Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kadivalam
Kaadhal Kadivalam
Kaadhal Kadivalam
Ebook164 pages1 hour

Kaadhal Kadivalam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603719
Kaadhal Kadivalam

Read more from Devibala

Related to Kaadhal Kadivalam

Related ebooks

Reviews for Kaadhal Kadivalam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kadivalam - Devibala

    http://www.pustaka.co.in

    காதல் கடிவாளம்

    Kaadhal Kadivalam

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    1

    தடபுடவென சத்தத்துடன் வாசலில் 'பைக்' வந்து நின்றது! அதை நிறுத்திவிட்டு, தீனா இறங்கி உள்ளே வந்தான்!

    அம்மா! பசிக்குது! சாப்பாடு போடு!

    பதிலே இல்லை!

    தீனா வந்து உட்கார்ந்து விட்டான். அம்மா! ரொம்பப் பசிக்குது! வந்து சாப்பாடு போடு!

    அம்மா வந்து எட்டிப் பார்த்தாள்.

    இப்பத்தானே வந்தே? கொஞ்சம் இரு! எங்களுக்கும் வீட்டுல வேலை இருக்கில்லை? வர்றேன்!

    தீனா எழுந்தான். சமையல்கட்டுக்குள் நுழைந்தான். ஒரு தட்டை எடுத்துக் கழுவி, சமையல் மேடைக்கு வந்து பாத்திரத்தைத் திறந்தான். சோற்றை தட்டில் நிரப்பிக் கொண்டு, அதன்மேல் குழம்பையும் ஊற்றிக் கொண்டான். பொரியல், இன்னொரு பாத்திரத்தில் இருந்தது! அதை எடுத்து வைத்துக் கொண்டு திரும்பினான்.

    அம்மா நின்ற நிலையில் பார்த்துக்கொண்டே இருந்தாள்.

    என்ன பார்க்கிறே? ஒருத்தர் உதவியை நாடும்போதுதானே நட்டுக்கிறீங்க? நானே எடுத்துப் போட்டுக்கிட்டு சாப்பிட்டா, நீ தேவையில்லைதானே?

    வேகமாக கூடத்துக்கு வந்து, தரையில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்.

    இந்த அறிவு எல்லாத்துலேயும் வேணும்!

    தீனா நிமிர்ந்தான்.

    என்ன சொல்றே?

    சாப்பிட்டு முடி! அப்புறம் சொல்றேன்!

    எதுவா இருந்தாலும் இப்ப... இப்பவே சொல்லு!

    ஒருத்தர் உதவியை நாடும்போதுதானே நட்டுக்கிறீங்கன்னு கேட்டே? வயசு 27. சரியாப் படிக்கலை! உருப்படியா ஒரு வேலைக்குப் போகாம உங்கப்பா தயவை நாடித்தானே இந்த வீட்டுல இருக்கே? அப்புறமென்ன தன்மானம் தட்டுக் கெட்டுப் போகுது? உனக்கு மூணு வயசு இளையவன் கோபால், நல்லா படிச்சிட்டு இன்னிக்கு நாப்பதாயிரம் சம்பளம் வாங்குறான்.

    அட, இப்ப கல்லூரி படிப்பை முடிச்ச உன் தங்கச்சிக்கு பாங்கியில் வேலை கிடைச்சாச்சு! அவங்களையெல்லாம் பார்த்தாவது நீ திருந்த மாட்டியா? முன்கோபம், அடிதடி, வம்பை விலைக்கு வாங்குறது, வீண் விவகாரம்னு ஊரில் ரவுடின்னு பேர் எடுத்தாச்சு! கவுரவமான நம்ம குடும்பத்துக்கு இது தேவையா? உங்கப்பா நொந்து போறாரு!

    தீனா நிமிர்ந்தான்!

    அம்மா! நான் பொறுக்கித்தனம் பண்ணலை! என் கண் முன்னால் தப்பு நடந்தா, அதைத் தட்டிக் கேக்காம என்னால் இருக்க முடியாது! இப்பகூட கொஞ்சம் முன்னால ரோட்டுல ஒரு பொண்ணை மூணு பேர் வம்புக்கு இழுத்தாங்க! புடிச்சு நாலு சாத்து சாத்திட்டுத்தானே வர்றேன்? எப்படி பார்த்துக்கிட்டு சும்மா இருக்க முடியும்?

    அம்மா பேச வாய் திறப்பதற்குள்,

    சரக்கென வாசலில் போலீஸ் 'ஜீப்' வந்து நின்றது! இரண்டு போலீஸ்காரர்கள் வேகமாக உள்ளே வந்தார்கள்.

    இங்கே தீனா யாரு?

    நான்தான்!

    உடனே ஸ்டேஷனுக்கு வா!

    எதுக்கு?

    வட்டச்செயலாளர் மகனை ரோட்டுல வச்சு நீ அடிச்சிட்டே! அவன் ஆஸ்பத்திரியில் இருக்கான்!

    யாரு வட்டச் செயலாளர் மகன்... அந்தப் பொண்ணை கலாட்டா பண்ணின பொறுக்கியா?

    அதையெல்லாம் அங்கே வந்து கேளு! நீ வர்றியா? இல்லைன்னா, இழுத்துட்டுப் போகட்டுமா?

    கொஞ்சம் இருய்யா! சாப்பிட்டுட்டு வந்திடுறேன்!

    அவசரமாக நாலு வாய் அள்ளிப் போட்டான். அவர்களுடன் வண்டியில் ஏறினான். அது புறப்பட்டுப்போனது!

    அம்மா பதற்றமாகி விட்டாள். உடனே 'டயல்' செய்தாள். குருசாமி இருக்காருங்களா?

    ஒரு இடைவெளிக்குப் பிறகு அப்பா எடுத்தார்.

    என்னங்க... நம்ம தீனாவை போலீஸ்காரங்க கூட்டிட்டுப் போறாங்க!

    என்னவாம்?

    வட்டச்செயலாளர் மகனை இவன் அடிச்சு, அவன் ஆஸ்பத்திரியில் கிடக்கானாம்! கூட்டிட்டுப் போயிருக்காங்க!

    விடு! அங்கேயே இருக்கட்டும். முட்டிக்கு முட்டி தட்டட்டும்! வீட்டுக்கு வந்து அவன் என்ன பண்ணப் போறான்?

    இப்படி சொன்னா எப்படீங்க? ஆயிரம்தான் இருந்தாலும், அவன் நமக்கு மகனில்லையா?

    இல்லைடி! அவன் நமக்கு மகனே இல்லை! எனக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு! கொஞ்ச நாள் களி தின்னட்டும். வெளியில எடுக்க யாரும் இல்லைன்னு ஆகணும். சரி சரி! இங்கே இருந்தபடி விரிவா நான் பேசமுடியாது! நீ வை! பார்த்துக்கலாம்!

    அவர் வைத்தார்.

    மனைவியிடம் அப்படி பேசினாலும் ஒரு மாதிரி பதற்றமாக இருந்தது!

    உடனே 'டயல்' செய்தார்.

    ஆதி! கொஞ்சம் வந்து என்னைப் பார்க்கிறியா? அவசரம்!

    ஆதி என்று அவர் அழைத்தது, அவரது வக்கீல் நண்பரை! அலுவலக வேலைகளை அவர் கவனிக்க, அடுத்த அரை மணியில் வக்கீல் ஆதி வந்துவிட்டார்.

    சொல்லுப்பா!

    தீனா உள்ளே இருக்கான். வட்டச்செயலாளர் பையனை அடிச்சிட்டானாம். அரசியல் எல்லைக்குள் நுழைஞ்சா தேறமாட்டான். என்னப்பா இது? என்னை என் மகன் நிம்மதியா வாழவிட மாட்டானா? இவன் அடாவடி பண்ணிட்டு உள்ளே போறதும், நீ போய் வெளியில எடுக்கிறதும் வாடிக்கையாப் போச்சு! இதுக்கு என்னப்பா முடிவு?

    சரி விடு! இந்தவாட்டியும் கூட்டிட்டு வந்திடுறேன். ஆனால், குடும்பத்துல எல்லாரும் கூடிப் பேசி ஒரு முடிவுக்கு வாங்க! இவனால் உன் மற்ற ரெண்டு புள்ளைங்க வாழ்க்கை கேள்விக்குறி ஆயிடக்கூடாது!

    அடுத்தவன் கோபால் ஆம்பளை! நல்ல வேலையில் இருக்கான். அவனைப் பற்றி நான் கவலைப்படலை! ஆனா, என் பொண்ணு உமா வாழ்க்கை பாதிச்சிடக்கூடாது!

    மனசைக் கல்லாக்கிட்டு ஒரு முடிவை எடு!

    சரிப்பா!

    அந்த வக்கீல் கோபால் வெளியே வந்தார். செல்போனில் அழைப்பு வந்தது. எடுத்துப் பேசினார். அவர் மனைவிதான். வீட்டு வேலையாக அந்தம்மா அழைக்க, இருடி! ஒரு முக்கிய வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்திடுறேன் எனப் புறப்பட்டார்.

    சில நிமிடங்களில் அவர் குறிப்பிட்ட அந்த காவல் நிலையத்துக்குள் நுழைய, காட்சியே வேறு மாதிரி இருந்தது!

    போலீஸ் அதிகாரி முன் அந்தப் பெண் நின்று கொண்டிருந்தாள்.

    என்னம்மா சொல்றே?

    அந்தப் பொண்ணை பட்டப்பகலில் மூணு பேரா சேர்ந்து கலாட்டா பண்ணினாங்க! அவளால் தப்பிக்க முடியலை! தவிச்சா! ரோட்டில் போறவங்க யாரும் உதவிக்கு வரலை! அந்த நேரம், அந்தப் பக்கமா 'பைக்'ல வந்த இவர்தான் அவளைக் காப்பாத்தினார். ரவுடிங்க அடாவடி பண்ணினாங்க! அடிச்சார். நான் கண்களால் பார்த்தேன்!

    அடிபட்டவன் ஆஸ்பத்திரியில் இருக்கான் தெரியுமா?

    ஆஸ்பத்திரிக்கு போற அளவுக்கெல்லாம் அவர் அடிக்கலை! நாலு தட்டுத் தட்டினார். அதையும் நான் பார்த்தேன்!

    அவன் வட்டச்செயலாளர் மகன்!

    யாரா இருந்தா என்னங்க? பொம்பளைக்கு ரோட்டுல பட்டப்பகலில் பாதுகாப்பில்லை! அரசியல்வாதி மகனா இருந்தா, அக்கிரமங்களைப் பொறுத்துக்கணுமா?

    நீ யாரும்மா?

    ‘தீப்பொறி' பத்திரிகை நிருபர். நல்லது செஞ்சவரை போலீஸ் வண்டியில் ஏத்திட்டுப் போறதைப் பார்த்து சந்தேகப்பட்டுத்தான் வந்தேன்! அவரை விடுங்க!

    இல்லைன்னா?

    நாளைக்கு பத்திரிகையில் இந்தச் செய்தியை எழுதி நாறடிப்பேன். முடிஞ்சா தடுத்துக்குங்க! எங்க பத்திரிகையோட விற்பனை என்ன தெரியுமா? சில லட்சங்கள்!

    வக்கீல் ஆதி சிரித்தபடி உள்ளே நுழைந்தார்.

    பாராட்டுகள். உங்க பேரென்னம்மா?

    அவள் திரும்பினாள். நந்தினி!

    நல்ல பேர். நான் வக்கீல் ஆதி! தீனாவை வெளியில் எடுக்கத்தான் வந்தேன். என் வேலையை நீ சுலபமாக்கிட்டே! இன்ஸ்பெக்டர், தீனாவை விடுங்க! இல்லைன்னா, உங்க நிலைமை கவலைக்கிடமாகும்! பத்திரிகைக்காரங்களை பகைச்சுகிட்டு நிம்மதியா இருக்க முடியாது!

    சில நொடிகளில் தீனா வெளியே அழைத்து வரப்பட்டான்.

    கையெழுத்திட்டான்.

    வெளியே வந்து வக்கீல் ஆதிக்கு நன்றி சொல்ல, நன்றியை நந்தினிக்குச் சொல்லுத் தீனா!

    திரும்பிப் பார்த்தான்.

    ஆதி விவரத்தை முழுமையாகச் சொல்லி

    Enjoying the preview?
    Page 1 of 1