Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thunaivi
Thunaivi
Thunaivi
Ebook293 pages2 hours

Thunaivi

Rating: 2 out of 5 stars

2/5

()

Read preview

About this ebook

மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.

கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.

பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.

சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580125403870
Thunaivi

Read more from Vaasanthi

Related to Thunaivi

Related ebooks

Reviews for Thunaivi

Rating: 2 out of 5 stars
2/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thunaivi - Vaasanthi

    http://www.pustaka.co.in

    துணைவி

    Thunaivi

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    1

    அறை முழுவதும் புகை மண்டலத்தில் மிதந்தது. இடையில் தவழ்ந்த வெளிநாட்டுப் பர்ஃப்யூமும் கன்னங்களை உரசும் விஸ்கி நெடியும் திவ்யாவுக்கு மூச்சை முட்டின.

    தொலைவில் யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டு நின்றிருந்த வாசு அவளைப் பார்த்துக் கையசைத்துச் சிரித்தான். அவன் கையிலிருந்த கிளாசை மூன்றாம் முறையாக பேரர் நிரப்புவதை அவள் கவனித்தாள்.

    என்ன திவ்யா? படப்பிடிப்பெல்லாம் முடிஞ்சு போச்சா?

    அவள் சுபாவமான புன்னகையுடன் திரும்பினாள்.

    ஃபிலிம் ஃபெடரேஷன் சக்கரபாணி அகலமாகச் சிரித்தபடி நின்றிருந்தான்.

    ஊஹீம். இன்னும் பதினைஞ்சு நாள் வேலை இருக்கு, ஒழுங்கா நடந்தா. இல்லேன்னா இன்னும் இழுக்கலாம்.

    படப்பிடிப்புக்கு நடுவிலே நீ யார் கூப்பிட்டாலும் வர மாட்டியேன்னு கேட்டேன்.

    ப்ரேக் வேணும்போல இருந்தது. யூனிட்டும் களைச்சுப் போயிருந்தது. இரண்டு நாள் வேலையை நிறுத்தி வெச்சேன்.

    சக்கரபாணி சினேகிதமாகச் சிரித்தான்.

    வாசு வந்திருந்தான், அதனாலே நிறுத்தினேன்னு சொல்லேன்...

    திவ்யாவின் முகத்தில் மிருதுவாக பிரஸன்னம் பரவிற்று.

    அது உண்மையாயிருந்தா அப்படிச் சொல்லியிருப்பேன்.

    அவன் எங்கேயோ இருக்கான். அவன் வரும்போது அவனுக்காக வேலையை நிறுத்தி வெச்சா என்ன தப்பு?

    அவள் சிரித்தாள்.

    தப்புதான்! ஏன்னா அப்படி பட்டத் தியாகங்களுக்கு அவசியமில்லே .

    சக்கரபாணி உதட்டைப் பிதுக்கித் தலையை அசைத்தான்.

    உன்னை சமாளிக்க முடியாமத்தான் வாசு வேற ஊருக்கு மாத்தல் வாங்கிண்டு போயிட்டான் போலிருக்கு!

    அவள் வாய்விட்டுச் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்.

    சக்கரபாணி இதே ரீதியில்தான் திரும்பத் திரும்பப் பேசுவான். இவன் எப்படிப்பட்ட புருஷனாக வீட்டுக்குள் இருப்பான் என்று தெரியாது. அவனுடைய மனைவி அநேகமாக அவனுடன் எங்கும் வருவதில்லை. அவளாக வருவதற்கு இஷ்டப்படுவதில்லையா, இவனாக அழைத்து வருவதில்லையா என்று தெரியவில்லை. இவனது மெதப்பான பேச்சைப் பார்க்கும்போது அவள் இவனுக்கு மிகவும் அடங்கின மனைவியாக இருக்கவேண்டும் என்று தோன்றும்.

    ஹாய் திவ்யா !

    அவள் நின்று திரும்பினாள்.

    அசோக் லாஹரி நின்றிருந்தான்.

    ஹாய்!' என்றாள் அவள் முகமலர்ச்சியோடு. நீ எப்ப வந்தே பம்பாயிலேர்ந்து?"

    நேற்று. நாளைக்குக் கிளம்பறேன். உன் புதுப்படத்தைப் பத்தி நிறைய கேள்விப்பட்டேன்.

    அவள் புன்னகைத்தாள்.

    என்ன கேள்விப்பட்டே?

    நிச்சயம் அவார்ட் வாங்கக்கூடிய படம் என்கிறாங்க!

    அவள் கூச்சத்துடன் சிரித்தாள்.

    அதெல்லாம் எனக்குத் தெரியாது. இன்னும் ஷூட்டிங்கே முடியல்லே. ஆனா ஒரு விஷயம். படத்தை ஆரம்பிச்சதிலேர்ந்து பிசாசு பிடிச்ச மாதிரி இருக்கேன்.

    நா சொல்றேன் கேளு. நேஷனல் ஃபெஸ்டிவலுக்கு அனுப்பாதே. அப்புறம் கான்ஃபெஸ்டிவல், பெர்லின் ஃபெஸ்டிவலுக்குப் படத்தை அனுப்ப முடியாது!

    அவள் சிரித்துக்கொண்டே நகர்ந்தாள்.

    முதல்லே படத்தை முடிக்கிறேன். அதுக்கப்புறம் தானே மத்த யோசனை...

    ப்ரொட்யூசர் கிருஷ்ணராவ் அவளைப் பார்த்துச் சிரித்து, கை குவித்து, நல்லார்க்கிங்களா? என்றார்.

    என்னை இன்னும் நீங்க வாங்க போங்கன்னு சொல்றதை நிறுத்தமாட்டீங்க! என்றாள் அவள் சிரித்தபடி. என்னைவிடச் சின்னவங்க எல்லாம் என்னை வா போன்னுதான் சொல்றாங்க?

    எங்க ஜெனரேஷன் அப்படி ! ஒரு பொம்பளையைப் பார்த்து 'வா'ன்னு சொல்ல வரமாட்டேங்குது. லீலாவதியை வெச்சு ஒரு படம் எடுக்கறீங்களாமே?

    ஆமாம்.

    ஒழுங்கா நடிக்க வர்றாங்களா?

    ஓ... அதிலெல்லாம் அவ ரொம்ப கரெக்ட்! ஏன் கேக்கறீங்க

    ஒண்ணுமில்லே... என்றார் கிருஷ்ணராவ் மழுப்பலாக. அவங்களை ஒரு முறை புக் பண்ணி கால்ஷீட் வாங்கறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிட்டது. கடைசியிலே வேற ஆளைப் போட வேண்டியிருந்தது.

    ஆச்சரியமாயிருக்கு என்றாள் திவ்யா, உண்மையான வியப்புடன். எனக்கு அவளாலே ஒரு தொந்தரவும் இல்லே. இன்ஃபாக்ட் இந்த படத்திலே எனக்கிருக்கிற அளவு இன்வால்வ்மென்ட் அவளுக்கும் இருக்கு. அவளோட முழுத் திறமையும் இதிலே வரப்போகுது பாருங்க!

    குட்! அதுக்கு உங்க முகராசிதான் காரணம்!

    யாருடைய முகராசி? என்றபடி வாசு வந்தான்.

    அவன் நடையில் லேசான தடுமாற்றம் இருப்பதை உணர்ந்த திவ்யா அவனது கைக்குள் தனது கையைக் கோர்த்துப் புன்னகைத்தாள்.

    எனக்கு ஏதோ முகராசி இருக்காம்!

    எப்படிச் சொல்றீங்க கிருஷ்ணராவ்?

    பாருங்களேன், நா இத்தனை வருஷமா ஃபிலிம் இன்டஸ்ட்ரீலே இருக்கேன். திவ்யா எடுக்கற படம் ஒண்ணு கூட எனக்குப் புரியல்லே. ஆனா வெளிநாட்டிலே 'ஓகோங்' காறங்க.

    வாசுவின் அதரங்களில் ஒரு மந்தரஹாசம் லேசாக நெளிந்தது.

    சார், அது முகராசியினாலே இல்லே, கைராசியினாலே.

    ஏதோ ஒரு ராசி... எங்கிட்ட அது இல்லே!

    அதெல்லாம் எதுக்கு சார் உங்களுக்கு? நீங்க இருக்கிற படி நல்லாத்தான் இருக்கீங்க!

    என்னவோ... கமர்ஷியல் சினிமாக்காரன்னு டில்லிக்காரன் ஒதுக்கிடறானே.!

    வாசு சினேகிதமாக அவர் தோளில் கையை வைத்தான்.

    ஜனங்க ஒதுக்கிடல்லியே?

    கிருஷ்ணராவின் முகத்தில் ஒரு மலர்ச்சி ஏற்பட்டது.

    இப்பத்தான் தெம்பு வருது எனக்கு. இவங்கள்ளாம் பர்க்மன், தார்க்காவ்ஸ்கி'ன்னு பேசும்போது எனக்கு ஒரே பிரமிப்பாயிடுது.

    அவன் புன்னகையுடன் அவர் தோளைத் தட்டினான்.

    ஆ... கண்டுக்காதீங்க! அதெல்லாம் ஒரு பாவ்லா காண்பிக்கத்தான்...

    தனக்குள் எழுந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு திவ்யா கேட்டாள்:

    நா பாவ்லா காண்பிக்கறேங்கறியா வாசு?

    அவன் அவளது இடையை அணைத்துக்கொண்டான்.

    சேச்சே! நீ எதுக்குக் காட்டணும். பர்க்மன்னோட வரிசையிலே நீயே இருக்கும்போது?

    வார்த்தைகளில் பரிகாசம் இல்லை. உண்மையாகச் சொன்னது போல் ஒலித்தன.

    ஏழாவது சொர்க்கத்தில் நிற்பதுபோல் இருந்தது அவளுக்கு. தன்னை சமாளித்துக்கொண்டு புன்னகைத்தாள்.

    எத்தனை பெக் உள்ளே போயிருக்கு வாசு?

    எத்தனை போனாலும் என் வாயிலேர்ந்து உண்மை தான் வரும்.

    வேறென்ன வேணும்மா உங்களுக்கு? என்றார் கிருஷ்ணராவ். இப்படி ஒரு புருஷன் அமையவும் ஒரு ராசி வேணும்!

    அது உண்மைதான் என்று திவ்யா சிரித்தாள்.

    சார், உங்களுக்கு என் ராசியைப்பத்தித் தெரியாது!

    வா வாசு, கிளம்பலாம். என்றாள் திவ்யா-டிரிங்ஸுடன் வந்த ஆளை வேண்டாம் என்று ஜாடை காட்டியபடி.

    ஏன், சாப்பாட்டுக்குத் தங்கப்போறதில்லையா? என்றார் கிருஷ்ணராவ்.

    இல்லே. காலையில் சீக்கிரம் எழுந்தாகணும். வாசு மைசூருக்குக் கிளம்பறார். எனக்கும் ஷூட்டிங் இருக்கு.

    அப்ப சரி.

    விடைபெற்றுக் கொண்டு கிளம்பும்போது சில இளம் பெண்கள் வாசுவைப் பார்த்து உற்சாகமாகக் கையசைத்தார்கள்.

    அடுத்த விசிட் எப்போ? என்றார்கள். எல்லாருக்கும் ஒரு வசீகரச் சிரிப்பும் கையசைப்பும் மறுமொழியும் கொடுத்து விட்டு அவன் கிளம்பினான். அவள் அவன் கையைப் பற்றியபடியே நடந்தாள்.

    என்ன சொக்குப்பொடி போடறே நீ? என்றாள் அவள் கொஞ்சலாகக் காரின் கதவைத் திறந்துகொண்டே.

    ஒரு சொக்குப்பொடியும் இல்லே. நா இந்தக் கும்பல்லே கொஞ்சம் வித்தியாசமா இருந்திருப்பேன். அதான் காரணம் பீப்பிள் வான்ட் ஸம் சேஞ்ச், யூ நோ!

    அவன் சீட்டில் அமர்ந்து தலையை ஆயாசத்துடன் சாய்த்துக் கொண்டான். அவன் பக்கம் கதவு பூட்டியிருக்கிறதா என்று பார்த்துவிட்டு அவள் வண்டியைக் கிளப்பினாள்.

    குடிக்கிறதை நீ கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கணும் வாசு! என்றாள் மெல்ல.

    பண்ணணும்...

    இதை நீ எத்தனையோ தடவை சொல்லியாச்சு.

    சொன்னது மாத்திரமில்லே. எத்தனை தடவை நிறுத்தியிருக்கேன் தெரியுமோ?

    சற்றுநேரம் திவ்யா ஏதும் பேசாமல் வண்டியைச் செலுத்தினாள்.

    நீ என் புருஷன் என்கிற காரணத்தாலே நா சொல்றேன்னு நினைக்காதே வாசு!

    எனக்குத் தெரியும்...

    நா குடிச்சுட்டுத் தாறுமாறா நடந்துப்பேன்னு உனக்கு பயமிருக்கா ?

    இல்லே. நீ ஏடாகூடமா நடந்துண்டு நா பார்த்ததில்லே. ஆனா உடம்புக்குக் கெடுதல் வாசு.

    இப்ப நிறைய குறைச்சுட்டேன். டோன்ட்வொர்ரி!

    நா வொர்ரி பண்ணிக்கல்லே. மைசூரிலே நீயே காரை எப்படி ஒட்டுவே அந்த நிலையிலேன்னு எனக்கு யோசனை.

    அவன் வெகுளித்தனமாகச் சிரித்தான். நிலைமை மோசமானா அங்கே உதவ ஆட்கள் இருக்காங்க.

    மோசம்னா, என்னாலே ஸ்டெடியா நடக்க முடியாது அவ்வளவுதான். அப்பத்தான் கவிதை பிறக்கும், ஹாஸ்யம் வெடிக்கும், அனாயாசமா பாட வரும்...

    பெண்களைப் பித்தாக்கும்!

    அது எனக்குத் தெரியாது!

    எனக்குத் தெரியும் என்று அவள் சிரித்தாள். யார் இப்ப உன் லேட்டஸ்ட் பிரெண்ட்?

    நானா யாரையும் தேடிக்கிட்டுப் போறதில்லே!

    அது எனக்குத் தெரியும். யாரு?

    "சந்திரிகான்னு ஒரு ஸ்டூடன்ட். என்னைவிட பதினைஞ்சு வயசு சின்னவ.

    அவதான் உன்னை இந்தமாதிரி நிலையிலே வீட்டிலே கொண்டுபோய் விடறாளா?

    ஆமாம்.

    நல்லவேளை, அந்த மட்டிலே எனக்கு நிம்மதி. ஆனா போதையிலே தான் உன் கற்பனை விரியறது என்கிறதே உன் கற்பனை. அப்படிப்பட்ட அவசியத்தை நீ தான் ஏற்படுத்திண்டிருக்கே.

    ஆ, நீ சொல்றது சரிதான்! என்றான் அவன்.

    வீட்டுக்குச் சென்றதும் லேசாகச் சாப்பிட்டு விட்டுப் படுத்தார்கள்.

    இன்னும் எத்தனை நாள் இருக்கு ஷூட்டிங் முடிய? என்றான் அவன், அவள் பக்கம் திரும்பி .

    இருபது நாளாயிடும் என்றாள் அவள் தூக்கக் கலக்கத்துடன்.

    அவளைத் தன்னருகில் இழுத்து அவன் மெல்லிய குரலில் சொன்னான்:

    முடிஞ்சதும் அங்கே வா ஒரு வாரத்துக்காவது, எனக்கு ரொம்பத் தனிமையாயிருக்கு திவ்யா.

    "வரேன்' என்று அவனை அணைத்தபடி அவள் தூங்கிப் போனாள்.

    மறுநாள் காலை விடியும்போதே அவன் கிளம்பிப் போனான். அதற்குப் பிறகு அவள் கொஞ்சநேரம் அவனது நினைவில் லேசாகிப்போன மனநிலையில் படுத்திருந்தாள். ஒவ்வொரு முறையும் அவன் வந்து திரும்பிப் போகும்போது இப்படித்தான் மனத்தின் இறுக்கமெல்லாம் தளர்ந்து லேசாகிப் போகிறது. அவனைப் போன்ற ஒரு நாகரிக புருஷன் யாருக்கும் கிடைப்பது மிகமிக அபூர்வம் என்று அவளுக்கு அடிக்கடி நினைக்கத் தோன்றும். முன்பே பேசி, எண்ணங்களைப் பகிர்ந்து, செய்துகொண்ட கல்யாணமானாலும் எத்தனை பேருக்கு அந்த பந்தம் ஏற்பட்டதுமே பாத்திரத் தன்மை மாறிவிடுகிறது! இருவருக்குள்ளுமே ஆளுமைத்தன்மை வந்து விடுகிறது!

    அவனுக்கு அவளுடைய வேலையைப்பற்றி அக்கறையும் பெருமையும் உண்டு. அவனே ஒரு சிறந்த கலை உள்ளம் கொண்டவன். ரொம்பவும் உபயோகமான கருத்துகளைத் தெரிவிப்பான். எந்த இக்கட்டிலும் தூணைப்போல் நிற்பான். ஆனால் சின்னத்தனமாக எதையும் தூண்டித் துருவிக் கேட்டதில்லை. கணக்கு விவகாரத்தை அவளே சொன்னாலொழியக் கேட்டுக் கொண்டதில்லை. ஆண்களுடனேயே தான் அவளுக்கு நாள் முழுவதும் வேலை. சக்கரபாணி மாதிரி ஒரு புருஷன் இருந்தால் இப்படிப்பட்ட உத்தியோகமே முதலாவது செய்திருக்க முடியாது.

    ஓ, அப்படிப்பட்ட புருஷனை அவள் கல்யாணமே செய்து கொண்டிருக்கமாட்டாள்... திருமணமே வேண்டாம் என்று காத்த வைராக்கியத்தை அவனது சினேகிதம் தகர்த்தது. அதற்காக அவள் இதுவரை வருந்தியதில்லை. அவனிடம் எந்தக் குறையையும் கண்டதில்லை, இந்தக் குடிப்பழக்கத்தைத் தவிர... ஆனால் அவன் சொல்வதுபோல் அவனிடம் ஒரு விசித்திரம். குடிபோதையில்தான் அவனுடைய எல்லாச் சிறப்பும் வெளிப்படும். அந்த செளந்தர்யத்தைக் கண்டு யாரும் மயங்காமல் இருக்க முடியாது.

    அவள் ஷூட்டிங்குக்குச் செல்லத் தயாராகும்போது டெலிபோன் ஒலித்தது.

    லீலாவதியின் குரல் ஒலித்தது மறுமுனையில்.

    திவ்யா, என் காரிலே ஏதோ கோளாறு. ஸ்டார்ட் ஆகல்லே.

    நா உன்னை பிக்-அப் பண்றேன். நோ பிராப்ளம் என்றாள் திவ்யா .

    அவள் லீலாவதியின் வீட்டை அடைந்ததும் அவளை ஒரு வினாடிகூட காக்க வைக்காமல் லீலாவதி ஏறிக்கொண்டாள். கிருஷ்ணராவ் இவளைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வந்தது. பிறகு அதைப்பற்றிக் கேட்கலாம் என்று அவள் மெளனமாக ஓட்டினாள்.

    ரெண்டு நாள் ரெஸ்டிலே ரிலாக்ஸ்டா தெரியறே? என்றாள்.

    லீலாவதி லேசாகப் புன்னகைத்தாள். ஆமாம். நா பண்ற ரோல் ரொம்ப ஹெவி. சேர்ந்தாப்போல செஞ்சா ரொம்பக் களைச்சுப் போயிடறது.

    எனக்கும் ரெஸ்ட் வேண்டியிருந்தது. வாசு வேற வந்ததுலே ரொம்பவே ரிலாக்ஸ்டா போயிட்டேன். இன்னிக்கு வேலைக்குக் கிளம்பக்கூட சோம்பலா இருந்தது.

    வாசு இருக்காரா இன்னும்?

    இல்லே. கிளம்பிப் போயாச்சு.

    எத்தனை நாள் இப்படித் தனித்தனியா இருக்கப் போறீங்க?

    அவருக்கு மாற்றல் கிடைக்கிற வரைக்கும். வேற வழியில்லே லீலா! வாசு இங்கே வரும்போது ரொம்ப சந்தோஷமாயிருக்கு. இல்லாதபோது அவருக்காக ஏங்கிப் போயிடறேன்னு சொல்ல முடியாது. என்னுடைய வேலையிருக்கு, நல்லவேளை என் கவனத்துக்கு...

    சற்று நேரம் லீலாவதி பேசாமலிருந்தாள். பிறகு மெல்லிய குரலில் தனக்குத்தானே பேசிக்கொள்வதுபோல் சொன்னாள்:

    சில சமயம் உன்னைப்பத்தி எனக்கு யோசனையாயிருக்கு திவ்யா! இந்த உன் குணத்தினாலேயே நீ ஏமாந்து போயிடுவியோன்னு.

    திவ்யா சரேலென்று அவளை ஒரு வினாடி திரும்பிப் பார்த்தாள். பிறகு தெருவை நேராகப் பார்த்து ஓட்டியபடி சொன்னாள்:

    கவலைப்படாதே லீலா. நீ நினைக்கிற மாதிரி எதுவும் நடக்காது.

    அத்தனை நம்பிக்கையிருக்கா வாசு மேலே?

    பரஸ்பர நம்பிக்கை இருக்கு! அவருக்கு என்மேல நம்பிக்கை இருக்கணும்ங்கறதும் முக்கியமில்லையா?

    2

    எங்கும் சர்வ நிசப்தம். இத்தனைக்கும் அந்தக் கூடத்தில் உத்தரத்திலும் தரையிலுமாக ஐம்பது பேர் இருப்பார்கள். எல்லாரும் கட்டுண்டவர்களைப்போல் நின்றார்கள்.

    லீலாவதி காமுவாக மாறியிருந்தாள். பதினைந்து வயதில் திருமணமாகிப் பதினைந்தரை வயதில் விதவையான காமு யௌவனம் பொங்கும் உடம்பும் ஆசைகள் விரியும் மனசும் கொண்ட காமு - விரியும் ஆசைகளில் பறக்க முடியாமல் சிறகொடிக்கப்பட்ட காமு - தன் நிலை மறந்து இந்த வினாடி சிரிக்கிறாள். சிரிப்பலைகள் மேலே எழும்பிய வேகத்துடனே தழைந்து போகின்றன. தாபமும் ஆதங்கமும் ஆத்திரமாக மாறுகின்றன. ஒரு கத்தலில்லை, இரைச்சலில்லை... ஆனால் யூனிட் முழுவதும் கட்டுண்டு உருகிப்போகிறது காமுவின் சோகத்தில்.

    ஜுர வேகத்தில் கேமராமேன் கிச்சாமி க்ளோஸப் எடுக்கிறான்.

    திவ்யாவின் கண்கள் பனி படர்ந்து போயிருந்தன. ஒரு திருப்திப் பெருமூச்சுடன்.

    கட்! ஷாட் ஓவர்! என்றாள்.

    சரேலென்று யூனிட் யதார்த்தத்திற்கு இறங்கிற்று. ஒரு பெரிய அனுபவத்திலிருந்து மீண்டதுபோல் ஆசுவாசப்பட்டுக் கொண்டது.

    சாமி ஆடி ஓய்ந்தது போல் லீலாவதியின் முகத்தில் சோர்வு தெரிந்தது. திவ்யா விரைந்து சென்று அவளை அணைத்துக் கொண்டாள்.

    பிரில்லியன்ட்! காமுவாவே மாறிவிட்டே? என்றாள் மெல்ல.

    தாங்க்யூ என்றாள் லீலாவதி அடக்கமாக. அடுத்த ஷாட் அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஓ.கே...?

    பத்து நிமிஷமே எடுத்துக்கோ. பரவாயில்லே.. நேத்து அந்த கிருஷ்ணராவைப் பார்த்தேன்.

    லீலாவதி நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். அவ கோவாப்பரேட் பண்ண மாட்டாளேன்னு சொன்னானா?

    ஆமாம்!

    சொல்லுவான் என்றாள் லீலா நிதானமாக. எதுக்காக நா அவனுக்குக் கோவாப்பரேட் பண்ணலேன்னு அடுத்த தடவை கேளு. ரோக்! இவன் கொடுக்கற பணத்துக்காக எல்லாவிதக் கேவலத்தையும் நம்மகிட்ட இவன் எதிர்பார்த்தான்னா எப்படிக் கோவாப்பரேட் பண்ண முடியும்?

    திவ்யா அனுதாபத்துடன் அவள் கையை அழுத்தினாள்.

    அதோட நிக்கறானா... மத்த ப்ரொட்யூசர்களுக்கிட்டெல்லாம் போய் இதே வத்தி வெக்கறான். வளர வேண்டிய நடிகை. இப்படிப் பகைச்சுக்கிட்டா முடியாதுன்னு பயமுறுத்தல் வேற!

    விடு...அவன் பயமுறுத்தல்னாலே உன் திறமை வெளிவராம போயிடாது!

    லீலாவதி ஆத்திரத்தை அமுக்கியபடி மெளனமாக அமர்ந்திருந்தாள்.

    இந்தப் படம் உனக்கு எப்படிப்பட்டப் புகழைக் கொண்டு வரப்போறது பார்!

    லீலாவின் முகம் லேசாக மலர்ந்தது. "கொண்டு வந்தா அதிலே பாதி உன்னைச் சேரும். இந்த ரோலைப் பண்றது ஒரு

    Enjoying the preview?
    Page 1 of 1