Idhayaraagam
4.5/5
()
About this ebook
Read more from Parimala Rajendran
Ithayam Nanaikkum Mazhai Rating: 5 out of 5 stars5/5Engiruntho Vanthaal Rating: 5 out of 5 stars5/5Mandram Vantha Thendral Rating: 4 out of 5 stars4/5Osaiyindri Malarum Rating: 4 out of 5 stars4/5Unnai Naanariven Rating: 5 out of 5 stars5/5Thenralaga Nee Varuvaayaa Rating: 5 out of 5 stars5/5Magarantha Malargal Rating: 5 out of 5 stars5/5Uravukalaal Oru Ulagam Rating: 5 out of 5 stars5/5Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Kaavalai Meeriya Kaatru Rating: 5 out of 5 stars5/5Poojaikettra Poovithu Rating: 5 out of 5 stars5/5Unnil Vaazhkiren Rating: 5 out of 5 stars5/5Ithu Oru Puthukavithai Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Uravu Pookkal Rating: 5 out of 5 stars5/5Irukodiyil Oru Malar Rating: 5 out of 5 stars5/5Unnai Saranadainthen Rating: 5 out of 5 stars5/5Kaalangalil Aval Vasantham Rating: 4 out of 5 stars4/5Ithayathil Nee Rating: 5 out of 5 stars5/5Anbin Niram Maarumo Rating: 5 out of 5 stars5/5Nenjamellam Neeye Rating: 5 out of 5 stars5/5Oru Malarin Payanam Rating: 5 out of 5 stars5/5Aayirathil Oruthi Rating: 5 out of 5 stars5/5Mayangukiraal Oru Maathu Rating: 5 out of 5 stars5/5Perazhagithaan Nee Rating: 5 out of 5 stars5/5Manathodu Paadum Raagam Rating: 3 out of 5 stars3/5Kalaindhu Pogum Kolangal Rating: 0 out of 5 stars0 ratings
Related to Idhayaraagam
Related ebooks
Kannil Theriyum Vaanam Rating: 5 out of 5 stars5/5Kaadhal Enbathu Mayavalai Rating: 4 out of 5 stars4/5Uyirin Uyire Rating: 4 out of 5 stars4/5Nenjukkul Poo Malarum Rating: 5 out of 5 stars5/5Kalyana Oonjal Rating: 0 out of 5 stars0 ratingsTholai Thoora Velicham Nee! Rating: 4 out of 5 stars4/5Unnai Virumbinen Uyire.. Rating: 5 out of 5 stars5/5Manathil Vizhuntha Mazhai Thuliye….! Rating: 5 out of 5 stars5/5Karpanaiyo… Kaivanthatho… Rating: 3 out of 5 stars3/5Santhithome Kanakkalil...! Rating: 3 out of 5 stars3/5Ippadiyum Ivargal Rating: 0 out of 5 stars0 ratingsIru Vennila... Un Vaanila... Rating: 0 out of 5 stars0 ratingsSollathaan Ninaikiren Rating: 5 out of 5 stars5/5Ennai Vittal Yarumillai! Rating: 0 out of 5 stars0 ratingsAppavin Dairy Rating: 5 out of 5 stars5/5Eppozhuthum Un Soppanangal…! Rating: 4 out of 5 stars4/5Paattu Kalanthidavey Part 3 Rating: 5 out of 5 stars5/5Aahaya Medai Katti...! Rating: 5 out of 5 stars5/5Kangal Solkindra Kavithai Rating: 4 out of 5 stars4/5Thanthaiyumaagi Thayumaagi Rating: 5 out of 5 stars5/5Thirumagal Thedi Vanthal Rating: 0 out of 5 stars0 ratingsEn Vaanathu Vennilavu Rating: 5 out of 5 stars5/5Kaadhalenum Vaanavil Rating: 0 out of 5 stars0 ratingsNallathor Veenai Seithe...! - Part 1 Rating: 5 out of 5 stars5/5Anbin Vaasaliley... Rating: 0 out of 5 stars0 ratingsEngey En Jeevan Rating: 5 out of 5 stars5/5Ennuyire... Rating: 5 out of 5 stars5/5Aayiram Vaasal Idhayam Rating: 4 out of 5 stars4/5Ennuyir Neethaney…! Rating: 5 out of 5 stars5/5Kannalaney Rating: 0 out of 5 stars0 ratings
Reviews for Idhayaraagam
2 ratings0 reviews
Book preview
Idhayaraagam - Parimala Rajendran
21
1
திருச்சி பஸ் ஸ்டாண்ட்.
முகூர்த்த நாள் என்பதால் மக்கள் கூட்டம் அலை மோதியது.
வியர்வையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் பட்டுப்புடவையில் பெண்கள் வலம் வர, அவர்கள் அணிந்திருக்கும் நகைகள், ஒரிஜினலா, டூப்ளிகேட்டா என தெரியாத வண்ணம், சூரிய ஒளியில் தகதகத்தன.
"வெள்ளரிக்காய், வெள்ளரிக்காய்’’
சாயம் இழந்த புடவையில் சில பெண்கள், சிறுவர்-சிறுமியர் அங்கு நிற்கும் பேருந்துகளை சுற்றி வந்து கொண்டிருந்தார்கள்.
‘‘சார்... கும்பகோணம் போற பஸ் எங்கே நிக்குது?’’
‘‘அதோ அந்தப்பக்கம் போய் பாருய்யா"
முண்டாசு அணிந்த கிராமத்துக்காரனின் கேள்விக்கு எரிச்சலாக பதில் சொன்னான் ஒருவன்.
இந்த ஜன சந்தடியையோ கலகலப்பையோ எதையும் கவனிக்காமல், காதில் வாங்காமல், சென்னை போகும் ஆம்னி பஸ்ஸில் தன் சீட் நம்பரை தேடி உட்கார்ந்தான் வசந்தன்.
மனதில் பெரும் போராட்டமே நடைபெற்று கொண்டிருந்தது.
‘தைரியமா கிளம்பி விட்டோம். போகிற காரியம் நல்லவிதமாக முடியுமா?’ தங்கை திவ்யாவின் அழகு முகம் ஒரு கணம் வந்து போனது.
‘திவ்யா. நம் தகுதிக்கு தெரியாமல் ஆசைபட்டு விட்டியே. இதை நான் எப்படி நிறைவேற்ற போகிறேனோ?’
விசாலம் கண்ணீரை முந்தாணையால் துடைத்தபடி காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தாள்.
வசந்தன் சேரில் உட்கார்ந்திருக்க,
சுவற்றோடு சாய்ந்திருந்தாள் திவ்யா.
"காதல்... காதல்னு. இந்த பாழாய் போன காதல், தேவையா நமக்கெல்லாம் இது ஏன் இந்த ஜென்மங்களுக்கு புரிய மாட்டேங்குது.
‘‘அம்மா... பிளீஸ். இப்படி பேசாதே. பாவம் திவ்யா. அவளே மனசு நொந்து போயிருக்கா. நம்ம பேச்சு அவளை ஆறுதல் படுத்தணுமே தவிர, அவ வேதனையை இன்னும் அதிகப்படுத்தக் கூடாது"
"மனசு கேட்க மாட்டேங்கிறதே வசந்த். என்னை என்ன பண்ண சொல்ற. உங்கப்பா அல்பாயுசிலே போய் சேர்ந்த பிறகு... இருந்த கொஞ்ச நஞ்ச சொத்தை வித்து ரெண்டு பேரையும் படிக்க வச்சேன்.
நீ உன்னால முடிஞ்சது சின்னதா ஒர்க்ஷாப் வச்சு நடத்தறே. அதில் வர்ற வருமானம் நம்ம செலவுக்கு சரியா இருக்கு. ஏதோ கட்டு செட்டா இருந்து இவ கல்யாணத்துக்குன்னு கொஞ்சம் நகைகளையும், பணத்தையும் பாதுகாத்துட்டு வரேன்..."
டிகிரி முடிச்சதும் அடுத்து கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து கடமையை முடிப்போம்னு பார்த்தாள். இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடறா. நாமெல்லாம் சாமானிய மனுஷங்க. கோடீஸ்வரங்களோடு சம்மந்தம் வச்சுக்க முடியுமா?
"நீ சொல்லு திவ்யா. அந்த மனோகர் நல்லவன் தானே? உன்னை உண்மையாகவே காதலிச்சானா? அப்புறம் ஏன் இந்த ஆறு மாசமா உன்னோடு எந்த தொடர்பும் வச்சுக்கலை? போனும் நபரை மாத்தியிருக்கான். உனக்கே என்ன நடக்குதுன்னு புரியலை! எனக்கும் மனசில் சந்தேகம் வருது திவ்யா’’
"இல்லண்ணா. மனோ ஏமாற்றுக்காரர் இல்லை. என் நிலைமை தெரிஞ்சு தான் என்னை காதலிச்சாரு. அவர் இருக்கிறது சென்னையில். எங்க காலேஜில் அவர் உறவு பெண் ஒருத்தியை பார்க்க வந்தபோது எங்களுக்குள் ஏற்பட்ட அறிமுகம் காதலாக மாறிடுச்சு.
அப்புறம் தான் அவரை பத்தி சொன்னாரு. சென்னையில் கார் கம்பெனி வச்சிருக்காரு. பெரியளவில் பிஸினஸ் பண்றாருன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.
அந்த நிமிஷம். இந்த கல்யாணம் நடக்குமான்னு நான் குழம்பியபோது, ‘எத்தனை தடைகள் வந்தாலும், எல்லாத்தையும் தாண்டி உன்னை கல்யாணம் பண்ணிப்பேன் திவ்யா. இந்த பணம் நம்மை பிரிக்காது கவலைப்படாதே’ன்னு சொன்னாரு.
இப்பவும் சொல்றேன். அவருக்கு ஏதோ பிரச்சனை இல்லாட்டி. இப்படி என்னோடு பேசாமல் இருக்க மாட்டாரு
‘‘சரி... உன் சந்தேகத்தை நிவர்த்தி பண்றேன். நீ அட்ரஸ் கொடு. நாளைக்கே நான் சென்னை புறப்பட்டு போய், மனோகரை சந்தித்து பேசறேன். அவர் மனசில் நீ இருந்தா, நிச்சயம் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்"
அருகில் வந்து அண்ணனின் காலடியில் உட்காருகிறாள் திவ்யா.
முகத்தை அவன் முழங்காலில் சாய்ந்தவள்,
‘‘அண்ணா... அப்படி சந்தர்ப்பவசத்தால் என்னை அவர் மறந்திருந்தாலும், இல்லை வேற காரணத்தால் இந்த கல்யாணம் நடக்காமல் போனாலும், நான் கடைசி வரை உன் தங்கையாக மட்டும் வாழ்ந்திடறேன்.
தயவு செய்து எனக்கு இன்னொருத்த ரோடு கல்யாணம் வேண்டாம். என்னை உன்னோடு வச்சு காப்பாத்துவியா?’’
கண் கலங்க பேசும் தங்கையின் தலையை ஆறுதலாக தடவியன்,’
கவலைப்படாதே திவ்யா. அந்த மனோகர் நிச்சயம் உன் கழுத்தில் தாலி கட்டுவான். அதை இந்த அண்ணன் நடத்தி காட்டுவேன். நீ தைரியமா இரு
‘‘தங்கை மேலே பாசம் இருக்க வேண்டியதுதான். இப்படி கண்மூடிதனமான பாசம் கூடாது".
நடக்கலைன்னா என்ன செய்வே. கடைசி வரை உன் தங்கை கன்னியாகவே காலம் தள்ள முடியுமா. எதையும் யோசித்து பேசு வசந்த்’’
இல்லம்மா... திவ்யா மனசு எனக்கு புரியுது. நாம் நல்லதை நினைப்போம். நல்லதே நடக்கும்
‘அம்மா சொன்னதுபோல, ஏதோ ஒரு தைரியத்தில் வாக்கு கொடுத்து விட்டேன். என்னால் நடத்த முடியுமா?’ சிந்தனைகளை ஒதுக்கி வைத்து, மனசுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுப்போம்.
நினைத்தவன், ‘பேக்’கை திறந்து தமிழ் நாவலை எடுக்கிறான். வெங்கடகிருஷ்ணனின் கதைகள் என்றால் அவனுக்கு ரொம்பவே பிடிக்கும்.
‘‘மனமே கடவுள்" நாவலின் தலைப்பு தனக்குள் புன்னகைத்தவன், புத்தகத்தை பிரிக்கிறான்.
அவனுக்கு அடுத்து காலியாக இருந்த சீட்டில் ஒரு பெரியவர் வந்து உட்காருகிறார்.
"தம்பி... இந்த ‘பேக்’கை கொஞ்சம் மேலே வைக்க உதவ முடியுமா?’’
அவரை பார்க்கிறான்.
அறுபது வயதிற்கு மேல் இருக்கும். கண்களின் பார்வையில் ஒரு தீட்சண்யம் தெரிகிறது. நெற்றியில் விழுந்திருக்கும் சுருக்கங்கள், நிச்சயம் இவர் ஒரு அறிவாளியாக இருக்கலாம் என்ற நினைப்பை தோற்றுவிக்கிறது. அவனை அறியாமலேயே, அவர்மேல் அவனுக்கு மரியாதை ஏற்பட, எழுந்து ‘பேக்’கை வாங்கி மேலே வைக்கிறான்.
‘‘ரொம்ப நன்றிப்பா"
"பரவாயில்லை’’
புன்னகைத்தான், கதையை தொடருகிறான்.
2
பஸ் சீரான வேகத்தில் சென்று கொண்டிருந்தது. நாவலை படித்து முடித்தவன், மணியை பார்த்தான். சுத்தமாக ஒரு மணிநேரம் போய் விட்டிருந்தது. கதையின் தாக்கம் மனதில் தாக்கத்தை உருவாக்க, மவுனமாக அமர்ந்திருந்தான்.
அருகில் அமர்ந்திருந்தவர்,
‘‘தம்பி, இவ்வளவு நேரம் கதை புத்தகம் படிக்கிறீங்கன்னு பேச்சு கொடுக்காமல் இருந்தேன். விடாமல் படிச்சீங்களே. நாவல் படிக்கிறது பிடிக்குமா"
‘‘அப்படி சொல்ல முடியாது. வெங்கடகிருஷ்ணன் எழுதிய நாவல்னா, உடனே வாங்கி படிச்சுடுவேன். அவர் எழுத்துக்கள், கதையை கொண்டு செல்லும் விதம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்’’
"அப்படியா, அவர்