Kattil Yutham
5/5
()
About this ebook
Read more from Vidya Subramaniam
Muthal Paarvai Rating: 5 out of 5 stars5/5Oru Naal Iravu Rating: 0 out of 5 stars0 ratingsAndroru Naal Rating: 3 out of 5 stars3/5Atchaya Paathiram Rating: 5 out of 5 stars5/5Nadhavadivanavale Kannamma Rating: 4 out of 5 stars4/5Suzhal Rating: 5 out of 5 stars5/5Unakkey Uyiraanen Rating: 2 out of 5 stars2/5Thandanai Rating: 0 out of 5 stars0 ratingsMaaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Ullam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsVeezhven Endru Ninaithayo? Rating: 4 out of 5 stars4/5Chinna Chinna Minnalgal Rating: 0 out of 5 stars0 ratingsEngirundhu Vanthayadi Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu... Rating: 5 out of 5 stars5/5Nilavum Malarum Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kavarven Rating: 5 out of 5 stars5/5Udal Inge Uyir Ange Rating: 5 out of 5 stars5/5Mann Bommai Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Kundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Purusha Nila Rating: 0 out of 5 stars0 ratingsNadhiyai Thedi Vandha Kadal Rating: 5 out of 5 stars5/5Thennangkaatru Rating: 5 out of 5 stars5/5Kanniley Anbirunthal Rating: 0 out of 5 stars0 ratingsMadhavi Pon Mayil Rating: 5 out of 5 stars5/5Aagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Shanthi Nilava Vendum Rating: 0 out of 5 stars0 ratingsVetti Vergal Rating: 5 out of 5 stars5/5Aagasa Thoothu Rating: 5 out of 5 stars5/5
Related to Kattil Yutham
Related ebooks
Saayatha Bommaigal Rating: 5 out of 5 stars5/5Maaresa Maangal Rating: 5 out of 5 stars5/5Pournami Nilavu Rating: 4 out of 5 stars4/5Neengatha Nila Rating: 0 out of 5 stars0 ratingsThalattum Poongatru Rating: 0 out of 5 stars0 ratingsSuzhal Rating: 5 out of 5 stars5/5Pon Maalai Pozhuthu Rating: 2 out of 5 stars2/5Penmaiyin Niram Venmai Rating: 5 out of 5 stars5/5Andha Maalai Mayakkam Rating: 0 out of 5 stars0 ratingsUllam Kuliruthadi Rating: 0 out of 5 stars0 ratingsKasthuri Maane... Rating: 4 out of 5 stars4/5Santhana Malargal Rating: 5 out of 5 stars5/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Kanavum Kalyanamum Rating: 0 out of 5 stars0 ratingsThendraley Aadiva Rating: 5 out of 5 stars5/5Thavam Rating: 5 out of 5 stars5/5Ottrai Roja Rating: 5 out of 5 stars5/5Vetti Vergal Rating: 5 out of 5 stars5/5Arali Poo Mel Aasai Vaithu... Rating: 0 out of 5 stars0 ratingsOru Paravaiyin Saranalayam Rating: 0 out of 5 stars0 ratingsThandanai Rating: 0 out of 5 stars0 ratingsKundrena Nimirnthu... Rating: 0 out of 5 stars0 ratingsManmatha Jaadai Rating: 0 out of 5 stars0 ratings'Nilavai Maraitha Megam...!' Rating: 0 out of 5 stars0 ratingsThodaamal Naan Malarvean Rating: 5 out of 5 stars5/5Vannathu Poochiyai... Rating: 0 out of 5 stars0 ratingsAmma Rating: 5 out of 5 stars5/5Nadaimurai Kaaviyam Rating: 5 out of 5 stars5/5Moondru Mudichu Rating: 5 out of 5 stars5/5Kana Kaanum Kangal Rating: 5 out of 5 stars5/5
Reviews for Kattil Yutham
1 rating0 reviews
Book preview
Kattil Yutham - Vidya Subramaniam
https://www.pustaka.co.in
கட்டில் யுத்தம்
Kattil Yutham
Author:
வித்யா சுப்ரமணியம்
Vidya Subramaniam
For more books
https://www.pustaka.co.in/home/author/vidya-subramaniam-novels
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
அத்தியாயம் 16
அத்தியாயம் 17
அத்தியாயம் 18
அத்தியாயம் 19
1
ராகினி கல்லூரிக்குள் நுழைந்தபோது கல்லூரியே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது கார்களும் வேன்களும் வரிசையாய் நின்றிருந்தது.
என்ன விசேஷம்?
ராகினி தோழி ஒருத்தியிடம் கேட்டாள்.
ஷுட்டிங்
யார் படம்?
மலையாளப் படமாம் மோகன்லால், ஷோபனா வராங்களாம் அதான் கூட்டம் அலைமோதுது.
ராகினிக்கு ஷோபனா பிடிக்கும் ஒரு தேர்ந்த சிற்பி செதுக்கிய சிலை போன்ற அந்த உயரமும் அமைப்பான மேனியும், நாட்டிய பாவங்களை அபிநயிக்கும் கண்களும் மிகவும் பிடிக்கும் இன்னொரு தில்லானா மோகனாம்பாள் என்றுதான் சொல்லுவாள் தோழிகளிடம்.
ராகினி ஷுட்டிங் நடக்கும் இடத்திற்கு விரைந்தாள். கூட்டம் நெருக்கியடித்தது நடுவில் மோகன்லாலும் ஷோபனாவும் காதலித்துக் கொண்டிருக்க ராகினி முண்டியடித்துக் கொண்டு முன்னேறியதில் கூட்டம் சற்றே தடுமாறி அவளைத் தள்ளிய வேகத்தில் காமரா கோணத்தில் நடிகர்களுக்கு நடுவில் தடுமாறி வந்து இடிக்காத குறையாய் நின்றவளைப் பார்த்து டைரக்டர் ஆத்திரத்தோடு கத்தினார் ராகினி அவமானத்தோடு அனைவரையும் பார்த்துவிட்டு சாரி… வெரி சாரி
என்றாள். டைரக்டர் கட் என்றார். காமரா ஆஃப் ஆனது ஃபிலிம் வேஸ்ட்! என்று யாரோ எரிச்சலுடன் சொல்ல ராகினிக்கு கண்கள் கலங்கியது.
சார் ஒரு நிமிஷம்
ஒளிப்பதிவாளர் டைரக்டரை அழைத்துக்கொண்டு தனியே சென்று குறைந்த குரலில் ஏதோ பேச டைரக்டர் ராகினியைத் திரும்பி பார்த்தார்.
கதைப்படி லால் ஷோபனாகிட்ட என்ன பேசணும் சார் இப்பொ?
நீ ஏதோ சொல்ல வந்தயே என்ன அது. சொல்லுன்னு கேட்பார்.
அதுக்கு ஷோபனா என்ன பதில் சொல்லணும்?
முதல் நாள் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கத்தான் அவங்க வராங்க அதனால ஐ ஆம் சாரின்னு சொல்லத்தான் வந்தேன்னுவாங்க.
ஓ.கே. சார் இப்பொ இடையில் இந்த பொண்ணு குறுக்க வந்துடுச்சு, சாரி ஐம் சாரின்னு ரொம்ப வருத்தத்தோட சொல்லிடுச்சு. ரொம்ப இயற்கையாகவே இருக்கு காட்சி இதைக் கட் பண்ண வேணாம் விட்டுடுவோம் இதுக்கப்பறம் லாலும் ஷோபனாவும் பார்த்துக்கறாங்க. ஷோபனா சொல்றாங்க நா சொல்ல வேண்டியதை இந்த பெண் சொல்லிட்டான்னு லால் புரிஞ்சுக்கறார் இது எப்படி இருக்கு?
வேஸ்ட் பேப்பர்ல பூ பண்ணினா மாதிரி இருக்கு ரஞ்சித்
டைரக்டர் முகம் மலர்ந்து ரஞ்சித்தின் கைப்பற்றி குலுக்கினார். அவர் ஷோபனாவிடம் காட்சி பற்றி விளக்க ஷோபனா ராகினியைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தபோது ராகினிக்கு ஒரு கிலோ ஐஸ்கிரீம் சாப்பிட்டாற்போலிருந்தது அடுத்த காட்சியமைப்பிற்கு நடுவில் கிடைத்த இடைவெளியில் ஷோபனாவிடம் ஆட்டோகிராப் வாங்கினாள். அருகில் உட்கார்ந்து நிறைய பேசினாள். கூட நின்று போட்டோ எடுத்துக்கொண்டாள். ஒரே நாளில் கல்லூரியில் பலரது பொறாமை பார்வைக்கு இலக்கானாள்.
அன்று முழுக்க பிரம்மிப்பிலும் சந்தோஷத்திலும் ராகினிக்கு தூக்கம் வரவில்லை. மறுநாள் அதைவிட சந்தோஷமான விஷயம் காத்திருந்தது.
மறுநாளும் ஷுட்டிங் நடந்து கொண்டிருந்தாலும் பிரின்ஸிபாலின் உத்தரவால் மாணவர்கள் வகுப்பறைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் பிராக்டிகல் வகுப்பில் மைக்ராஸ்கோப்பை சரிசெய்து கொண்டிருந்த ராகினியை லெக்சரர் பேர் சொல்லி அழைக்க ராகினி நிமிர்ந்தாள்.
இங்க வா
என்றாள்.
யெஸ் மேடம்
ராகினி அருகில் சென்றாள்.
டைரக்டர் உன்னை எதுக்கோ கூப்பிடறாராம் போய் பார்த்துட்டு வா.
ராகினி பிரமிப்போடு ஷூட்டிங் நடந்த இடம் நோக்கி அந்த ஆளோடு சென்றாள்.
வாம்மா
டைரக்டர் கனிவோடு வரவேற்றார், நேத்து நீ எதேச்சையா வந்து விழுந்து சாரின்னு சொன்னதும் நாங்க சீனையே மாத்திட்டோம். இப்பொ அதே மாதிரி சிம்பாலிக் ஷாட்ஸ் இருந்தா நல்லார்க்கும்னு தோணுது அதாவது ஹீரோகிட்ட ஹீரோயின் பேச நினைக்கறதை ஏதேச்சையா குறுக்குல வந்து நீங்க பேசிட்டு போகணும் முடியுமா?
டைரக்டர் கேட்க ராகினிக்கு பக்கென்று பயம் அடைத்தது. நிஜம் வேறு நடிப்பு வேறு சாரி என்று நேற்று சொன்னது நிஜமான விஷயம் அதையே நடிக்கச் சொன்னால் அவ்வளவு இயல்பாக வந்திருக்குமா தெரியவில்லை. நடிப்பென்பது ஒரு அழகான கலை எல்லோருக்கும் அதில் திறமை ஏற்பட்டுவிடாது ராகினி தயங்க ஷோபனா சிநேகமாகச் சிரித்தாள்.
எனக்கு மலையாளம் தெரியாதே.
நாங்க டப் பண்ணிடுவோம்.
டிரை பண்ணி பாருங்க
ரஞ்சித் உற்சாகப்படுத்தினான்.
காமரா ஓட, டைரக்டர் சொல்லியபடி ராகினி நடித்துக் கொடுக்க நிமிடத்தில் ஷாட் ஓகேயாயிற்று. ரஞ்சித் அருகில் வந்து சிரித்தான்.வெரிகுட்
என்றான். ராகினி முகம் சிவந்தாள். புரொடக்ஷன் மானேஜரிடம் சொல்லி ரஞ்சித் ராகினிக்கு ஆயிரம் ரூபாய்க்கு செக் வாங்கிக் கொடுத்தபோது வேண்டாம் என்று மறுத்தாள்.
ஏன்?
இல்ல வேணாம்.
பணம் வேண்டாம்னு சொல்ற ஆளை இப்பதான் பார்க்கறேன்.
பணத்துக்காக நடிக்கலையே. எனக்கு ஷோபனா, மோகன்லால் ரெண்டு பேரையும் பிடிக்கும் அவங்ககூட நடிக்க சந்தர்ப்பம் கிடைச்சதே பெரிய த்ரில்லிங். அதுக்கு நான் தான் உங்களுக்கு ஏதாவது தரணும். நீங்க சொல்லி தானே டைரக்டர் மறுபடியும் என்னைக் கூப்பிட்டாராம்!
சரி எனக்கு என்ன தரணும்னு நினைக்கறீங்களோ தாங்களேன்!
அது… அது… இப்போ எங்கிட்ட எதுவுமே இல்லையே.
இருக்கறதைக் கொடுங்க. சும்மா ஞாபகார்த்தமா தானே.
அப்டி கொடுக்கும்படியா எங்கிட்ட என்ன இருக்கு?
ஏன்? காதோரம் பெரிசா வெச்சிருக்கீங்களே ரோஜாப்பூ! அதைக் கூட தரலாம்.
பூ… வா…? போயும் போயும் தலையில் வைத்த பூவா…?
ராகினி வியந்தாள்.
பரவால்ல கொடுங்க.
ராகினி பூவை மெல்ல எடுத்து அவனிடம் நீட்டினாள். ரஞ்சித் அதை வாங்கி பத்திரமாக தன் ப்ரீப் கேசில் வைத்துக்கொண்டான்.
இன்னியோட இந்த காலேஜ்ல ஷூட்டிங் முடிஞ்சு போச்சு
என்றான்.
படப்பிடிப்பு குழு கிளம்பிச் சென்றதும் கல்லூரி வெறிச்சென்றாயிற்று, ராகினிக்கு இந்த அனுபவம் புதுமையாக இருந்தது. அவர்கள் போன பிறகு தான் அடடா இப்போது ஷூட்டிங் நடந்த படத்தின் பெயரைப்பற்றி கேட்டுக் கொள்ளவில்லையே என்று தோன்றியது.
மெல்ல நாட்கள் நகர, பத்துநாளில் ஷூட்டிங் நடந்ததும் அதில் தான் நடித்ததும் சாதாரண விஷயமாகி நாளா வட்டத்தில் மறந்தே போனாள். கிட்டத்தட்ட ஆறு மாதத்தில் டைரக்டர் மற்றும் ரஞ்சித்தின் முகம்கூட மறந்துவிட்டது எனலாம். தீபாவளிக்கு பத்துநாள் முன்பு கூரியரில் ஒரு கவர் வந்தது உள்ளே ஒரு கடிதம் இருந்தது.
இத்துடன் நீங்கள் சில காட்சிகளில் நடித்த மலையாளப்படத்தின் ப்ரிவியூ காட்சிக்கான அனுமதிச் சீட்டு அனுப்பியுள்ளேன். கண்டிப்பாக வரவும்.
அன்புடன் ரஞ்சித்
என்று எழுதியிருந்தது.
வானத்துக்கும் பூமிக்குமாக ஒருமுறை துள்ளிக் குதிக்கவேண்டும் போலிருந்தது ராகினிக்கு. இந்த சந்தோஷத்தை உடனே யாரிடமாவது பகிர்ந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. வீட்டில் யாருமில்லை. அனைவரும் உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்தனர்.
ராகினி டெலிபோன் எடுத்து தோழிகளின் எண்களைச் சுழற்றி விஷயம் சொன்னாள்.
ஏய் எத்தனை பாஸ் இருக்குடி? நாங்களாம் வரவா?
ஓண்ணே ஒண்னு தானே வந்திருக்கு!
நாசமாப்போக அப்புறம் ஏண்டி போன் பண்ணி மூடைக்கெடுக்கற? போய்ட்டு வந்து ஒரு வழியா கதை முழுக்க சொல்லியிருக்கலாம் இல்ல?
சாரியா. ரொம்ப எக்ஸைட் ஆய்ட்டேன் அதான்.
வைத்துவிட்டு மறுபடியும்… மறுபடியும் கடிதத்தை படித்தாள் அனுமதிச் சீட்டை ஆசையாய் பார்த்தாள். ஷுட்டிங் நடந்த நாட்களை நினைத்து நினைத்துப் பார்த்தாள் எப்போது சனிக்கிழமை வரும் என்று துடிப்போடு காத்திருந்தாள். சனிக்கிழமை விடிந்ததிலிருந்து நிலைகொள்ளாமல் தவித்தாள்! அம்மாவைக் கட்டிக்கொண்டு தட்டாமாலை சுற்றினாள். தம்பியைச் சீண்டி அவன் கோபத்தைக் கிளறி ரசித்துச் சிரித்தாள். அப்பாவின் தலைமுடிக்கு டை அடித்துவிட்டாள். கறுப்பும் வெள்ளையுமாக.
என்னாச்சுடி உனக்கு…? எம் புருஷனுக்கு இப்டி அசிங்கமா டை பண்ணியிருக்க…!
அம்மா சண்டைக்கு வந்தாள்.
உன் புருஷனில்ல. எங்கப்பா.
உதை! என் புருஷன் தான்.
பீத்திக்காதே. இந்தா உன் புருஷனை நீயே வெச்சுக்க
அப்பாவை தள்ளிவிட்டு ஓடினாள்.
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆறு மணிக்கு ஆரம்பிக்க இருந்த பிரிவியூ காட்சிக்கு நாலு மணியிலிருந்தே பரபரத்தாள். பத்து டிரஸ் மாற்றி மாற்றி