Pathaiyorathu Pookkal
By Vaasanthi
()
About this ebook
மைசூர் பல்கலைக்கழகப் பட்டதாரி. நாவல்கள், குறுநாவல் தொகுப்புகள், சிறுகதைத்தொகுப்புகள், பயணக்கட்டுரை நூல்கள் என்று ஐம்பதுக்கும் மேலான நூல்கள் பதிப்பிக்கப் பெற்றுள்ளன. குறிப்பிடத்தக்க பத்திரிகையாளரும் கூட. இந்தியா டுடேயின் தமிழ்ப் பதிப்பின் ஆசிரியராக 9 ஆண்டுகள் வெற்றிகரமாகப் பணியாற்றி துணிச்சலான பத்திரிகையாளர் என்று முத்திரை பதித்தவர். கலை, கலாசாரம் அரசியல் என பல்வேறு புள்ளிகளை தொட்டுச் செல்லும் அவரது கட்டுரைகளில் பல அவை வெளி வந்த காலத்தில் தீவிர கவனம் பெற்றதுடன் விவாதங்களையும் தோற்றுவித்தன.
கலாசார பரிவர்த்தனைத் திட்டத்தின் கீழும் பல வெளிநாட்டு - இலக்கிய அமைப்புகளின் அழைப்பின் பேரிலும் உலக எ ழுத்தாளர் மாநாட்டுக்காக, சொற்பொழிவுகளுக்காக குறிப்பான பிரச்சினைகளை ஆராயும் பொருட்டு என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று வந்தவர்.
பெண் சார்ந்த பிரச்சினைகளைப்பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் எழுதி வருபவர். கூர்மையான அரசியல் ஆய்வாளர். இவர் இந்தியா டுடேயில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தின் போது ஏற்பட்ட தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகளை தமது அரசியல் சார்பற்ற பார்வையுடன் ஆங்கிலத்தில் எழுதிய 'CUT OUTS, CASTE AND CINE STARS' என்ற புத்தகத்தை பெங்குவின் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
பஞ்சாப், இலங்கை , ஃபீஜி நாடுகளின் இனப் பிரச்சினைகளைப் பின்புலமாக வைத்து இவர் எழுதிய நாவல்கள் - மௌனப் புயல், நிற்க நிழல் வேண்டும், தாகம் குறிப்பிடத் தகுந்தவை. மெளனப் புயல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பஞ்சாம் சாகித்திய அகாதெமி விருது பெற்றது. சமூக நாவலான 'ஆகாச வீடுகள் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஹிந்தி மொழிபெயர்ப்பிற்கு உத்தர் பிரதேஷ் சாஹித்ய சம்மான் விருது கிடைத்தது.
சமீபத்தில் வாஸந்தி சிறுகதைகள்' என்ற தொகுப்பிற்கு தமிழக அரசின் சிறந்த நூல் விருது கிடைத்தது.
Read more from Vaasanthi
Sariyaa? Sariyaa? Rating: 0 out of 5 stars0 ratingsTheekkul Viralai Vaithal Rating: 4 out of 5 stars4/5Aasai Mugam Maranthu Pochey! Rating: 1 out of 5 stars1/5Vadikaal Rating: 0 out of 5 stars0 ratingsSontham Illatha Bandham Rating: 3 out of 5 stars3/5Thurathum Ninaivugal Azhaikkum Kanavugal Rating: 4 out of 5 stars4/5Maara Vendiya Paathaigal Rating: 0 out of 5 stars0 ratingsOru Sangamathai Thedi… Rating: 5 out of 5 stars5/5Plum Marangal Poothuvittana Rating: 0 out of 5 stars0 ratingsJaipur Necklace Rating: 0 out of 5 stars0 ratingsNaan Budhanillai Rating: 0 out of 5 stars0 ratingsMoongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Aakasa Veedugal Rating: 0 out of 5 stars0 ratingsVergalai Thedi…. Rating: 0 out of 5 stars0 ratingsShurthi Bethangal Rating: 0 out of 5 stars0 ratingsPuthiya Vaanam Rating: 3 out of 5 stars3/5Puriyatha Arthangal Rating: 4 out of 5 stars4/5Thunaivi Rating: 2 out of 5 stars2/5Vittu Viduthalaiyagi… Rating: 0 out of 5 stars0 ratingsIndre Nesiyungal Rating: 0 out of 5 stars0 ratingsKariya Megangalil Oli Keetrugal Rating: 0 out of 5 stars0 ratingsAmerica Payana Diary Rating: 0 out of 5 stars0 ratingsNijangal Nizhalahumpothu… Rating: 0 out of 5 stars0 ratingsKadaisi Varai Rating: 0 out of 5 stars0 ratingsIndia Enum Aithegam Rating: 0 out of 5 stars0 ratingsKizhakkey Oru Ulagam Rating: 0 out of 5 stars0 ratingsIdaiveligal Thodarkindrana Rating: 5 out of 5 stars5/5Karai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsNazhuvum Nerangal Rating: 5 out of 5 stars5/5
Related to Pathaiyorathu Pookkal
Related ebooks
Moongil Pookkal Rating: 1 out of 5 stars1/5Unnai Kandu Uyirthean Rating: 4 out of 5 stars4/5Maanikka Naagam Rating: 5 out of 5 stars5/5Allikulathu Veedu Rating: 3 out of 5 stars3/5Valliname Melliname Rating: 4 out of 5 stars4/5Iranthavan Pesukirean! Rating: 0 out of 5 stars0 ratingsVealir Kula Selvi! Rating: 0 out of 5 stars0 ratingsUthayam Rating: 0 out of 5 stars0 ratingsVasantham Varum Rating: 0 out of 5 stars0 ratingsAval Oru Sittu Rating: 5 out of 5 stars5/5Ondru Serntha Ullam Maaruma? Rating: 0 out of 5 stars0 ratingsKanavu Kandean Drohi Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Varum Neram Rating: 5 out of 5 stars5/5Kannadi Vaasal Rating: 0 out of 5 stars0 ratingsNurse Madhavi Rating: 0 out of 5 stars0 ratingsInnum Sila Tajmahalgal Rating: 5 out of 5 stars5/5Yaathreegan Rating: 0 out of 5 stars0 ratingsOodathey Karuppu Rating: 5 out of 5 stars5/5Endhan Manam Unnai Sutruthey... Rating: 4 out of 5 stars4/5Ellai Kodu Rating: 3 out of 5 stars3/5Vishwa Thulasi! Rating: 0 out of 5 stars0 ratingsKarai Seratha Odangal Rating: 0 out of 5 stars0 ratingsMandhira Vaasal Rating: 5 out of 5 stars5/5Kaadhal Yutham Rating: 0 out of 5 stars0 ratingsOru Uyirin Kural Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsPoonkothu Rating: 0 out of 5 stars0 ratingsAbhaya Thendral Rating: 0 out of 5 stars0 ratingsPannaiyar Magal Rating: 0 out of 5 stars0 ratingsVaadagaikku Oru Uyir Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Pathaiyorathu Pookkal
0 ratings0 reviews
Book preview
Pathaiyorathu Pookkal - Vaasanthi
http://www.pustaka.co.in
பாதையோரத்துப் பூக்கள்
Pathaiyorathu Pookkal
Author:
வாஸந்தி
Vaasanthi
For more books
http://www.pustaka.co.in/home/author/vaasanthi-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
மீரா அண்ணாந்து பார்த்தாள், கரிய பெரிய மேகங்கள் பயங்கரமாகச் சுழன்று சுழன்று நகர்ந்த வண்ணம் இருந்தன. மிகப் பெரிய பாரத்தை இழுக்கிற மாதிரி சிரமப்பட்டு ஊர்ந்தன. ஊர்ந்து ஏராளமான கரிய போர்வையைப் பரத்தின.
மீரா சட்டென்று பார்வையை பீதியுடன் திருப்பிக் கொண்டாள். மிகப் பெரிய சத்தத்துடன் அந்தக் கரிய போர்வையைப் கிழித்துக் கொண்டு பீரங்கிகள் ஒலித்தன. கண்ணை வெட்டுகிற மாதிரி மின்னலும் தொடர்ந்து சடசடவென்று மழைத் துளிகளும் ஆரவாரத்ததுடன் ஆரம்பிக்கையில் மீராசின்னப்பெண்போல் தாதா
என்று கூக்குரலிட்டுக் கொண்டு பாதையோரத்துக்கு ஓடினாள்.
டில்லி கன்னாட் சர்கஸ் கடைகளைச் சுற்றி ஓடிய அந்த ஃபுட்பாத்தில் இரவுப் படுக்கையை விரிக்க ஆரம்பித்திருந்த ஸ்லீம் தனது குருட்டுக் கண்களைக் குரல் வந்த திசையில் கலவரத்துடன் திருப்பினான்.
என்ன மீரா? ஏன் கத்தறே?
மீரா அவசரமாக அவனருகில் ஒண்டிக் கொண்டாள். சுவற்றோரமாக சாய்ந்திருந்த அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு மார்பில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள்.
ஸலீம் தனது மெலிந்த கைகளுடன் அவள் முதுகை வருடினான்.
என்ன கண்ணு? என்ன நடந்தது? எவனாவது பொறுக்கிப் பய வாலாட்டறானா?
இல்லே! மழை வருது தாதா பயமாயிருக்கு!
ஸலீம் தாதா லேசாகப் புன்னகைத்தான். ‘அட அசட்டுப் பெண்ணே' என்கிற மாதிரி முதுகைத்தட்டினான்.
ஆ! மழை! அது உன்னையும் என்னையும் என்ன செய்யப்போகுது? ஒரு நூறு வருஷமா இந்த மழையை நா பாத்துகிட்டிருக்கேன், என்னை இது வரைக்கும் ஒண்ணும் செஞ்சதில்லே!
மீரா பதிலே சொல்லாமல் அவனது வார்த்தைகளும் அணைப்பும் ஏற்படுத்திய சமாதானத்தில் இப்பொழுது சரம் சரமாய் விழுந்து கொண்டிருந்த மழையை வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள்.
மழையின் வீச்சு அவர்கள் அமர்ந்திருந்த பிளாட்ஃபாரத்தின் முக்கால் பகுதியை நனைத்திருந்தது.
தங்களது கந்தல் படுக்கை விரிப்புகளை நகர்த்த வேண்டும் என்கிற பிரக்ஞைகூட இல்லாமல் உட்கார்ந்திருந்த மீராவை ஸலீம் லேசாக உலுக்கினான்.
பிட்டியா!(மகளே) துணியெல்லாம் நனையுது பார். இன்னும் ஏதாவது ஒதுக்குப் புறமான இடம் இருக்குமான்னு பாரு!
பயமாயிருக்கு தாதா!
அந்த அசட்டுத்தனம் தானே வேண்டாம்ங்கிறது! தண்ணியிலே நனைஞ்சு ஜூரம் வந்ததுன்னா மருந்துக்கும் மாயத்துக்கும் எங்கே போறது?
சரி சரி இதோ போறேன்!
மீரா விடுக்கென்று எழுந்தாள், ஆவேசத்துடன் பிளாட்ஃபாரத்தில் பாய்ந்து கொண்டிருந்த மழைக்கற்றைகளை லேசான பயத்துடனேயே கடந்தபோது, ஒரு ஒதுக்குப்புறமான சாய்ந்த இடம் கண்ணுக்குப்பட்டது. அங்கே அவர்களைப் போன்ற ஒரு பாதையோரத்துவாசி பீடி புகைத்துக் கொண்டிருந்தான். அவள் சினேகத்துடன் அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
அவன் பதிலுக்குப் புன்னகைக்காமல் பார்வையை சுளுக்கியபடி புகை வளையங்களுக்கிடையே ஈர உடையுடன் நிற்கும் அவளைப்பார்த்தான்.
இந்த இடம் காஞ்சிருக்கு. ஸலீம் தாதாவும் நானும் இங்கப் படுத்துக்க வரம்.
அவன் பதில் ஏதும் சொல்லாமல் மண்டையை மட்டும் ஆட்டினான் 'சரி' என்கிற மாதிரி.
அவன் ஏதோ தன் சொந்த வீட்டை இலவசமாகக் கொடுத்துவிட்டது போல் அவள் சந்தோஷத்துடன் நகர்ந்தாள்.
மழைச் சாரலுக்கு பயந்து சுவரோடு ஒட்டிக் கொண்டிருந்த ஸலீம் தாதாவை எழுப்பி துணியை சுருட்டி கக்கத்தில் செருகிக்கொண்டு அவனை நடத்தி அந்த ஒதுக்குப் புறத்துக்குப் போய்ச் சேர்ந்த போது அந்த ஆள் ஒரு மூலையில் தலையிலிருந்து கால்வரை போர்த்தியபடி படுத்திருந்தான். சற்று முன் வரைக் கொட்டு கொட்டென்று உட்கார்ந்திருந்தவன் அதற்குள் எப்படித் தூங்கிப் போனான் என்று அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.
படுக்கையை விரித்து ஸ்லீம் உட்கார்ந்த போது அவள் தன் உடையிலிருந்த ஈரத்தை ஒரு ஒரமாகச் சென்று பிழிந்து விட்டு வந்தாள்.
ஈரத் துணியை மாத்தல்லே?
இல்லே!
மாத்து காஞ்ச புடவையிருக்கா?
இல்லே. பாவாடைதான் இருக்கு!
பரவாயில்லே மாத்து!
அவள் அந்த ஆள் முழித்துக் கொண்டிருக்கிறானா என்று பார்த்து, இல்லை என்று நிச்சயித்து இருந்த ஒரே மாற்றுப் பாவாடையும் ரவிக்கையும் எடுத்து அணிந்து கொண்டாள். ஓரமாக இருந்த ஒரு கடைக் கதவின் கைப்பிடியில் தன் ஈரப் புடவையைத் தொங்கவிட்டு ஸ்லீம் தாதாவிடம் ஒண்டிக் கொண்டு படுத்துக் கொள்கையில் இனம் புரியாத ஒரு நிம்மதியும் சந்தோஷமும் மனசை நிறைத்தது. ஸ்லீம் அவளைத் தன் சுருங்கிய கைகளால் அணைத்துக் கொண்டான்.
பிட்டியா மீரா! தூங்கு!
என்று கொஞ்சினான்.
இன்னிக்கு வயிறார சாப்பாடு போட்டே அல்லவா உனக்கு ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக்கணும்!
மீரா பதில் ஏதும் சொல்லாமல் கண்களை மூடிக் கொண்டாள். ஸலீம் தாதா அடிக்கடி இந்த வார்த்தைகள் சொல்லுவான். வார்த்தைகளின் உச்சரிப்பில் இருக்கும் நெகிழ்ச்சி அவளுள் ஒரு வேதனைகளை எழுப்பும். தாதாவுடன் ஏற்பட்டுப் போன பழக்கத்தில் அவளே இப்பொழுதெல்லாம் ஹே பகவான் என்பதற்கு பதில் ஹே அல்லா என்கிறாள். கண்ணுக்குப் புலப்படாவிட்டாலும் எல்லா ஜீவராசிகளையும் காப்பாற்றுவது இந்த ஆசாமி தான் என்று தாதா சொல்லுவான்.
அவளுக்கு இப்பொழுதெல்லாம் எந்த வித யோசனையும் இருப்பதில்லை. சரீரத்தின் உணர்வுகள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. பசிக்கும் போது புசிக்க வேண்டும் என்கிற உணர்வும், உறக்கம் வரும் போது உறங்க வேண்டும் என்கிற இயல்பான கண் மூடலுமாக வெறும் நாய் ஜன்மமாக மாறி எத்தனை நாட்களாகி விட்டன! ஆனால் வெறும் நாயில்லை. நன்றியும் விசுவாசமும் உள்ள நாய் ஜன்மம் தன்னந்தனியாக தத்தளிக்கும் ஓடத்துடன் நடு சமுத்திரத்தில் நிற்க்கையில், துடுப்புப் போட திடீரென்று வந்து முளைத்த இந்தக் கிழவனிடம் ஏற்பட்டுப்போன பிடிமானம் அவளுக்கே புரியாத அவள் அதிகம் யோசித்துப் பார்க்காத ஆச்சரியம்.
அந்த அல்வாவோ, பகவானோ, அவன் உண்மையிலேயே கருணையுள்ளவனாக இருக்க வேண்டும். எப்படி இந்த கிழவனை சமயம் பார்த்து நாதியற்ற அவளிடம் சேர்ப்பித்து வைத்தான் அவள் அனுபவித்தே அறியாத அன்பையும் கரிசனத்தையும் ஏந்தியவனாய் அவள் சிரித்தால் சிரிப்பவனாய், அவள் துக்கித்தால் உருகுபவனாய் இரத்த சம்பந்தமே இல்லாத ஒருத்தனால் இத்தனை அன்பைக் காட்ட எப்படி முடிகிறது? இவனே தான் அல்லாவோ?
அவள் என்ன காரணம் என்று புரியாமல் மெலிதாக அழ ஆரம்பித்தாள். கிழவனின் மார்பில் இன்னும் நெருக்கமாக முகத்தைப் புதைத்துக் கொண்டாள். பீடியின் நாற்றம் அவனிடமிருந்து வருவது கூட மிகப் பரிச்சயமாக நேசிக்கக் கூடியதாகத் தோன்றிற்று, அரைத் தூக்கத்தில் அவள் அழுவதை உணர்ந்து ஸலீம் அவள் முதுகைத் தடவிக் கொடுத்தான்.
அழாதே அசட்டுப் பெண்ணே, அழாதே...!
திடீரென்று உலுக்கப்பட்டவள் மாதிரி நினைவுகளின் சுழல் நடுவில் அவள் நின்றாள். இதே வார்த்தைகளை எங்கோ எப்பொழுதோ கேட்ட மாதிரி மெலியதாகத் தோன்றிற்று. மங்கலாகத் தெரியும் காட்சியை நன்றாக பார்க்க விரும்பியவள் போல் அவள் கண்களைக் கசக்கிக் கொண்டு மறுபக்கம் ஒருக்களித்துப்படுத்து வெட்ட வெளியைப் பார்த்தாள். இருண்ட வானத்துக்கும் ஃப்ளுரஸன்ட் வெளிச்சம் பரப்பிய தெருவுக்கும் கம்பி சரங்கள் இணைத்த மாதிரி மழை