Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Aayiram Vaasal Idhayam
Aayiram Vaasal Idhayam
Aayiram Vaasal Idhayam
Ebook105 pages1 hour

Aayiram Vaasal Idhayam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465964
Aayiram Vaasal Idhayam

Read more from Parimala Rajendran

Related to Aayiram Vaasal Idhayam

Related ebooks

Reviews for Aayiram Vaasal Idhayam

Rating: 4.333333333333333 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Aayiram Vaasal Idhayam - Parimala Rajendran

    12

    1

    பொழுது விடிந்ததற்கு அடையாளமாக வெளியே சப்தங்கள் கேட்க தொடங்கின... எழுந்திருக்க மனமில்லாமல் புரண்டு படுத்தாள் நிகிதா. ஏதோ ஒன்று மனசை பாரமாக அழுத்தியது.

    அப்பாவிடம் பழைய கலகலப்பு மறந்துவிட்டது. அம்மாவின் நிலையோ சோகத்தை கண்களில் சுமந்து திரிகிறாள்.

    எப்பேர்பட்ட இழப்பு... துயரம். சாகும் வயதா அக்காவுக்கு.

    பாங்க் மானேஜராகயிருந்து ரிடையர்ட் ஆனவர் அப்பா. வீட்டுக்கு மூத்தவள் நித்யா. பொறுப்பான அக்காவை அப்பாவுக்கு ரொம்ப பிடிக்கும்.

    எதற்கும் பிடிவாதம் பிடிக்கும் நிகிதா. எல்லாவற்றுக்கும் விட்டு கொடுத்து போகும் நித்யா. குணங்களில் வேறுபாடு இருந்தாலும் அன்பும், பாசமும் அக்கா-தங்கையை ஒன்றாக கட்டி போட்டிருந்தது.

    நிகிதாவுக்கு அக்கா மீது அலாதியான அன்பு...

    நிகிதா டென்த் முடிக்க, ப்ளஸ் டூ படிப்பை முடித்திருந்த நித்யாவை, வெளியூரில் காலேஜில் சேர்க்க,

    அப்பா வேண்டாம்பா... அக்காவை பிரிந்து என்னால் இருக்க முடியாது. இங்கேயே இருந்து படிக்கட்டும்பா... தங்கையை அணைத்த நித்யா...

    மெரிட்டில் சீட் கிடைச்சிருக்கு நிகி... அப்பாவுக்கு செலவு வைக்க கூடாது. இரண்டு பேரும் பெண்ணாய் பிறந்திருக்கோம். நீயும், நானும் தான் கடைசி காலத்தில் அவங்களை நல்லபடியாக பார்த்துக்கணும். நீயும் அவங்களை தொந்தரவு பண்ணாம நல்லா படிக்கணும் சரியா...

    அக்காவை பிரிய மனசு வரலையே நிகி, நாளைக்கு உன் அக்காவை கல்யாணம் பண்ணி தந்தால் என்ன செய்வே...

    சிரிப்புடன் மாதவன் கேட்க,

    என்ன செய்வா... அக்கா மாப்பிளையே நானும் கட்டிக்கிறேன்னு கூடவே போயிடுவா...

    கேலி, கிண்டலுடன் நிகிதாவின் தாய் சீதா பதில் சொல்ல,

    என்னை பற்றி உங்களுக்கெல்லாம் சரியா தெரியலை. அக்காவை பிரியாமல்... அவளுடன் கடைசி வரை இருக்க அது தான் வழி என்றால்... அக்கா, அத்தான் சம்மதத்துடன் நானும் அவங்ககிட்டே ஒரு தாலியை கட்டிக்கிட்டு போட்டி சந்தோஷமாக இருப்பேன்.

    அடிப்பாவி விளையாட்டுக்கு கூட உன்கிட்ட இப்படி பேசக் கூடாது போலிருக்கே... நீயே உன் அக்காவுக்கு சக்களத்தி ஆயிடுவே போலிருக்கு. நித்யா உன் தங்கைகிட்டே ஜாக்கிரதையாகவே இரும்மா.

    அம்மா சொன்னதை கேட்டு அக்காவும், தங்கையும் வாய் விட்டு சிரிக்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான நாட்கள்...

    செமஸ்டர் லீவில் அக்கா வர, அத்தனை நாள் கதையை சேர்த்து பேசி சிரித்து... அக்காவுக்கு படிப்பு முடிய நல்ல வரன் அமைய,

    நீ வேலைக்கெல்லாம் போக வேண்டாம் நித்யா. நல்ல இடமாக வந்திருக்கு. உன் கல்யாணத்தை முடிச்சுடலாம்னு பார்க்கிறேன். எங்களோட கடமை ஒண்ணு குறையும். அடுத்து உன் தங்கை நிகிதா இருக்கா... அவளுக்கும் என்னும் ஒரு வருஷத்தில் படிப்பு முடிஞ்சுடும். என்னம்மா சொல்ற...

    நன் என்னப்பா சொல்ல போறேன். ஹாஸ்டல் சாப்பாடு உடம்பு மெலிஞ்சு போச்சு. உடம்பை தேத்தணும்னு அம்மா ஒரு வருஷமாக வீட்டிலேயே இருக்க சொல்லிட்டாங்க... அடுத்து நீங்க கல்யாண ஏற்பாடு பண்றீங்க...

    அக்கா... ஓ.கே சொல்லுக்கா எதுக்கு வேலைக்கு போயி கஷ்டப் பட்டுகிட்டு... அம்மா மாதிரி அங்கே மாமியார் இருப்பாங்க அவங்க சமைச்சு போட... நல்ல சாப்பிட்டு, புருஷனோடு ஊர் சுற்றலாம்.

    தங்கையின் கன்னத்தை கிள்ளுகிறாள் நித்யா.

    மாமியார் மட்டும் தான். மாமனார் தவறிட்டாரு. மாப்பிள்ளை கெளதம், சாப்ட்வேர் இஞ்சினியர். சொந்த வீடு. படோபமாக இல்லா வீட்டாலும் நிறைவான வாழ்க்கை.

    கெளதம் அழகாக இருந்தான். ஆறடி உயரத்தில் கோதுமை நிறத்துடன் சிரிக்கும் கண்களுடன் கம்பீரமாக தெரிந்தான்.

    அக்கா... கெளதம் உனக்கு பொருத்தமானவராக இருப்பாரு... ஓ.கே. சொல்லிடு... பெண் பார்க்க வந்த போது அக்காவின் காதில் கிசுகிசுத்தாள்.

    உற்றார் உறவினர் அழைக்கப்பட்டு இனிதாக திருமணம் நடந்து முடிய... கௌதமின் மனைவியாக, ஆனந்தியின் மருமகளாக புகுந்த வீட்டில் காலடி எடுத்து வைத்தாள் நித்யா. உள்ளூரிலேயே மாப்பிள்ளை அமைய, அக்காவை தேடி அடிக்கடி நிகிதா போக, மகளை கண்டித்தாள் சீதா.

    உன் அக்காவே அந்த வீட்டுக்கு புது மருமகள். மாமியார்கிட்டே பழகி, நல்ல பெயர் எடுக்கணும். நீ அக்காவை பார்க்கணுங்கிற ஆசையில் அடிக்கடி போனால், நித்யாவின் மாமியார் தப்பாக எடுத்துக்க போறாங்க நிகி. காலேஜிக்கு மட்டம் போட்டு போற வேலை இனி வச்சுக்காதே.

    ஒரு நாள் நித்யாவுடன் வீட்டிற்கு வந்த கெளதம்,

    என்ன நிகி, உன்னை ரொம்ப நாட்களாக வீட்டு பக்கம் காணோம். எக்ஸாம் எதுவும் வந்துடுச்சா...

    படிப்பை பற்றி யார் கவலைப்பட்டா... அம்மா தான் கட்டிக் கொடுத்த இடத்திற்கு அடிக்கடி போகக் கூடாதுன்னு தடை உத்தரவு போட்டுட்டாங்க...

    போட்டு உடைத்தாள் நிகிதா...

    அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் நித்யா இருக்க,

    அத்தை ஏன் அப்படி சொன்னீங்க. நிகிதா வந்து போனா, நித்யாவுக்கும் மனசுக்கு சந்தோஷமாக இருக்கும். நானும் வேலைக்கு போயிடுவேன். அம்மாவுடன் எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும். நிகிதா வந்து போற அன்னைக்கு நித்யா சொல்லாமலேயே அவள் முகம் மலர்ந்திருப்பதை பார்த்து கண்டுபிச்சுடுவேன் தெரியுமா... கெளதம் சொல்கிறான்.

    திருமணமாகி ஆறு மாத பொழுது நல்ல விதமாக போக இடியாக அந்த செய்தி வந்து சேர்ந்தது.

    கோவிலுக்கு போனா நித்யா... ரோடை க்ராஸ் பண்ணம் போது லாரியில் அடிபட்டு அந்த இடத்திலேயே மரணித்து விட்டாள் என்பது. வாழ்கையே இருண்டு போனது அவர்களுக்கு.

    நிகிதா இன்னுமாதூங்கறே...

    அம்மாவின் குரல் கேட்டு, மனதில் துயரை அடக்கி கொண்டவள், படுக்கையிலிருந்து எழுந்தாள்.

    2

    "அம்மா பாத்திரம் தோய்ச்சு வச்சுட்டேன். நீங்க எடுத்து வச்ச காய்கறிகளையும் நறுக்கி வச்சுட்டேன். இன்னும் ஏதாவது வேலை இருக்கா..."

    உட்கார்ந்திருந்த ஆனந்தி கையை ஊன்றி எழுந்தாள். முழங்கால் வலி அதிமாயிடுச்சு. கீழே உட்கார்ந்தால் எழ முடியலை.

    "சரி மீனா நீ

    Enjoying the preview?
    Page 1 of 1