Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paattu Kalantidave
Paattu Kalantidave
Paattu Kalantidave
Ebook93 pages59 minutes

Paattu Kalantidave

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703701
Paattu Kalantidave

Read more from Vidya Subramaniam

Related to Paattu Kalantidave

Related ebooks

Reviews for Paattu Kalantidave

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paattu Kalantidave - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    பாட்டு கலந்திடவே

    Paattu Kalantidave

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    1

    நசிகேதா! பூவுலகில் அடைதற்கரிய

    ஆசைகள் எவையெவை உண்டோ அவை

    அனைத்தையும் கேள் தருகிறேன்

    சாரதிகளுடன் தேர் வேண்டுமா? வாத்தியக்

    கலைஞர்கள் வேண்டுமா? தேவலோகப்

    பெண்கள் வேண்டுமா? பெற்றுக் கொள்.

    அவர்களது பணிவிடையைப் பெற்றுக்

    கொள். ஆனால் மரணத்தைப் பற்றி

    மட்டும் கேட்காதே.

    என்ன புத்தகம் அது?

    ரமணன் வைத்திருந்த புத்தகத்தைக் காட்டிக் கேட்டாள் மீனாட்சி.

    கடோபநிஷதம் படிக்கிறியா? அவன் அவளிடம் புத்தகத்தின் முகப்பைக் காட்டினான். 'மரணத்திற்குப் பின்னால்’ என்ற அட்டையின் கூடுதல் வாசகங்களைப் படித்ததும் அவள் முகம் வாடியது. ஒருவித பதற்றம் படர்ந்தது. பெட்ரூம் கதவை அவசரமாய் சார்த்தித் தாளிட்டுவிட்டு வந்தாள். ரமணன் சிரித்தான்.

    யார் உள்ள வந்துடக்கூடாதுன்னு கதவைச் சாத்தற நீ?

    அவள் பதில் சொல்லாமல், அவன் கையிலிருந்த புத்தகத்தைப் பிடுங்கி டேபிள் மீது எறிந்தாள்.

    நல்ல புத்தகம்மா. எடுத்துப்படிச்சுத்தான் பாரேன். எல்லா பயமும் போய்டும்.

    அவசியமில்ல. நீங்களும் படிக்க வேண்டாம். வேற ஏதாவது பேசுவோம்.

    உக்காரு மீனாட்சி நான் படிக்கிறேன் கேளுஅவன் அவள் தோளைப்பற்றிக் கட்டிலில் உட்கார வைத்துவிட்டுப் புத்தகத்தைக் கையில் எடுத்தான்.

    பிறப்பும் மரணமும் வாழ்க்கையின் இரண்டு மாபெரும் புதிர்கள். பிறப்பு நம்வாழ்வில் நிகழ்ந்து விட்ட ஒன்று. பிறப்புக்குப் பிறகு நம் நிலை நமக்குத் தெரிகிறது. மற்றொரு புதிர், மரணம். மரணம் என்றால் என்ன? மரணத்திற்குப் பின் என்ன நடக்கிறது? அவன் என்ன ஆகிறான்?

    மீனாட்சி அதற்கு மேல் பொறுக்க முடியாமல் புத்தகத்தை அவன் கையிலிருந்து பிடுங்கி எறிந்து விட்டு, முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

    ஏய்… ஏய் மீனாட்சி என்ன இது? கமான்மா. என்ன நீ கூட இப்படிக் கோழையா இருக்க? எல்லாரும் ஒருநாள் மரணத்தைச் சந்திச்சு தானே தீரணும்? பகவத்கீதை என்ன சொல்லுது தெரியுமா?

    ப்ளீஸ் ரமணன். ஏற்கனவே நான் செத்துட்டிருக்கேன்.

    நீ எப்படி? நானில்ல இப்போ எமதர்மனைச் சந்திக்கத் தயாராகிட்டிருக்கேன். அவங்கிட்ட நானும் சில கேள்விகள் கேக்கலாம்னு இருக்கேன். நசிகேதனைப் போல. அதுக்காகத்தான் இந்த புக்கை வாங்கிட்டு வந்தேன்.

    மீனாட்சி எழுந்தாள். அவனைச் சில வினாடிகள் வெறித்துப் பார்த்தாள்.

    ஓ.கே.! நானும் உங்களோட வர்றேன். ரெண்டு பேரும் சேர்ந்தே எமனைப் பார்த்துக் கேள்வி கேட்போம். ஏன்யா இந்த வயசுல எங்களை உன் லோகத்துக்கு விருந்தாளியா கூட்டிட்டு வந்துட்டன்னு கேப்போம். சரியா?

    அவள் டேபிள் திறந்து சிறிய பாட்டிலை எடுத்துதூக்க. மாத்திரைகளை உள்ளங்கையில் கொட்டிக் கொள்ள, ரமணன் சட்டென்று அதைத் தட்டிவிட்டான்.

    டோண்ட் பி ஸ்டுப்பிட் மீனாட்சி, மறந்துட்டியா நீ? நாம ரெண்டு பேரும் காதலிக்கும் போதே சத்தியம் செய்திருக்கோம். நம்ம வாழ்க்கைல என்ன கஷ்டம் வந்தாலும், நம்ம காதலே தோல்வி அடைந்தாலும், எந்தச் சூழ்நிலைலயும் தற்கொலை எண்ணம் மட்டும் நமக்கு ஏற்பட விடக்கூடாதுன்னு.

    நாம் இன்னொரு சத்தியமும் செய்திருக்கோம். நமக்குள்ள பிரிவு ஏற்பட விடறதில்லைன்னு.

    கரெக்ட். நாமளா பிரியறதில்லைன்னு தான் சத்தியம் பண்ணி இருக்கோம். ஆனா, மரணம் நம்ம சத்தியத்துக்கு அப்பாற்பட்டது மீனாட்சி. எமதர்மன் கிட்ட சத்தியம் வாங்கலையே. எங்களைப் பிரிச்சுடாதேன்னு!

    மீனாட்சி அவன் நெஞ்சில் முகம் புதைத்து அழுதாள். என்னால முடியலை ரமணன். நான் எப்படி உன்னை விட்டுட்டு? பிரியறதுக்கா நாம் இவ்வளவு கஷ்டப்பட்டு ஒண்ணு சேர்ந்தோம்? "அதான் வாழ்க்கை மீனாட்சி. நாம் நினைக்கிற மாதிரி அது இருக்காது. வேணாம்னு நினைக்கறது நடக்கும். கேக்கறது கிடைக்காது. சிரிக்கணும்னு ஆசைப்படும்

    Enjoying the preview?
    Page 1 of 1