Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thoduvanam
Thoduvanam
Thoduvanam
Ebook67 pages24 minutes

Thoduvanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

GA Prabha is a prolific writer of Tamil, and has written about 100 novels, 120+ short stories, 5 novelettes covering in family and romance category. Her works are published in various magazines. She has also won many prizes conducted by various magazines like Kalki and Anandha Vikatan.


Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580101003865
Thoduvanam

Read more from Ga Prabha

Related to Thoduvanam

Related ebooks

Reviews for Thoduvanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thoduvanam - GA Prabha

    http://www.pustaka.co.in

    தொடுவானம்

    Thoduvanam

    Author:

    ஜி.ஏ.பிரபா

    GA Prabha

    For more books

    http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    1

    மனதின் தாழ்வரைகளில் ஓயாது ஒலிக்கிறது உன் குரல் மனதை வருடும் ஒரு மெல்லிய பூங்காற்றாய்.......

    இல்லம் அழகாய், அமைதியாய் இருந்தது.

    மொத்தமாய் அம்பது வீடுகள்தான் இருக்கும். சுற்றிலும் மரங்கள், தென்னை, பாக்கு மரங்கள் என்று பசுமையாய் இருந்தது. கடுகு தாளிக்கும் வாசனை நாசியில் மோதியது.தேங்காய், பூண்டு, வெங்காயம் வதக்கும் வாசனை கம்என்று நாசியில் மோதியது.

    அதை ரசித்தபடி சிறிது நின்றாள் அகிலா.

    மழை மேகம் சூழ்ந்து வானம் கருத்திருந்தது.காற்றில் மண் வாசனை.அதை இழுத்து நுகர்ந்து அந்த இயற்கை வாசனையை நுரையீரலில் நிரப்பிக் கொண்டாள் அகிலா.

    மனசு உற்சாகமானது. உற்சாகம் என்பது நம் மனதில் உள்ளது.அதை வெளியிலிருந்து கொண்டு வர முடியாது.நமக்கு நாமே உற்சாகப் படுத்திக் கொள்வது முக்கியம் என்று நினைத்தாள் அகிலா.

    அதனால்தான் மிகப்பெரிய அவமானத்தை சகித்துக் கொண்டு இங்கு வந்து இந்த இயற்கையை, மண் வாசனையை அனுபவித்துக் கொண்டு நிற்கிறாள்.

    மழை வருவது மயிலுக்குத் தெரியும்

    மெல்லப் பாடினாள்.

    தனக்கு பாட்டும் வருகிறதா என்று தனக்குள் வியந்த படி மெல்ல அந்த சோலை நடுவே நடந்து அலுவலகத்துக்குச் சென்றாள். இல்லத்துக்கு நடுவில் சுற்றிச், சுற்றி தார் ரோடு போட்டிருந்தது.இரண்டு புறமும் வரிசையாக வீடுகள்.மொத்தமாய் அம்பது வீடுகள்தான்.

    மல்லிகை சீனியர் ஹெவன் என்ற அந்த ஹோம் சகல வசதிகளுடன் இருந்தது.இதில் வீடுகள் நிரம்பி இதன் அருகிலேயே பவழ மல்லி என்று இன்னொரு ஹோம் உருவாகிறது.

    அகிலாவுக்கு அவள் மகன் இங்கு சொந்தமாகவே வீடு வாங்கிக் கொடுத்து விட்டான்.வாடகைக்கும் வீடு கிடைக்கிறது.

    இனி வரும் காலங்களில் ஹோம்தான் முதியவர்களின் இருப்பிடமாகப் போகிறது.பெற்ற குழந்தைகளுக்கு பாரமாய் இருக்க விரும்பாமல், தன்மானத்துடன் வாழ விரும்புபவர்கள், ஆதரவு இல்லாதவர்களுக்கு புகலிடம் இந்த முதியோர் இல்லங்கள்தான். பெற்றவர்களை இல்லத்துக்கு அனுப்பும் பிள்ளைகளும் பின்னாட்களில் வரப் போவது இதே இல்லத்திற்குத்தான்.

    அகிலாவிற்கு இங்கு வருவதைப் பற்றி ஆரம்பத்தில் சிறிது வருத்தம்தான். சொந்த பந்தங்களை விட்டு, நண்பர்கள், பழகிய இடத்தை விட்டு புது இடத்தில் எப்படி இருப்பது என்ற கவலை.ஆனால் தனியாக இருக்க முடியவில்லை. சர்க்கரை வியாதி, இதயம் பலவீனம் என்று அவளைத் தனியே விட பிள்ளை பயந்தான்.

    அவன் அமேரிக்கா சென்று ஐந்து வருடம் ஆகி விட்டது. வழக்கம்போல் அவனுக்கு இந்தியா வர விருப்பமில்லை.அங்கேயே செட்டில் ஆகப் போகிறான் என்று புரிந்து விட்டது.அவன் விரும்பினாலும் அவன் மனைவி வர விட மாட்டாள்.வெளி நாட்டில் இருக்கிறான் என்றுதான் அவனையே திருமணம் செய்து கொள்ள சம்மதித்தாள். அகிலா

    Enjoying the preview?
    Page 1 of 1