Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nilavin Marupakkam
Nilavin Marupakkam
Nilavin Marupakkam
Ebook86 pages42 minutes

Nilavin Marupakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Vidhya Subramaniam born in 1957. She was introduced in Mangaiyar Malar through a story Mudhal Konal in 1982. She has written more than 100 short stories and novels. She has got lots of rewards in her 27 years of career. Rewards like Anandhachari Arakattalai Virudhu for her essay Thennang Kaatru, Tamilnadu government award for her Vanathil Oru Maan short stories, Bharat State Bank's first prize for her Aagayam Arugil Varum essays, Kovai Lilly Deivasigamani Virudhu for her Kanniley Anbirunthal short stories. Beyond the Frontier has her outstanding short stories which are translated to english. Anthology of Tamil Pulp Fiction also has her 2 short stories.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580105703703
Nilavin Marupakkam

Read more from Vidya Subramaniam

Related to Nilavin Marupakkam

Related ebooks

Reviews for Nilavin Marupakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nilavin Marupakkam - Vidya Subramaniam

    http://www.pustaka.co.in

    நிலவின் மறுபக்கம்

    Nilavin Marupakkam

    Author:

    வித்யா சுப்ரமணியம்

    Vidya Subramaniam

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    லன்ச் டைமில் சுகன்யா வீட்டுக்குப் போன் பண்ணினாள். அம்மாதான் எடுத்தாள்.

    என்னடி எதையாவது கறந்துட்டயா?

    இல்ல... சும்மா தான் போரடிச்சுது. அப்புறம் என்னம்மா சாப்ட்டயா நீ?

    இன்னும் இல்ல.

    அப்புறம்... லெட்டர் ஏதாவது வந்திருக்கா? யாராவது போன் பண்ணினாங்களா?

    அம்மாவுக்கு அவள் எதற்கு போன் பண்ணியிருக்கிறாள் என்பது புரிந்தது. அவள் முகம் ஒரு மாதிரியாயிற்று. பெண்ணிடம் எப்படி சொல்வதென்று யோசித்தாள்.

    என்னம்மா...ஹலோ... எதிர்முனையில் சுகன்யா அழைத்தாள்.

    அன்னிக்கு வந்தவங்க தான் போன் பண்ணினாங்க.

    என்ன சொன்னாங்க?

    அதெல்லாம் எதுக்கு? மொத்தத்துல இது சரிப்படல விடு.

    ஏன் சரிப்படல. எனக்குக் காரணம் தெரிஞ்சாகணும் சொல்லும்மா.

    நா சொல்றதை கேட்டுக்கிட்டு நீ பாட்டுக்கு அங்க போய் தாட் பூட்னு கத்தறதுக்கா. விடு சுகன்யா. எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுப்போம். விட்டுத்தள்ளு.

    இப்ப நீ சொல்லப்போறயா இல்லையா?

    என்னத்தடி சொல்றது? அவங்களுக்கு நம்பளவிட நல்ல சம்பந்தம் கிடைச்சுடுச்சாம். அவங்க நம்பளைவிட நல்லா செய்யக்கூடியவங்களாம். அந்த அளவுக்கு உங்களால் செய்ய முடியும்னா சொல்லுங்க. நாம் மேற்கொண்டு பேசுவோம்னாங்க. தேவையில்ல. நீங்க அந்த இடத்தையே முடிச்சுக்குங்கன்னு சொல்லிட்டேன்.

    சுகன்யா டெலிபோனை வைத்தாள். அவள் முகம் சிவந்திருந்தது. மனிதனை மட்டும் ஏன் திருப்தியற்ற மன நிலையோடு படைத்து விட்டான் கடவுள்? எவ்வளவு இருந்தாலும் இன்னும் இன்னும் என்ற உணர்வு வேறு எந்த ஜீவராசிக்காவது உண்டா? யோசித்தாள் அவள். இருவர் இணைந்து தங்களுக்கென ஒரு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்ளும் விஷயத்திற்கு எதற்கு இத்தனை பேரம்? பாவம் அப்பா பெற்றது இரண்டே இரண்டு பெண்கள் தான் என்றாலும் கள்ளிப்பால் ஊற்றிக் கொல்லாமல் ரெண்டு கண்களாய் பாதுகாத்து, எவ்வளவு வேண்டுமானாலும் படிங்கடா செல்லங்களா என்று உற்சாகப்படுத்தி நல்ல கான்வென்ட்டில் சேர்த்து, வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி ஃபீஸ் கட்டி, ஆணாயினும் பெண்ணாயினும் இன்று நல்ல படிப்பு கொடுக்க ஏகப்பட்ட பணம் செலவழிக்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆணுக்கு சமமாய் பெண்ணும் உழைக்கிறாள். ஆயினும் வர தட்சணை, சீர் சினத்தி என்ற விதியெல்லாம் பெண்ணுக்கு மட்டும்தான், ஆணைப்பெற்ற யாரும் திருமணத்திற்கு பணமோ, நகையோ சேர்த்ததாய் சரித்திரமில்லை. இந்த விஷயத்தை இடித்துக் காட்டி எத்தனையோ கதைகள், சினிமாக்கள், நாடகங்கள்! இருந்தும் மனிதர்கள் தன்னை மாற்றிக் கொண்டாற்போல் தெரியவில்லை. பேரங்கள் ரகசியமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வெவ்வேறு வடிவில் பிள்ளை வீட்டுக்கு பெண் வீடு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது.

    சுகன்யா பெருமூச்சு விட்டாள். அக்கா சுகந்திக்கு அப்பா தீவிரமாக வரன் தேடிக் கொண்டிருக்கிறார். பெண்களை நன்கு படிக்க வைத்து விட்ட காரணத்தினாலேயே நல்ல வரனாய் பார்த்தார். சுகந்தி வெளிநாட்டு நிறுவனம் ஒன்றில் நிர்வாக அதிகாரியாய் வேலை செய்து கொண்டிருந்தாள். மாதம் பதினெட்டாயிரம் சம்பாதிக்கிறாள். இந்த வேலையில் சேர்ந்து எட்டு மாதமாகிறது. சுகன்யாவுக்கும் வெளிநாட்டு வங்கியில் தான் கம்ப்யூட்டர் பிரிவில் வேலை. நல்ல ஊதியம். இரண்டு பெண்ணும் நல்ல படிப்பு, நல்ல உத்யோகம், ஊதியம் என்று காலூன்றி விட்டாலும் அப்பாவால் சந்தோஷப்பட முடியவில்லை இது நாள் வரை படிப்பு, படிப்பு என்று செலவழித்ததால் பெரிதாய் சேமிப்பு எதுவுமில்லை. எட்டு மாதமாய் சுகந்தியும், ஆறு மாதமாய் சுகன்யாவும் சம்பாதித்தாலும் கூட ஏதோ கொஞ்சம் நகை வாங்க முடிந்தது. ஓரளவுக்கு பணம் சேர்க்க முடிந்ததே தவிர, லட்சக்கணக்கில் எல்லாம் கையிருப்பில்லை. இருந்தாலும் வி. ஆர். வாங்கிக் கொண்டால் கணிசமாய் பணம் கிடைக்கும். அதைக் கொண்டு கெளரவமாக கல்யாணத்தை நடத்தி

    Enjoying the preview?
    Page 1 of 1