்கவர்; தமிழ் நலம் பேணும் தனியா வேட்கையர். 24 இதழ்களில் நடந்த போட்டிகளுக்கு இவர் எழுதிய வெண்பாக்கள் முந்நூறுக்கு மேற்பட்டவை தொகுக்கப்பட்டு, ‘ஒப்பனைப்பூக்கள்' எனும் தலைப்பில் நூலாக வெளிவருகிறது.