Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Anbin Niram Maarumo
Anbin Niram Maarumo
Anbin Niram Maarumo
Ebook105 pages49 minutes

Anbin Niram Maarumo

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465971
Anbin Niram Maarumo

Read more from Parimala Rajendran

Related to Anbin Niram Maarumo

Related ebooks

Reviews for Anbin Niram Maarumo

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Anbin Niram Maarumo - Parimala Rajendran

    24

    1

    வேளச்சேரி ஏரியா. அமுதா அபார்ட்மெண்டின் முதல் தளம். மூன்று பெட்ரூம் உள்ள சற்று விசாலமான அறைகள் கொண்ட ப்ளாட். சமையலறையில் மும்முரமாக இருந்தாள் மிருதுளா. வயது முப்பத்தைந்துக்குள். பொறுப்பான குடும்ப தலைவி என்பது அவள் முகத்தில் எழுதியிருந்தது. வேர்வை முத்துக்கள் நெற்றி பரப்பில் பரவலாக இருக்க, கிச்சனில் தொங்கவிட்டிருந்த டவலை எடுத்து முகத்தை துடைத்தவள், அடுப்பிலிருந்த சாம்பாரை தாளித்து இறக்கினாள்.

    கருப்பு நிற நைட்டியில், தன் கோதுமை நிறம் சற்று தூக்கலாக தெரிய, முதுகில் அவிழ்த்து விடப்பட்ட கூந்தல் காற்றினில் பறக்க, பால்கனியில் நின்று நோட்டமிட்டாள்.

    மிருதுளாவின் பதினெட்டு வயது அழகு மகள் மதுமிதா. பி.எஸ்ஸி கம்பியூட்டர் சயின்ஸ், இரண்டாம் வருடம் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் இவள்தான் மிருதுளாவின் ஓரே மகள்.

    மகன் அரவிந்த், ப்ளஸ் டூ. அவனை எப்படியாவது டாக்டருக்கு படிக்க வைத்துவிட வேண்டுமென்பது, மிருதுளாவின் கனவாக இருந்தது. ஆனால் அதை பத்தியெல்லாம் கவலைப்படாமல், அந்த இளம் வயதுக்குரிய குறும்புடன் சுற்றிக் கொண்டிருந்தான். அரவிந்த்.

    கணவன் ராஜன், மனைவி மீது அன்பு மட்டுமல்ல, குடும்பத்தை நல்லபடியா நடத்தி செல்வாள், என்ற நம்பிக்கையையும் வைத்திருப்பவன். டிரஸரியில் ஆபிசராக வேலை பார்ப்பவன், வீட்டு நிர்வாகம் மிருதுளாவிடம் என்பதால், எதைப் பற்றியும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பான்.

    ‘‘மிருதுளா... நான் குளிக்கட்டுமா...’’

    ‘‘இதென்ன கேள்வி. குளிச்சுட்டு ரெடியா இருங்க. உங்க தம்பி வந்தா, நாலு வார்த்தை பேசிட்டு ஆபிசுக்கு கிளம்ப நேரம் சரியாயிருக்கும்.’’

    கிழே காய்கறி தள்ளுவண்டிகாரனின் சப்தம்.

    பீன்ஸ், கோஸ், காரட், தக்காளி, கத்தரி, உருளை, கீரை...

    ‘‘மது... கொஞ்சம் கீழே போய், உருளைகிழங்கு அரை கிலோ வாங்கிட்டு வாயேன். ஷெல்பில் காசு இருக்கு பாரு. எடுத்துட்டு போ.’’

    ‘‘என்னம்மா, காலேஜ் கிளம்பற நேரத்தில் என்னை வேலை வாங்கிற.’’

    ‘‘இதென்ன பெரிய வேலையா. உங்க சித்தப்பாவுக்கு உருளைக் கிழங்கு பொடிமாஸ் பிடிக்கும். ஏற்கனவே கத்தரிக்காய் வறுவல், மாங்காய் பச்சடி ரெடி, உருளைக்கிழங்கு பொடிமாஸ் பண்ணிட்டா சமையல் முடிஞ்சுடும். அடுப்பில் வேலையா இருக்கேன். என் செல்லமில்லையா... போயிட்டு வாடா ப்ளீஸ்...’’

    அடுப்படியிலிருந்து மிருதுளா குரல் தர...

    ‘‘பெரிசா... என்னமோ கிழிக்கிற மாதிரி பீல் பன்றே. சும்மா பால்கனியில் நின்னு லுக் விட்டுட்டுதானே இருக்கே. போ... போ... போய் வாங்கிட்டு வா.’’

    புத்தகத்தை விரித்து வைத்து எதையோ எழுதிக் கொண்டிருந்த அரவிந்த் சொல்ல...

    ‘‘கொழுப்புடா உனக்கு... வந்து கவனிச்சுக்கிறேன்.’’

    மதுமிதா உள்ளே வர...

    ‘‘மது, கூடையை எடுத்துட்டு போம்மா.’’

    படிகளில் இறங்க, ராஜன் பாத்ரூமுக்குள் நுழைகிறான்.

    ‘‘உருளைக்கிழங்கு அரைகிலோ கொடுங்க.’’

    ‘‘அம்மா வரலையா தங்கச்சி...’’

    ‘‘வேலையா இருக்காங்க.’’

    கிழங்கை எடை போட்டு கூடையில் போட்டவன்,

    ‘‘வேறன்னம்மா போடட்டும்... கத்தரிக்காய் பிஞ்சாக இருக்கு. அரை கிலோ போடவா...’’

    ‘‘வேண்டாம். அம்மா உருளைகிழங்கு மட்டும்தான் கேட்டாங்க.’’

    அவன் பேசிக் கொண்டேயிருக்க, காசை கொடுத்துவிட்டு நகர்கிறாள் மதுமிதா.

    கையிலிருந்த செல்போன் சிணுங்க...

    ‘‘ஏய் சிவா... என்ன இந்த நேரத்தில்...’’

    ‘‘நீ... நைட்டியோடு காய்கறி வாங்க வந்த அழகை ரசிச்சுட்டுதான் கூப்பிடறேன்...’’

    ‘‘ராஸ்கல்... போனை வச்சுட்டு வேலைக்கு கிளம்பற வழியைப் பாரு...’’

    போனை கேட் செய்தவள், எதிரில் இருக்கும் அபார்ட்மெண்டின் இரண்டாவது மாடியை பார்க்க, அங்கே ஜன்னலருகே செல்போனை காதில் வைத்தபடி அவளை பார்த்து சிரிக்கிறான் சிவா...

    ‘‘கோயமுத்தூரில் இருக்கேன்னுதான் பேரு, பார்த்து எத்தனை நாளாச்சு. ஏண்டா இப்படி இளைச்சுட்டே.’’

    தம்பியை கரிசனத்துடன் பார்க்கிறான் ராஜன்.

    ‘‘வேலை சரியா இருக்குண்ணே. முன்னே மாதிரி இல்லை, பிசினஸில் காம்படீஷன் அதிகமாயிடுச்சு. ஆர்டர் வாங்க அலைய வேண்டியதாயிருக்கு. இதிலே அர்ச்சனாவுக்கு வேறே அப்பெண்டிடீஸ் ஆப்ரேஷன்... பசங்களோடு அவளையும் கவனிச்சுக்கிட்டு, இந்த இரண்டு மாசமா பயங்கர கஷ்டம்.’’

    ‘‘என்ன செய்யறது. குடும்பம்னா எல்லாத்தையும் சமாளிக்கத்தானே வேண்டியிருக்கு?’’

    சொன்னவன்...

    ‘‘மீரு... சாப்பாடு ரெடியா...’’

    ‘‘இதோ... பேசிட்டேயிருங்க. அஞ்சு நிமிஷம் ரெடியாயிடும்.’’

    ‘‘அழகா... என்னை மாதிரி நீயும் வேலைக்கு போயிருக்கலாம். பிஸினஸ்தான் பண்ணுவேன். வேலைக்கு போக மாட்டேன்னு கிடைச்ச வேலையை வேண்டாம்னு சொல்லிட்டு வந்தே... இப்ப கஷ்டப்படறே...’’

    ‘‘நீங்க சொல்றது தப்புண்ணே. எனக்கு வேலைக்கு போக பிடிக்கலை. இன்னொருத்தர்கிட்டே வேலை பார்த்து சம்பளம் வாங்கிறதுக்கு... நாம் நாலு பேருக்கு வேலை கொடுக்கிற முதலாளியாக இருக்கணும்னு நினைச்சேன்.’’

    ‘‘எதிலேதான் பிரச்சனைகள் இல்லை. ரிஸ்க் எடுக்க நான் என்னைக்குமேதயாராகத்தான் இருக்கேன். சிவா இஞ்சினியரிங் ஒர்க்ஸ் நல்லாவே போயிட்டு இருக்கு.’’

    ‘‘போட்டிகள் நிறைந்த உலகத்தில் நாமும் போராட வேண்டியிருக்கு. அதைத்தான் சொன்னேன்.’’

    ‘‘எப்படியோ குணா. நீ எனக்கு நேர் எதிர். என்னால் உன்னை மாதிரி மண்டை குடைச்சல் ஆகாது. நிம்மதியா எந்த பிடுங்கலும் இல்லாமல் இருக்கணும்.’’

    சிரிக்கிறான்.

    ‘‘அதான் பார்த்தாலே தெரியுது. உங்ககிட்டே எந்த மாற்றமும் இல்லை. அன்னைக்கு பார்த்த மாதிரி இருக்கீங்க.’’

    ‘‘அண்ணிதான் பொறுப்பையெல்லாம் தலையில் சுமந்துகிட்டு... இளைச்சு போய் இருக்காங்க...’’

    ‘‘அது... அவ விரும்பி ஏத்துக்கிட்ட

    Enjoying the preview?
    Page 1 of 1