Sol Sol Ennuyire
By GA Prabha
()
About this ebook
Currently she lives in Gopichetty Palayam, Tamil Nadu.
Read more from Ga Prabha
En Idhayam Enbathu Neeyaga Rating: 0 out of 5 stars0 ratingsAasai Veedu Rating: 5 out of 5 stars5/5Manasukkul Pozhiyum Mazhai Rating: 4 out of 5 stars4/5Uravai Naadum Paravai Rating: 0 out of 5 stars0 ratingsPeiyena Peiyum Mazhai Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Manathin Arathanai Rating: 5 out of 5 stars5/5
Related to Sol Sol Ennuyire
Related ebooks
Ennul Nee Pathitha Suvadu Rating: 0 out of 5 stars0 ratingsVeppamarathu Pookkal Rating: 5 out of 5 stars5/5Unnudane Naan Rating: 4 out of 5 stars4/5Netru Nila Indru Nee Rating: 5 out of 5 stars5/5Ithu Enna Mayamo? Rating: 5 out of 5 stars5/5Enakkena Viriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Neengatha Ennam Ondru Rating: 5 out of 5 stars5/5Krishna Gaanam Rating: 0 out of 5 stars0 ratingsAnbenum Pookkal Malaratum.... Rating: 0 out of 5 stars0 ratingsDevathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsRoja Ithazhgal Rating: 0 out of 5 stars0 ratingsNesapoovin Narumanam Rating: 5 out of 5 stars5/5Manoratham Rating: 4 out of 5 stars4/5Engey En Jeevaney..? Rating: 5 out of 5 stars5/5Poongatru Thirumbuma? Rating: 0 out of 5 stars0 ratingsPoomaalaiye Thol Serava Rating: 3 out of 5 stars3/5Mazhai Tharum Megam Rating: 5 out of 5 stars5/5Neeyiruntha Manasu Rating: 4 out of 5 stars4/5Nenjirkoru Vanchikkodi Rating: 5 out of 5 stars5/5Ullangal Ondragi... Rating: 0 out of 5 stars0 ratingsAagasa Garudan Rating: 5 out of 5 stars5/5Un Ullam Naanariven Rating: 0 out of 5 stars0 ratingsThanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Enakkaakave Vanthaai Rating: 3 out of 5 stars3/5Poo Pookkum Osai Rating: 5 out of 5 stars5/5Unnai Karam Pidithean Rating: 0 out of 5 stars0 ratingsMinmini Pookkal Rating: 5 out of 5 stars5/5Malare Mayangaathe Rating: 0 out of 5 stars0 ratingsKangal Sollum Kavithai Rating: 5 out of 5 stars5/5Nee En Sanrothayam Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Sol Sol Ennuyire
0 ratings0 reviews
Book preview
Sol Sol Ennuyire - GA Prabha
http://www.pustaka.co.in
சொல் சொல் என்னுயிரே
Sol Sol Ennuyire
Author:
ஜி.ஏ.பிரபா
GA Prabha
For more books
http://www.pustaka.co.in/home/author/ga-prabha-novels
Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
All other copyright © by Author.
All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.
பொருளடக்கம்
அத்தியாயம் 1
அத்தியாயம் 2
அத்தியாயம் 3
அத்தியாயம் 4
அத்தியாயம் 5
அத்தியாயம் 6
அத்தியாயம் 7
அத்தியாயம் 8
அத்தியாயம் 9
அத்தியாயம் 10
அத்தியாயம் 11
அத்தியாயம் 12
அத்தியாயம் 13
அத்தியாயம் 14
அத்தியாயம் 15
1
கண்களிரண்டும் நெஞ்சோடு
கைகளிரண்டும் மனதோடு
உணர்வுகள் அனைத்தும் உன்னோடு.
மூன்றாவது மணியோசையில் விழிப்பு வந்து விட்டது.
கணகணவென்று கோவில் மணியோசைதான் அலாரம். டன், டன் என்ற அதன் நாதம் வீட்டில் இருக்கும் எல்லோரையும் எழுப்பி விடும்.அதனாலேயே அலாரம் வால்யூமைக் குறைத்து வைத்திருந்தாள் மாலதி.
விழிப்பு வந்ததும் எழுவதில் சுவாரஸ்யம் இல்லை. கண் மூடி மெதுவாக அந்த அதிகாலை நேரத்து இனிமையை, அமைதியை, அதன் நடுவில் ஒலிக்கும் பறவைகளின் கீதத்தை ரசிப்பது வழக்கம். பறவைகளின் கீச்சொலியே அன்றைய நாள் எப்படி இருக்கும் என்று உணர்த்தி விடும் அவளுக்கு.பக்கத்து வீட்டில் கிளி வளர்த்தார்கள். அது அதிகாலையிலேயே ராமா, ராமா என்று கூவ ஆரம்பித்து விடும்.
இன்று ஏனோ கிச், கீச் என்ற ஒலி இல்லை.
என்னாச்சு?
எழுந்து ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள் மாலதி.பனி தூறிக் கொண்டிருந்தது.
பனி பெய்யும் அதிகாலையே அழகுதான்.வெண் புகையாய் சூழ்ந்து பரவி இடை இடையே ஜொலிக்கும் தெரு விளக்குகளின் ஒளி, அந்த அதிகாலையிலும் பால் எடுத்துச் செல்லும் சைக்கிள் மணியோசை, தலையில் குல்லாயுடன் கோலம் போடும் எதிர் வீட்டு மாமி, ஜாலரா மணியுடன் தெரு வளம் வந்து பஜன் பாடி கோவிலுக்குப் போகும், பஜனை கோஷ்டிகள், தெருக் கோடியில் விநாயகர் கோவிலில் ஒலிக்கும் ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார் பட்டி வாருங்கள் என்ற பாடல் --- மார்கழி மாதம் அதிக உயிர்ப்புடன் இருக்கிறது.ஆழகாக இருக்கிறது.
வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயமும் அழகுதான். ரசிக்கும் மனம் இருந்தால்.மாலதியிடம் அழகும் இருந்தது. ஆழகை ரசிக்கும் மனமும் இருந்தது.
ஜன்னலில் முகம் பதித்து பனியின் சில்லிப்பை கண் மூடி அனுபவித்தாள். ஜில் என்ற காற்றும், குளுமையும் சேர்ந்து மனதைச் சமப்படுத்தியது. இரவு முழுதும் மனதைக் குழப்பிய கவலைகள் விலகி வருவது வரட்டும், வாழ்ந்தே தீருவது என்ற தீவிரம் தோன்றியிருந்தது மனதில்.
இப்போதும் அதே உணர்வு தோன்ற தன் அறைக்கதவைத் திறந்து கொண்டு வெளியில் வந்தாள்.ஹால் முழு இருளில் மூழ்கி இருந்தது.சின்ன நைட் லேம்ப் ஆரஞ்சு நிற ஒளியை மங்கலாக வீசியபடி ஒளிர்ந்தது.
அண்ணா ரூம் அவன் மனதைப் போலவே முழு இருளில் மூழ்கி கதவு அடைத்துக் கிடந்தது.
அவனைப் பற்றி நினைக்காதே - மண்டையில் தட்டிக் கொண்டாள்.தேவை ஏற்படும் நேரத்தில் மட்டுமே இந்த வீட்டின் நினைப்பு வரும் அவனுக்கு.இப்போது வீட்டை விற்று பணத்தைப் பங்கு போட வந்திருக்கிறான்.
கசப்போடு மனது அவன் நினைவை ஒதுக்கியது.
முகம் கழுவிக் கொண்டு வெளியில் வந்தாள்.மார்கழியில் எப்போதும் அதிகாலையில் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் பூஜைகள் நடப்பது வழக்கம்.அந்தக் குளிரிலும் உற்சாகத்துடன் பங்கேற்பவர்களால் அந்த நாள் முழுதும் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து விடும்.
அது ஒரு காலனி மாதிரி. பெயரே கணபதி நகர். மொத்தமாய் நூறு வீடுகளுக்குள் இருக்கும்.தினசரி பூஜைகள் பிரசாதம், மாலையில் பஜன் என்று ஒரு அமைப்பாகச் சேர்ந்து உற்சாகமாக செயல் படுவார்கள். மாலதி தலைமையில் ஸ்லோக வகுப்புகள் நடக்கும். மீனாட்சி மாமி பாட்டு என்று எல்லோரும் ஒரு குடும்பமாகச் செயல் படுவார்கள்.வீட்டில் இல்லாத நிம்மதி, கிடைக்காத அன்பு அவளுக்கு இங்கு கிடைக்கும்.
எத்தனை வேலை இருந்தாலும், காலையும், மாலையும் இங்கு வரத் தவற மாட்டாள் மாலதி.அவள் நடத்தும் இசைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் கச்சேரி மாலை நேரம் நடக்கும்.அவள் தலைமையில் ஒரு குழு சஹஸ்ரநாமம் படிக்கும்.
இப்போதும் அவளுக்காக ஒரு குழு காத்திருந்தது.
காலையில் மாலதி வந்த பிறகுதான் பிரசாதம் விநியோகிக்கப் படும் என்பதை மாலதி அவர்கள் மறந்தது ஏனோ?
ஆடிட்டர் சங்கரன்.
நான் வராட்டி என்ன? வேறு யாரானும் தரலாமே?
நீதான் மிகச் சரியாக விநியோகம் செய்வாய்.
ஆமாம்.குரங்கு அப்பம் பங்கிய மாதிரி
மாலதி சிரித்தாள்.
அப்படி இல்லம்மா. நீ வந்து என் அப்பன் கணபதி மேல ஒரு பாட்டு பாடிய பிறகு, வயிறு, மனசும் நிரம்ப நீ பிரசாதம் வழங்குவே. உன் அன்பில் நனைந்து அதை சாப்பிட்டு போனா அப்புறம் பசியே வராது.மார்கழியின் சிறப்பே பிரசாதம்தானே!
இன்று என்ன பிரசாதம்?
வெண் பொங்கல்
மீனாட்சி மாமி
நேற்றும் வெண்பொங்கல், இன்றும் அதே, இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இச் செயல் வருந்தத் தக்கது..
வக்கீல் கோபால்.
ஆம் இதை நானும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சங்கரன்.
மார்கழியில் இறைவனைக் கும்பிட வரோமா, இல்லை பிரசாதம் திங்கவா?
இரண்டும் சேர்ந்துதான். சுடச் சுட பிரசாதத்துடன் மார்கழி நாயகனை சேவிச்சுப் பாருங்கோ. அதுதான் ஆனந்தம்னு புரியும். வாழ்க்கைங்கறதே இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களின் கோர்ப்புதானே.
சங்கரன்.
உண்மைதான். நிலையில்லாத உலகம், மனிதர்கள். மரணம் ஒரு பூனையைப் போல் பதுங்கி வந்துண்டு இருக்கு. எப்போ வேணாலும் பாயலாம்.அதற்குள் வாழ்ந்துடலாமே. போன நிமிஷம் முடிஞ்சு போச்சு. அடுத்த நிமிஷம்கறது நம்பிக்கை இல்லை. இந்த நிமிஷம் இது மட்டும்தான் உண்மை.இதை உற்சாகமாய் அனுபவிப்போமே.
வக்கீல்.
இதான் மூலம் தாங்கள் சொல்ல விரும்புவது?
– மணி சார்.
அதனால் இன்னும் கொஞ்சம் பொங்கல் போடுன்னு சொல்றேன்.
அதானே பார்த்தேன்
பொங்கல் தீர்ந்து போச்சு.
- மாலதி சிரித்தாள்.
?எல்லாத்துக்கும் ஒரு கொடுப்பினை வேணும்."
எதோ சில மாதங்கள் இருக்காம். அதுல பிறந்தா அதிர்ஷ்டம் இருக்குமாம்
எந்த மாதம்னு சொல்லு மாலதி.அந்த மாசத்துல போய் பிறந்துடறேன்.
வக்கீல்
வாழும் வகைல வாழ்ந்தா எல்லா நாளும் நல்ல நாள்தான்.
இந்தப் பிறவியில அதிர்ஷ்டமா வாழ்றது எப்படி?
ஏதானும் அரசியல் கட்சியில சேர்ந்து சமுக சேவை செய்யப் போறேன்.
"பிரசாதம் சாப்பிட்ட தொன்னையை குப்பைத் தொட்டில போட்டா அது கூட சமூக சேவைதான்.ஆடிட்டர் எல்லோருடைய தொன்னையை வாங்கி குப்பைத் தொட்டியில் போட்டார்.
அடுத்து நம் ப்ரோக்ராம் என்ன?
பக்கத்துல அம்மன் கோவில்ல பூஜை முடிஞ்சிருக்கும். அங்க போனா பிரசாதம் வாங்கிண்டு வீட்டுக்குப் போனா மதியம் சாப்பாடு ஆச்சு."
மணி சாரின் குரலில் குறும்பு கொப்பளித்தாலும் அவருக்கு அது நிதர்சனமான உண்மை.மனைவி இறந்து மகன் தயவில் வாழ்கிறார்.மகன், மருமகள் இருவருமே அவரைப் பாரமாக நினைப்பதால் வீடு அவருக்கு நரகமாக இருந்தது. இந்த மாதிரி கோவிலில் கிடைக்கும் பிரசாதங்களை வாங்கிச் சாப்பிட்டு விட்டு படுக்க மட்டும்தான் வீட்டுக்குப் போவார்.
பத்து குழந்தைகள் இருந்தாலும் அவர்களுக்கு வயிறார சோறு போட தந்தை யோசிப்பது இல்லை. ஆனால் அந்த தந்தைக்கு ஒரு வாய் சோறு போட அந்தப் பத்து மகன்களும் யோசிக்கிறார்கள்.இதுதான் உலக நியதியாக இருந்தாலும் மனது வேதனைப் படுகிறது. கம்பீரமாக தமிழ் ஆசிரியராக வலம் வந்தவர் மணி சார்.மனைவி இறந்ததும் ஒடுங்கி விட்டார்.மகன்.காதலித்து யாருக்கும் சொல்லாமல் கல்யாணம் செய்து கொண்டு வந்தது, இருவரும் அவரை அவமதிப்பது என்பது அவரை நடமாடும் கூடாக்கியது.
ஆனால் இதுதான் மனித இயல்பு என்று மணி சார் தன்னை உற்சாகமாக வைத்துக் கொள்வார் தன்னால் முடிந்த உதவிகளை எல்லோருக்கும் செய்து தருவார்.இன்றும் ஒரு பள்ளிக்கு தமிழ் கற்பிக்கிறார். சில பெரிய மனிதர்கள், ஆங்கிலேயர்களுக்கு வெண்பா எழுதவும், தமிழின் இலக்கியச் சுவை மிகுந்த சங்க நூல்களையும் பாடம் எடுக்கிறார்.
பெத்த மகனா இருந்தாலும் நம் கௌரவம் முக்கியம் மாலதி.