Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cyanide Saamraajjiyam
Cyanide Saamraajjiyam
Cyanide Saamraajjiyam
Ebook92 pages42 minutes

Cyanide Saamraajjiyam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Cyanide Saamraajjiyam

Read more from Rajeshkumar

Related to Cyanide Saamraajjiyam

Related ebooks

Related categories

Reviews for Cyanide Saamraajjiyam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cyanide Saamraajjiyam - Rajeshkumar

    23

    1

    பட்டர்ஃப்ளை ஸ்விம்மிங் பூல்.

    மாலை ஆறு மணி. மினுமினுப்போடு இருந்த அந்த புதிய – சாக்லேட் நிற மாருதியில் வந்து இறங்கினார்கள் முரளியும், ரம்யாவும், இரண்டு வருடங்களாக காதலித்து – போன வாரம் கல்யாணம் செய்து கொண்டவர்கள். அழகாக இருந்தார்கள். ரம்யா மட்டும் நிறத்தில் சற்றே கூடுதல் மார்க் வாங்கியிருந்தாள்.

    முரளி... காதலித்த நாட்களில் பெயர் சொல்லிச்சொல்லிச் கூப்பிட்டது – இன்னமும் தொடர்ந்தது.

    என்ன ரம்யா...?

    நீச்சல் குளம் ஆறு மணியோடு க்ளோஸ்... போர்டை பார்த்தீங்களா...?

    முரளி சிரித்தான்.

    அது மத்தவங்களுக்கு...

    நம்மை அனுமதிப்பாங்களா...?

    வந்து பாரேன்...

    நீச்சல் குளத்தின் முகப்பை, நெருங்கினார்கள், இருவரும். அன்றைய மாலைப் பத்திரிக்கையைப் பிரித்து வைத்துக் கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்திருந்த வாட்ச்மேன் அவர்களைப் பார்த்ததும் எழுந்தான்.

    என்ன ஸார்...?

    ஸ்விம் பண்ண வந்தோம்...

    டயம் முடிஞ்சுப் போச்சு ஸார்... இனிமே காலையில ஆறு மணிக்குத்தான்...

    "உம் பேரென்ன...?

    சுந்தரம்...

    இதோ பார் சுந்தரம்... கூட்டத்தோடு கூட்டமா ஸ்விம் பண்றது எனக்குப் பிடிக்காது... அதான் ஆறு மணிக்கு வந்தோம்... நாங்க புதுசா கல்யாணமானவங்க... ஒரு மணி நேரம் ஜாலியா ஸ்விம் பண்ணிட்டுப் போயிடறோமே?

    மன்னிச்சுக்குங்க ஸார்... ஸ்விம்மிங் பூல் மானேஜ்மெண்ட் ரொம்பவும் ஸ்ட்ரிக்ட்... சாயந்தரம் ஆறு மணிக்கு மேல யாரையும் அனுமதிக்கக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்க...

    முரளி, பர்ஸை எடுத்துப் பிரித்தான். புத்தம் புதிய ஐம்பது ரூபாய் நோட்டொன்றை உருவி – வாட்ச்மேனின் கையில் திணித்தான்...

    இப்ப என்ன சொல்றே...?

    இதை வந்ததுமே குடுத்துட்டு உள்ளே போயிருக்கலாமே ஸார். ஏன் வெட்டியா பேசிட்டிருக்கணும்...?

    "முரளியும் – ரம்யாவும் கேட்டைத் திறந்துக் கொண்டு உள்ளே போக – வாட்ச்மேன் குரல் முதுகில் வந்து மோதியது.

    லார்! டயம் ஒரு மணி நேரம் மட்டும்தான். சரியா ஏழு மணிக்கெல்லாம் வெளியே வந்துடணும்... நான் வந்து குரல் கொடுக்கும்படியா வெச்சுக்காதீங்க ஸார்...

    சரி... சரி...

    உள்ளே போனார்கள்.

    பாதி வெளிச்சத்தில் நீச்சல் குளம், நீரால் ததும்பியது. பேஷ்மெண்ட்டைச் சுற்றிலும் போட்டிருந்த கலர் பாலிவினைல் நாற்காலிகளில் காற்று மட்டும் உட்கார்ந்திருக்க – எல்லா திசைகளிலும் அமைதி.

    முரளி, கையோடு கொண்டு வந்திருந்த பையின் ஜிப்பைப் பிரித்து – உள்ளே இருந்த ஸ்விம் சூட்டை எடுத்து ரம்யாவிடம் நீட்டினான்.

    ம்... மாட்டிக்க...

    யாரும் வந்துட மாட்டாங்களே முரளி...?

    "ஆறு மணிக்கு மேல இங்கே யாரும் வரமாட்டாங்க...

    அதோ!

    அந்த ரூமுக்குள்ளே போய் ஸ்விம் சூட்டை... போட்டுக்கிட்டு வந்துரு..."

    ரம்யா, முரளியின் கையிலிருந்து கறுப்பு நிற ஸ்விம்மிங் சூட்டை வாங்கிக் கொண்டு – கொஞ்சம் தொலைவில் இருந்த ட்ரஸ்ஸிங் ரூமை நோக்கிப் போனாள். முரளி, தன்னுடைய பேண்ட்டையும், சர்ட்டையும் அங்கேயே உரித்துவிட்டு - ஷர்ட்டையும், பணியனையும் அணிந்துக் கொண்டான். –

    "ரம்யா ஸ்விம் சூட்டை மாட்டிக் கொண்டு வருவதற்குள் – ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்து நான்கைந்து இழுப்புகள் இழுத்துவிடலாமா...? அவளுக்கு முன்னால் சிகரெட்டை பற்ற வைத்தால் இன்றைக்கு ராத்திரி தொட விடமாட்டாள்...’

    அப்படியொரு பந்தயம்!

    முரளி சிகரெட் பாக்கெட்டையும், லைட்டரையும் எடுத்துக் கொண்டுப் பக்கத்தில் வளர்ந்திருந்த – அடர்த்தியான குல்மொஹர் மரத்திற்குப் பின்னால் போனான். ஒரு சிகரெட்டை உருவி – ஆசையாய் உதட்டுக்குக் கொடுத்து – சிகார் லைட்டரின் சுவாலையில் சிகரெட் முனையைப் பொசுக்கிச் சிவப்பாக்கிக் கொண்டு புகைவிட்டான்.

    ஆஹா!

    ‘உலகம் லேசாயிற்று...’

    இரண்டே நிமிஷங்களில் சிகரெட்டைப் புகையாக்கிக் – காற்று மண்டலத்துக்கு தாரை வார்த்துவிட்டு – மரத்தின் மறைவினின்றும் வெளிப்பட்டான்.

    ரம்யா இன்னமும் வரவில்லை.

    ‘சிகரெட்டை நிதானமாய்க் குடித்திருக்கலாம்.’

    டைவிங் போர்டக்குப் போகும் ஸ்டேர்ஸின் மதில் படியில் உட்கார்ந்துக் கொண்டு வலது கையையும், காலையும் நீரில் நனைத்தான் முரளி.

    ‘ரம்யா வருவதற்குள் இறங்கி நீந்திக் கொண்டிருக்கலாமா?’

    யோசித்த விநாடி –

    முதுகுக்குப் பின்னால் அந்தக் குரல் கேட்டது.

    ஸார்...

    திரும்பினான்.

    வாட்ச்மேன் சுந்தரம்.

    "என்ன...?

    "நான் ரோடு வரைக்கும் போய் டீ குடிச்சுட்டு வர்றேன் ஸார். கேட்டை உள்பக்கமா

    Enjoying the preview?
    Page 1 of 1