Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Engiruntho Aasaigal
Engiruntho Aasaigal
Engiruntho Aasaigal
Ebook94 pages1 hour

Engiruntho Aasaigal

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Parimala Rajendran, an exceptional Tamil novelist, written over 300+ novels. Readers who love the subjects Romance, social awareness and typical family subjects will never miss the creations of this outstanding author… she has her tamils readers spread over the globe…
Languageதமிழ்
Release dateAug 1, 2016
ISBN9781043465971
Engiruntho Aasaigal

Read more from Parimala Rajendran

Related authors

Related to Engiruntho Aasaigal

Related ebooks

Reviews for Engiruntho Aasaigal

Rating: 4.666666666666667 out of 5 stars
4.5/5

3 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Engiruntho Aasaigal - Parimala Rajendran

    20

    1

    மேகங்கள் சற்று நேரம் நின்று இளைப்பாறி செல்லும் மலைப்பகுதி. சில்லென்று குளிர்காற்று அந்த இடத்தையே குளிர செய்திருந்தது. பசுமை எழில் பொங்கும் மலை தோற்றம்... இயற்கையின் அழகில்... ஆபத்தும் இருக்கிறது என்பதை அறிவிப்பதை போல், அந்த மலை முகட்டில், கண்ணுக்கெட்டாத தூரம்வரை கிடுகிடு பள்ளதாக்கு.

    அந்த இடத்தில், கம்பீரமான அந்த இளைஞன், கண்கள் நிறைய சோகத்தை தேக்கி நின்றிருந்தான். வயது முப்பத்துக்குள் இருக்கும் இளமையான உருவம். அவன் அழகன் என்பதை முக அமைப்பு பறை சாற்றியது. வாழ வேண்டிய வயதில், வாழ்க்கையை முடித்துக் கொள்ள தயாராகிவிட்டான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது.

    காரணம் காதல். நித்யா மேல் அவன் கொண்டிருந்த உன்னதமான காதல். நிறைவேறாத காதலுடன் வாழ விரும்பாமல் இதோ... கிளம்பி விட்டான். கண்களை இறுக மூடி,

    நித்யாவின் அழகிய முகம். இதழ்களில் மந்தகாச புன்னகை. போய் வருகிறேன் நித்யா. நீயாவது... மனதை மாற்றிக் கொண்டு உனக்கான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொள்.

    ஆதி... ஆதி...

    நித்யாவின் குரல் மனதில் ஒலிக்கிறது.

    வேண்டாம் நித்யா. சாக போகும் நேரத்தில் என் மனதை சங்கடப்படுத்தாதே. வாழத்தான் முடியவில்லை. என்னை நிம்மதியாக சாகவிடு.

    ஆதி... ப்ளீஸ். வேண்டாம். விபரீத முடிவுக்கு போகாதீங்க. உங்க நித்யா உங்களை தேடி வந்துட்டேன்.

    குரலெடுத்து சப்தம் போடுகிறாள்.

    நித்யாவின் குரல், மீண்டும்...

    இது கற்பனை இல்லையா...

    நிஜமாகவே நித்யா வருகிறாளா...

    கண் திறக்கிறான். தூரத்தில் அவனை நோக்கி, வெள்ளை சேலையில், கால் தரையில் பரவாமல் ஓடி வருபவள் நித்யா... என் நித்யா...

    மனம் முழுவதும் சந்தோஷ மழை.

    "வேண்டாம் ஆதி. நீங்க சாக வேண்டாம். நாம் ரெண்டு பேரும் வாழ வேண்டியவங்க. யாருமே வேண்டாம்னு உங்களை நம்பி உங்க. நித்யா வந்துட்டேன்...’’

    இதயம் படபடவென்று அடித்துக்கொள்ள... உடலில் புது இரத்தம் பாய... கண்களின் சோகம் மறைந்து ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் கூத்தாட...

    நித்யாவை நோக்கி வெறும் கால்களுடன் கல், மண் எதையும் பாராமல் தலைதெறிக்க ஓடி வருகிறான். நித்யா... நித்யா... என் நித்யா... உதடுகள் மந்திரமாய் ஜெபிக்க...

    அருகில் வந்தவன், எதிர்வந்தவளை இரு கைகளாலும் வாரியணைத்து தலைக்கு மேல் தட்டாமாலை சுற்றி நெஞ்சோடு இறுக அணைக்கிறான்.

    கட்... கட்...

    நிரஞ்சனின் குரல்.

    ஆதியின் அணைப்பிலிருந்து நித்யா விடுபட...

    பெண்டாஸ்டிக் ஆதி... ஒரு ஷாட்டில் ஓகே பண்ணிட்டே. நண்பனை பாராட்டியவன்...

    அடடா... காலில் ரத்தம் வருதுப்பா...

    பின்னே... கல்லிலும், முள்ளிலும் வெறும் காலோடு ஓடி வர சொன்னியே... ரத்தம்தான் வரும்...

    சிரிக்கிறான் ஆதித்யா...

    என்ன பண்றது... தொழில்னு வந்தாச்சு. நீ என்னோட நண்பன். பெரிய சர்ஜன்... விருப்பத்தோடு சினிமா பீல்டில் நுழைஞ்சு... இன்னைக்கு முன்னணி கதாநாயகனாக வந்திருக்கேன்னு... சலுகை காட்டமுடியுமா...

    நடிப்புங்கிறது இயற்கையா இருக்கணும். உன்கிட்டே நிறைய திறமையிருக்கு ஆதி. அதை நான் பயன்படுத்துக்கிறேன். என்னோட தயாரிப்பில் உன்னோட முதல் படமே வெற்றி.

    இது... இரண்டாவது... இதுவும் மெகா ஹிட்டாகணும் இல்லையா... அதுக்குதான்...

    ஓகே... ஓகே... நானும் உன்னை குறை சொல்லலை... விருப்பப்பட்டு நடிப்புக்கு வந்த எனக்கு... இதெல்லாம் சர்வ சாதாரணம்...

    பேசியவாறு... அங்கு ஓரமாக கிடந்த சேரில் உட்காருகிறான். தூரத்தில் சில பேர் நின்று ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்க... நித்யா ஓரமாக உட்கார்ந்து கொள்ள...

    அவனருகில் வருகிறான், செகரட்டரி செல்வம்.

    சார்... மேடத்துக்கிட்டேயிருந்து போன். இதுக்கு மூணு தடவை கால் பண்ணிட்டாங்க.

    ஆதியின் செல்போனை நீட்டுகிறான்.

    ஹலோ... சொல்லு... நந்தினி...

    அப்பா ஊரிலிருந்து வந்திருக்காங்க. உங்ககிட்டே பேசணும்னு. சொன்னாங்க. அதான் கூப்பிட்டேன். அவங்ககிட்டே கொடுக்கிறேன்...

    நல்லாயிருக்கீங்களா மாப்பிள்ளை...

    ஃபைன் மாமா... நீங்க எப்படி இருக்கீங்க. பிஸினஸில் ரொம்ப பிஸியா இருக்கீங்களா...

    ஆமாம். இப்ப சென்னைக்கு ஒரு வேலையாக வந்தேன். உங்களையும், நந்தினியையும் பார்த்துட்டு போகலாம்னு... நீங்க ஷட்டிங்காக ஊட்டிக்கு போயிருக்கிறதாக சொன்னா...

    இருங்க மாமா. இரண்டு நாளில் வந்துடுவேன்...

    இல்லை மாப்பிள்ளை... சாயந்திரம் கிளம்பிடுவேன். அப்புறம் ஒரு விஷயம்...

    சொல்லுங்க...

    "நந்தினிக்கிட்டே பழைய உற்சாகம் இல்லை. தனிமை அவளை ரொம்பவே காயப்படுத்துதுன்னு நினைக்கிறேன்.

    தாயில்லாப் பொண்ணு செல்லமாக வளர்ந்தவ... உங்களுக்கு தெரியாதது இல்லை. ஆறு வருஷமா உங்க அன்னியோன்யத்தை பார்த்து சந்தோஷப்பட்டவன் நான். இப்ப நீங்க டாக்டர் தொழிலை விட்டுட்டு நடிப்புக்கு போன பிறகுதான் ஒரு சின்ன இடைவெளி... அது பெரிதாகாமல் நீங்கதான் பார்த்துக்கணும்..."

    "அப்படியெல்லாம் ஏதுமில்லை மாமா.

    Enjoying the preview?
    Page 1 of 1