Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thendral Sudum
Thendral Sudum
Thendral Sudum
Ebook102 pages56 minutes

Thendral Sudum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603732
Thendral Sudum

Read more from Devibala

Related to Thendral Sudum

Related ebooks

Reviews for Thendral Sudum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thendral Sudum - Devibala

    http://www.pustaka.co.in

    தென்றல் சுடும்

    Thendral Sudum

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    அன்னை சாரதா அநாதை இல்லத்தில் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது! நாலு வயது பெண் குழந்தை செல்விக்கு நெஞ்சுவலி என அழத் தொடங்கியது.

    உடன் இருக்கும் ஆயா, முதலில் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை! கொஞ்ச நேரத்தில் குழந்தையின் அழுகை அதிகமாகி, அது ஒரு கட்டத்தில் மயங்கி விழ, ஆயா பதறிப் போய் நிர்வாகிக்கு விவரம் சொல்ல, எல்லோரும் பரபரப்பானார்கள்.

    உடனே செல்வியை காரில் போட்டுக்கொண்டு, நகரத்தில் இருக்கும் பிரபலமான ஒரு மருத்துவமனைக்கு விரைந்தார்கள்.

    குழந்தை அனுமதிக்கப்பட்டது. உடனே பரிசோதனை ஆரம்பமானது.

    நிர்வாகியும், உடன் வந்த முக்கியமான இருவரும் பதற்றத்துடன் காத்திருக்க, மருத்துவர் வெளிப்பட்டார்.

    அந்தக் குழந்தையோட இதயத்துல ஒரு சின்னத் துளை இருக்கு! அதனால், அபாயம்தான். ஒரு பெரிய அறுவை சிகிச்சை நடத்தியாகணும். அதையும் உடனடியா செய்ய முடியாது. அதுக்கு அந்தக் குழந்தையோட உடல்நிலையைத் தயார்படுத்தணும்!

    நிர்வாகி மிரண்டுபோனார்.

    உங்க அநாதை இல்லத்துல இருக்கா? யாரும் இல்லையா?

    இருக்காங்க! அப்பா உண்டு! வாரந்தோறும் சனிக்கிழமை வந்து பார்த்துட்டுப் போவாரு!

    ஏன், அநாதை இல்லத்துல விட்டுவச்சிருக்கார்?

    இந்தக் குழந்தைக்கு தாய் இல்லை. இதைப் பராமரிக்க சரியான ஆள் இல்லைன்னு அவர் இங்கே விட்டிருக்கார். இல்லத்துக்கு நிறைய நன்கொடை தர்றார். இது நாதியில்லாத குழந்தை இல்லை! பார்த்துக்க சரியான ஆள் இல்லை.

    சரி! இங்கே ரெண்டு, மூணு நாள் இருக்கட்டும். அவங்கப்பா வந்தா, தகவல் சொல்லுங்க!

    உயிருக்கு ஆபத்து உண்டா டாக்டர்?

    கொஞ்சம் சிக்கலான நிலைதான். அறுவை சிகிச்சைக்குப் பிறகும் பாதி நம்பிக்கைதான் தரமுடியும். கடவுளை நம்புங்க!

    நன்றி டாக்டர்.

    கூட இருந்து யாராவது பார்த்துப்பீங்களா?

    ஆயா இருக்காங்க! ஆனா, இல்லத்துல நிறைய குழந்தைங்க இருக்கு. அவங்க வரமுடியாது.

    சரி, விடுங்க! எங்க நர்சு யமுனா இருக்காங்க! அவங்களை பார்த்துக்கச் சொல்றோம். நீங்க வந்து விசாரிச்சுக்குங்க! ரெண்டு, மூணு நாளில் கூட்டிட்டுப் போயிடலாம்!

    மருத்துவர், யமுனாவை அழைத்தார்.

    யமுனா வந்து வணங்கினாள். பார்க்க வசீகரமாக, சிரித்த முகத்துடன் இருந்தாள்.

    மருத்துவர் விவரத்தைச் சொன்னார்.

    நான் பார்த்துக்கிறேன், டாக்டர்!

    தன் பிரச்சினை அந்தக் குழந்தைக்கு எந்தக் காரணத்தாலும் தெரிய வேண்டாம், யமுனா.

    சரி டாக்டர்.

    அந்த நிர்வாகி, யமுனாவிடம் ஒப்படைத்துவிட்டு விலக, யமுனா உள்ளே வந்தாள்.

    அப்போதுதான் செல்வி விழித்தது.

    செல்வி! எப்படி இருக்கே?

    நான் எதுக்கு ஆஸ்பத்திரியில் இருக்கேன்?

    உனக்கு உடம்புக்கு முடியலை! இங்கே கூட்டிட்டு வந்துட்டாங்க! ரெண்டு நாள் ஓய்வெடுத்தா, சரியாப்போகும்! அதன் தலையை இதமாகத் தடவி, யமுனா மெதுவாக முத்தமிட்டாள்.

    எங்கப்பாகிட்ட சொல்லிட்டீங்களா?

    சொல்லிடுவாங்க, செல்வி!

    நீங்க அழகா இருக்கீங்க! உங்களை எனக்குப் பிடிச்சிருக்கு!

    நன்றிடா தங்கம்! அதிகமா பேசக்கூடாது! நல்லா ஓய்வு எடுத்தாத்தான் சீக்கிரம் போக முடியும். கண்ணை மூடிப் படுத்துக்கோ!

    மருத்துவர் வந்தார்.

    இன்னிக்கு ராத்திரியும் நீ இந்தக் குழந்தை கூடவே இருப்பியா, யமுனா?

    இருக்கேன், டாக்டர். வீட்டுக்கு நான் தகவல் கொடுத்துடுறேன்.

    நல்லதும்மா.

    அதற்கு தேவையான சிகிச்சை முறைகளை மருத்துவரிடம் கவனமாகக் கேட்டறிந்து, யமுனா அதன்படி செயல்படத் தொடங்கினாள்.

    அன்று இரவுக்குள் செல்வி, யமுனாவிடம் பசை போல ஒட்டிக் கொண்டாள்.

    இல்லத்தில் என்னதான் ஆயா பார்த்தாலும், பல குழந்தைகள் இருப்பதால், தனிப்பட்ட கவனம் இருக்காது!

    இங்கு யமுனா, செல்வி மேல் தனிப்பட்ட அக்கறை செலுத்த, செல்விக்கு அது மிகவும் பிடித்து விட்டது!

    உங்களை நான் எப்படி கூப்பிடட்டும்?

    உன் விருப்பம் போல!

    எனக்கு அம்மா இல்லை! அம்மான்னு கூப்பிடட்டுமா?

    யமுனாவுக்கு அது கேட்ட விதம், அந்தக் குரலில் இருந்த அழுத்தமான ஏக்கம், அதன் ஆசை எல்லாம் லேசாக ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது!

    கூப்பிடும்மா! உன் விருப்பம் அதுதான்னா, அப்படியே கூப்பிடு!

    அம்மா!

    யமுனாவுக்குள் காரணம் தெரியாத ஒரு சிலிர்ப்பு ஓடியது! மனசுக்குள் மிதமான ஒரு மழை பெய்தது!

    அதற்குத் தேவையான மருந்துகளைத் தந்து, மெல்ல மெல்ல அதை உறங்க வைத்தாள்.

    வீட்டுக்கு ஏற்கெனவே தொலைபேசி மூலம், 'இரவு வரமாட்டேன்' எனத் தகவல் சொல்லிவிட்டாள்.

    மருத்துவர், திரும்பவும் வந்தார். பார்த்தார்.

    "யமுனா நீ பக்கத்துல இருந்தாலே, இந்தக் குழந்தை சீக்கிரம் குணமாயிடும்... நோயாளிகள் யாருமே

    Enjoying the preview?
    Page 1 of 1