Aayirathil Oruthi
4.5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Idhayaraagam Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Pirai Thedum Iravu Rating: 5 out of 5 stars5/5Thendral Vanthu Ennai Thodum Rating: 5 out of 5 stars5/5Aanantham Vilaiyaadum Veedu Rating: 5 out of 5 stars5/5Thunai Thedum Vergal - 2 Rating: 4 out of 5 stars4/5Thaalaattum Poongattru Rating: 0 out of 5 stars0 ratingsAnbil Vilaintha Paasamalare Rating: 5 out of 5 stars5/5Kalyaanamaalai Rating: 0 out of 5 stars0 ratings
Related to Aayirathil Oruthi
Related ebooks
Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Un Ninaive Pothumadi Rating: 0 out of 5 stars0 ratingsMalai Soodiya Velai... Rating: 3 out of 5 stars3/5Kanna Unnai Marappena? Rating: 0 out of 5 stars0 ratingsManathai Thiranthathu Poovasam...! Rating: 4 out of 5 stars4/5Kaadhal Sadugudu Rating: 5 out of 5 stars5/5Oru Kodoyil Iru Malargal Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5En Pon Vaanam Nee Rating: 0 out of 5 stars0 ratingsOrey Murai Un Darisanam...! Rating: 3 out of 5 stars3/5Kanavennai Kalavaduthey...! Rating: 0 out of 5 stars0 ratingsViral Thodum Thooraththile Rating: 5 out of 5 stars5/5Minmini Poochikal Rating: 0 out of 5 stars0 ratingsIppadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsVasanthame Varuga Rating: 5 out of 5 stars5/5Mayanginean Solla Thayanginean Rating: 4 out of 5 stars4/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Kaadhalagik Kaninthu Rating: 3 out of 5 stars3/5Idhayam Thedum Ennuiyre...! Rating: 4 out of 5 stars4/5Vaa Vaa Vasandhame Rating: 4 out of 5 stars4/5Sooriyakanthi Pookkal Rating: 5 out of 5 stars5/5Suvaril Nuzhaintha Vergal Rating: 4 out of 5 stars4/5Devathai Vaazhum Veedu! Rating: 0 out of 5 stars0 ratingsUllam Rendum Ondru Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsAval Varuvala? Rating: 0 out of 5 stars0 ratingsMaaya Kangal Rating: 5 out of 5 stars5/5Appavin Dairy Rating: 5 out of 5 stars5/5
Reviews for Aayirathil Oruthi
2 ratings0 reviews
Book preview
Aayirathil Oruthi - Parimala Rajendran
69
1
அது ஒரு உள்ளடங்கிய பெரிய பங்களா.
அந்த தெருவின் பிரம்மாண்டமே அது பணக்காரர்கள் வசிக்கும் இடம் என்பதை சொல்லாமல் சொல்லியது...
ஒவ்வொரு வீடும் பெரிய அளவில் இருந்தது. வீட்டு கேட் அருகில் வாட்ச்மேன்கள்... மூன்று அடுக்கு... நான்கு அடுக்கு மாடி வீடுகள்... தெருவோரம் இரண்டு பேர் தங்களுக்குள் பேசியபடி நடந்தார்கள்...
ஏ... அப்பா... என்னப்பா... இது... ஒவ்வொரு வீடும் இத்தனை பெரிசா இருக்கு. நானும் சென்னைக்கு இரண்டொரு முறை வந்திருக்கேன். இந்த மாதிரி தெருவை பார்த்ததில்லை.
படு சுத்தமாக இருக்கு. ஒவ்வொரு வீட்டிலும் வாட்ச்மேன் நிற்கிறான்...
வாயை பிளக்க...
இந்த தெருவுக்கு நடேசன் தெரு... என்ற பெயர் மாறி, இப்ப வி.ஐ.பி. தெருன்னு மாறிடிச்சு
இங்கே இருப்பவர்களெல்லாம் பெரிய பெரிய தொழிலதிபர்கள், பெரிய பேக்டரி, கல்குவாரி, கிரானைட் பிஸ்னஸ் செய்பவங்க
நாமெல்லாம் இந்த மாதிரி வீட்டையெல்லாம் வாயை பிளந்து பாக்காதான் முடியும்...
நீ மட்டும் வந்துருக்க கூடாது. உன் மகளையும் கூட்டிட்டு வந்துருக்கலாம்...
ஏன்னா சம்பளம் பேசி விட்டுட்டு போயிருக்கலாம்
எனக்கென்னவோ பயமா இருக்குப்பா... நான் என்னாவோ சாதாரண வீடா இருக்கும்ன்னு வந்துட்டேன்
அட நீ ஒண்ணு இதை மாதிரி பாதுகாப்பான வேலை கிடைக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா...?
தெரியாதவங்களை வேலைக்கு சேர்க்க மாட்டாங்க. இங்கே இருக்கிற வாட்ச்மேனை தாண்டி யாரும் உள்ளே நுழைய முடியாது...
அதுவும் உன் மகளை வேலைக்கு சேர்க்க போற வீட்டில் நாலு பெண்கள் வேலை செய்யறாங்க...
அவங்க தங்க வீட்டுக்கு பின்னாடி ஹெஸ்ட் - ஹவுஸ் இருக்கு. நீ தைரியமாக வேலைக்கு சேர்க்கலாம்...
நானும் உன் மகள் சேரபோற வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தான் தோட்ட வேலை பார்க்கிறேன். நாலு வருஷ பழக்கம். நான் பார்த்துக்கிறேன்... தைரியமாக சேர்த்து விடு...
நடக்கிறார்கள்...
நில்லுப்பா... இதுதான் உன் மகளை வேலைக்கு சேர்க்க போற வீடு...
உள்ளடங்கிய அந்த பெரிய பங்களாவை, கண்கள் விரிய பார்க்கிறான் முருகன்...
கிராமத்தில் செம்மண் ரோட்டிலும், ஓட்டு வீட்டின் சிமெண்ட் தரையிலும் நடந்த கால்கள்...
வெள்ளை வெளரேன்னு பளபளப்பாக காட்சி தரும் அந்த பளிங்கு தரையில் நிற்கவே கூசுகின்றன...
வள்ளி... வள்ளி...!
உள்ளிருந்து குரல் மட்டம் கேட்கிறது.
வந்துட்டேன்மா.
பக்கத்து வீட்டு தோட்டக்காரன் சண்முகம், வேலைக்கு கிராமத்திலிருந்து ஆள் கூட்டிட்டு வந்திருக்கானாம்...
பின் பக்கமாக அழைச்சுட்டு வா...
நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி வருகிறாள்...
பரிச்சியமானவன் என்பதால் சண்முகத்தை பார்த்ததும் புன்னகைத்தவர்...
வாங்க போகலாம்... பின் தொடர்கிறார்கள்...
நீண்ட நடைபாதை... ரோஜா, மல்லி, செம்பருத்தி, என பூச்செடிகள் வரிசை கட்டி நிற்கின்றது.
அங்கே ஒரு ஆள் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறான்...
வீட்டுக்குள்ளே கூட அழைக்காமல், பின் பக்கமாக வரச் சொல்றாங்க... இதுதான் பட்டணத்து நாகரிகமா...
அருகில் வரும் சண்முகத்தின் காதில் கிசுகிசுக்க, பழக்கமில்லாதவங்களை அவ்வளவு சீக்கிரம் உள்ளே விட்டுட மாட்டாங்க...
பின் பக்கம் வாழை மரங்களும், மா மரங்களும், நிழல் பரப்பி ஒரு பெரிய தோப்பு போல காட்சி தருகிறது.
இத மாதிரி பங்களாவை நான் பார்த்ததே இல்லப்பா...
இந்த இடம் எங்க ஊரு தோப்பு மாதிரி இருக்கு...
இத்தனை மரங்கள். இதை பராமரிக்கவே நாலு ஆள் வேணும் போலிருக்கு...
பங்களா உள்ளே நுழையாமலேயே இவ்வளவு சொல்ற... உள்ளே மாடிக்கு போக லிப்ட் இருக்கு. ஒவ்வொரு இடமும் அரண்மனை மாதிரி இருக்கும். வீட்டை சுத்தம் பண்ணி, பராமரிக்க வேலையாட்கள் தவிர, தனியார் நிறுவனத்திலிருந்து, வந்து வாரத்துக்கு இரண்டு நாள் வீட்டை சுத்தம் பண்ணிட்டு போவாங்க...
கேட்கவே எனக்கு ஆச்சரியமாக இருக்குப்பா...
இரண்டு பேரும் இங்கே இருங்க அம்மா வருவாங்க...
வள்ளி உள்ளே போகிறாள்...
இரண்டு டம்ளர்களில் காபி வருகிறது.
ஐந்து நிமிடம் கழித்து, ஒரு பெண்மணி வெளியே வர, பணக்காரர் களை அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. காதில் வைர தோடுகள் மின்ன, பெரிய, பெரிய தங்க செயின்கள் கழுத்தை நிறைத்திருக்கிறது. வணக்கம்மா... சண்முகம் சொல்ல,
தொடர்ந்து முருகனும் வணக்கம் சொல்கிறான்.
நீ சொன்னது...
ஆமாம்மா... இவர் மகள் தான். இருபது வயசாகுது... கிராமத்து பொன்னு. நல்லா பொறுமையாக வேலை பார்க்கும். பட்டணத்து நாகரிகம், தெரியாட்டியும், அன்பாக பழகும்மா... உங்களை கேட்டுட்டு அழைச்சுட்டு வரலாம்னு தான் கூட்டிட்டு வரலை.
சரிப்பா... என்ன வேலைன்னு சொல்லிட்டியா...
ஆமாம்மா... வீட்டில் படுக்கையில் வாதம் வந்து படுத்திருக்க பெரியம்மாவுக்கு துணையாக இருக்கணும். இருபத்தி நாலு மணி நேரமும் பொறுமையாக, அவங்களுக்கு உதவியாக இருக்கணும்னு சொல்லியிருக்கேன்...
முருகனை பார்க்கிறாள்...
உன் மகளுக்கு இங்கே கஷ்டமான வேலைகள் எதுவுமில்லைப்பா... என் மாமியார் வயசானவங்க... இரண்டு வருஷமாக ஸ்ட்ரோக் வந்து படுக்கையில் இருக்காங்க...
அவங்களை குளிப்பாட்ட, மற்ற வேலைகள் செய்ய ஆயா ஒருத்தங்க தினமும் வந்துட்டு போவாங்க...
அவங்களுக்கு பேச்சு துணையாக, அருகில் இருந்து கவனிக்கணும் அவ்வளவுதான். என்னப்பா சொல்ற.... உன் மகளுக்கு சரிப்பட்டு வருமா...
தாயில்லாத பொண்ணும்மா... கிராமத்து வளர்ப்பு... சூதுவாது தெரியாது... அடுத்தவங்க மேலே பிரிவுகாட்ட சொல்லி தர வேண்டாம்... பெரியவங்க உங்களை நம்பி என் மகளை கொண்டு வந்து விடறேன். வயசுக்கு வந்த பொண்ணு. அவளுக்கு பாதுகாப்பு இருந்தால் போதும்...
நீ தைரியமாக விடலாம்... இங்கே வேலை செய்யற பெண்களே நாலைஞ்சு பேர் கெஸ்ட் ஹவுஸில் இருக்காங்க...
பெரியம்மாவுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிட்டால்... அவ கல்யாணம் வரை தாராளமாக இங்கேயே இருக்கலாம்...
மாசம் பத்தாயிரம், அவளுக்கு ஒரு அக்கௌண்ட் ஆரம்பிச்சு பாங்கில் போட்டுடறோம்...
பின்னால் இந்த சேமிப்பு அவ கல்யாணத்துக்கு உதவியாக இருக்கும். தேவைப்பட்டால் எடுத்துக்கலாம்...
நல்லதும்மா... இனி பேச ஒண்ணுமில்லை. நாளைக்கே கூட்டிட்டு வரேன்...
என்னப்பா இது... என்னால் நம்ப முடியலை... என் மகளுக்கு பத்தாயிரம் சம்பளம் தரேன்னு ஒரே வார்த்தையில் சொல்லிட்டாங்க...
இந்த மாதிரி வேலைக்கு, பொறுமையாக பக்கத்தில் இருந்து கவனிக்க பட்டணத்தில் ஆள் கிடைக்க மாட்டாங்க...
விஷயம் தெரிந்து தான் சம்பளம் தர்றாங்க... அவங்க சொன்ன மாதிரி நாளைக்கு மகள் கல்யாணத்துக்கு உதவியாக இருக்கும். ஊருக்கு போய் நாளைக்கே அழைச்சுட்டு வந்துடு...
பக்கத்தில் நீ இருக்கிற தைரியத்தில் தான் கொண்டு வந்து விடறேன்... கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக்க சண்முகம்...
முதலாளி என்னை அடிக்கடி அனுப்ப மாட்டாரு...