Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaatrai Kaithu Sei
Kaatrai Kaithu Sei
Kaatrai Kaithu Sei
Ebook96 pages55 minutes

Kaatrai Kaithu Sei

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Rajeshkumar, an exceptional Tamil novelist, in this service since 1968, written over 1500 novels and 1500 short stories, towards making the Guinness record… Readers who love the subjects Crime, Detective, Police and Science will never miss the creations of this outstanding author… since the author gets into the details of the subject, the readers’ knowledge enhances along with the joy of reading…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
Kaatrai Kaithu Sei

Read more from Rajeshkumar

Related to Kaatrai Kaithu Sei

Related ebooks

Related categories

Reviews for Kaatrai Kaithu Sei

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    A story with completely different perspective. Hats off to the writer!

Book preview

Kaatrai Kaithu Sei - Rajeshkumar

17

1

வெள்ளிக்கிழமை விடிகாலை.

"அம்மா... புவனா...’’

அப்பாவின் குரல் கேட்டு கண்விழித்தாள் புவனா. ஜன்னல் கம்பிகளுக்கு அப்பால் க்ரே நிற இருட்டு. தோட்டத்து வேப்ப மரத்தில் நூற்றுக்கணக்கான குருவிகளின் காச் மூச்... குழாய் பைப்பில் தண்ணீர் வரும் சத்தம். சமையலறையின் உள்ளேயிருந்து காஸ் அடுப்பின் சீறல்.

மறுபடியும் அப்பா ராமமூர்த்தியின் குரல் கேட்டது

‘‘ஆபீஸ் தோழி ஒருத்திக்கு... கல்யாணம்...! ஆறு மணிக்கு முகூர்த்தம். அஞ்சு மணிக்கு எழுப்பி விடுன்னு சொன்னியேம்மா...? மணி இப்ப அஞ்சு பத்து... எழுந்திரிச்சியானா குளிச்சு புறப்பட்டு போக... சரியா இருக்கும்...’’

புவனா எழுந்து உட்கார்ந்தாள். கண்களுக்குள் - மிளகாய்ச் சாறு இறங்கின மாதிரி எரிச்சல். ராமமூர்த்தி கேட்டே விட்டார்.

"என்னம்மா... கண்ணெல்லாம் சிவந்து போய் கிடக்கு...?’’

"ராத்திரி ரெண்டு மணிவரைக்கும் தூக்கமே வரலேப்பா... ஒரே கொசுக்கடி... போதாத குறைக்கு மூட்டைப் பூச்சி வேறே...!’’

"இன்னிக்கு நான் மருந்தடிச்சுடறேன்மா...’’

புவனா போர்வையை மடித்து வைத்து விட்டு - குளியலறையை நோக்கி போய்க் கொண்டே கேட்டாள்.

‘‘பால் வந்தாச்சாப்பா...?’’

வந்தாச்சும்மா... காப்பி போட்டுகிட்டு இருக்கேன்... போய் குளிச்சுட்டு வா... கமகமன்னு காப்பி தர்றேன்...

நீங்க ஏம்பா உங்களைப் படுத்திக்கறீங்க...? அந்த காப்பியை நான் போட மாட்டேனா...? வயதான காலத்துல ஆறுமணிவரைக்காவது தூங்கலாமில்லையா?

ராமமூர்த்தி கண்ணாடியைக் கழற்றிக் கொண்டு சிரித்தார்.

‘‘உங்கம்மா... என்னிக்கு கண்ணை மூடினாளோ... அன்னிக்கே... என்னோட தூக்கம் பாதியா குறைஞ்சு போச்சும்மா... ஏம்மா நான் போடற காப்பி நல்லாத்தானே இருக்கு...?’’

நான் அதுக்கு சொல்லலையப்பா...! வந்து...

"பேசிக்கிட்டிருக்காதேம்மா... கல்யாணம் ஆறு மணிக்குன்னு சொன்னே...! அஞ்சரைக்குள்ளே நீ இங்கிருந்து கிளம்பினாத்தான் சரியா இருக்கும்...’’

புவனா குளியலறைக்குள் நுழைந்தாள். பதினைந்து நிமிஷம் கழித்து வெளிப்பட்டு - தன் அறைக்குள் புகுந்து பட்டுச் சேலையை உடுத்தி முடித்து ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் வந்து நின்ற போது - ராமமூர்த்தி கையில் காப்பியோடு வந்தார்.

"சூடு ஆறதுக்குள்ளே குடிச்சுடும்மா...’’ வாங்கிக் கொண்டாள்.

‘‘போய்ட்டு எத்தனை மணிக்கு வருவேம்மா?’’

‘‘ரெண்டு மணி நேரத்துல வந்துடுவேம்பா’’

"ப்ரஸெண்ட் ஏதும் வாங்கிக்கலையாம்மா...?’’

‘‘என்ன வாங்கணும்ன்னு தோணலை... நூத்தி யோரு ரூபாயை கவர்ல போட்டு குடுத்துடலாம்ன்னு இருக்கேன்...’’

"என்ன பொண்ணம்மா நீ... ஆபீஸ் போய்ட்டு தினமும் கடைவீதி வழியாத்தானே வர்றே...? ஏதாவது வாங்கியிருக்கலாமே...?’’

‘‘எந்தக் கடையைப் பார்த்தாலும் நெரிசல். இன்னிக்கு வாங்கலாம்... நாளைக்கு வாங்கலாம்ன்னு நாளை தள்ளிப் போட்டு ஒண்ணுமே வாங்க முடியாமே போச்சு...’’ காப்பியை குடித்து முடித்து விட்டு காலி டம்ளரை கீழே வைத்தாள் புவனா.

அம்மா... புவனா... குரலை இழுத்தார் ராமமூர்த்தி.

‘‘ம்...’’

‘‘நா... போன வாரம் சொன்னதை யோசிச்சியாம்மா...?"

"எது...?’’

‘‘மதுரையில் இருக்கிற என் ஸ்நேகிதனோட... பையனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக் குடுக்கறதைப் பத்தி சொன்னேனே...?’’

ட்ரஸ்ஸிங் டேபிளுக்கு முன்னால் நின்று ஜடையை பின்னிக் கொண்டே புன்னகைத்தாள் புவனா.

‘‘ஏம்பா! உங்களுக்கு வரவேண்டிய மாப்பிள்ளை ஓரளவுக்காவது அழகா இருக்கணுமா வேண்டாமா...?’’

‘‘அழகாயிருக்கணும்...’’

‘‘உங்க ஸ்நேகிதரோட பையன் அப்படியில்லையே...?"

"என்னம்மா... அப்படி சொல்லிட்டே? பையனுக்கு என்ன குறைச்சல்...? நிறம் கறுப்பு... ஒத்துக்கிறேன்... வேற என்ன குறை...?’’

"லேசா... மாறுகண்...’’

‘‘கண்ணாடியைக் கழட்டினாத்தானே தெரியும்...?’’

‘‘தலையில முடியே இல்லை. பாதி வழுக்கை..."

‘‘ஆம்பிளைக்கு வழுக்கை இருந்தா என்னம்மா...?’’

‘‘எனக்கு வர்ற மாப்பிள்ளையைப் பத்தி நான் ஒரு அவுட் லைன் போட்டு வெச்சிருக்கேன்ப்பா...’’

சொல்லும்மா...

‘‘எனக்கு வர்றவர் ஆறடி உயரமாவது இருக்கணும்’

சரி...

"மாநிறமா இருந்தாலும் பரவாயில்லை. திருத்தமா இருக்கணும். சிகரெட், குடி, பொடி... மாதிரியான கெட்ட பழக்கங்கள் இருக்கக் கூடாது. நான் டிகிரி படிச்சிருக்கிறதுனால அவரும் டிகிரி படிச்சிருக்கணும்... நல்ல வேலையில் இருக்கணும்... வரதட்சணை, நகைன்னு ஆசை படாதவரா இருக்கணும்...’’

"நாளைக்கே - புரோக்கர்கிட்டே சொல்லிடறேன்...’’

‘‘அப்புறம்... ஒரு முக்கியமான கண்டிஷன்"

"என்னம்மா...?’’

‘‘கல்யாணத்துக்கப்புறம்... என்னோட அப்பாவும் நம்ம கூடத்தான் இருப்பார்ன்னு மாப்பிள்ளைகிட்டே சொல்லுவேன். அவர் ஒத்துக்கணும்..."

‘‘அது கண்டிஷன் இல்லேம்மா... ஸ்கட் ஏவுணை...! இதுக்கு எந்த மாப்பிள்ளையும் ஒத்துக்க மாட்டான்..."

"யாராவது ஒத்துக்காமலா போயிருவாங்க...!’’ புவனா நெற்றிக்கு ஸ்டிக்கர் இட்டுக் கொண்டே - சுவரில் தொங்கிக் கொண்டிருந்த டம்பப் பையை எடுத்து - தோளில் மாட்டியபடி கிளம்பினாள்.

"தெருமுனை வரைக்கும் வரட்டுமாம்மா...?’’

"வேண்டாப்பா. நானே போயிடறேன்...’’

மொய் வைக்க பணம் இருக்கா...?

"ம்... இருக்கு...’’

புவனா கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அந்த விடிகாலை, சாம்பல் இருட்டிலும் - குளிரிலும் இருந்தது. தெருப் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக்

Enjoying the preview?
Page 1 of 1