Nishabdha Sangeetham
By GA Prabha
5/5
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsUravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsManasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Aasai Veedu Rating: 5 out of 5 stars5/5En Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kandan Pugazh Padum Kandar Alangaram Rating: 0 out of 5 stars0 ratingsManathin Arathanai Rating: 5 out of 5 stars5/5
Related to Nishabdha Sangeetham
Related ebooks
Venpura Nesam Rating: 0 out of 5 stars0 ratingsManathin Nizhalgal Rating: 0 out of 5 stars0 ratingsKankal Solkindra Kavithai Rating: 5 out of 5 stars5/5Minmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Vennilavu Deepangal Rating: 0 out of 5 stars0 ratingsJayanthi Vandhal Rating: 0 out of 5 stars0 ratingsSaharavil Pootha Roja Rating: 0 out of 5 stars0 ratingsEn Ninaivu Neethane Rating: 0 out of 5 stars0 ratingsAnandha Alaigal Rating: 5 out of 5 stars5/5Nenjil Niraintha Ragam! Rating: 0 out of 5 stars0 ratingsAattrottathu Pookkal Rating: 0 out of 5 stars0 ratingsEn Iniya Kaadhaliye Rating: 0 out of 5 stars0 ratingsNeelanira Kanavugal Rating: 0 out of 5 stars0 ratingsAndhi Nerathu Udhayam Rating: 0 out of 5 stars0 ratingsMinnal Devathaigal Rating: 0 out of 5 stars0 ratingsSoorya Dharisanam Rating: 0 out of 5 stars0 ratingsNilavodu Vaa Thendraley Rating: 0 out of 5 stars0 ratingsUyiril Kalantha Uravugul Rating: 0 out of 5 stars0 ratingsPookkal Malarum Rating: 5 out of 5 stars5/5Kaadhal Vaibogame Rating: 2 out of 5 stars2/5Thulli Sellum Megam Rating: 0 out of 5 stars0 ratingsPavala Malli Rating: 0 out of 5 stars0 ratingsMazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Aazhkadal Nesam Rating: 5 out of 5 stars5/5Arunaa Nandhiniyin Short Stories Rating: 0 out of 5 stars0 ratingsEngiruntho Aasaigal Rating: 5 out of 5 stars5/5Sol Sol Ennuyire Rating: 0 out of 5 stars0 ratingsPoongatru Puthithanathu Rating: 0 out of 5 stars0 ratingsKrishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsParavasam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Nishabdha Sangeetham
1 rating0 reviews
Book preview
Nishabdha Sangeetham - GA Prabha
http://www.pustaka.co.in
நிசப்த சங்கீதம்
Nishabdha Sangeetham
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
1
நீயென தின்னுயிர் கண்ணம்மா எந்த நேரமும் நின்றனைப் போற்றுவேன்
வக்ர துண்ட மாகா காய சூர்யகோடி சமப் ப்ரப நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷூ சர்வதா
இரண்டாவது முறையில் விழிப்பு வந்து விட்டது.
ஆனால் சாய் நாதன் எழுந்திருக்கவில்லை. அப்படியே படுத்திருந்தார்.
உடலின் சோர்வு அகன்று ஒரு சுறுசுறுப்பு வரும் வரை அப்படியே கிடப்பார்.தினசரி சொல்லும் பாரதியார் பாட்டு மனசுக்குள் மந்திரமாய் ஓடும்.புது பேட்டரி போட்டது போல் ஆகி விடும் மனசும், உடலும்.
கண்ணை மூடிக்கிடந்தார். மனம் அம்பாய் பாரதி வரிகளை துழாவியது.
எடுத்த காரியம் யாவினும் வெற்றி எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே விடுத்த வாய்மொழிக்கெங்கனும் வெற்றி வேண்டினேனுக் கருளினள் காளி. மனம் முணுமுணுத்தது.
எத்தனை வருடங்களாகச் சொல்லும் பாடல்.
வெற்றி கிடைக்கிறது. சில சமயம் அது தோல்வி போலத் தோன்றினாலும் பின்னாளில் அதுவே வெற்றியாக மாறி விடுகிறது. ஒன்று மட்டும்தான் தோல்வி போலத் தெரிகிறது. ஆனால் சாய் நாதன் அதை ஒப்புக் கொள்வதில்லை. சற்றே விலக்கி வைக்கப் பட்ட வெற்றி என்பார்.
ஒரு நாள் அந்த வெற்றியும் தன்னைத் தேடி வரும் என்பார்.
அந்த நாளுக்குத்தான் காத்திருப்பதும்.
மீண்டும் அலாரம் வக்ரதுண்ட மகாகாய என்று பாடியது. அவசரமாய் எழுந்து அதை நிறுத்தினர்.பாத்ரூமுக்குள் சென்று முகம் பல் கழுவி வெளியில் வந்து டீ ஷர்ட்டை அணிந்து கொண்டார். தலையில் ஒரு குல்லாய்.வெளியில் வந்து சாமி படத்துக்கருகில் இருந்த விபூதியை எடுத்து இட்டுக் கொண்டார்.
கிச்சனில் மட்டும் விளக்கு எரிந்தது. சுக்கான் எதோ ஒரு பாட்டை முணு முணுத்தபடி காஃபி கலந்து கொண்டிருந்தான்.
டேய் சுக்கான். இது உனக்கே நியாயமாடா?
திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தவன் அய்யே நீதானா எஜமான்
என்றான்.
ஏண்டா எஜமான்னு சொல்றே. என்னை விட்டுட்டு ஏண்டா நீ மட்டும் காபி குடிக்கறே?
எஜமானுக்கு முன்னாடி வேலைக்காரன் குடிச்சுப் பாக்கனும்க.
சரி, நீ இப்போ உசிரோடதான இருக்கே?
ஆமா, ஆமா,
"அப்போ எனக்கு ஒரு காப்பி கொடு.?
பால் கலந்தா, இல்லாமயா"
கலந்தே கொடு.
சக்கரை போட்டா, போடாமயா
போட்டே கொடு.
வெள்ளைச் சக்கரையா கரும்புச் சக்கரையா?
நான் உன்னை ஒரு கேள்வி கேக்கவா?
கேளுங்க எஜமான்
உன்னை இப்போ கொல்லலாம்னு. நினைக்கறேன். கத்தியால குத்தவா அருவாளால ஒரே போடா
எஜமான். அருவாளால் ஒரே போடு போட்றுங்க.
இப்ப அதைத்தாண்டா செய்யப் போறேன். காப்பி கொடுன்னா, கேள்வி கேட்டுட்டு இருக்கே.மடப் பயலே?
சொல்ல மாட்டீங்க. ஸ்கூலுக்கு அனுப்பி இருந்தா நானும் புத்திசாலி ஆகி இருப்பேன்ல
ஏண்டா, ஸ்கூலுக்கு அனுப்பினா கிணத்துல விழுந்துருவேன்னு போனவந்தானே. விழுந்திருக்க வேண்டியதுதானே. சரி இப்போ சரி சொல்லு உன்னை எல்.கே.ஜில் சேர்த்து விடறேன்,
ஏன் உங்க எதிரி யாராச்சும் அங்க டீச்சரா இருக்காங்களா?
அடப்பாவி.ஏண்டா நல்லது செய்ய விட மாட்டீங்களா?
எஜமான், காப்பியைக் குடிங்க, உங்க ஆளுங்க எல்லாம் காத்துகிட்டு இருப்பாங்க. வாக்கிங் போய்ட்டு வாங்க. சின்ன எஜமான் எழுந்துக்கறதுக்குள்ள நான் டிபன் செய்யணும் தம்பிக்கு பிடிச்ச மாதிரி.
ஏண்டா எனக்குப் பிடிச்ச மாதிரி செய்ய மாட்டியா?
"என்ன திம்பீங்க? சொல்லுங்க பாக்கலாம். உப்பு அதிகம் இல்லாம கஞ்சி, சக்கரை வியாதி, அதுக்கு சப்பாத்தி. ரிடையர் ஆகி வீட்டுல சும்மாதானே இருக்கீங்க. மெதுவா சாப்பிட்டா போதுமே.தம்பீதான் வளர்ற புள்ள. வேலைக்குப் போகுது. அதுக்கு வித, விதமா சமைச்சுப் போட்டு திங்கறதை அழகு பாக்கணும்.
பாருடா, பாரு, என் வீடு, என் காசு. ஆனா எனக்கு வேணும்கற உணவு இல்லை. போங்கடா, நான் வேற வீட்டுக்குப் போய்க்கறேன்.
என்னத்துக்கு? வேற பொண்ணை கலயாணம் செஞ்சுகிட்டு இங்க கூட்டியாந்துருங்க.
ஒரு ஆள் எத்தனை பேரைக் கல்யாணம் செஞ்சுக்குவான்?
சாய் நாதன் புன்னகையுடன்தான் கேட்டார். ஆனால் சுக்கானுக்கு அழுகை வந்தது.மூக்கை உறிஞ்சி கண்ணைத் துடைத்துக் கொண்டான்.
இன்னும் எத்தனை காலத்துக்கு அதை நினைசுகிட்டு இருக்கப் போறீங்க?
சாகற வரைக்கும். மனசு ஒண்ணுதான் சுக்கா
சுக்கான் பதில் பேசாமல் காப்பியைக் கலந்து அவர் முன் வைத்தான். அவருடைய பத்தாவது வயதில் இந்த வீட்டுக்கு வந்தான் சுக்கான். அவன் அம்மாவுக்கு இங்கு சமையல் வேலை. அவரின் அம்மா, இரண்டாவது குழந்தை பிறந்து, உடல் நலிவுற்றுப் படுத்திருந்த சமயம்.
வீட்டைக் கவனிக்க, குழந்தையைக் கவனிக்க என்று வந்தார்கள். அப்பா இல்லை.அவருடன் சுக்கானையும் படிக்க ஸ்கூலுக்கு அனுப்பினார் அப்பா. கிணற்றில் விழுகிறேன் என்று ஓடி விட்டான்.பிடித்து இழுத்து வந்து விட்டார்கள்.அதன் பிறகு மெல்ல, மெல்ல அப்பாவுடன் கடைக்கு வேலைக்குப் போனான். தங்கையை அவன்தான் வளர்த்தான்.அம்மாவின் கை வேலையைப் பிடுங்கிச் செய்வான். கொஞ்சம், கொஞ்சமாக அவன் இல்லாமல் வீடு இல்லை என்ற நிலைக்கு தள்ளப் பட்டு விட்டது.
இன்று சாய் நாதனுக்கு அறுபது வயதாகிறது.அவன்தான் சகலமும்.நம்பிக்கையானவன். கல்யாணமும் செய்து வைத்தார்கள். அவள் ஒரு வருஷம் இந்த வீட்டில்தான் வேலை செய்தாள். அதன் பிறகு பனியன் கம்பெனிக்குச் சென்றவள் அப்படியே ஒருவனுடன் ஓடி விட்டாள்.
போகட்டும் விடு என்று தன் வேலையில் மூழ்கி விட்டான் சுக்கான்.
இந்தக் குடும்பத்தின். சந்தோஷம், நலம் மட்டுமே அவனுக்கு முக்கியம்.இன்று அவன் இன்றி வீடு இல்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டு விட்டது வீடு. அவரின் மகன் சந்தீப் சுக்கான் என்று பின்னாடியே சுற்றுவான். மகராஜ் என்று அழைத்தபடி சுக்கானும் அவன் பின்னாடியே சுற்றுவான்.சந்தீப் நேரம் ஆகி விட்டது என்றால் விட மாட்டான். அவன் ஷர்ட் மாற்றும்போது, ஷூ மாட்டும்போது பினாடியே சென்று டிபனை ஊட்டி விடுவான்.
எங்கிருந்தோ வந்தான்