Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irumbu Kanavugal
Irumbu Kanavugal
Irumbu Kanavugal
Ebook85 pages34 minutes

Irumbu Kanavugal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Irumbu Kanavugal

Read more from Rajeshkumar

Related to Irumbu Kanavugal

Related ebooks

Related categories

Reviews for Irumbu Kanavugal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irumbu Kanavugal - Rajeshkumar

    23

    1

    ஒரு நிமிஷ கோபத்திலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என்றால் துக்கமான நாலு நாட்களிலிருந்து நீங்கள் தப்பி விட்டீர்கள் என்று அர்த்தம்.

    "அம்மா... சரளா...!"

    பூஜையறையிலிருந்து குரல் கொடுத்தார் சம்பத்ராஜ். மேஜையடியில் உட்கார்ந்து கல்லூரி பாட புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்த சரளா கலைந்தாள். இருபத்தியோர் வயது. சந்தன நிறம். பி.எஸ்.ஸி. மாத்ஸ் மூன்றாவது வருஷம். கமலுக்கும் கபிலுக்கும் ரசிகை. பாரதி பாட்டு அத்தனையும் மூளைக்குள். கைனடிக் ஹோண்டா ஸ்கூட்டரை வேகமாய் ஓட்டப் பிடிக்கும். கடி ஜோக்குகள் கைவசம் ஏராளம்.

    என்னப்பா...?

    ப்ரிஜ்ல சாமிக்கு போடற புஷ்பம் இருக்கு... பாலிதீன் கவர்ல போட்டு கட்டி வெச்சிருக்கேன்... கொண்டு வந்து தர்றியா...?

    இதோ... எழ முயன்றவளை சமையலறையிலிருந்து வெளிப்பட்ட அம்மா ஜெயாவின் நீ படிடி என்ற குரல் அவளை மறுபடியும் உட்கார வைத்தது.

    பூஜை பண்ணப்போறவர்... புஷ்பத்தை எடுத்துட்டு போகக் கூடாதோ...? படிக்கிற பொண்ணுக்கு ‘நம நம’ன்னு வேலையை சொல்லிகிட்டு...

    ஜெயா ப்ரிஜைத் திறந்து - புஷ்பம் இருந்த பாலிதீன் கவரை எடுத்துக் கொண்டு - பூஜையறையை நோக்கிப் போனாள். சம்பத்ராஜ் ஈர வேட்டியோடு சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தார். ஐம்பது வயது உடம்பு.

    எதிரில் பிள்ளையார்பட்டி விநாயகர்.

    சம்பத்ராஜ் மனைவியைப் பார்த்து புன்னகைத்தார்,

    குளிச்சிட்டியா... ஜெயா...

    பார்த்தா தெரியலையாக்கும்...?

    சரி உட்கார்...

    எதுக்கு...?

    இன்னிக்கு சங்கடஹரசதுர்த்தி, தம்பதி சமேதரா உட்கார்ந்து விநாயகர் அகவல் பாடினா ரொம்பவும் நல்லது...

    சரியா... போச்சு... உங்க கூட பூஜை ரூம்ல நானும் உட்கார்ந்துட்டா... அடுப்படி வேலையை கவனிக்கிறது யாரு... சரளா காலேஜ் போக ரெடியாயிட்டா... சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வெச்சிருக்கேன்... குக்கர்ல உருளைக் கிழங்கு வெந்துட்டிருக்கு... எனக்கும் சேர்த்து பூஜை பண்ணுங்க...

    ஜெயா சமையலறை கவலையோடு - வெளியே வந்தபோது முன்ஹாலில் டெலிபோன் கத்திக் கொண்டிருந்தது.

    சரளா! போன்ல யார்ன்னு பாரு...! அப்பாவை யாராவது கேட்டா... பூஜை ரூம்ல இருக்கிறதாய் சொல்லு... ஏதாவது முக்கியமான விஷயமா இருந்தா... விவரம் கேட்டு வச்சுக்க...

    சரளா புத்தகமும் கையுமாய் போய் ரிஸீவரை எடுத்தாள்.

    "ஹலோ...’’

    ஒரு ஆண் குரல் கேட்டது.

    231157...?

    ஆமா...

    சம்பத்ராஜ் வீடுதானே...?

    ஆமா...

    அவருக்கு ஒரே ஒரு பொண்ணு பேரு சரளாதானே?

    ஆமா...! நீங்க...?

    சொல்றேன்... சொல்றேன்... அந்த சரளா கூட நான் பேசணும்...

    நான் சரளாதான் பேசறேன்...

    நிஜமா... சரளாவா பேசறது...?

    தேங்க் காட்...!

    என்ன விஷயம்...?

    உன்னை காலேஜுக்கு போகும் போது ரொம்ப நாள் பார்த்துட்டிருக்கேன்... உன் கிட்ட ஒரு விஷயம் கேக்கணும்...

    யா... யார் நீங்க...?

    "சொல்றேன்... என்னை மொதல்ல கேள்வி கேட்க விடுங்க.’’

    என்ன கேள்வி...

    உன்னோட...ப்ரா சைஸ் எவ்வளவு...?

    யூ...யூ... ராஸ்கல்...! சரளா கோப ரத்தம் பாய்ந்த முகத்தோடு கத்திக் கொண்டிருக்க –

    மறுமுனையில் ரிஸீவர் வைக்கப்பட்டு விட்டது.

    ஜெயா சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள்.

    "போன்ல யார்டி...?

    "தெரியலை... எவனோ பொறுக்கி நாயி...’’

    "அசிங்கமா பேசினானா...?

    ஆமா...

    "ராஸ்கல்...! இனிமே போன் அடிச்சா நீ அட்டெண்ட் பண்ணாதே...’’

    "சே... படிக்கிற மூடே போச்சு...! இப்படி போன்ல அசிங்கமா பேசறவனையெல்லாம்... முச்சந்தியிலே நிக்க வெச்சு... போன் பண்ணின கையையும்... பேசின வாயையும் துண்டிச்சு...

    ‘கிணிங்...’

    வாசலில் காலிங் பெல் கூப்பிட்டது.

    சரளா முன்பக்க வாசலை எட்டிப் பார்த்தாள். வீட்டு புரோக்கர் இளிப்போடு தெரிந்தார்.

    கும்பிட்டார்.

    என்னம்மா... அய்யா இருக்காரா...

    பூஜை ரூம்ல இருக்கார்... பத்து நிமிஷமாகும். உட்காருங்க...

    மாடி போர்ஷனுக்கு ஆள் வந்திருக்கு...

    ஜெயா மலர்ந்தாள்.

    சரளா...! நீ அடுப்படி வேலையைக் கொஞ்சம் கவனி. நான் பேசிட்டு வர்றேன்...

    போனாள்.

    புரோக்கருக்கு பக்கத்திலேயே அந்த பெண் தெரிந்தாள். வயது முப்பத்தைந்துக்குள் இருக்கலாம். மாநிறமாய் இருந்தாலும் பூசிக் குளித்த மஞ்சளில் உடம்பு புது

    Enjoying the preview?
    Page 1 of 1